பூ போன்ற கைகள் தொட்டு
பூவாய் நான் உணர்ந்திட
பூ மகள் வந்தாயே
பூகம்பம் ஏற்பட்டது இவ்வுலகிலே...
பூனை நடை கொண்டு
பூரிக்க வைக்கிறாய் உள்ளங்களை
பூ சூட சிகை நாணம் கொண்டது ஏனோ
பூந்தேகம் புன்னகையில் அழகு பெற்றதடி...
பூந்தோட்டமும் வருகையை காண்கிறது
பூப்பானவளை என்னிக் கொண்டு
பூமி தாயும் ஆர்வம் கொள்கிறாள்
பூஞ்சோலை வதனம் காண...
பூமாலை சூடி
பூரணம் பெற்று
பூனைக்கண்மணி பிரகாசம் கொள்கிறது
பூவே உனக்காக...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro