👁️👁 ️மூழ்கினேன் உன் கண்ணிலே 👀

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

உனது கண்களில் வீழ்ந்ததால் ஏனோ
இன்று வரை எழுந்து நிற்க இயலாத
ஓர் நிலையில் தவிக்கின்றேன்
உன்னில் மூழ்கியே...

தவிப்பில் பூக்களாக தழைத்து எழுந்து
மீண்டும் முயற்சிக்கிறேன்...
உந்தன் சிகையினை அலங்கரிக்க
ஒரு வாய்ப்பு கிட்டாதா என்று...

வாழ்க்கை கேட்ட எனது அன்பிற்கு,
வாய்ப்பு கேட்டும் அவல நிலைக்கு
செல்ல வைத்தது ஏனடி அன்பே...

காலம் கடந்தும் உந்தன் நினைவுகள்
மீண்டும் மீண்டும் ஊற்றெடுக்கும்
காரணம் தான் என்ன...

ஆசை கொண்டது என் தவறா,
இல்லையேல் உன்னில் நம்பிக்கை
வைத்தது என் தவறா...

காரணம் தான் என்னவென்று
கூறிவிடு... எனது கண்களில் உனை
மூழ்கடிக்க விரும்பம் இல்லையடி
அழகே...

உமை மகிழ்ச்சியுடன் காணவே
விருப்பம் கொள்கிறேன்...
உனது கண்களில் மூழ்கினேனே
அன்று...

மீண்டும் மூழ்கிட வேண்டுமடி
மறு பிறவியில்...
காலம் நிகழ்ந்தும் எனது அன்பை
உணர்ந்து...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro