👫..மறு ஜென்மம்..💝

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ரவியின் பிரகாசத்தை கண்டு மலரின் மொட்டுகளை விரிக்கும் மலரினைப் போல,
எந்தன் வாழ்வினில் என் விழிகள் ஆனது உன் இன்முகம் கண்டே விழித்ததடி...

பிரகாசமாகும் விடியலை கண்டு குயில்கள் பாடும் இசையை போலவே,
உந்தன் அழகான குரல் ஓசையை எந்தன் விடியலின் போது செவியினில் ஏற்றி இசையால் எனது நாட்கள் ஆரம்பிக்கின்றதடி...

எத்தனையோ கண்கள் என்னைச் சுற்றி இருந்தபோதிலும், எனது இரு விழிகளும் எண்ணங்களும் உன்னை தேடியே பயணிக்கின்றனடி...

கரைப்பார் கரைத்தால் கல்லும் என்பது போல் உந்தன் விருப்பங்களுக்கு, எவருக்கும் கட்டுப்படாத என் மனது ஆனது உனது ஆசையை நிறைவேற்றவே பனிக்கட்டியாய் கறைகிறேனடி...

உனது விழிகள் ஒன்றே போதுமடி என்னை வாழ்க்கை முழுவதும் உன் கண்களில் கட்டி வைக்க...

ஆழ்கடல் ஆழிப்பேரலைக்கும் அழகு உண்டு என்பதை போல, எந்தன் இதயத்திற்கும் ரசனை உண்டு என்பதை உணர வைத்தாயடி....

நான் கற்றவை எதுவும் என்னிடத்தில் இல்லை, நீ எனது அருகினில் இருக்கும் தருணத்தில்...

நீ சமைத்து வைத்த உணவில் ருசி அறிகிறேனோ இல்லையோ, அதில் உனது விலைமதிப்பில்லா அன்பை உணர்ந்தேனடி...

மறு ஜென்மம் என்ற ஒன்று இவ்வுலகில் இருந்தால், அதில் நீயே என்னில் பாதியாக வர வேண்டும் என வேண்டுகிறேன் இறைவனிடம்....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro