இரவின் காதல் பனித்துளிகளுக்கு தெரியும்
எந்தன் காதலும் உமக்கு தெரியும்
ஆனால் பனித்துளிகள் போல எந்தன்
இரவினிலில் மட்டுமே வந்து செல்வதேனோ....
எந்தன் காதல் நாட்கள் முழுவதும் பயணித்தால்
உந்தன் காதலோ இரவினில் கணவாய்
எந்தன் மதியினில் வந்து செல்வதேனோ....
மலருக்கு பனித்துளிகள் எவ்வளவு விருப்பமோ
அதை விட மலருக்கும் நீருக்கும் உண்டான
பிணைப்பு அதிகம் என்பதை என்று உணர்வாய்....
நான் நீராக உந்தன் வாழ்வினில் என்றென்றும்
உந்தன் உயிர் காக்க ஆசை கொள்கிறேன்
ஆனால் நீயோ இரவினில் வந்து செல்லும்
பனித்துளிகளையே மிகவும் நேசிக்கிறாய்....
நீரின் காதல் மலருக்கு தெரியவில்லை
என்பது போல எந்தன் காதல்
உமக்கு தெரியவில்லையா
எந்தன் மலர்கொடியே....
என்றென்றும் உந்தன் அருகினில்
இருந்ததால் ஏனோ எந்தன் அன்பு
உமக்கு தெரியாமல் போனதேனோ....
எந்தன் நீர் எனும் உயிர் உள்ளவரை
உமை காப்பேன் அன்பே....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro