14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

(வாசகர்களே அர்விந்தான் நம்ம நாயகன்.ஆனா நாயகியை இன்னும் நான் முடிவு செய்யவில்லை.ரொம்ப குழப்பமா இருக்கு.அதான் ப்ரியாவிற்கு இன்னும் கதாநாயகி பட்டம் கொடுக்கவில்லை .யாருக்கும் யாரயாச்சும் நாயகியாக்கலாம் என்று ஐடியா வந்தா மெசேஜ் பன்னுங்க.முதல்ல யாரு suggestion பன்றாங்களோ அவங்க சொல்ரவங்கலயே போட்றலாம்.புதுசா ஒருத்தர கதையில் கொண்டு வரனும்னு சொன்னாலும் ஒக்கேதான்).

நல்ல வேலையாக ப்ரியாவின் அப்பா ஊரில் இல்லை.பிஸ்னஸ் காண்டைராக்ட் சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தார்.அதனாலேயே சங்கீதாவும் அரவிந்தும் இதை அவள் வீட்டில் கூறவில்லை.ப்ரியாவின் அம்மா 5 வருசம் முன்னாடி தவறிட்டாங்க.இப்போ ரம்யாவும் லண்டன்ல இருப்பதால் ப்ரியா அவ அப்பா கூடதான் இருக்கா.

காலையில் கதிரவன் தன் பொன்னான முதற்கதிர்களை பூமிக்கு தூவிய நேரம் பூமியில் உள்ள பூக்களோ புதுமணப்பெண் போல் வெட்கப்பட்டுக்கொண்டு கதிரவனை காண ஆவலாக மொட்டுகளை விரித்துக்கொண்டிருந்தன. இங்கு நம் ப்ரியாவோ லேசான முனகலுடன் கண்விழித்து பார்த்தவள் உடனே அதிர்ச்சி ஆனாள்.விசிட்டர்ஸ் பெட்டில் அர்விந்த் தூங்க அவன் அருகில் நிஷா தூங்கி கொண்டிருந்தாள்.இதை எல்லாம் விட அவளின் ஆடை மாற்றப்பட்டிருந்தது பெரிய இடியாக இருந்தது.ஒருவேலை அர்விந்த் மாற்றிவிட்டு இருப்பானோ என்ற என்னம் வந்ததுமே ஒரு வித கோபம் வந்தது அவளுக்கு.என்றாலும் உள்ளுக்குள் ஒரு பீத்தோவன் (பீத்தோவன் யாருன்னு தெரியாதவங்களுக்கு, AR Rahman இன் தாஜ்மஹால் படத்தில் குளிருது குளிருது இரு உயிர் குளிருது பாடல்,இளையராஜாவின் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வன்னமோ ..இதுல எத வேனும்னாலும் போட்டுக்கோங்க)இசை கேட்பதையும் அவள் உணராமல் இல்லை.

ப்ரியா கண்முழித்ததும் "அர்விந்த்,ஹே அர்விந்த் என்று சத்தமிட்டு அவனை எழுபினாள்" இவள் இப்படி சத்தமிடுவதை பாத்ரூம் உள்ளிருக்கும் சங்கீதா கேட்டு, என்னதான் நடக்குது என்று பார்க்கலாம் என அவள் பாற்றூமிலேயே நின்றுவிட்டால். ப்ரியாவின் சத்தத்திற்க்கு எழும்பிய அர்விந்த்

"ப்ரியா இப்ப எப்டி இருக்கு.பெயின்லாம் குறைஞ்சி இருக்கா.கைய அங்க இங்க அசைக்காத.அசைத்தால் உனக்கு பெயின் வரும்.உனக்கு என்ன வேனும்னாலும் சொல்லு நான் செய்றன்" என்றான்.

இவன் இப்படி கூறியதை கேட்ட சங்கீதாவுக்கு நன்றாக தெரிந்தது ப்ரியா இப்போது அவளுக்கு யாரு ஆடை மாற்றியிருப்பார்கள் என்றுதான் யோசித்துக்கொண்டிருப்பாள் என்று.ஏனென்றால ப்ரியாவுக்கு மற்றவர் முன்னிலையில் அதுவும் அவளின் நண்பிகள் முன் கூட ஆடை மாற்றமாட்டாலள்.ஒரு தடவை காலேஜ் டூர் சென்ற போது இவள் ஆடை மாற்ற செய்த அலும்பு ஞாபகம் வர தனக்குள் சிரித்துக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க (சாரி கேட்க) தொடங்கினாள்.

அர்விந்த் சொன்னதை கேட்ட ப்ரியா "அதெல்லாம் தேவையில்ல அர்விந்த்.ஆமா நைட் நீங்க வீட்ட போகல்லயா "என்றவளை

"இல்ல ப்ரியா நைட் புல்லா இங்கதான் இருந்தன்."

"இங்கயா.....அப்போ என் டிரஸ்......." என்று இழுத்தவளை "ஹஹா ,ஏன் நம்ம ஹீரோ சார்தான் உனக்கு மாத்திவிட்டாருன்னு நினைச்சியா" என்று பாத்ரூம் இருந்து வந்த சங்கீதாவை கண்டதும்தான் ப்ரியாவுக்கு கொஞ்சம் நிம்மதி ஆனது.ஆனால் அர்விந்துக்கோ எதுக்கு இப்போ சங்கீதா தேவையில்லாம இப்டி நம்மல இக்கட்டுல மாட்டி விடுகிறாள் என்று தோன்றியது.

"இல்லடி சும்மா...." ப்ரியா

"ச்சும்மாவும் இல்ல காசுக்கும் இல்ல.நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒரு ரொமான்ஸ் சீனும் நைட் நடக்கல்ல.ஓக்கே.வேனும்னா நம்ம ரெண்டு பேருக்கும் நடந்திருக்கும்.என்ன நான் ஆம்பிளயா இல்லாம பொண்ணாக போய்ட்டன்.இல்லன்னா நைட்டே உன்ன..." சங்கீதா இழுக்க

"லூசு மாதிரி பேசாத சங்கீதா" என்று ப்ரியா சொல்ல அர்விந்த் சங்கடத்தில் "நான் வெளில போய் ஏதும் சாப்பிட வாங்கி வரேன்" என்றான்.

உடனே சங்கீதா" அடேய் நல்லவனே ,எனக்குலாம் ஒன்னும் ப்ரியா வேனாம்.வேனும்னா நீயே வெச்சுக்க.இப்ப நீ வெளில சாப்ட ஏதும் வாங்க போக தேவையில்ல.அவதான் முழிச்சிக்கிட்டாலே.இப்போ வீட்டுக்கே போய்டலாம்.போகும் வழில சாப்டுக்கலாம்" என்றாள்.

சங்கீதா அடிக்கடி அர்விந்தை கலாய்ப்பதை பார்த்த ப்ரியாவிற்கு ஏதோ ஒன்று சரியில்லாதவாறு தோன்றியது.
விசிட்டர்ஸ் பெட்டில் தூங்கும் நிஷாவை பார்த்தவள் "ஏன் நீங்க நைட் வீட்ட போகல்லயா.பாவம் நிஷா புது இடத்துல தூங்க கஷ்டப்பட்டிருப்பா "என்றாள்.

உடனே சங்கீதா "போடீ இவளே ,நைட் நீ பன்ன அலப்ப்றைக்கு......அட்லீஸ்ட் நீ நிஷாவ தனியாவாச்சும் தூங்க விட்டியே" என்றவளை ப்ரியா ஞே என்று விழித்தால்.

அர்விந்தோ நிலமையை சுமுகமாக்கும் முகமாக "சரி சரி நான் டாக்டர பார்த்துட்டு டிஸ்சார்ஜ் சீட்ட வாங்கிட்டு வரேன்" என்று கிளம்பினான்.அவன் சென்றதும் ப்ரியா உடனே" ஹேய் சங்கீதா நைட் யாரு என்கூட தூங்கினா" என்று கேட்டாள்.

சங்கீதா இவளை கலாய்க்க என்னி "நான் அந்த பெட்ல தூங்கினன்.நீயும் அர்விந்தும் இந்த பெட்ல........"என்று இழுத்து "அர்விந்த் வெளில செயார்ல தூங்கினான்.நிஷாவும் நானும் விசிட்டர்ஸ் பெட்ல தூங்கினம்.நீ இந்த பெட்ல தூங்கின போதுமா."

"அபோ என் டிறஸ்...."என்று இழுத்தவளை "அம்மா தாயே உன் கற்புக்கு ஒரு கலங்கமும் வரல்லமா.வேனும்னா வெர்ஜினிட்டி டெஸ்ட் பன்னி பார்த்துடலாம்.உன்ன யாரும் கற்பழிக்கலன்னு கன்பார்ம் பன்னிக்கலாம்.அப்பப்பா நைட்ல இருந்து உன் ரோதன தாங்க முடியலடி.உன் டிரஸ் நான் தான் மாத்திவிட்டேன்.அதுவும் நர்ஸ கூட்ப்பிட்டு. அவ ஹெல்ப் பன்னா.அர்விந்த் அவன் வெளிலதான் இருந்தான் உள்ள வரவே இல்லை.போதுமா" என்றாள்.

அப்படி கூறிவிட்டு சங்கீதா "ஹேய் ரியா,நீ என்ன நினைச்ச.கொஞ்சம் சொல்லேன்.ஏடாகூடமா ஏதோ நினைச்சிருக்க.சொல்டி ப்ளீஸ்" என்றவளிடம் ஏதோ ப்ரியா சொல்ல வாய் எடுக்க அர்விந்த் கையில் டிஸ்சார்ஜ் சீட்டுடன் வந்தான்.
வந்தவன் "ஒக்கே.இப்போ நாம போகலாம்.நான் நிஷாவ தூக்கிகுறேன்,சங்கீதா நீ ப்ரியாவ கூட்டிட்டு வா"என்றான்.

உடனே சங்கீதா "யப்பா சாமி,என்னால இவ அலப்பறை தாங்க இயலாது.நான் நிஷாவ தூக்குறன்.வேனும்னா நீ நைட் இவள தூக்கின மாதிரி தூக்கிட்டு வா" என்றாள்.

என்ன நைட் அர்விந்த் நம்மல தூக்கினானா? என்று யோசித்த ப்ரியாவிடம் "சரி ப்ரியா நீ முன்னால நடந்து போ.ஏதும்னா சொல்லு.இந்த லூசு இப்டித்தான் உளறும் "என்றவனிடம்

ப்ரியா "நைட் என்ன நீங்க தூக்கினீங்களா" என்று கேட்டாள்

அவனோ முழித்துக்கொண்டு "இல்ல நைட் நீ மயக்கம் போட்டு விழுந்திட்டியா.அதான் உடனே உன்ன ஹாஸ்பிட்டல் கொண்டு வர தூக்கி கொண்டு கார்ல வைத்தேன் "என்று கூறிவிட்டு விறு விறு என்று முன்னே நடந்து சென்றான்.

ப்ரியா இல்லாமல் அர்விந்த் அவசரமாக வருவதை பார்த்த சங்கீதாவிடம் சென்று குழந்தையை வாங்கிக்கொண்டு "ஒழுங்கா போய் ப்ரியாவை கூட்டிட்டு வா "என்று கோவமாக இருப்பது போல கூறினான்.

"உங்க போதைக்கு நாங்க ஊறுகாவாட.சரிடா நல்லவனே உங்க ப்ரியா மேடத்தை நானே கூட்டி வாரன் " என்று போலியாக சலித்துக்கொண்டு சென்றவளை அர்விந்த் புன் முறுவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro