29

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

திருமணத்திற்கு முந்தைய அன்று இரவு.
ப்ரியாவின் கை பேசிக்கு அழைப்பு வர உள்ளே சிக்னல் இல்லாததால் பேசுவதற்கு வெளியில் வந்தவள் அங்கு இருவர் பேசிக்கொண்டிருப்பதை எதேர்ச்சையாக கேட்க முடிந்தது.

"டேய் மச்சான்.அப்போ  நீயும் ப்ரியாவ்ம் காலேஜ்ல இருந்தே லவ்வா" என்று  கௌசிக்கின் நண்பன் மிதுன் கேட்க கௌசிக்கோ

"அட போடா .ஆமா இவ பெரிய உலக அழகி.இவளை நாங்க காலேஜ்ல இருந்தே லவ் பன்னனுமாக்கும்.பாரு அவள குண்டா பார்க்க ஆண்டி மாதிரி இருக்கா" என்றவனை

"டேய் ஓவரா பேசாத .கொஞ்சம் பூசின உடல்வாகுதான் .அதுக்குனு ஆண்டினு சொல்வியா.மடப்பயலே.இந்த ஒல்லிப்பிச்சான் எல்லாம் நமக்கு படத்துல ஹீரோயினா பார்க்கத்தான் சரி.நமக்குனு வரும் போது பொண்டாட்டி மங்களகரமா அழகா இருக்கனும்.இந்த ஒல்லிப்பிச்சனுங்களுக்கு சாரி கட்டினா கேவலமா இருக்கும்.அதுவே ப்ரியா மாதிரி பொண்ணுங்க கட்டினா பார்த்து கையெடுத்து கும்பிடத் தோனும்டா.சரி அப்போ நீ அவள லவ் பன்னல.அப்புறம் ஏன் நீ உங்க அப்பாகிட்ட சொல்லி அவள பொண்ணு கேட்டு ...சொல்டா" மிதுன்.

"இங்க  பாரு மச்சி ,உன் குடும்ப குத்துவிளக்கு புராணத்த உன்கூடயே  வெச்சிக்க.நான் யூ எஸ்ல எத்தனை பொண்ணுக்க கூட டேட்டிங்க் போயிருக்கேன் தெரியுமா.அவளுங்கள பார்த்த...ப்ரியா என்னடா மைதிலியே தோத்துடுவா.." என்ற கௌசிக்கை

"டேய் இதுல இல்லாத மைதிலிய ஏன் இழுக்குற.பாவம் அவ சின்ன வயசுல போய் சேர்ந்துட்டா" என்று வருத்தப்பட்ட மிதுனை

"ஆமா மச்சி எனக்கும் கவலைதான்.இப்படி அல்பாயுசுல போவான்னு தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் அவள யூஸ் பன்னிருக்கலாம்.ச்சே ஜஸ்ட் மிஸ் ஆகிட்டு" என்ற போது மிதுன் ஆச்சரியாமா

"என்னடா சொல்ர, யூஸ் பன்னியிருப்பியா"

"ஆமாடா.நம்ம காலேஜ்லயே அழகுல அவள அடிச்சிக்க ஆளே இல்ல.ஆனா ஐயா யாரு..அவளையே கவுத்துட்டேன் தெரியுமா.என்ன பிரச்சினை ஆக முன்னாடி என் பேரண்ட்ஸ்கிட்ட கல்யாண விசயத்த பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டேன் " என்றவனை மிதுன் கேவலமாக ஒரு பார்வை பார்த்தான்.

"இப்ப நான் ப்ரியாவ ஏன் தெரியுமா கல்யாணம் பன்னிக்க போறேன்.அவளுக்கு ஒரு ப்ராஜக்ட் கிடைச்சிருக்கு.மொத்தமா 120 கோடி.எவ்வளவு 1200 மில்லியன்.12000 லட்சம்.சும்மா விடுவேனா.அந்த ப்ராஜக்ட்ல ஏதும் சப் காண்ட்றக்ட் கிடைச்சா  நல்லாருக்குமேன்னுதான்  நான் டெல்லி போனேன்.ஆனா கடவுள் நம்ம பக்கமா.அவள ஏர்போர்ட்லயே சந்திச்சு அவளுக்குதான் அந்த முழுப்ப்ராஜக்டும் கிடைச்சிருக்குன்னு தெரிஞ்சதும் உடனே போட்டதுதான் இந்த ப்ளான்.டெல்லி போகும் போது அர்விந்தும் கூட வந்தான்.அதான் நம்ம ஆளு மைதிலியோட புருசன்.ஹாஹா.அவன்கிட்ட ப்ரியாவ நான் காதலிக்குற மாதிரி ஒரு அக்ட் போட்டேன்.மடப்பய அவனும் நம்பிட்டான்.இவகிட்ட டெல்லில பார்க்ல வெச்சு ப்ரபோஸ் பன்னேன்.இவ எவண்டா கிடைப்பான்னு காத்திருந்திருப்பா போல .உடனே எங்கப்பாகிட்ட பேசுங்கன்னு சொல்லிட்டா.ப்ராப்ளம் சோல்வ்ட். சப் காண்ட்றாக்ட் கிடைக்குமான்னு இருந்தவனுக்கு முழுப் ப்ராஜக்ட்டும் இப்ப கைல.ப்ரியா கூட மெரேஜ்...லவ்வுமில்ல ஒரு மயிருமில்ல.ஜஸ்ட் பார் ப்ராஜக்ட்.இந்த கல்யாணத்துக்கு பேரு ப்ராஜக்ட் ப்ரியா ...போதுமாடா டீட்டைல்ஸ் நல்லவனே" என்ற கௌசிக்கை

"உன்கூட பழகினதுக்கு எனக்கு செருப்பால அடிக்கனும், ஒரு நாளைக்கு நீ நடுத்தெருவுல நிப்ப.அப்போ தெரியும் உனக்கு .நீ செஞ்ச பாவங்கள்.இனிமே உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்.போடா நீயும் உன் ப்ரெண்ட்சிப்பும்" என்று திட்டிவிட்டு மிதுன் அவ்விடத்தை விட்டு சென்றான்.

இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ப்ரியா சிலை என நின்றாள்.உடனே ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் அறைகுள் சென்று கதவை தாழிட்டுகொண்டாள்.திருமண நாள் அன்று காலை மணப்பெண்ணின் அறைக்குள் வந்த ரம்யா ,ப்ரியாவோ இன்னும் ரெடியாகாமல் இருப்பதை பார்த்து கடுகடுத்தவளாக

"ஏய் இப்போ ரெடியாகி வாரியா இல்லையா.அப்பா சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான் நான் வந்தேன்.இல்ல..."என்றவளை

"அப்பாவ இப்போ இங்க வர சொல்லு,கூடவே நீயும் வா" என்றால் ப்ரியா.

அப்பாவும் ரம்யாவும் ப்ரியா முன் நிட்க

"அப்பா தப்பா நினைக்க வேனாம்.எனக்கு இந்த கல்யானத்துல இஷ்டமில்லப்பா.ப்ளீஸ்.வேற ஏதும் கேட்காதீங்க.நான் எது செஞ்சாலும் நல்லா யோசிச்சிதான் செய்வேன்னு நீங்க சொல்வீங்கதானே.ப்ளீஸ் பா இந்த கல்யானம் வேனாம்பா" என்றாள்.

ப்ரியாவின் சம்மதித்திற்கு மாற்றமாக அவர் ஏதும் கூற மாட்டார் என்று ரம்யாவுக்கும் தெரியும்.அவரோ

"சரிடா உனக்கு இஷ்டமில்லாட்டி வேண்டாம்.ஆனா மாப்பிள வீட்ல என்னடா சொல்ரது.அப்புறம் மணமேடை வரை வந்து கல்யானம் நின்னுடிச்சின்னா அப்புறமா உன்ன யாருடா கட்டிக்குவா" என்று கவலை கொண்டவரை ப்ரியாவோ

"அப்பா கௌசிக்கிட்ட நான் பேசிக்குறேன்.இன்னொன்னு எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடந்தா அது அர்விந்த் கூட மட்டும்தான்.ப்ளீஸ் வேற ஏதும் கேட்காதீங்க.இப்ப கௌசிக்க மட்டும் கொஞ்சம் வர சொல்லுங்க" என்றவளை ரம்யா அதிர்ச்சியாக பார்த்தால்.இதுவே ஒரு வாரம் முதல் இவள் இப்படி கூறி இருந்தால் அர்விந்த் இவளை தங்கத்தட்டில் வைத்து பார்த்திருப்பான். ஆனால் இப்போ நிலமை தலைகீழாக உள்ளது.என்ன செய்யலாம்.ப்ரியா மனசு மாறியது ரம்யாக்கு சந்தோசமாக இருந்தாலும் அர்விந்தை என்ன சொல்வானோ என்று கவலை கொண்டாள்.

அப்பா கௌசிக்கை அழைத்து வந்து ப்ரியாவிடம் விட்டு செல்ல, ரம்யா அப்பவை வெளியில் கூட்டி வந்து

"அப்பா நாம அர்விந்த் கிட்ட பேசிப் பார்ப்போம்.அவனோட அம்மா ,அக்கா எல்லோரும் வந்திருக்காங்க.ஒரு டிரை பன்னி பார்க்கலாம்.ஒத்துகிட்டா இந்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்த பன்னிடலாம்பா" என்றது அவருக்கு சரி என தோன்ற அவர்கள் இருவரும் அர்விந்தின் குடும்பத்துடன் பேச சென்றனர்.

இங்கு ப்ரியாவின் அறையில் " what the hell is going on here.என்ன ப்ரியா இது இப்போ கல்யானம் வேனாம்னு சொல்ர.உன்கிட்ட சம்மதம் வாங்கிதானே கல்யானத்த பிக்ஸ் பன்னோம்" என்றவனை

"ஆமா கௌசிக் உன் ப்ரெண்ட் மிதுன் எங்க.அவன் கல்யாணத்துக்கு வரலயா" என்று ப்ரியா கேட்க அவன் முகமோ வெளவெளத்துப் போனது.தன் தடுமாற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல்

"அவன் எதுக்கு,அவன் நேத்து நைட்டே ஏதோ அவசர வேல இருக்குன்னு சொல்லி பொய்ட்டான்" என்றவனை

"எப்படி,நீ மைதிலி கிட்ட சொல்லிட்டு போனியே அது மாதிரியா "என்று கேட்டாள்.அப்படியே தொடர்ந்த ப்ரியா

"நீ நைட் அவன்கூட பேசின எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன். ஏன் கௌசிக் பொண்ணுங்கன்னா உனக்கு என்ன போகப் பொருளா.நான் குண்டுதாண்டா .இல்லன்னு சொல்லல.ஆனா என்னையும் ஒருத்தன் உயிருக்கு உயிரா விரும்பினான்.ச்ச்சே நாந்தான் அவன தப்பா புரின்ஞ்சி என்ன பன்றோம்னு தெரியாம அவனை பழிவாங்குறதா நினைச்சுகிட்டு புத்தி கெட்டு போய்...சரி அத விடு.இப்போ மைதிலிய நீ ஏமாத்தினேன்னு நான் அர்விந்த் கிட்ட சொன்னா அவன் உன்ன அடிச்சே கொன்னுடுவான்.நான் சொல்லட்டுமா,இல்ல கல்யாணத்த நீயே நிறுத்திட்டு போறியா" என்றவளை எதுவும் எதிர்த்து பேச முடியாமல் தன் குட்டு வெளிப்பட்டதை என்னி வருந்திக்கொண்டு அவள் அறையை விட்டு வெளியேறி தன் குடும்பத்தாரிடம் இந்த கல்யாணம் நடக்காது வேற ஏதும் இப்போ கேட்கவேண்டாம் என்று கூறி அழைத்து சென்றான்.

இங்கு அர்விந்தின் குடும்பத்திடம் ரம்யாவும் அவளின் அப்பாவும் பேச அர்விந்தின் அம்மாக்கும் அபினயாக்கும் பூரண சம்மதம்.ஆனால் அர்விந்த் என்ன சொல்வானோன்னு பயந்த வேலை அவன் உடனே

"ப்ரியாவ நான்  கட்டிக்கிறேன்" என்றான்.

ரம்யாவின் அப்பா சந்தோசத்தில் அவன் கையை பற்றி "தேங்க்ஸ் மாப்ள" என்று கூற ரம்யாவோ என்ன நடக்குது என்று புரியாமல் குழம்பி போய்

"டேய் என்னடா பொசுக்குன்னு ஒக்கேன்னுட்ட.நிஜமாலும் உனக்கு ஒக்கேயா" என்றவளை

"அவளை கல்யாணம் பன்னி அவளுக்கு நரகம்னா என்னன்னு காட்டப் போறேன். I am gonna show what is the hell"என்றவனை ரம்யா ஏதும் பேசாமல் ப்ரியாவின் அறைக்குள் சென்றாள்.ஏனென்றால் அவளுக்கு தெரியும் அர்விந்த் யார் மனதையும் இலகுவில் காயப்படுத்த மாட்டான் என்று.என்னதான் கோவம் இருந்தாலும் சில நாட்களில் சரியாகிவிடும் என்று என்னினால்.

ப்ரியாவின் அறைக்குள் வந்தவள் "ஓய் நீ தேடிப்பிடிச்சி ஒருத்தன கேட்டியே.அவன் உன்ன கட்டிக ஒக்கே சொல்லிட்டான்.நீ என்ன சொல்ர"என்று கலாய்த்த தன் தங்கையை ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக நோக்கியவள்

"எத்தன மணிக்கு முகூர்த்தம்.நான் அதுக்குள்ள ரெடியாகனுமே "என்று தன் பங்கிற்கும் ஆச்சர்யபடுத்தினால் ப்ரியா.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro