16.என்னைமறந்தாயோ கண்ணம்மா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சூரியன் தன் பணியைத் துவங்கும் முன்னரே தனது பணியினைத் துவங்கிவிட்டார் பருவதம்.. பேரன் மருமகளுக்காய் நாட்டுக்கோழியை வாங்கி வரச் செய்தவர் அதனை பக்குவமாய் சமைத்து முடித்துவிட்டு ஆவி பறக்க சூடான இட்லிகளையும் சுட்டு எடுத்துவிட்டு, பேரனுக்காய் விறகடுப்பில் சுடுதண்ணீர் போட்டுவிட்ட பின்னரே அனைவருக்கும் காபி கலந்து கொண்டுவந்து எழுப்பி விட்டார், தன் மருமகளைத் தவிர..

காலையில் எழுந்ததும் கிழவி பாடும் சுப்பிரபாதம் ..(அதான் ரோகிணியை திட்டுவது) கேட்காமல் கிளம்பிவந்த ரோகிணி அவரின் ஓட்டத்தை சற்றே விரக்தியுடன் பார்த்துவிட்டு கோலமாவை
எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றாள்.. அங்கு ஏற்கனவே பருவதம் சாணம் தெளித்து வாசலை கூட்டி வைத்து சென்றிருக்க, சின்னதாய் ஒரு கோலம் போட்டு விட்டு சென்று விடலாம் என்றிருந்தவளிடம் , வாசலில் வெறும் உள்பனியனும் வெள்ளை வேட்டியும் கட்டி, கையில் வேப்பங்குச்சியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த உதயன் அவளிடம் சிநேகமாய் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு கோலமாவை வாங்கி கோலம் போட ஆரம்பித்தான்..

" அண்ணா.. கொடுங்கன்னா நானே போட்டுக்கறேன்"
" கையில தான் காயமா இருக்குல்லடா.. நீயேன் சிரமப்படற.. இன்னும் ஒரே நிமிசம்தான் " என்றவன் சரசரவென்று வாசலே நிரம்பிப் போகும் அளவிற்கு ரங்கோலியை வரைந்து விட்டான்..

அவன் கோலமிடும் அழகில் வியந்தவள்
" அண்ணா.. அப்பா கூட உங்கள மாதிரியே தான்னா நான் லேட்டா எழுந்துட்டா இதே மாறிதான் ஒரே நிமிசம்னு சொல்லிட்டு அவரே கோலம் போடுவாரு" என்றாள். ஆனால் அவன் அதற்கு ஒன்றும் சொல்லாமல் கோலடப்பாவை அவளிடம் கொடுத்துவிட்டு நகர,
" நீங்க அப்பா மேல இன்னும் கோபமாத்தான் இருக்கிங்களாண்ணா " என்க,

" அப்படிலா இல்லடா.. கோபம்னு சொல்ல முடியாது.. வருத்தம்னு சொல்லலாம்.. லைப்ல எத்தனையோ அழகான தருணங்கள இழந்துட்டோமேங்கற ஏக்கம் தான்டா.. என்னால அவரோட செய்கைய புரிஞ்சிக்க முடியுது..ஆனா காலங்கடந்த பின்னாடி கிடைச்ச இந்த அன்ப என்னால ஏத்துக்க கொஞ்சம் டைம் எடுத்துக்கும்டா.. " என்று அவன் தலையை கோதிவிட்டான்.. அவனது ஒவ்வொரு செயலும் வாசுவையே ஒத்திருக்க, ஒரே இரத்தம் என்றால் இப்படித்தான் போல, அதனால் தான் என்னால் எவ்வளவு முயன்றும் அவரே வளர்த்திருந்தாலும் வாசுவினைப் போல தைரியமாக இருக்க முடியவில்லை என நினைத்துக் கொண்டாள்..

வீட்டினுள் உதியின் குரல் கேட்டதும்
அவனிடம் உதியைப் பற்றி பேசி விடலாம் என நினைத்தவள் " அண்ணா " என வாயைத் திறக்க, அதற்குள் உதி அவர்கள் முன் வந்து விட்டாள்..

ரோகிணியின் பார்வை போகும் திசையை தானும் பார்த்தவன் அவள் முன்னால் வந்து நிற்கும் உதியை இறைஞ்சும் பார்வை பார்த்து வைக்க, அவளோ அவனை கண்டு கொள்ளாமல் " ரோகிணி உங்கண்ணாவ உங்க அப்பத்தா கூப்பிட்டாங்க " என்றவள் ரோகிணியை அவனிடமிருந்து சற்று தூரம் தள்ளி இழுத்துச் சென்று " ஹேய்..நான் அவர்கிட்ட அதைப் பத்தி பேசவே இல்லடி.. உன் ஓட்டவாய வெச்சிட்டு சித்த சும்மா இருந்துருடி " என ரோகிணியின் காது கடிக்க, அவளோ கன்னாமுழி வெளியே தெறிக்கும் அளவிற்கு முறைத்து பார்த்தாள்..
" இஇஇஇஇ சாரிடி செல்லோ "

" பேசாத..நைட்லா நீ சொன்னத நினைச்சு எனக்கு தூக்கமே வரல தெரியுமா..  உனைய நினைச்சு எவ்ளோ ப்பீல் பண்ணேன்..போடி "

" என்னடி தங்கோ..இப்படி கோவிச்சிக்கற..சரி விடு..என்னால தான் நீ சரியா தூங்கல..இப்போ போயி நீ படுத்து தூங்குவியாம்....நான் போயி உங்க அப்பத்தாவுக்கு துணையா எதும் எடுபுடி வேலை செய்வேனாம்"

" ஐயோ..சாமி..நீ பண்ண ஹெல்ப்பே போதும்..உனைய எங்கப்பத்தா இன்னும் அடிக்காமே இருக்கறதே தம்புரான் புண்ணியம்.."

" ஹேய்..நான் எவ்ளோ மெதுவா பேசறேன்.. நீயேன்டி இப்படி அவர் முன்னாடி காட்டுகத்து கத்தி மானத்த வாங்குற"

" ஹூக்கும்..இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. ஒழுங்கா உன் காதல்ல சொல்லி ஓகே பண்ற வழிய பாரு..இல்லன்னா உண்மையாவே நான் எனக்கு வேறொரு அண்ணிய பார்க்க வேண்டியதா இருக்கும்..

ஹேய்..நான் சும்மாதான் சொன்னேன்.. மூஞ்சிய இப்படி வெச்சுக்காதடி "

" ம்ம்..சரிடி.. என் காதல் சக்சஸ் ஆகனும்னு கடவுள் நினைச்சார்னா கண்டிப்பா நாங்க சேர்வோம்.. இல்லைனா கடவுள் விட்ட வழி ." என எதையோ நினைத்துக் கொண்டு கூற, ரோகிணி அவளை சந்தேகமாய் பார்த்தாள்..

" அடியே உத்ராகுமாரி.எங்கடி போயி தொலைஞ்ச" என வீட்டில் இருந்தபடியே பரு உதியை அழைக்க,

" பாத்தியாடி..உங்கப்பாத்தவுக்கு லொள்ள. எனைய எப்படி கூப்டுதுனு.. ஹூம் இரு நான் போயி என்னனு கேட்டுட்டு வரேன் " என்றவள் மனதில் பருவிற்கு நன்றி சொல்லிக் கொண்டே சிட்டாய் பறந்து விட்டாள்.. ரோகிணி அடுத்து உதயனைப் பார்க்க, அவனும் உதி சென்றதும் அவள் பின்னாலே சென்று விட ' அண்ணா ஏன் இவள பாவமா பாக்குறாரு ' என யோசித்துக் கொண்டே அப்படியே நின்று விட்டாள்..

" ஓய்..சீதா தேவி.. என்ன பலத்த யோசனை" என்று கேட்டபடியே வந்தான் விசாகன்.. அவன் இப்போதுதான் நடைபயிற்சி செய்துவிட்டு வீட்டிற்குள் நுழைகிறான்..

அவன் அழைப்பில் கடுப்பானவள்
" என் பேரு ரோகிணி" என முகம் சுழிக்க,

அவளது கோபத்தில் குஷியானவன்
" அட.. உனக்கு அந்தப் பேர விட இந்தப் பேரு பொருத்தமா இருக்குமா "என்றான்.

" நேத்து நைட் எங்கிட்ட எவ்ளோ பொறுப்பா பேசுனீங்க.. இப்போ இப்படி பேசறீங்களே"

" ஏம்மா.. செல்ல பேரு வெச்சது ஒரு குத்தமா..ரைட் விடு..ரோகிணின்னே பிக்ஸ் பண்ணிக்கறேன்..
இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலையே "

" என்ன கேள்வி கேட்டீங்க" அவள் உண்மையாய் அந்தக் கேள்வியை மறந்துதான் போயிருந்தாள்.

" ஐயோ..என் அத்தை பெத்த ரத்தினத்துக்கு ஞாபக மறதி நோயும்  இருக்குனு எனக்கு இப்போதான தெரியுது.. ம்..சரி என்ன பண்றது..இன்னொருக்கா கேட்டுக்கறேன்..
நான் கூப்பிடறது கூட கேட்காம அப்படி என்ன ஆழ்ந்த யோசனைன்னு கேட்டேன்"

" ஓ..அதுவா.. அது உதியோட லவ்." ஐயயோ..உலறிட்டோமே..இப்போ என்ன பண்றது..

" என்னது உதியோட லவ்வா "

" ஏங்க கத்தாதீங்க.. யாராச்சும் கேட்டற போறாங்க... "

" ஏங்க நீங்கங்க.. இப்போங்க உண்மைய சொல்லலைனாங்க.. நான் ஸ்ட்ரெயிட்டாங்க..உங்க அப்பாக்கிட்டங்க சொல்லி வெச்சிடுவேனுங்க" என்று பயம் காட்டியதும் அவள் இதயம் பயத்தில் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது..

முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு
" ப்ளீஷ்..யார்கிட்டயும் சொல்லிடாதீங்க " என்றவள் உதயின் காதலைப் பற்றிக் கூற,அவளை ஏளனமாய் பார்த்தவன் " சரியாத்தான் சொன்னாங்க"என்க,

" என்னனு "

" பொண்ணுங்க ரகசியத்த காப்பாத்த மாட்டாங்கனு " என அவன் சொன்னதும் கோபமாய் " ஏங்க. என்ன சொன்னாலும் எனைய மட்டும் சொல்லுங்க..அதென்ன எல்லா பொண்ணுங்களையும் சேர்த்து சொல்றீங்க.. " என சிடுசிடுக்க,

" எம்மா.. நீ பாட்டுக்கு பெமினிசம் பேசி பொண்ணுங்க கிட்ட எனைய ஒதை வாங்க வெச்சிராத.. நான் ஏதோ சும்மா மிரட்டுன உடனே உண்மைய ஒலறிட்டியேனு சொல்லிட்டேன்.. பாத்துமா..நீ பாக்குற பார்வைல பாதி  எறிஞ்சே போயிட்டேன்..கொஞ்சம் கம்மியாதான் முரையேம்மா " என பயந்தவன் போல நடிக்க அதில் இன்னும் கடுப்பாகிப் போனாள்.

" நேத்து நீங்க பேசறத வெச்சு உங்கள ரொம்ப நல்லவங்கனு நினைச்சேன்" என கழுத்தை திருப்பிக் கொள்ள

" அச்சச்சோ..சீதா மேடம்க்கு மறுபடியும் கோபம் வந்துடுச்சா.. நான் வேணா உங்க கோபம் போற மாதிரி ஒரு சந்தோசமான விசயம் சொல்லவா " என அவள் திரும்பிய திசையில் தானும் சென்று நிற்க, என்ன செய்தி என தெரிந்துக் கொள்ளும் ஆவல் இருந்தாலும் அமைதியாகவே இருந்தாள்.. யார் தன்னிடம் வம்பிழுத்தாலும் கண்டு கொள்ளாமல் பொறுத்துப் போகிறவள் விசாகனிடம் முரண்டு பிடிப்பது அவளுக்குமே புதிராகத் தான் இருந்தது..
அவனுமே அவளை சீண்டி சீண்டி பேச்சாளியாய் அவளை மாற்றுவதில் குறியாகத் தான் இருந்தான்.

அவன் செய்தியை சொல்லுவான் என்று எதிர்பார்த்தவள் அவன் உள்ளே செல்ல போகவும்,
" ம்ச்..சரி நீங்க தான் ஜெயிச்சீங்க.. போதுமா..இப்போவாச்சும் என்னனு சொல்லுங்க " என்றாள்.

" அது என்னனா.. உங்க அண்ணாவுக்கும் உதி மேல ஒரு லவ்வாங்கிங்க "

" நிஜமாவாங்க"

" உங்க அப்பத்தா மேல சத்தியம்ங்க"

" ஹேய்.. "

" அட அப்படி பார்க்காதமா.. நிஜமா உங்கண்ணன் உதிய இப்போ இல்ல ஒரு வருசத்துக்கு முன்னாடி இருந்தே லவ் பண்றான்.. ஆசிரமத்துல போன வருசம் நீயு இயர்ல உதிய பார்த்துட்டு மனச பறி கொடுத்துட்டான்.. அவளுக்காக தான் அடிக்கடி அங்க போவான்.. ஆனா உத்ராக்கு அப்படி எந்த எண்ணமும் அப்போ இல்ல.. இவனும் இதயம் முரளி மாதிரி தூர நின்னே பார்த்துட்டே இருப்பான்.. சரி எப்படி இவன் லவ்வ சக்சஸ் பண்றதுன்னு யோசிக்கும்போதுதான் உத்ரா உன்னோட பிரண்ட்னு தெரிஞ்சுது.. சரி இந்தப் பிரச்சனைல உதயனுக்காக உத்ராவையும் கொண்டு வர வேண்டியதா போச்சு..
அம்மா அடிக்கடி நெற்றிக்கண்ண திறக்காதம்மா..இந்த திட்டத்துல உதயாக்கு எந்த சம்பந்தமும் கிடையாது..ஹூம்..அப்ரோ, நடக்கற திடீர் திருப்பங்களால அவன் வாடிற கூடாதுன்னு தான் உத்ராவ எங்க கூடயே இருக்க வெச்சிக்கிட்டேன்..
எப்படியோ நான் நினைச்ச மாதிரியே உத்ராவும் அவன விரும்ப ஆரம்பிச்சிட்டா.. அதுவே போதும் " என பெருமூச்சு ஒன்றினை விட,

" ஒருவேளை அவளுக்கு அண்ணாவ பிடிக்காம போயிருந்தா.. அண்ணாவ தப்பாவே நினைச்சிருந்தா என்ன பண்ணி இருப்பீங்க" என ரோகிணி எதிர் வாதம் செய்தாள்..  அதுவரை விளையாட்டாய் பேசியவன் நிதானமாக " என் நண்பனோட காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. அவன் ஒன்னும் பாக்குற எல்லாப் பொண்ணையும் விரும்புறவன் கிடையாது.. அவனோட காதல் தூய்மையானது..அதுல எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது..ஒரு பொண்ணோட மனசுல என்ன இருக்குனு தெரியாம எப்படி அவ முன்னாடி போயி நிக்கறதுன்னு ஒதுங்கித்தான் நின்னான்.. அவனோட காதல் எனக்கும் தெரியும்னே அவனுக்கு தெரியாது.. அவனோட வாழ்க்கைல எல்லாமே எங்க அத்தை எடுக்கிற முடிவுதான்.. அவனா ஆசை பட்டது உத்ராவ தான்..
அதுனால தான் அவனுக்கு மறைமுகமா ஹெல்ப் பண்ணேன்.. இதுல எந்த குற்ற உணர்ச்சியும் எனக்கு கிடையாது..ஏன்னா என் நண்பன் மாதிரி ஒரு வாழ்க்கைத் துணை கிடைக்க உன் பிரண்ட் கொடுத்து வெச்சிருக்கனும் " என்றான் நிமிர்வாக,

" உதயா அண்ணானு உங்களுக்கு அவ்ளோ இஷ்டமா "

" என் உயிரே அவன்தான் "

" ம்ம்.. அதுசரி.. உங்க நண்பன் காதலுக்கே இவ்ளோ யோசிக்கறீங்களே.. உங்களுக்கு இந்த மாதிரி எதும் காதல் கதை இருக்கா? "

" ஹூம்.. அதுக்கெலாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன் ரோகிணி"

" ஏங்க இப்படி சொல்றீங்க.. நீங்களும்  படிச்சிருக்கிங்க..நல்லா சம்பாதீக்குறீங்க.. பார்க்கவும் நல்லாத்தான் இருக்கீங்க.. அப்ரோ ஏன் "

" எனக்கு லவ் மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்லைமா.. அரேன்ஜ் மேரேஜ் பண்ணிக்கனும்னு தான் ஆசை.. அதும் பாஹீ அத்தை யார சொல்றாங்களோ அவுங்கள தான்.. "

" ஏன் அப்படி? "

" எப்படினா என்ன சொல்றது... என்னை அம்மா அப்பா இல்லாத குறை தெரியாம உதயாவுக்கும் மேல பாசமா வளர்த்தாங்களே அவுங்களுக்கு நான் செய்யற நன்றிக்கடன்.. எனக்காக ஒவ்வொன்னையும் பார்த்து செஞ்ச அவுங்களுக்கு எனக்கேத்த பொண்ணையும் தேர்ந்தெடுக்கத் தெரியும் "

" உண்மையா நீங்க இந்த அளவுக்கு நல்லவங்களா.. "

" ஓ..அப்போ நீ என்னை முழுசா கெட்டவானவே நினைச்சுருக்க..அப்படிதானே "

" ச்சீச்சி அப்படிலா இல்லை நீங்க நான் நினைச்சளவுக்கு மோசம் இல்ல.. பிரண்ட்சிப்க்கும் மரியாதை கொடுக்குறீங்க.. பெரியவுங்களுக்கும் மரியாதை கொடுக்குறீங்க..ஆனாலும்"

" ம்ம்..அப்போ சீதா தேவி மேடம் என்னை இன்னும் ராவணனாத்தான் நினைச்சிருக்கீங்க.. " என முரைக்க,

" சாரி.ஆனா என்னால நீங்க என்ன பண்ணாலும் அந்த கடத்தல மன்னிக்கவே முடியல.. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..ஆட்சுவலி அது தப்பு தானே.. அப்போ என் கோபம் சரி தானே "

" ஆமா ஆமா தப்பு தான்..பெரிய தப்பு தான்.. அந்த தப்ப நான் பண்ணாம இருந்தா உங்கப்பா இப்படி குடும்பத்தோடு சந்தோசமா இருந்துருக்க மாட்டாங்க..உன் பாஹீ அம்மாவும் இந்நேரம் உயிரோட இருந்துருக்க மாட்டாங்க. அதுனால நான் பண்ணது ரொம்ப தப்பானது தான் " என்று கோபமாக கூறியவன் வேகமாக வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.. அவளிடம் எத்தனை முறை மன்னிப்பு கேட்டிருந்தாலும் அவனுக்கும் பிடிக்காமல் செய்த செயலையே திரும்பத் திரும்ப சொல்லிக் காண்பித்ததில் அவன் மேலயே அவனுக்கு கோபம்..அதனைத் தான் அவள்மேல் காட்டி சென்று விட்டான்..

பாஹீ கண் விழித்துப் பார்க்கும்போது அவள் கண்ணில் பட்டது தன்னையே விழி அகழாமல் பார்த்திருந்த வாசுவைத் தான்.
தினமும் போல நான்கு மணிக்கே எழுந்து கொண்டவன் தனது மனையாளின் முகத்தினையே பார்த்திருந்தான்.. மீண்டும் அவன் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு தூங்க ஆரம்பிக்க, அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவன் வாங்கி வைத்திருந்த ஒற்றைக் கல் மூக்குத்தியை வலிக்காமல் அணி வித்தான்..

" ஆஆ... வலிக்குது வாசு.. "

" மூச்.. அவ்ளோ தான்..அவ்ளோ தான்.. எழுந்ததும் நல்லா டைட் பண்ணிக்கோ..ம்ம் "மெதுவாக அந்த இடத்தில் ஊதி விட்டான்..

" இப்போதான் என் பாஹீ மாதிரி அழகா  இருக்க"
அவன் மடியில் இருந்து எழுந்தவள்
" அப்போ மூக்குத்தி போடலீனா நான் அழகில்லியா"

" ச்சேச்ச.. உன்னால தான் அந்த மூக்குத்திக்கே பெருமை "

" ஹூக்கும் . கிழவனுக்கு வயசான பின்னாடி தான் இளமை திரும்புது போல..கவிதைலா சொல்றீய என்று வெளியே செல்லப் போனவளை இழுத்துப் பிடித்தவன் " எனக்குலாம் என்றும் பதினாறுதான்.. உனக்கு தான் வயசாகிடுச்சு .வெள்ளை முடிலா வந்துருச்சு .." என்க,

" ப்ச்..போடா டேய்.. கிழவா"

" போடி கிழவி " அவள் காதில் உரக்கக் கத்த," உனைய" என ஏதோ பேச வந்தவள் கண்களில் அவனது சாட்டை தென்பட, அதனை எடுத்துக் கொண்டு " இன்னொரு தடவ எனைய கிழவின்னு சொன்ன " என்றபடியே துரத்த படுபாவி உண்மையாகவே அடித்துவிடுவாள் என்பதை அறிந்து கதவினைத் திறந்து வெளியே ஓடினான்..

அவர்கள் துரத்தியபடி வீடு முழுவதும் சுற்றிவர அதனை சிறியவர்கள் " பே' என்று பார்த்திருந்தனர்.. ' மாறுனாலும் கொஞ்சம் இடைவேளை விட்டு மாறுங்கய்யா.. இப்படி சடன்னா மாறுனா சின்ன பிள்ளைங்க நெஞ்சு தாங்குமா '..பருவிற்கு இதெல்லாம் பழக்கப்பட்ட ஒன்று தானே.  அதனால் யார் கண்ணும் அவர்கள் மேல் பட்டுவிடக் கூடாது என நெட்டி முறித்து விட்டு வேலையை தொடர்ந்தார்.

வாசு கிழவி என்று மீண்டும் கத்தியபடியே ஓட, பாஹீயும் அவனுக்கிணையான ஆற்றலுடன் அவனை துரத்திக் கொண்டிருந்தாள்.. அவர்கள் சத்தம் கேட்டபடியே கையில் இனிப்புடன் வந்த சண்முகன் தான் தத்தளித்துப் போய் நின்றான்.. வாசு அவனைச் சுற்றியும் ஓடி ஒழிய வாசுவின் மேல் பட வேண்டிய அடி சற்று அவன் மேலும் விழுந்தது.. அதனைக் கூட கண்டு கொள்ளாமல் அவர்கள் விளையாட்டைத் தொடர,
" நிறுத்துங்க.. இங்க என்னையா நடக்குது " என்று உரக்க கத்தினான்.. அவன் கத்தலில் அனைவரும் சுயநினைவடைந்து அவனை சூழ,

" இது வீடா..இல்லை மாயா பஜாரா.. " அங்கே ஓரமாய் நின்றிருந்த ரோகணியிடம்
" ஓய்.. ஸ்டாரு.. இங்க நிக்கறது என்னோட அய்யனாரு தானா.. இல்லை அவரோட பையன்னா.. ஒரு சின்னப்பையன் முன்னாடி இப்படி தான் ஓடிப்பிடிச்சு விளையாடுவாங்களா..."

" அய்யனார் மாமா.. என்னதிது.. ஓடிப் பிடிச்சு விளையாடற வயசா இது.. உனைய என் மனசுல எப்படி வெச்சிருந்தேன் தெரியுமா.. நீ என்னடான்னா சிறுபுள்ளைத் தனமா நடந்துக்கற..உனக்கு அழகே..உன்னோட கம்பீரம் தானய்யா" என அலுத்துக் கொள்ள

" இஇஇஇஇஇஇ.. அரசியல்ல இதெல்லாம் சாதரணம்டா சண்முகா " என அவன் கண்ணம் கிள்ளி விட்டு வெளியே சென்று விட்டான்..

அப்போதுதான் அவன் நன்றாக பாஹீயைப் பார்த்து யார் என்று உத்ராவிடம் பார்வையால் வினவ, அவள் சைகையாய் மிஸ்ஸஸ்.அய்யனார் என்க, தற்போது நிஜமாலுமே அவனது இதயம் வெடித்துவிடும் போலிருந்தது..

இந்த மனுசன் இன்னும் எத்தனை பேரத்தான் ஒளிச்சு வெச்சிருக்காரோ என நினைத்துக் கொண்டவன் தடாலடியாக அவர் காலில் விழுந்து " எனைய ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை" என்றுவிட்டான்..

பாஹீ உடனே ஈஸ்வரியாய் மாறி அவனை தூக்கி விட்டு அவன் தலையில் கை வைத்து " நல்லா இருப்பப்பா.. ரொம்ப நல்ல பையன்னா இருக்கியே...உன் பேர் என்னப்பா " என்க, ரோகிணியையும் உதியையும் நக்கலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு " சண்முகப் பிரியன் அத்தை.. நீங்க செல்லாமா.. முகின் னு கூப்பிடனும் சரியா " என சமத்தாய் சொல்ல, அவரும் தலையாட்டி விட்டு குளிக்கச் சென்றார்..

உதி " கைல என்னடா ஸ்வீட் பாக்ஸூ ..எனைய கேட்டா நான் செஞ்சு கொடுத்திருப்பேன்ல லவ்வரு"
"நீ  நேற்று எனைய வெச்சு செஞ்சது பத்தாத..கொலை கேஸ்ல வேற ஜெயிலுக்கு போகனுமா நீ .. ம்ச்.. பரவால இந்தா   நான் ஒரு குட் நியூசோட வந்துருக்கேன்..அதான் உனைய மன்னிச்சிட்டேன்.. இந்தாங்க எல்லோரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க" என விசாகன் உதயன் என அனைவருக்கும் கொடுத்து விட்டு " நான் நீட் எக்சாம் கிளீயர் பண்ணிட்டேன்.. ******* மெடிக்கல் காலேஜ்ல ஷீட் கிடைச்சிருக்கு.. அதான் இந்த நல்ல விசயத்த என் அய்யனார்ட்ட சொல்லலாம்னு வந்தேன்.. ஆனா அவரு பண்ண கலாட்டால்ல மறந்தே போயிட்டேன்." என்று உதியின் கைப்பிடித்து சுத்திக் கொண்டே உற்சாகத்தில் கத்தினான்..

" கன்கிரேட்ஸ்டா லவ்வர் பாய் "

" எல்லாம் என் தேவதையோட ஆசிர்வாதம்தான் லவ்லிலேடி" 

" ஹேய்.. செம்ம சூப்பர் நீயூஸ்டா சண்முகா.. " என ரோகிணி சந்தோசமாக லட்டை சண்முகனுக்கு ஊட்டி விட்டாள்..

" ஸ்டாரு.. இனி வெறும் சண்முகம்லா இல்ல..டாக்டர் சண்முகப்பிரியன்..புரிஞ்சுதா.. நான் போய் என் பிம்பிள் கிழவிக்கு இதை சொல்லிட்டு வரேன்.. " என்று சென்றுவிட்டான்..

" எனக்கு என்னமோ நானே பாஸான்ன ப்பீல் ரோகிணி "

" ஆமான்டி..எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு.. எங்க ஊர்ல முதல் டாக்டர் இவன் தான்..அவனும் கஷ்டப்படற பேமிலி தான்..ஆனா அதை எப்பவும் வெளிய காமிச்சிக்க மாட்டான்.. அவனுக்கு எதாச்சும் பண்ணனும்டி.. எங்கப்பாக்கு இந்த விசயம் தெரிஞ்சா ரொம்ப சந்தோசப்படுவாரு.."

உதயன் " அவனோட எல்லா செலவையும் நான் ஏத்துக்கறேன்டா.. "

" தேங்க்ஸ்ணா "

" ச்சே.. தேங்க்ஸ்லா எதுக்குடா.. படிக்குற பசங்களுக்கு என்ன வேணா செய்யலாம்.. அப்டியே உங்க ஊருல படிக்க ஆசையிருந்தும் ஏழ்மைனால யாரும் படிக்காம இருந்தா சொல்லு..எங்க ஈஸ்வரி டிரஸ்ட் மூலமா படிக்க வெச்சிடலாம் "

" சரிண்ணா.."

காலை பதினொரு மணி..
அனைவரும் வெளியே வேப்ப மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க
உத்ரா கிளம்பி வெளியே வந்தாள்..

" உத்ரா என்னடா எங்க பயணமாகிட்ட"

" அங்கிள்.. அதுவந்து.. நான் ஊருக்கு கிளம்பறேன்..அங்கிள்.. "

உதயன் முகமே வாடிப் போய்விட்டது..தலை நிமிராமல் அப்படியே இருந்தான்..

" என்னடா அவசரம்.. இன்னம் கொஞ்ச நாள் இருந்துட்டு போலாம்ல.. "

" இல்ல அங்கிள்.. நான் கேம்பஸ்ல செலக்ட் ஆன கம்பெனில வேலைக்கு ஜாயின் ஆகனும்.. ரோகிணிக்கு அடிபட்டதால தான் இங்க இத்தனை நாள் இருக்க வேண்டியதா போச்சு. நெக்ஸ்ட் மந்த் லீவ்ல வந்தரேன் அங்கிள் ".

அவள் முகத்தில் உள்ள தீவிரத்தால் அவளைத் தடுக்கவும் முடியவில்லை
வாசுவிற்கு அவளைத் தனியாக அனுப்புவதற்கும் மனமில்லை..

" அவ போகட்டும்பா.. எங்க காலேஜ்லயே அந்த கம்பெனிக்கு செலக்ட் ஆனது அவ மட்டுந்தான்பா... அவளோட கனவுகளுக்கு குறுக்கா நாம இருக்க கூடாதுப்பா "

ரோகிணி கூட அவள் செல்வதை தடுக்கவில்லை.. உதிக்கு அந்த வேலை எவ்வளவு முக்கியம் என்று அவளுக்கும் தெரியும்.. எத்தனை நாள் தான் அவள் டிரஸ்ட் தரும் பணத்தையே சார்ந்திருப்பாள்.. சொந்தக் காலில் தன் தோழி நிற்பது தானே பெருமை.

"சரிடா..போயிட்டு வா.. ஆனா உனக்கு இங்க ஒரு குடும்பம் இருக்கறத எப்போதும் மறக்க கூடாது.. "

" எப்பட கிளம்புற "

" மதியம் ஒரு மணிக்கு டிரையின் அங்கிள்.. சண்முகம் ஸ்டேசன் கொண்டு வந்து விடறேன்னு சொன்னான் "

" சரிடா " என்றவன் ரோகிணியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட, அங்கே பருவதம் உதயன் விசாகன் பாஹீ உத்ரா மட்டும் இருந்தனர். பாஹீ அவளை பக்கத்தில் அமர வைத்துக் கொள்ள அவளோ அவர் அருகில் அமர நெழிந்தாள்..

ஏம்மா எனைய பார்த்தா பயமா இருக்கா

ஐயோ..அப்படிலா இல்லமா..நான் சின்ன வயசுல இருந்தே உங்கள கடவுள் மாதிரி தான் நினைச்சிருக்கேன்.. அதான் உங்க பக்கத்துல நான் போயி உக்காரலாமான்னு யோசிச்சேன்.. இந்த லைப் நீங்க எனக்கு கொடுத்தது..அதை என்னைக்கும் மறக்க மாட்டேன்

விசாகனுக்கு அவள் செல்வது பிடிக்கவில்லை...உதயன் அவளைத் தடுப்பான் என்று நினைத்தால் அவன் கண்டு கொள்வதாக தெரியவில்லை..
" உத்ரா அந்த கம்பெனி நேம் என்ன"

அது அது என தயங்கியவள் *** என்று வேறொரு கம்பெனி பெயரைச் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.. எப்படி சொல்வாள் அவள் தற்போது வேலைக்கு செல்வது கே.எஸ்.ஆர் குரூப் ஆப் கம்பெனிஸ் க்கு என்று.. ரோகிணி்க்குமே அவள் செல்வதற்கான உண்மையான நோக்கம் தெரியாது..அதனால் தான் சம்மதித்தாள்.ஆனால் உதயனுக்கு!!!!

வாசு ரோகிணியிடம் உத்ராவின் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி விட்டான்.. ஏன்னோ அவள் செல்வது பருவற்குமே சற்று ஏமாற்றமாக இருந்தது.. தன்னுடன் வாய்ஜாலம் புரிந்து வெற்றி கொள்ளும் உதியைப் பிரியவும் அவரும் சோர்ந்துதான் விட்டார்..

" இந்தா வாயாடி.. " என நூறு ரூபாய் தாளை அவள் கையில் திணிக்க, அதில் அவரது ஆசிர்வாதமே தெரிந்தது.. மறுக்காமல் அதனை காலில் விழுந்து வாங்கிக் கொண்டவள் புன்னகையுடன் புறப்பட்டாள்..சிங்கத்தின் குகைக்குள்  தெரிந்தே காலை வைக்கப் போகிறாள்..இனி அவளுக்கு என்ன நேருமோ??

உதயன் நிலையை சொல்லவே வேண்டாம்.. நேற்று தேவாவினைப் பற்றி நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொண்டவன் அவனை நெருங்குவது சிரமம் என்பதை அறிந்து வருந்திய நேரம்தான் உத்ரா அவனைப் பார்க்க வந்தாள்.. வழக்கம்போல அவனது மனக்குறையை அவளிடம் இறக்கி வைக்க, அவளோ, தானே அங்கு சென்று ஆதாரத்தோடு வருகிறேன் என சொல்லி அவனது பாரத்தை கூட்டி விட்டாள்..அவன் எவ்வளவு மறுத்தும் ஈஸ்வரியம்மாவிற்காக இதனை செய்தே தீருவேன் என்று சபதம் விடுத்து சென்றுவிட்டாள்.. இதில் இந்த விசயம் யாருக்கும் தெரியக்கூடாது என்கிற சத்தியம் வேறு.. தன்னுயிர் ஆபத்தினை நோக்கி செல்ல, அவன் மட்டும் இங்கே சும்மா இருப்பானா.. விசாகனை இங்கே பாதுகாப்பிற்கு இருக்கச் சொல்லிவிட்டு அங்கே அலுவலகத்தில் முக்கியமான வேலை என்று அடுத்த விமானத்திலே பறந்து விட்டான்..
பார்ப்போம் உத்ராவும் உதயனும் தேவாவை கையும் களவுமாக பிடிப்பார்களா..இல்லை அந்த அரக்கனிடம் மாட்டிக் கொள்வார்களா என்று..



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro