2.

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

யார் கண் பட்டதோ  கமலியின் வேண்டுதலில் மண் விழுந்தது.
தன் அண்ணன் வாங்கி கொடுத்த போனை ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்தாள் அறிவழகி.

"அழகிம்மா! என்ன போனை அப்படி பார்த்துட்டு இருக்க?" என்று சிரித்தபடி தன் தங்கையின்  அருகில் அமர்ந்தான்  கண்ணன்.

"அண்ணா! இந்த ஃபோன்  ரொம்ப  சூஃப்பரா இருக்கு அண்ணா." என்று சிரித்தாள் அழகி.

"உனக்கு பிடிச்சிருக்கா?" என்று தங்கையின் தலையை கோதியவன் கேட்டான்.

"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குண்ணா" என்று சிரித்தாள் அழகி.

"அது சரி. இவ்ளோ நாள் இந்த போனை வாங்கி தராம இப்போ ஏன் வாங்கி கொடுத்திருக்கேன். தெரியுமா?" என்றான் கண்ணன்.

"எதுக்குன்னா?" என்றாள் அழகி .
"இப்போ நீ காலேஜ்  போக ஆரம்பிசிட்ட. அதாவது  வீட்டை விட்டு கொஞ்சம் தூரம் டிராவல் பண்ற. காலேஜ்ல லேட் ஆகிடுச்சு. இல்ல ஸ்பெஷல் கிளாஸ். இல்ல பஸ் லேட் ஆச்சுன்னா உடனே எதுவா இருந்தாலும் வீட்ல இருக்கவங்களுக்கோ இல்ல எனக்கோ  நீ சொல்லணும் இல்லையா அதுக்கு தான்?" என்று  சிரித்தான்.

"சரிண்ணா" என்றாள் அறிவழகி .

"அப்புறம் இன்னொனும் சொல்றேன். அது செய்யாத இதை செய்யாதன்னு இன்னைக்கு வரைக்கும் நம்ம வீட்ல அம்மாவோ அப்பாவோ நானோ உன்கிட்ட எதுவுமே சொன்னதில்லை. அதுக்கு பதிலா  இதெல்லாம் செஞ்சா நல்லதும்மான்னு  சொல்லி தான் வளர்த்திருக்கோம்." என்றான் கண்ணன்.

"ஆமான்னா. எனக்கு தேவையான சுதந்திரத்தை  கரெக்டா  எப்பவுமே கொடுத்திருக்கிங்க." என்று சிரித்தாள் அழகி.

"ஆமா! இப்பவும் அப்படிதான். இந்த போன்ல நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். அதை சரியா புரிஞ்சுகிட்டு உபயோக படுத்தனும். இதுல இருக்க எல்லாமே உண்மையும் கிடையாது  எல்லாம் பொய்யும் கிடையாது." என்றான் கண்ணன்.

"அண்ணா!" என்று சிணுங்கிக்கொண்டே கண்ணனின் மடியில் தலைவைத்து படுத்துகொண்டாள் அறிவழகி.

"என்ன? அண்ணன் உண்மையை தான் சொல்றேன். இந்த நெட், ஆப் எல்லாமே ஒரு விதத்துல நமக்கு ஹெல்ப் பண்ணும். நாம படிக்கிறதுக்கு தேவையானதை நோட்ஸ் எடுத்துக்கலாம். நம்ம பிரெண்ட்ஸகூட பேசலாம். பேஸ்புக், வாட்சப், ட்விட்டர் எல்லாத்துலயும் ரொம்ப கவனமா இருக்கணும். நமக்கு சில உண்மையான நல்ல பிரெண்ட்ஸ்களும் கிடைப்பாங்க. ஒரு சிலர் நல்லவங்கன்னு போலியா நடிப்பாங்க. எல்லோரையும் அவ்ளோ ஈசியா நம்பக்கூடாது. நட்புகளை ரொம்ப கவனமா தேர்ந்தெடுக்கனும் சரியாடா?" என்று கேட்டு அவளை பார்க்க அழகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

மெல்ல சிரித்து கொண்டவன் அவளை சரியாக கிடத்தி போர்வை போர்த்திவிட்டு வெளியேறினான்.

அடுத்த ஆறு மாதங்கள் சில நிமிடங்கள் போல் பறந்தது.

அறிவழகி கல்லூரிக்கு சென்று வந்தாள்.

சிலநாட்களாக அவள் எப்பொழுதும் மொபைல் உபயோகிப்பதாக கமலி புகார் கூறினார்.

"அம்மா எக்ஸாம் டைம்... நிறைய நோட்ஸ் எடுக்க வேண்டி இருக்கு. சும்மா எதையாவது சொல்லிட்டு இருக்காத." என்று பொறிந்தாள்.

"அறிவு! என்ன இது புது பழக்கம். அம்மாவை மறியாதை இல்லாம எதிர்த்து பேசுறது? நீ எவ்ளோ படிச்சாலும் எங்களுக்கு சின்ன பொண்ணு தான். எவ்ளோ படிச்சாலும் தன்னடக்கம் வேணும் அதை மறந்துராத. எல்லாம் உங்க அண்ணனை சொல்லணும். தங்கச்சி தங்கச்சின்னு ஓவரா செல்லாம் கொடுத்து உன்னை கெடுத்து வச்சிருக்கான்." என்று அப்பா கடிந்து கொண்டார்.

"சாரி ப்பா! இனி அப்படி பேச மாட்டேன்." என்று கண்ணீரை துடைத்து கொண்டு உள்ளே சென்றாள்.

அன்றில் இருந்து யாரிடமும் சரியாக பேசுவதில்லை. கல்லூரியும், தன் அறையுமே என கதியாய் இருக்கிறாள் என்று அம்மா புலம்பி தள்ள, கண்ணன் அறிவழகியை சந்திக்க சென்றான்.

தன் மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருந்த அழகி, அண்ணனை கண்டதும் முகம் மலர்ந்து, "வாண்ணா!" என்றாள்.

"என்னடா எப்படி இருக்க? படிப்பெல்லாம் எப்படி போகுது? வேலை கொஞ்சம் ஜாஸ்தி அதான் அண்ணனால சரியா உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலை." என்றான் கண்ணன்.

"நான் நல்லா இருக்கேன். எனக்கென்ன எங்கண்ணன் இருக்கும் போது. பரவால்ல அண்ணா. வேலைன்னா அப்படி தான் இருக்கும். நீ எவ்ளோ கஷ்டப்பட்டு எங்களுக்காக உழைக்கிற. சாப்பிட்டியா?" என்றாள் கரிசனமாக.

"இன்னும் இல்லடா. சீக்கிரமா வந்துட்டேன்ல. அதான் உன்கிட்ட .சரியா பேசி ரொம்ப நாள் ஆச்சு அதான் பேசலாம்னு வந்தேன். யாருக்கோ மேஸ்ஸெஜ் அனுப்புற போல? நீ வேணா பேசு நான் அப்புறம் வரேன்." என்று எழுந்தான்.

"அண்ணா உட்காரு. அதெல்லாம் ஒண்ணுமில்லை. இப்போ தான் படிச்சு முடிச்சேன். சரி ப்ரெண்ட்ஸ் மெஸெஜ் அனுப்பியிருந்தாங்க. அதான் ரிப்ளை பண்ணேன். அண்ணா எனக்கு பேஸ்புக்ல நிறைய நல்ல ப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. அப்புறம் என் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்கூட இருக்காங்க அண்ணா." என்று சிரித்தாள்.

"என்ன அழகிம்மா? எப்போ பாரு போன் யூஸ் பண்றியா? படிக்கிறதில்லையா?" என்று சற்று கண்டிப்புடனும் பாசமாகவும் கேட்டான் கண்ணன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணா. என் படிப்புல எந்த குறையும் இல்ல. இது வரைக்கும் அரியர்ஸ் வைக்கலை. இனியும் வைக்க மாட்டேன். நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகணும். உன் பாரத்தை நானும் கொஞ்சம் சுமக்கணும். இது தானண்ணா என்னோட கனவு. அதுக்கு குறுக்க இந்த போனும் வரமுடியாது. யாரும் வரமுடியாது. என் வேலையெல்லாம் முடிச்சிட்டு அப்புறம்தான் கொஞ்ச நேரம் மொபைல் பார்ப்பேன் அண்ணா." என்றாள் அறிவழகி.

"சரிடா. வா சாப்பிடலாம்." என்றான் தன் தங்கையின் பதிலில் மகிழ்ந்து.

அடுத்து ஐந்து மாதங்கள் ஓடியது இன்னும் சில நாளில் கண்ணனின் பிறந்தநாள்.

"ஹேய் எங்கண்ணனுக்கு பிறந்தநாள் வருது. எதாவது கிஃப்ட் வாங்கணும் வரியா?" என்று தன் கல்லூரி தோழியிடம் கேட்டாள்.

“இல்லடி. இன்னைக்கு அம்மாகூட வெளிய போறேன்.” என்றாள் தோழி.

“சரிடி.” என்று போனை வைத்தவளுக்கு தன் முகநூல் தோழி கவிதா உள்ளூரில் இருப்பதும் தன்னை சந்திக்க வேண்டும் என்று அடிக்கடி கேட்டு கொண்டு இருந்ததும் நினைவுக்கு வந்தது.

“ஹாய் கவி. நாம இன்னைக்கு மீட் பண்ணலாமா? எங்கண்ணன் பர்த்டேக்கு பிரசென்ட் வாங்கணும்.” என்று குறுஞ்செய்தியை தட்டிவிட, அடுத்த சில நொடிகளில் “சரி போலாம்.” என்று பதில் வந்தது.

எங்கே எப்போது பார்ப்பது என்று முடிவானது.

கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த அறிவு, “அண்ணா எனக்கு டைம் ஆகிடுச்சு. என்னையும் நீ போற வழில எங்க காலேஜ்ல விட்டுட்டு போறியா?” என்று கேட்டாள்.

அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தவன்.

“டேய் அதை ஏன்டா கேக்குற? என்னை காலேஜ்ல விட்டுட்டு போன்னு சொன்னா போக போறேன்.” என்றான் கண்ணன்.

இருவரும் கிளம்பினர்.

கல்லூரி வாசலில் இறங்கியவள், “அண்ணா அம்மாகிட்ட சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு ஃப்ரெண்ட்கூட கொஞ்ச நேரம் படிச்சிட்டு வருவேன். நீ சொல்லிடு.” என்று, “எந்த ஃப்ரெண்ட்?” என்று கண்ணன்  கேட்டுக்கொண்டிருக்கும் போதே உள்ளே ஓடினாள்.                                                                                           
“இந்த வாலை என்ன தான் பண்றது? இப்படி ஒண்ணும் தெரியாத மாதிரி என்னை எதுலயாவது மாட்டி விட்றவேண்டியது? இவளாவது மறக்கிறதாவது... அம்மா கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாதுன்னு சொல்லாம ஓடி வந்துட்டு பேச்சை பார்த்தியா?” என்று தனக்குள் தங்கையை திட்டிக்கொண்டு கிளம்பினான்.

இரவு வீடு வந்தவன் தங்கை இன்னும் வரவில்லை என்று பெற்றோர் கவலை படுவதை பார்த்து அழகிக்கு போன் செய்தான்.

நீண்ட நேரமாகியும் போன் எடுக்காமல் போக அவனுக்குள்ளும் ஒரு பதட்டம் தொற்றி கொண்டது. எந்த ஃப்ரெண்ட் என்று கேட்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறாகிவிட்டது என்று தன்னையே நொந்து கொண்டான்.

கல்லூரிக்கே சென்று பார்த்தான். அவள் அங்கே இல்லை என்று உறுதி செய்தபின் அருகில் உள்ள கோவில் பார்க் என்று எல்லா இடங்களிலும் தேடினான். கிடைக்காமல் போக கடைசியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான், அங்கே அவர்கள் கேட்ட கேள்வியில் புழுவாய் துடித்து போனான்.

“உங்க தங்கச்சி யாரையாது காதலிச்சிசாளா? நீங்க மறுத்துட்டீங்களா? அவளுக்கு யார்கூடவாது சண்டை நடந்ததா? இன்னும் ஏகபட்ட கேள்விகள். ஒரு சில காவலர்கள் தவறால் இங்கு ஏன் வந்தோம் என்று எண்ணுமளர்விற்கு சென்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro