காதல் கவிதைகளின் சிதறல்.

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

💐💐💐💐💐

காதலை காதல் என்று
   தெரியாமலேயே
காதலிக்கும்  முட்டாள்
     பெண் இவள்..

💐💐💐💐💐💐

நான் சிலிர்த்ததும்
    உன்னால் தான்
சிதைந்ததும் உன்னால் தான்...

💐💐💐💐💐💐💐

காலம் கடந்த பின்னர்
   கடந்து போகும் காதல்
அல்ல நான் உன் மீது
    கொண்ட காதல்.....

💐💐💐💐💐💐💐💐💐

நீ என்னை
   விட்டு போனதால்
என் நெஞ்சம்
   இங்கே பட்டு போனது..

💐💐💐💐💐

நேற்று நீ கொடுத்த
   நினைவுகள் தான்
இன்று என்னை
   நிலை குலையாமல்
வைத்து இருக்கின்றன..

💐💐💐💐💐💐

நீ இல்லாமல் வாழ
   முடிந்த என்னால்
உன் நினைவு இல்லாமல்
   வாழ முடியவில்லை..

💐💐💐💐💐💐

ஆண்டுகள் பல கடந்தாலும்
     என் மனதை ஆண்டு
கொண்டு இருப்பதும் ஆளப்
     போவதும் உன்
நினைவுகள் மட்டுமே....

💐💐💐💐💐💐💐

வலிகள் பாதி
    வரிகள் பாதி சேர்த்து
முழுதாய் கவியானேன்
      நான் இன்று.....

💐💐💐💐💐💐💐

கண்டதும் காதல் என்று
   உணரவில்லை தான்
ஆனால் உன்னை காணாத
   தருணங்களில் உணர்ந்தேன்
இது தான் காதல் என்று....

💐💐💐💐💐💐💐

ஊமையாகி போய் இருந்த
   மனதை பேச வைத்தது
என் குற்றமே இப்போது
    மனதினுள் அமைதியில்லாமல்
கத்தி ஆரவாரம் செய்கிறது...

💐💐💐💐💐💐

மொத்தமாக நான்
    சிதைந்து போன பின்னும்
இன்னும் சிதையாமல் உன்
     நினைவுகள் இருப்பது தான்
ஆச்சர்யமாய் இருக்கிறது...

💐💐💐💐💐💐💐

இதற்கு மேலும் போலி
    புன்னகையையும்
காயப்படவில்லை எனும்
     முகமூடியை அணிய
தோன்றவில்லை,, முகமே
     சிதைந்துவிட்ட பிறகு
முகமூடி இனி எதற்கு
    என்று தான்...

💐💐💐💐💐💐

என் காதல்
     கடைசி வரை
உன்னால்
   கொண்டாடப்படாமலேயே
போனது...

💐💐💐💐💐

நிழல் கண்டு மரம்
     ஒதுங்குவதுப் போல்
உன் விழி கண்டு
      என் திமிர் ஒதுங்குகிறது...

💐💐💐💐💐💐💐

புதைத்து வைத்த நினைவுகள்
    எல்லாம் என் மனதை
மெதுவாக புதைக்கப்
       பார்க்கின்றது இப்போது

💐💐💐💐💐💐💐

ஒவ்வொரு முறையும்
    விளக்கம் கேட்டு
நம்பப்படும் அன்புக்கு
    ஆயுள் நாள்
மிகக் குறைவே...

💐💐💐💐💐

கல்லாய் இருந்த
   என் மனதை கரைத்து
மீண்டும் என்னை கடினமான
    கல்லாய் மாற்ற தான்
நீ வந்தாயோ இதயத்துள்...

💐💐💐💐💐

இதயம் என்பது
   வெறும் சதையாக
இருந்து இருந்தால்
    நன்றாக இருந்து இருக்கும்
இப்படி அன்பின் விதையாக
     இருந்து கண்ணீரை
அறுவடை செய்யாமல்....

💐💐💐💐💐💐

புயல் வீசி சென்ற
    பின் இன்னும்
இயல்பு நிலைக்கு
    திரும்பாத மலர் நான்....

💐💐💐💐💐💐

மண்ணை குடைந்து
    வெளியே வரவும்
முடியவில்லை
   மண்ணுக்குள்ளேயே
புதைந்து கிடக்கவும்
   முடியவில்லை இப்படிக்கு
துளிர் விடாத விதை.....

💐💐💐💐💐💐💐

இனி இழப்பதற்கு
     எதுவும் கிடையாது
எஞ்சி இருக்கும்
       ஏமாற்றத்தை தவிர.....

💐💐💐💐💐💐💐

சுயவிளக்கம் தேடி
    இதயம் மன்றாடுகின்றது
உன்னைப் பிடித்ததற்கான
      காரணத்தைத் தேடி....

💐💐💐💐💐💐

உன் மௌனம் என்
     மனதை யாரும்
அறியாமல் மௌனமாய்
     காயப்படுத்திவிட்டு போகிறது..

💐💐💐💐💐💐💐

என்னை சலனப்படுத்திவிட்டு
    இப்போது நீ சிறிதும்
சலனப்படாமல் இருக்கிறாய்....

💐💐💐💐💐💐

உன்னை தேட சென்று
      இப்போது  என்னை
தொலைத்துவிட்டு நிற்கிறேன்

💐💐💐💐💐💐💐

நிழல் கண்டு மரம்
     ஒதுங்குவதுப் போல்
உன் விழி கண்டு
      என் திமிர் ஒதுங்குகிறது...

💐💐💐💐💐💐💐💐

நிஜமாக தான் சொல்கிறேன்
    நிஜத்தில் நீ இல்லையென
இப்போது வருந்துகிறேன்...

💐💐💐💐💐💐

என் பேனாவும் காகிதமும்
     கூடல் கொண்டு
கவிதையை ஈன்றெடுத்தது
      பிறந்த கவிதைக்கு
என்ன பெயர் வைக்க....

💐💐💐💐💐💐

நீ மருதாணியாய்
   என் இதயத்தில்
ஒட்டிக் கொள்ள கொஞ்சம்
     நாணத்தில் நானும்
சிவந்து தான் போகிறேன்....

💐💐💐💐💐💐💐

என் இதயத்தை திருடிய
    உன்னை திருட்டு பார்வை
பார்த்து கடனை
      தீர்த்து கொள்கிறேன்.....

💐💐💐💐💐💐

நீ விலகும் போது
   நான் நெருங்குவதும்
நான் விலகும் போது
     நீ நெருங்குவதும்
ஒன்றை மட்டும் உணர்த்துகிறது
     ஏதோ ஒன்று நம்மிடையே
இருக்கிறது என்று...

💐💐💐💐💐💐💐

என்னை அறியாமல்
    என் கண்கள் உன்னையே
ரசிக்கும் போது தான்
     அறிந்து கொண்டேன்
என் காதலின் ஆழத்தை....

💐💐💐💐💐

உன் கண்கள் பேசும்
    மொழியின் அர்த்தத்தை
புரிந்து கொள்ள எனக்கு
    தனியாக ஒன்றும்
அகராதி தேவை இல்லை....

💐💐💐💐💐

என் காதலை அழுகையாக
    மாற்ற ஆசையில்லை
அழகாகவே மாற்ற ஆசை...

💐💐💐💐💐💐💐

பனியை உருக வைப்பதற்காகவே
     உதித்த சூரியனைப்
போல தான் என் மனதில்
       நுழைந்த நீயும்...

💐💐💐💐💐💐💐💐

தூரத்தில் இருக்கும் எதுவும்
   சரியாக தெரியாத என்
விழிகளுக்கு நீ மட்டும் எப்படி
    தெளிவாக தெரிகிறாய்
என தெரியவில்லை எனக்கு...

💐💐💐💐💐💐💐💐

எப்பொழுதும் நான்
    எழுதுகிற காதல் கவிதை
பிழையாகியே போகிறது...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro