💐💐💐💐💐
காதலை காதல் என்று
தெரியாமலேயே
காதலிக்கும் முட்டாள்
பெண் இவள்..
💐💐💐💐💐💐
நான் சிலிர்த்ததும்
உன்னால் தான்
சிதைந்ததும் உன்னால் தான்...
💐💐💐💐💐💐💐
காலம் கடந்த பின்னர்
கடந்து போகும் காதல்
அல்ல நான் உன் மீது
கொண்ட காதல்.....
💐💐💐💐💐💐💐💐💐
நீ என்னை
விட்டு போனதால்
என் நெஞ்சம்
இங்கே பட்டு போனது..
💐💐💐💐💐
நேற்று நீ கொடுத்த
நினைவுகள் தான்
இன்று என்னை
நிலை குலையாமல்
வைத்து இருக்கின்றன..
💐💐💐💐💐💐
நீ இல்லாமல் வாழ
முடிந்த என்னால்
உன் நினைவு இல்லாமல்
வாழ முடியவில்லை..
💐💐💐💐💐💐
ஆண்டுகள் பல கடந்தாலும்
என் மனதை ஆண்டு
கொண்டு இருப்பதும் ஆளப்
போவதும் உன்
நினைவுகள் மட்டுமே....
💐💐💐💐💐💐💐
வலிகள் பாதி
வரிகள் பாதி சேர்த்து
முழுதாய் கவியானேன்
நான் இன்று.....
💐💐💐💐💐💐💐
கண்டதும் காதல் என்று
உணரவில்லை தான்
ஆனால் உன்னை காணாத
தருணங்களில் உணர்ந்தேன்
இது தான் காதல் என்று....
💐💐💐💐💐💐💐
ஊமையாகி போய் இருந்த
மனதை பேச வைத்தது
என் குற்றமே இப்போது
மனதினுள் அமைதியில்லாமல்
கத்தி ஆரவாரம் செய்கிறது...
💐💐💐💐💐💐
மொத்தமாக நான்
சிதைந்து போன பின்னும்
இன்னும் சிதையாமல் உன்
நினைவுகள் இருப்பது தான்
ஆச்சர்யமாய் இருக்கிறது...
💐💐💐💐💐💐💐
இதற்கு மேலும் போலி
புன்னகையையும்
காயப்படவில்லை எனும்
முகமூடியை அணிய
தோன்றவில்லை,, முகமே
சிதைந்துவிட்ட பிறகு
முகமூடி இனி எதற்கு
என்று தான்...
💐💐💐💐💐💐
என் காதல்
கடைசி வரை
உன்னால்
கொண்டாடப்படாமலேயே
போனது...
💐💐💐💐💐
நிழல் கண்டு மரம்
ஒதுங்குவதுப் போல்
உன் விழி கண்டு
என் திமிர் ஒதுங்குகிறது...
💐💐💐💐💐💐💐
புதைத்து வைத்த நினைவுகள்
எல்லாம் என் மனதை
மெதுவாக புதைக்கப்
பார்க்கின்றது இப்போது
💐💐💐💐💐💐💐
ஒவ்வொரு முறையும்
விளக்கம் கேட்டு
நம்பப்படும் அன்புக்கு
ஆயுள் நாள்
மிகக் குறைவே...
💐💐💐💐💐
கல்லாய் இருந்த
என் மனதை கரைத்து
மீண்டும் என்னை கடினமான
கல்லாய் மாற்ற தான்
நீ வந்தாயோ இதயத்துள்...
💐💐💐💐💐
இதயம் என்பது
வெறும் சதையாக
இருந்து இருந்தால்
நன்றாக இருந்து இருக்கும்
இப்படி அன்பின் விதையாக
இருந்து கண்ணீரை
அறுவடை செய்யாமல்....
💐💐💐💐💐💐
புயல் வீசி சென்ற
பின் இன்னும்
இயல்பு நிலைக்கு
திரும்பாத மலர் நான்....
💐💐💐💐💐💐
மண்ணை குடைந்து
வெளியே வரவும்
முடியவில்லை
மண்ணுக்குள்ளேயே
புதைந்து கிடக்கவும்
முடியவில்லை இப்படிக்கு
துளிர் விடாத விதை.....
💐💐💐💐💐💐💐
இனி இழப்பதற்கு
எதுவும் கிடையாது
எஞ்சி இருக்கும்
ஏமாற்றத்தை தவிர.....
💐💐💐💐💐💐💐
சுயவிளக்கம் தேடி
இதயம் மன்றாடுகின்றது
உன்னைப் பிடித்ததற்கான
காரணத்தைத் தேடி....
💐💐💐💐💐💐
உன் மௌனம் என்
மனதை யாரும்
அறியாமல் மௌனமாய்
காயப்படுத்திவிட்டு போகிறது..
💐💐💐💐💐💐💐
என்னை சலனப்படுத்திவிட்டு
இப்போது நீ சிறிதும்
சலனப்படாமல் இருக்கிறாய்....
💐💐💐💐💐💐
உன்னை தேட சென்று
இப்போது என்னை
தொலைத்துவிட்டு நிற்கிறேன்
💐💐💐💐💐💐💐
நிழல் கண்டு மரம்
ஒதுங்குவதுப் போல்
உன் விழி கண்டு
என் திமிர் ஒதுங்குகிறது...
💐💐💐💐💐💐💐💐
நிஜமாக தான் சொல்கிறேன்
நிஜத்தில் நீ இல்லையென
இப்போது வருந்துகிறேன்...
💐💐💐💐💐💐
என் பேனாவும் காகிதமும்
கூடல் கொண்டு
கவிதையை ஈன்றெடுத்தது
பிறந்த கவிதைக்கு
என்ன பெயர் வைக்க....
💐💐💐💐💐💐
நீ மருதாணியாய்
என் இதயத்தில்
ஒட்டிக் கொள்ள கொஞ்சம்
நாணத்தில் நானும்
சிவந்து தான் போகிறேன்....
💐💐💐💐💐💐💐
என் இதயத்தை திருடிய
உன்னை திருட்டு பார்வை
பார்த்து கடனை
தீர்த்து கொள்கிறேன்.....
💐💐💐💐💐💐
நீ விலகும் போது
நான் நெருங்குவதும்
நான் விலகும் போது
நீ நெருங்குவதும்
ஒன்றை மட்டும் உணர்த்துகிறது
ஏதோ ஒன்று நம்மிடையே
இருக்கிறது என்று...
💐💐💐💐💐💐💐
என்னை அறியாமல்
என் கண்கள் உன்னையே
ரசிக்கும் போது தான்
அறிந்து கொண்டேன்
என் காதலின் ஆழத்தை....
💐💐💐💐💐
உன் கண்கள் பேசும்
மொழியின் அர்த்தத்தை
புரிந்து கொள்ள எனக்கு
தனியாக ஒன்றும்
அகராதி தேவை இல்லை....
💐💐💐💐💐
என் காதலை அழுகையாக
மாற்ற ஆசையில்லை
அழகாகவே மாற்ற ஆசை...
💐💐💐💐💐💐💐
பனியை உருக வைப்பதற்காகவே
உதித்த சூரியனைப்
போல தான் என் மனதில்
நுழைந்த நீயும்...
💐💐💐💐💐💐💐💐
தூரத்தில் இருக்கும் எதுவும்
சரியாக தெரியாத என்
விழிகளுக்கு நீ மட்டும் எப்படி
தெளிவாக தெரிகிறாய்
என தெரியவில்லை எனக்கு...
💐💐💐💐💐💐💐💐
எப்பொழுதும் நான்
எழுதுகிற காதல் கவிதை
பிழையாகியே போகிறது...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro