11

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த நாள் காலை அழகாய் விடிய signalil மாட்டிக் கொண்ட விக்ரம் அலுவலகத்திற்கு சற்று தாமதமாகவே வந்தான் .அவன் உள்ளே வந்ததும் கண்கள் அனிச்சையாய் நவ்யாவின் சீட்டை பார்க்க அங்கே அவள் அமர்ந்திருந்தாள் எனில் என்றும் அவள் உதட்டில் உறைந்திருக்கும் புன்னகை இன்று எங்கோ சென்றிருந்தது,கண்கள் வீங்கி சிவந்திருந்தது அதை மறைக்க அவள் செய்த ஒப்பனைகளும் அவளிற்கு கை கொடுக்கவில்லை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் .

அவளை பார்த்தவனுக்கு இதயத்தில் வலி எடுக்க அவள் அருகில் செல்ல போன கால்களை அவள் நேற்று கூறிய வார்த்தைகள் நினைவில் வந்து தடுத்து நிறுத்தியது .முகத்தை கடுமையாகியவன் அவன் இருக்கைக்கு சென்று அமர அவன் வந்ததை அப்பொழுதே உணர்ந்தவள் அவன் அருகில் தயங்கி கொண்டே சென்று நின்றாள் .

அவள் அருகில் வந்ததை உணர்ந்தவன் அப்பொழுதும் அமைதியாய் இருக்க அவளே தொடங்கினாள் "விக்ரம் "என்று அவன் முகத்தை நிமிர்ந்து என்ன என்பதை போல் பார்க்க அவளோ "சோ சாரி விக்ரம் நா நா அப்டி பேசுனது தப்பு தான் சாரி விக்ரம் "என்க அவனோ முகத்தில் எந்த பிரதிபலிப்பு இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் .

அவன் அவ்வாறு செய்வது மிகுந்த வேதனையை அளிக்க "விக்ரம் ப்ளீஸ் விக்ரம் சாரி தெரியாம சொல்லிட்டேன் நா சொன்னது தப்பு தான் பேசாம மட்டும் இருக்காத விக்ரம் "என்க அவனோ அவளை பார்த்தவன் மீண்டும் தன் வேலையில் கவனமாகி விட அவளிற்கோ கண்களில் கண்ணீர் கணக்கின்றி வழிந்தது .

தன் இருக்கைக்கு வந்தவள் மௌனமாய் கண்ணீர் விட்டுக்கொண்டே தன் வேலையே தொடர அவள் கண்ணீரை துடைத்து தன்னோடு அணைத்துக்கொண்டு ஆறுதல் படுத்த கூறி பரபரத்த கைகளை சிரமப்பட்டு அடக்கினான் விக்ரம் .அவள் கண்ணீரை பார்த்தவனுக்கு தன் கண்களிலும் கண்ணீர் நிரயத்துவங்கியது எனில் இதை இத்தோடு விட்டால் அவளிற்கு அவன் மேல் உள்ள அவ்வெண்ணம் மாறாது என்றெண்ணியவன் தன்னை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தான் .இங்கே echinos குரூப் of கம்பனியஸின் வாசலில் தன் வண்டியை நிறுத்திய மஹதி அந்த கட்டிடத்தை ஒரு இனம் புரியாத பார்வையை பார்த்து விட்டு தன் வாகனத்தில் இருந்து கீழிறங்கினாள் .இறங்கியவள் தன் கண்ணில் coolersai ஒற்றை கையால் கழட்டி உள்ளே வைத்து விட்டு தான் அணிந்திருந்த முழுக்கை சட்டையை முக்கால் கைக்கு ஏற்றி விட்டவள் நிமிர்ந்த நடையுடன் உள்ளே செல்ல அவளது கெத்தை பார்த்த ஆணும் தான் இத்தனை கம்பீரமாய் இல்லையே என்று பொறாமைப்படுவான் .

உள்ளே வந்தவள் receptionil "மிஸ்டர் விக்ரம பாக்கணும் "என்க

அப்பெண்ணோ "நீங்க மேடம் "என்க

அவளோ "மஹதி அசிஸ்டன்ட் commisioner from போலீஸ் டிபார்ட்மென்ட் "என்க

அப்பெண்ணோ "yes mam சார் இன்போர்ம் பண்ணிருந்தாரு நீங்க அந்த conference ஹால்ல வெயிட் பண்ணுங்க சார் இன்னும் 5 மினுட்ஸ்ல அங்க இருப்பாரு "என்க அவளும் ஒரு சிறு தலை அசைப்புடன் அந்த conference ஹாலிற்கு சென்று அமர்ந்தாள் .

அவள் சென்ற அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் விக்ரம் அங்கு வந்தான் சரணுடன்.உள்ளே வந்தவன் கேள்வியாய் "மஹதி ?"என்க

அவளும் "எஸ்" என்றால் .பின் ஆவலுடன் கை குலுக்கி கொண்டவன் "நா விக்ரம் இது சரண் "என்க

அவளோ தெரியும் என்க அவன் கேள்வியாய் பார்க்க அவளே தொடர்ந்தால் "இங்க வரதுக்கு முன்னாடி உங்களோட பாக்ரௌண்ட் செக் பண்ணி அனலைஸ் பண்ணேன் ஜஸ்ட் further டீடெயில்ஸ் காக தான் வந்தேன் சோ ஸ்டார்ட் வித் யுவர் சைடு explanation "என்க

அவனும் இது வரை நடந்தவற்றை கூறினான் .சற்று நேரம் யோசித்தவள் "அந்த நம்பர் trace பண்ண முடுஞ்சதா ?"என்க

சரண் "ரொம்ப கிளவ்ர் அந்த கிரிமினல் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு லொகேஷன் காட்டுற மாறி ப்ரோக்ராம் பண்ணி வச்சிருக்கான் ஹை கிளாஸ் hackersசாலையே கண்டுபுடிக்க முடில "என்க

அவளோ ஒரு மர்மச்சிரிப்பை உதிர்த்தவள் "சோ பிரில்லியண்ட் கிரிமினல் " என்றவள் அடுத்து "நீங்க பாஸ்ட்ல crimes ஏதாச்சும் பண்ணிருக்கீங்களா ?"என்க

சரண் கூறப்போக விக்ரமோ அவன் கையை பிடித்தவன் "அப்டிலாம் ஒண்ணுமில்ல mam எங்களுக்கு இந்த பிரச்னை எங்க இருந்து ஆரம்பமாச்சுனு விசாரிச்சு சொன்ன போதும் ஏனா நாங்க விசாரிச்சா உண்மை வராது "என்க

அவளும் ஆமோதிப்பாய் தலை அசைத்தவள் "ஆமா போலீஸோட கண்ணுல இருந்து எதுவும் தப்ப முடியாது ஏதாச்சும் ப்ரோக்ரேஸ் இருந்தா கால் பண்றேன் மிஸ்டர் விக்ரம் "என்றவள் பின் எழுந்து கதவு வரை சென்று விட்டு திரும்பி "ஐ திங்க் இனிமே நாம நெறய சந்திக்க வேண்டி வருன்னு நினைக்குறேன் "என்றவள் வெளியே சென்றால் .

அவள் சென்றதும் விக்ரமிடம் திரும்பிய சரண் "ஏண்டா சொல்லாம விட்ட அதை தான விசாரிக்கலாம்னு சொன்னோம் "என்க

விக்ரமோ மறுப்பாய் தலை அசைத்தவன் "அவ கண்ணுல ஏதோ இருக்கு மச்சான் "என்க

சரணோ"அட பாவி பொலிசயே சைட் அடிச்சியா "என்க

அவனோ அவன் மண்டையிலேயே ஒரு போடு போட்டவன் "அதில்லடா ஏதோ இருக்கு அவ கண்ணுல அதான் சொல்ல விடாம தடுத்துருச்சு அந்த விஷயத்தை தனியா handle பண்ணிக்கலாம் நீ இப்போ காலேஜ் போ "என்க சரணும் விக்ரம் ஒரு செயலை செய்தால் அதில் என்றுமே ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும் என்று அவனிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான் .

பின் தன் அலுவலக அறைக்குள் வந்த விக்ரம் கண்டதென்னவோ நகத்தை கடித்து துப்பிக்கொண்டே ஏதோ யோசனையில் இருந்த நவ்யாவை தான் விக்ரமிற்கு நகத்தை கடிப்பது அறவே பிடிக்காத விஷயம் எனவே அவன் அவளை முறைத்துப் பார்க்க அவள் யாரோ தன்னை பார்க்கும் உணர்ச்சியில் விக்ரமை பார்க்க அவனோ அவள் வாயிலிருக்கும் நகத்தை காட்ட பட்டென்று அதை எடுத்துவிட்டு வேலை பார்க்க துவங்கி விட்டால் .

பின் அவன் இருக்கைக்கு வந்தவன் தன் மேஜையின் மேல் ஒரு பூங்கொத்து "ஐ am சாரி" என்ற வாக்கியத்துடன் இருக்க அதை கண்டு மனதில் சிரித்தவன் ஓஹ் மேடம் வேல தானா இது என்று நினைத்தவன் வெளிய காட்டாமல் அதை அப்படியே வைத்து விட அவளிர்கோ புஸ்சென்றாய்விட்டது .

பின் மாலையில் அவன் வருமுன்பே தன் scootykku வந்தவள் பெட்ரோல் tankai காலி செய்து விட்டு அவன் வரும் சமயம் scooty ஸ்டார்ட் ஆகாததைப்போல் நடிக்க அவனோ அவள் பெட்ரோல் தங்கை காலி செய்வதை மாடியிலிருந்து பார்த்துவிட்டான் .அவன் அருகில் வந்தவள் "விக்ரம் பெட்ரோல் சுத்தமா இல்ல scooty ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது இன்னிக்கு மட்டும் என்ன ட்ரோப் பண்றீங்களா ?"என்று கண்ணை சுருக்கி கேட்க

அவனோ மனதிற்குள்" அடி தில்லாலங்கடி பண்றதையும் பண்ணிட்டு பாப்பா மாறி நடிக்குது பாரு "என்று நினைத்தவன் வெளியே முகத்தை கடுமையாய் வைத்துக் கொண்டு வெளியே சென்றவன் ஒரு ஆட்டோவை பிடித்து அவளை ஏறுமாறு சைகை செய்ய அவளோ முகத்தை தொங்கப்போட்டவள் அவனை வறுத்தெடுத்துக் கொண்டே ஏறி அமர்ந்தாள் .அவள் செய்கையை ரசித்தவன் ஒரு நாள் கூட முழுசா கோபப்பட முடிலடி ராட்சசி உன் மேல என்று நினைத்தவன் தன் வீட்டிற்கு சென்றான் .

இவ்வாறே ஒரு வாரமும் அவள் அவனை சமாதானம் செய்ய முயர்ச்சி செய்வதும் அவன் அவள் முன் நடிப்பதும் பின் அவள் செயல்களை ரசிப்பதுமாய் இருக்க அன்று ஞாயிறு என்றும் போல் மாதம் ஒரு முறை அனைத்து நண்பர்களையும் வித்யுத் வீட்டிற்கு அழைப்பதை போல் இன்றும் இரவு உணவிற்கு அழைத்திருந்தான் .

சிகை வாரி கிளம்பியவன் இன்று என்ன செய்ய காத்திருக்கிறாளோ என்று எண்ணிக்கொண்டே வித்யுத்தின் வீட்டை வந்தடைந்தான் .பூஜா அமெரிக்கா சென்று விட்டால் ரித்விக்கிற்கு இடம் மாற்றுதலானதால் வினையும் மும்பை சென்றிருந்தான் எனவே எஞ்சி இருந்தது அதிதி,ஹரி ,வித்யுத் சைந்தவி,சரண் ஸ்வஸ்திகா, ஷ்ரவன் ,வினீஷா மட்டுமே அங்கே சென்றவன் கண்கள் நவ்யாவை தேட அவளோ ஒரு கருப்பு நிற ஜெங்ஸும் ஜீன் டாப்பும் போட்டிருக்க

இவனோ மனதில் " இவ சேலை கட்டினாலும் செம்மையா இருக்கா சுடிதார் போட்டாலும் சூப்பரா இருக்கா மாடர்ன் டிரஸ் போட்டாலும் மஜாவா இருக்கா கண்ண கொன்றோல் பண்ண முடியலையே கடவுளே"என்று மனதில் அவளை வர்ணித்துக் கொண்டே உள்ளே சென்று அவர்களோடு ஐக்கியமாகி விட்டான் .

பின் மாலை மங்கி இரவு புலர அனைத்து நண்பர்களும் வீட்டின் வெளியே இருக்கும் தோட்டத்தில் அமர்ந்து கதை அளந்துக்கொண்டிருக்க சரணோ டேய்ய் பேசுனது போதும் ஏதாச்சும் வெளயாடலாம்டா "என்க

சைந்தவி "என்ன விளையாடலாம் "என்க

ஷ்ரவன் "truth or dare விளையாடலாம் "என்க

வித்யுத்தோ "நம்மள பத்தி என்ன தெரியாத விஷயம் இருக்குனு truth or dare வெளயாடுறது"என்க

அவனோ "ஆனா அதுல ஒரு சின்ன ட்விஸ்ட் இங்க இந்த bottleah சுத்தி விடுவேன் யாரு ரெண்டு பேருக்கு வந்து நிக்குதோ அவுங்கள ஒருத்தவுங்க இந்த bowlல இருக்குற seatah எடுக்கணும் இதுல pairaah சேர்ந்து பண்ற activitieslaam இருக்கு அவுங்களுக்கு என்ன வருதோ அதை பண்ணனும் "என்க அனைவரும் ஆவலோடு ஒத்துக்க கொண்டனர் .

முதல் முறை சுற்றிவிட அது வித்யுத் மற்றும் சைந்தவியிடம் நின்றது .வித்யுத் ஒரு சீட்டை எடுக்க அதிலோ தன் துணையை கையில் மிதக்கும் கனவை நீ பாட்டு முடியும் வரை தூக்க வேண்டுமென்றிருந்தது .சைந்தவியோ வெட்கப்பட்டு ஓடப்பார்க அவள் கையை பிடித்திழுத்தவன் அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு அந்த பாட்டு முடிந்தும் அதே நிலையில் அவள் கண்ணோடு கண் பார்த்துக்கொண்டு நிற்க

சரணோ "மிஸ்டர் வித்யுத் அவர்களே பாட்டு முடுஞ்சு அரை மணி நேரமாச்சு மிச்ச romance நீங்க உங்க roomல வச்சுக்கோங்க "என்க வித்யுதோ அவன் முதுகில் இரண்டு போட்டவன் சென்று அமர்ந்து விட்டான் .

அடுத்தது ஷ்ராவனிற்கும் வினீஷாவிற்கும் இடையில் நிற்க வினீஷா சீட்டை எடுக்க அதிலோ ப்ரொபோஸ் பண்ண வேண்டுமென்றிருக்க வினீஷா அருகில் வந்த ஷ்ரவன் அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு "உன்ன பாத்தப்போ உன்ன சைட் அடிக்கனுன்னு நினைக்கல உன்னோட பழகேல உன்ன லவ் பண்ணனும்னு நினைக்கல ஆனா உன்ன தவிர யாரையும் என்னால லவ் பண்ண முடியாதுனு தெருஞ்சுக்குட்டேன். இதை கண்டுபுடிக்கவே எனக்கு 28 வருஷம் ஆயிருச்சு இதுக்கு மேல என்னால வெயிட் பண்ண முடியாது சோ டக்குனு சொல்லுறேன் ஐ லவ் யு "என்க வினீஷா அவன் சொன்னா விதத்தில் தலையில் அடித்துக்கொண்டு நிற்க

சரணோ ஷ்ரவன் முதுகிலே ஒன்று போட்டவன் "புதுசா ஏதாச்சும் பண்ண சொன்னா மவனே அலைபாயுதேல பாதி dialogueayum ரெமோ படத்துல மீதி dialogueayumaa கப்ஸா விட்ர அது சரி நீ இதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்ட "என்றவன் அடுத்து சூத்ரா அது நின்றதோ நவ்யா மற்றும் விக்ரமிடம் .

விக்ரம் அந்த சீட்டை எடுக்க அதிலோ இருவரும் பாட வேண்டும் என்றிருந்தது விக்ரம் "என் குரல்ல பாடுன ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கும்டா வேணாம் "என்க

நவ்யா அவனைப் பார்த்து பாடத்துவங்கினாள்

"கடலினுள் நீராக இருந்தவள் நானே

உனக்காக கரை தாண்டி வந்தவள் தான்

.........

ஒரு நாள் சிரித்தேன்

மறு நாள் வெறுத்தேன்

உன்னை நான் கொல்லாமல்

கொன்று புதைத்தேன்

மன்னிப்பாயா "என்று விக்ரமை பார்த்துக் கொண்டே அப்பாடலை பாட இருவரது கண்களும் புதியதோர் பாதையில் தங்கள் உலகத்தில் கை கோர்த்து பயணிக்க கை தட்டும் சத்தத்திலேயே இருவரும் சுயநினைவுக்கு வந்தனர் .

பின் இரவு உணவிற்கு நேரமாகிவிட்டதென்று அனைவரும் கிளம்பி உள்ளே செல்ல நவ்யாவோ விக்ரமிற்காகவே நகலாமல் காத்திருந்தாள் அவனோ வேண்டுமென்றே தாமதமாய் கிளம்பியவன் அவள் வழியில் நிற்க அவளிடம் சென்றவன் "ஓய் என்ன சாப்புடுற ஐடியா இல்லையா வா உள்ள போலாம் "என்க

அவளோ அவன் தான் உண்மையில் பேசினானா இல்லை ப்ரம்மயா என்று அவனை விழித்துப் பார்க்க அவனோ அவள் முன் சொடுக்கிட்டவன் " என்ன கனவு காண்றியா வா நவி உள்ள போலாம் "என்க

அவளோ அவனின் கழுத்தோடு தன் கையை கோர்த்துக்கொண்டவள் அவனை அணைத்துக் கொண்டால் "சாரி சாரி சாரி இனிமே இப்டி பண்ணவே மாட்டேன் விக்ரம் ப்ளீஸ் பேசாம மட்டும் இருக்காதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு ல...." என்று ஏதோ கூற வந்தவள் தான் கூற வந்ததை உணர்ந்து அவனை விட்டு விலகி ஓடப்பார்க்க

அவனோ முதலில் அவள் அணைத்ததில் திகைத்திருந்தவன் பின் அவள் கடைசியில் ல என்று நிறுத்தியதில் மூலையில் மின்னல் வெட்ட அவள் ஓடப்போவதை உணர்ந்தவன் அவள் கையை பிடித்து தன் அருகில் இழுக்க அவள் அவன் மீதே வந்து மோதி நின்றாள் .

கண்களில் ஒளியுடன் "என்ன சொல்ல வந்த சொல்லிட்டு போ" என்க

அவளோ "நா...... நா...... நா..... ஒன்னும் சொல்லலயே என்க

அவனோ அவளது இடுப்பை சுற்றி கைபோட்டு தன் அருகில் மேலும் இழுத்தவன் "பொய் சொல்லாத ஏதோ லனு சொல்ல வந்த முழுசா சொல்லிட்டு போ "என்க இவன் விட மாட்டான் என்று நினைத்தவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட அவன் ஷாக் அடித்தார் போல் தன் பிடியை தளர்த்த ஒரே ஓட்டமாய் சிரித்துக்கொண்டே ஓடி வீட்டிற்குள் மறைந்தாள் நவ்யா .

ஆணி அடித்தார் போல் அதே இடத்தில நின்றவன் பின் சற்று நேரத்தில் சுயநினைவை பெற தன் கன்னத்தை தடவிக்கொண்டான் இதழ் கொள்ளா சிரிப்புடன் மனதில் "பேசாம இருந்தா இவ்ளோ போனஸ் கிடைக்குமா "என்று நினைத்தவன் விசில் அடித்துக் கொண்டே உள்ளே சென்றான்.

அங்கே மனம் நிரம்பிய சந்தோஷத்தில் அவன் திளைத்திருக்க இங்கு இவ்வுருவமோ தன் முன் ஒரு சதுரங்க பலகையை வைத்துக்கொண்டு அதில் ஒரு புறத்தில் ராஜாவையும் மந்திரியையும் கோட்டையையும் வைத்திருந்தது இன்னொரு புறத்தில் ஒரே ஒரு ராஜாவை வைத்திருந்தது .அதை பார்த்தது "ராஜாவும் மந்திரியும் கூட இருந்த கோட்டையையும் அடிக்க முடியாது மந்திரியையும் அடிக்க முடியாது "என்று யோசித்தது ராஜாவை தொக்கி தூரமாய் வைத்து விட்டு "இதே ராஜாவை தூரமா வச்சா ஒன்னு மந்திரி அழியும் இல்ல கோட்டை அழியும் "என்று கூறியதன் இதழ்கள் விஷமப்புன்னகையில் விரிந்தது .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro