பகுதி 28

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கண்ணன் ரேனுக்கு போன் பண்றா.
ரேனு: ஹலோ கண்ணா

கண்ணன்: ரேனு பரவால என்னோட நம்பர்லா வெச்சுருக்க. அப்றம் நா கேள்விப்பட்டதுலா உண்மையா (போட்டுவாங்கற ப்ளேன்தா😊)

ரேனு: (குளப்பத்தோட்ட)என்ன கேள்விப்பட்ட கண்ணா?

கண்ணன்: தாரா என்கிட்ட எல்லாத்தையும் சொல்லீட்டா ரேனு.

ரேனு : நீ எத பத்தி பேசற எனக்கு ஒன்னு புரியல (மனதிற்க்குள்- தாரா ஊருக்கு போயி சொல்லறனு சொன்னால ஒருவேல சொல்லீட்டாலோ)

கண்ணன்: ஹேய் எனக்கு எல்லா தெறியும்👿. இனி மறச்சு என்ன பண்ண போற தாரா என்கிட்ட ஒன்னுவிடாம ஒலறீட்டா,கயல பத்தி (போட்டு வாங்க ட்ரை பண்றான்). நீங்க ஏன் அன்னைக்கு அப்டி பொய் சொன்னீங்கனு எனக்கு தெறியும் ரேனு.

ரேனு: (மனதிற்க்குள்-தாரா கயலபத்தி சொல்லீட்டா போல அத எல்லாத்தையும் இவன் கரெக்ட்டா சொல்லறா) ஆமா கண்ணா. ஆனா நாங்க அப்டி பொய் சொல்லற நெலமைல இருந்தோம். ஆனா எனக்காக நீயும்,தாராவும் ரொம்ப கஷ்டபட்டுட்டீங்க சாரி கண்ணா😭.

கண்ணன்: பரவால நீ என்ன மா பண்ணுவ எல்லா எங்க விதி (மனதிற்க்குள்- என்னது ரேனுக்காகதா பொய் சொன்னாலா?? என்னவா இருக்கு இவகிட்ட இப்டியே பேசி விஷயத்த வாங்கனு)

ரேனு: இல்ல கண்ணா 😭 எல்லா என் விதி,, அவகிட்ட இப்டி ஒரு வீடியோ (வீடியோ பத்தி ஒலறீட்டா) மூலம் மாட்டி என் வாழ்க்க சீரலியனும்னு இருக்கு😭😭😭😭.

கண்ணன்: அதெல்லா உன் வாழ்க்கைக்கு ஒன்னு ஆகாதுமா பயபடாத.(மனதிற்க்குள்- வீடியோவா என்ன வீடியோ, இவ நல்ல பொன்னாச்சே இவ எப்டி மாட்டுனா ஒன்னு புரியலயே)

ரேனு: (ரொம்ப பீல் ஆகி புல்லா ஒலறீட்டா) எப்டி கண்ணா பயப்படாம இருக்க முடியும் சொல்லு. நா காலேஜ்ல யாரையும் பாத்ததுகூட இல்ல. எந்த பையன்கூடையும் பேசமாட்ட. தாரா உன்ன லவ் பண்றனாலதா உன்கூடவே பேசுற😭 ஆனா என்ன போயி பழி வாங்க நெனச்சு எனக்கே தெறியாம நா குளிக்கும் 😭😭😭 போது ச்சீ சொல்லவே கூசுது கண்ணா. கயலும் ஒரு பொன்னு தானு இப்டி பண்ண எப்டி மனசு வந்துச்சு. ஆனா என்னால பாவம் தாரா ரொம்ப கஷ்டபட்டுட்டா😭😭

கண்ணன்: அதெல்லா ஒன்னு இல்ல மா,, அத மறந்துரு அந்த பேச்சவிடு (மனதிற்க்குள்- ஐயோ யாருக்கும் இந்த நெலமை வரக்கூடாது பாவம் மா நீ,, இன்னு கொஞ்சம் டீடைல்ஸ் கெடச்சா போது,, இன்னு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசு,, அப்டியே தாரா ஏன் சாகபோனானு சொல்லு  ப்ளீஸ் தங்கச்சி 😢)

ரேனு: எப்டி கண்ணா மறக்கமுடியும் சொல்லு என்வீடியோவ காட்டி காட்டி அவ உங்கல பிரியவெச்சா. ஆனா இந்த டைம் என்கிட்ட வந்து ப்ளேக்மெயில் பண்ணா, நா அதுக்கு "நீ லீக் பண்ணிக்கோ எனக்கு ஒன்னு பிரச்சண இல்ல. என் மானத்தவீட உங்க ரெண்டு பேரோட வாழ்க்க தா முக்கியம்"னு 😭சொல்லீட்ட. ஆனா அதுக்கு அவ இப்டி கீழ் தனமா தாராவ😭😭😭(சொல்லற நிருத்தீட்டு அழுகறா)

கண்ணன்: உன்ன மாதிரி ப்ரண்ட் கெடைக்க என்தாரா குடுத்து வெச்சுருக்கனு ரேனு.விடு தாரா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லீட்டா மா நீ எமோசனல் ஆகாத நா உனக்கு ஆறுதல் சொல்லதா கூப்ட (மனதிற்க்குள்-😢😢😢 என்தாராவ என்ன பண்ணா,, ஐயோ அவ தாங்க மாட்டாலே)

ரேனு: ம்ம்ம்ம்.....ஆமா தாராவோட போட்டோ வீடியோலா பாத்தயா?👿👿 படுச்ச படிப்ப எவ்லோ தப்பா யூஸ் பண்ணீருக்கா பாரு தூ...👿👿👿.

கண்ணன்: பாத்த ஆனா அது என்ன டெக்னாலஜினு தெறியல மா. தாராவேர அத காட்டி அழுதாலா சோ(so) அது என்ன,எப்டினு கேக்கல ஆறுதல் சொல்லி தூங்க வெச்சுட்டுதா உனக்கு ஆறுதல் சொல்லலாம்னு போன் பண்ண. அது என்ன? எப்டி? உனக்கு எதாவ்து தெறியுமா? தாராக்கிட்ட கேக்க பாவமா இருக்கு அழுகறா. நா வேற மெக்கானிக்கல்லா எனக்கு தெறியல எப்டினு? (மனதிற்க்குள்- ஐயோ பாவம் தாரா எத வெச்சு என்னத்த போட்டாலோ கயல் ஒன்னு புரியலயே)

ரேனு: அதுக்கு பேரு Morphology கண்ணா. அதுஎப்டினா வேற ஒரு போட்டோ இல்ல வீடியோல முகத்த மட்டு மாத்தி வெக்கரது. அதுக்கு நெரையா softwareலா இருக்கு அத வெச்சு தாராவோட முகத்தமட்டு கட் பண்ணி தப்பான போட்டோ,வீடியோல பேஸ்ட் பண்ணீட்டா. ஆனா உண்மையான போட்டோ மாதிரி இருக்குல்ல.

கண்ணன்: ஆமா நானு பாத்த உண்மை மாதிரியே பண்ணீருக்கல்ல ச்சீ படிப்ப எப்டிலா யூஸ் பண்றா தூ.(மனதிற்க்குள்- பாவம் தாரா அத பாக்கும் போது இவ்லோ அழுதுருப்பா. நா அத நம்பீருவனுதா சாகபாத்தாலா? கடவுளே வந்து சொன்னாலு நா தாராவ சந்தேகப்படமாட்ட அவ ஏன் இப்டி முடிவு எடுத்தா? என் காதல்மேல அவ்லாதா நம்பிக்கையா?)

ரேனு: நீ அதெல்லா நம்பீறாத
கண்ணா. தாரா ரொம்ப நல்ல பொன்னு. நீ வேணா அவள ஹாஸ்பிட்டல்கூட்டீட்டு போயி செக் பண்ணி கன்பார்ம் பண்ணிக்கோ. அவள சந்தேகப்பட்டுறாத கண்ணா அவ தாங்க மாட்டா.

கண்ணன்: நா என்தாராவ சந்தேகப்பட்டு செக் பண்ணனுமா 👿👿 இன்னொரு டைம்  அப்டி சொன்ன கொன்னுருவ உன்ன. என்தாரா மேலையும், எங்க காதல் மேலையும் முழு நம்பிக்க இருக்கு ரேனு. காதல்னாலே நம்பிக்கதா அது அவ மேல நெரையா இருக்கு. நீ அதப்பத்தில்லா என்கிட்ட சொல்லாத ஓகே👿.

ரேனு: இல்ல சாரி. ஆம்பளைக இப்டிதானு சந்தேகப்படுவாங்க அதா சொன்ன. உங்க நம்பிக்கைக்கு நன்றி. ஆனா எனக்கு ஒரே ஒரு டவுட் தா கண்ணா?

கண்ணன்: என்ன டவுட்?

ரேனு: இல்ல.... தாரா அந்த வீடியோவ பாத்தா அருவருப்புல சாககூட ட்ரை பண்ணுவா அவ ஒரு கோல. கண்டிப்பா இத தாங்க மாட்டா ஆனா அவ எப்டி இவ்லா தைரியமா உன்கிட்ட இத காட்டி எல்லாத்தையும் சொன்னா? என்னால நம்பவே முடியல, கல்யாணம் ஆனா இவ்லோ தைரியம் வருமா பா🤔?

கண்ணன்: உன் ப்ரண்ட நீ நல்லா புறுஞ்சு வெச்சுருக்க ரேனு. அவ எதுவும் சொல்லல நீ தா ஒலறீட்ட. அப்றம் தாரா....... தாரா....😭😭😭

ரேனு: ஹேய் ஏன் அழுகற தாராக்கு என்ன?

கண்ணன்: நீ சொன்ன மாதிரி அவ கோல தா. விஷம் குடுச்சுட்டா.😭😭 ஹாஸ்பிட்டல்ல இருக்கா.

அதுக்கு அப்றம் கண்ணன் நடந்த எல்லாத்தையும் சொல்லீட்டா. அப்றம் அந்த கயல நெனச்சு கொலவெறி ஆகறான்.

குளுச்சுட்டு வெளிய போக ரெடி ஆனா அப்போ காலிங்பெல் அடிக்குது கண்ணன் கதவ தெறக்கறா. ராம் கண்ணனோட கன்னத்துல அப்பறான். கண்ணன வீட்டுக்குள்ள இழுத்துட்டு போயி மரண அடி அடுச்சுட்டா அடிக்கும் போது..

ராம்:டேய் உன்ன நம்பிதானு என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிகுடுத்தோ அவள திட்டி டார்ச்சல் பண்ணீருக்க.

கண்ணன்: ஐயோ இல்ல ராம்.
கண்ணன் வயித்துல ஒரு குத்து விட்டு

ராம்: வீட்டுக்கு ஒத்த புள்ள டா. அவ உன்ன லவ் பண்றத தவற வேற என்னடா தப்பு பண்ணா? கொழந்த டா அவ...

கண்ணன்: நா உன் தங்கச்சிய எதும் பண்ணல ராம் சொல்லறத கேளு.
கண்ணனோட சட்டைய புடுச்சு...

ராம்: என்ன டா சொல்ல போற சொல்லு ம்ம்ம்ம்..... உன்ன பத்தி நா விசாருச்ச டா கல்யாணத்துக்கு மொதல் நாள்.. எல்லாரு நீ ரொம்ப கோவப்படுவனு சொன்னாங்க.. சரி கோவம் இருக்க எடத்துலதா கொணம் இருக்குனு நெனச்சு விட்டுட்ட. ஆனா இப்போ
சொல்லீட்டே கை ஓங்கறா. கண்ணனுக்கு கோவம் வந்து ராம் கைய புடுச்சு

கண்ணன்: என் பொண்டாட்டி ஓட அண்ணனுபாக்கற,,, இல்லனா அவ்லாதா உன்ன👿👿👿👿 என்ன டா நானு பொறுமையா பேச பேச உன் கை நீளுது. அவ ஏன் விஷம் குடுச்சானு தெறியாம டா
எல்லாத்தையும் சொல்லி முடிக்கறா. அதுக்கு ராம்

ராம் : என்ன தைரியம் அவளுக்கு?👿 அவள நா சும்மா விடமாட்டா,, என் தங்கச்சிய இப்டி ஆக்குனவல வெட்டீட்டு நா ஜெயிலுக்கு போற.

கண்ணன்: பொரு அவசரப்படாத. மொதல்ல அவள கண்டுபுடுச்சு அவள ப்ளேன் போட்டு லாக் பண்ணி ரேனு,தாராகிட்ட சாரி கேக்க வெச்சு அப்றம் அவள கொல்லனும். என்கையால அடுச்சே கொல்ல போற அவள.

ராம்: கோவப்படாத கண்ணா... நாம அவள லாக் பண்றது இருக்கட்டு தாரா முழுச்சுட்டா வந்து பாரு வா...

கண்ணன்: இல்ல நா வரல.. கயல பழி வாங்கி தாரா கால்ல அவள விழுக வெக்காம தாராவ பாக்க மாட்ட.

ராம்: வந்து ஒரு டைம் பாரு டா.

கண்ணன்: இல்ல ராம்.. நா ஊருக்கு போற. தாரா நல்லா ஆனது அவளகூட்டீட்டு நா சொல்லும் போது சொல்லற எடத்துக்கு வா. அப்போ அப்போ தாரா பத்தி போன் பண்ணி சொல்லு. யாருகிட்டையும் இத பத்தி சொல்லாத ஓகே வா

ராம்: சரி டா,, எதாவ்து ஹெல்ப் வேணுனா கேளு.

கண்ணன்: கண்டிப்பா கேப்ப ராம். நா ஊருக்கு போற நீ போயி அள பாரு.
-----------------------------------------------------------

அங்க ஹாஸ்பிட்டல்ல தாரா:
எல்லாரு ஏன் தற்கொலை முயற்சி பண்ண? கண்ணன் டார்ச்சல் பண்ணானா? அடுச்சானா? திட்டுனானா? னு கேக்க கேக்க தாராக்கு அவ பண்ண தப்பு கண்ணன எவ்லோ பாதுச்சுருக்குனு புறுஞ்சுகிட்டா.

எல்லாருகிட்டையும் பொய் சொல்லி சாமாளிக்க முடியாம இருக்கும் போது ராம் "அவ நல்லா ஆகட்டு அப்றம் கேள்வி கேளுங்க இப்போ ரெஸ்ட் எடுக்கட்டு"னு எல்லாத்தையும் சமாளுச்சா. தாரா கண்ணு முழுச்சதுல இருந்து கண்ணனதா பாக்கனும்னு கேட்டா ஆனா எல்லாரு கண்ணன்மேல கோவமா இருந்தநால யாரு அத கண்டுக்கல. தாரா கழுத்த தொட்டு பாக்கறா, தாலி இல்லனு ரொம்ப அழுது அம்மாகிட்ட கேக்கறா..

தாரா: மா என் தாலி எங்க?? அத மொதல்ல குடு.

லட்சுமி: என்ன டி சொல்லற தாலி எங்க??

தாரா: உன்கிட்ட இல்லையா?? கண்ண எங்க மா எனக்கு அவன பாக்கனு.
லட்சுமி எல்லாத்தையும் சொல்ல தாரா கோவத்தோட உச்சிக்கே போயிட்டா.

தாரா: அம்மா என் மாமனார வர சொல்லு போ

லட்சுமி: எதுக்கு டி..

தாரா: வர சொல்லுனு சொன்ன? 👿
லட்சுமி வெளிய வந்து தேவராசு அஅ உள்ள அனுப்பறாங்க

தேவராசு: என்ன மா இப்போ பரவாலயா?

தாரா: மாமா கதவ கொஞ்சம் சாத்துங்க
தேவராசு: ஏன் டா?

தாரா: சாத்துங்கனு சொன்ன👿
கதவ சாத்துனது

தாரா: மாமா👿👿👿 என்ன நெனச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?? எப்போ பாத்தாலு பையன நம்பவே மாட்டீங்கலா???

தேவராசு: ஏன் மா?

தாரா: கண்ணனோட அப்பானு பாக்கற இல்லன அவ்லாதா உங்கல.👿👿 அவனா துரதிஸ்டசாளி, லக்இல்லாதவன்னு சொன்னீங்கலா?? யாருக்கு லக் இல்ல அவனுக்கா???

தேவராசு:😢😢😢😢

தாரா: கண்ண பெறந்த உடனேவா அத்த போனாங்க? 7 வருசம் கழுச்சுதானு போனாங்க?? சரி அண்ணா வண்டில வேகமா போயி அடிபட்றதுக்கு கண்ணனோட லக்குக்கும் என்ன சமந்தம்? உண்மாய சொல்ல போன கண்ணன் பெறந்ததுக்கு அப்றம் தா நீங்க தோட்டம்,வீடுனு எல்லாம் வாங்கீருக்கீங்க அப்போ அவன் லக்கிதானு.
சரி அதவிடுங்க இந்த காலத்துல Engineering படுச்சவுங்களுக்கு பாதி பேருக்கு வேல இல்ல ஏன் எனக்குகூட வேல இல்ல ஆனா கண்ண கை நெரையா சம்பாதிக்கறா அவனுக்கா லக் இல்ல. பிறப்பு, இறப்புலா விதி மாமா அது யாரோட லக்நாளையும் மாறபோறது இல்ல.
இத்தன நாள் எப்டியோ ஆனா இனி கண்ணன திட்டாதீங்க. அவகோவபடுவானு சொல்லி சொல்லி எல்லாரு திட்டுறீங்க 👿👿 அவ என்ன போற வரவகிட்டயெல்லாமா கோவப்பட்றா? அவ பொண்டாட்டி மேல கோவப்பட்றா அதுல என்ன தப்பு இருக்கு. அது அவ உரிமை அவ அத எடுத்துக்கறா அதுல உங்களுக்கு என்ன பிரட்சண?? சரி வெளிய கோவப்பட்றானு சொல்லீங்கலா அதுக்கும் காரணம் இருக்கு

தப்பு பண்றத பாத்தா கோவம் வரனு அதா மனுசனுக்கு அழகு. கோவத்துல அந்த தப்ப தட்டிக்கேக்கனு அதுதா ஆம்பளைக்கு அழகு.

உங்க பையன் சரியாதா நடந்துக்கராறு இனி அவர எதும் சொல்லாதீங்க.

தேவராசு: ஐயோ அம்மா தாயே உன் புருசனா நா இனி எதுவும் சொல்லல என்ன மணுச்சுரு மா (மனதிற்க்குள்-பரவால என் மருமகளுக்கு எவ்லோ பாசம். நா பேனதுக்கு அப்றம் என் பையனுக்கு நல்லது,கெட்டது சொல்ல ஆள் இருக்கு)
தேவராசு தாராகிட்ட பேசிட்டு போயிட்டாரு.
தாராக்கு கண்ணன் ஞாபகமா இருக்கு ராம் கிட்ட போன் வாங்கி கண்ணனுக்கு கால் பண்றா

கண்ணன்: ஹலோ ராம் சொல்லு

தாரா(ராம் போன்ல): ஹலோ கண்ணா

Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro