29

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கடவுள் அமைத்து வைத்த மேடைதான் வாழ்க்கை. ஆனால் அதில் கதாபாத்திரங்களாக இருக்கும் மனிதன் செய்யும் குளறுபடிகள் அதிகம். விதியை நம்பும் மனிதன் கூட தனக்கு ஏதும் நன்மை கிடைக்கும் எனும் போது எந்த காரியத்தையும் செய்ய துணிந்துவிடுவான். தன் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அவன் எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டான். ஷக்திக்கு அவனின் காதல் விலைமதிப்பில்லாத ஒன்று. அதை அவன் அடைய எந்த நிலைக்கும் இறங்கி செயல்படுவான் என்பதை தனது செயல்கள் மூலம் நிரூபித்துக்கொண்டிருக்கின்றான். அவன் செய்வது சரியா இல்லை தவறா என்ற விவாதம் நமக்குத்தானே அன்றி அவனுக்கில்லை. அவன் பார்வையில் தனது காதலை அடைய அவன் செய்யும் அனைத்தும் சரியே.

மீனாக்‌ஷியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து டாக்டருக்காக மீனாக்‌ஷியின் பெற்றோர் மற்றும் ரேஷ்மா காத்திருந்தனர். ரேஷ்மாவுக்கு கிரிஷ்ஷை விட மீனாக்‌ஷியின் மீது கோபம் அதிகமாக வந்தது. தான் காதலித்தவன் மோசமாக நடந்துகொண்டால் அதற்கு இவள் ஏன் தற்கொலை முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு. க்ரிஷ் மேல் ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவள் எந்த காரணத்தினால் மீனாக்‌ஷியின் காதலுக்கு உதவினால் என்பதும் தெரிந்ததே.

மீனாக்‌ஷியை பரீட்சித்த டாக்டர் வெளியில் வந்து

" அவங்களுக்கு பெருசா ஏதும் இல்ல. உடம்புல சக்தி இல்லாம மயக்கம் போட்டிருக்காங்க. அவங்க கெட்ட நேரம், விழுந்தது மேசையோட ஓரம் என்பதால அந்த கூரான பகுதி அவங்க தலையில பட்டிருக்கு. அதனாலதான் அவங்களுக்கு ப்ளட் லாஸ் அதிகமாச்சி. நாங்க இப்போ ட்றிப்ஸ் அண்ட் ப்ளட் ஏத்திக்கிட்டு இருக்கோம். மத்தபடி பயப்பட ஒன்னுமே இல்லை" என்று டாக்டர் கூற இது எதையும் கேட்கும் மனநிலையில் ரேஷ்மா இல்லை. அவள் மனதில் க்ரிஷ் மீனாக்‌ஷியிடம் எவ்வாறு இப்படி மோசமாக பேசியிருக்கலாம் என்பதே ஓடிக்கொண்டிருந்தது. க்ரிஷ்ஷின் போனுக்கு பலதடவை கால் செய்தும் அவனின் மொபைல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வர உடனே அவள் ஷக்திக்கு கால் செய்தாள்.

ரேஷ்மா எப்பொழுது கால் செய்தாலும் ஷக்தி அதை ஏற்பது இல்லை. காரணம் சில நாட்களின் முன்பே ரேஷ்மா அவளின் காதலை ஷக்தியிடம் கூறியிருந்தாள். ஆனால் ஷக்தி அதை நாசூக்காக அவன் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாக கூறி தவிர்ந்து கொண்டான். ரேஷ்மா அவளின் காதலை ஷக்தியிடம் கூறியது மீனாக்‌ஷி உட்பட யாருக்குமே தெரியாது. எப்போதும் ரேஷ்மாவின் காலை வெறுப்புடன் நோக்குபவன் இன்று அவளது காலை ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தான்.

" ஹலோ நான் ரேஷ்மா பேசுறேன்"

" சொல்லு ரேஷ்மா, என்ன மொபைலுக்கு கூப்பிட்டுருக்க. ஏதும் அவசரமா"? என்று ஷக்தி கேட்க

" க்ரிஷ் போனுக்கு டிரை பண்ணேன். லைன் கிடைக்கல. நீங்க எல்லாம் ஊருக்கு போய் இருக்குறதா சொன்னாங்க. உங்களால முடியும்னா க்ரிஷ்கிட்ட உங்க மொபைல கொடுக்க முடியுமா?" என்று கேட்க ஷக்தி

" இவ்வளவு நேரமும் மொபைல்லதான் ஏதோ நோண்டிக்கிட்டு இருந்தான். இப்போதான் வெளியில போனான். இரு நான் பார்த்து சொல்ரேன்" என்றவன் ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் ரேஷ்மாவிற்கு கால் செய்தவன்

" அவன் உன் கூட பேச முடியாதுன்னு சொல்லிட்டான். என்ன நடக்குது இங்க. மீனாக்‌ஷி கால் பண்ணி க்ரிஷ் கிட்ட கொடுக்க சொல்றா. அவன் என்னடான்னா பேச முடியாதுன்னு சொல்ரான். நீ என்னடான்னா போன் பண்ணி அவன்கிட்ட கொடுக்க சொல்ர. அவன் அதுக்கும் அதே பதில சொல்ரான். என்னதான் நடக்குது இங்க" என்று கேட்க ரேஷ்மாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

" ஒரு உதவி பண்றீங்களா. இப்போ நீங்க இருக்குற இடத்த எனக்கு வாட்ஸப் பண்ணுங்க. எனக்கு க்ரிஷ்ஷ அவசரமா பார்க்கனும்" என்று கூற அவர்கள் இருக்கும் லொக்கேசனை அவளுக்கு செயார் செய்தான். மீனாக்‌ஷி மற்றும் ரேஷ்மா கால் செய்த விசயத்தை அவன் க்ரிஷ்ஷிடம் கூறவே இல்லை. இங்கு ரேஷ்மாவோ கோபத்தில் க்ரிஷ்ஷை என்ன செய்யலாம் என யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக தனது காரை எடுத்துக்கொண்டு ஷக்தி அனுப்பிய இடத்துக்கு செல்ல தயாரானாள்.

ஷக்தி மற்றும் க்ரிஷ்ஷின் மொத்த குடும்பமுமே அவர்களின் பாட்டியின் மரண வீட்டில் இருந்தது. ரேஷ்மா ஒரு வழியாக இவர்களின் வீட்டை கண்டுபிடித்து வந்தாள். ரேஷ்மாவைக் கண்ட ராதா

" வா ரேஷ்மா எப்படி இருக்க. என்ன திடீர்னு இங்க வந்திருக்க? தனியாவ வந்த இல்லன்னா மீனாக்‌ஷியும் கூட வந்திருக்காலா?" என்று கேட்க ரேஷ்மா

" இல்லக்கா மீனாக்‌ஷி வரல்ல. ஆமா க்ரிஷ் எங்க" என்று கேட்க அவள் அவன் மாடியில் இருப்பதாக கூறினாள். ரேஷ்மா வந்ததை கண்டு கொண்ட ஷக்தி சத்தமில்லாமல் அந்த இடத்தை விட்டு நழுவினான்.

மாடியில் இருந்த அறையில் க்ரிஷ் ஜன்னலின் வழியே இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தான். இவனை கண்டதும் ரேஷ்மா

" அங்க ஒருத்திய கொல்ல பார்த்துட்டு இங்க நீ சாவகாசமா இயற்கையை ரசிக்கிறியா?" என்று கேட்க எதிர்பாராத விதமாக ரேஷ்மாவை அங்கு கண்டவன் சற்று தடுமாறினான். அவள் கேட்ட கேள்வி அப்போதுதான் அவன் மன்டைக்கு உறைத்தது. தான் மீனாக்‌ஷியிடம் விளையாட்டாக அப்படி போட்டோ கேட்டதை மீனாக்‌ஷி இவளிடம் கூறியிருப்பாலோ என்று பயந்தான். காரணம் ரேஷ்மாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே தன்னை பிடிக்காது. மீனாக்‌ஷி இதையும் கூறியிருந்தால் ரேஷ்மா செய்ய போகும் கலாட்டாவில் தன் தந்தை அவனை என்ன செய்வார் என்பதை நினைக்கும் போதே அவனுக்கு பயம் வந்தது.

" என்ன லூசு மாதிரி உளர்ர. நான் யார கொன்னேன். ஆமா முதல்ல நீ எதுக்கு இங்க வந்த" என்று கேட்க அவள் முகம் கோபத்தில் சிவந்தது.

" என்ன புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா. மீனாக்‌ஷிகிட்ட நீ மோசமா போட்டோ எடுத்து அனுப்ப சொல்லல. அத எனக்கு வேற... ச்சீ நீயெல்லாம் ஒரு மனுசனா? உன்ன போய் அவ லவ் பண்ணா பாரு. அவள செருப்பால அடிக்கனும். ஏண்டா உன் அக்காகிட்ட ஒருத்தன் போட்டோ கேட்டா நீ பார்த்துக்கிட்டு சும்மா இருப்பியா. சொல்ல தெரியாது, நீயே உங்க அக்காவ அப்படி போட்டோ எடுத்து கொடுத்தாலும் கொடுப்ப. நீதான் கேடு கெட்ட ஒரு ஜென்மம் ஆச்சே" என்று கோபத்தில் என்ன வார்த்தை பேசுகின்றோம் என்பது தெரியாமல் வார்த்தைகளை விட க்ரிஷ்ஷிற்கு கோபம் தலைக்கேற பளாரென்று ரேஷ்மாவை அறைந்துவிட்டான். அவன் அடித்த அந்த நேரம் பார்த்து மாடிக்கு வந்த அவனின் தந்தை உடனே அவனின் ரூமுக்குள் வந்தவர் பளாரென்று க்ரிஷ்ஷை அறைந்தார்.

" என்னடா ஒரு பொம்பல பிள்ளைய கை நீட்டி அடிக்கிற. எங்கடா பழகின இந்த பழக்கத்த?" என்றவர் ரேஷ்மாவின் பக்கம் திரும்பி அவளை கேள்வியாக பார்த்தவர்

" யாரும்மா நீ?" என்று கேட்க க்ரிஷ் அவனின் தந்தைக்கு பயந்து பம்முவதை கண்டவள் அவனை பழிவாங்க இதுதான் நல்ல சமயம் என கருதினால். அதே நேரம் ராதாவும் தந்தையின் உரத்த குரலை கேட்டு என்னவென்று பார்க்க மாடிக்கு வந்தாள்.

" அங்கிள் இவன் ஒரு பொண்ண லவ் பண்ணான். ஆனா அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சினை. அதுக்கு இவன் அந்த பொண்ணுகிட்ட மோசமா போட்டோ அனுப்ப சொல்லிருக்கான் " என்றவள் அமைதியானாள். இங்கு க்ரிஷ்ஷின் தந்தைக்கோ கோபம் உண்டானது. க்ரிஷ் அவரின் மகனாக இருந்தாலும் அவனை அவருக்கு பிடிக்காது. தன்னுடைய ஆசிரியர் வாழ்க்கையில் அவன் பத்தாவதில் செய்த செயல் ஒரு கருப்பு புள்ளி என நினைத்தார். பாடசாலையில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் ஒருவரின் மகனே இப்படியான தவறுகள் செய்தான் என்று மற்றவர்கள் கேலி பேசும் போது அவருக்கு அவமானமாக இருக்கும்.

" இந்த பொண்ணு சொல்றது நிஜமா. நீ ஒரு பொண்ண் லவ் பண்றியா?  அவகிட்ட தப்பா ஏதும் கேட்டியா?" என்று கேட்க க்ரிஷ் இங்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தான்.

" இல்லப்பா நான் விளையாட்டா....." என்று இழுக்க

"டேய் நான் கேட்டது, நீ லவ் பண்ற பொண்ணுகிட்ட  மோசமா போட்டோ எடுத்து அனுப்ப சொல்லி கேட்டியா இல்லையான்னு" என்று அடிக்குரலில் கேட்க அவன் தலை குனிந்தான். மாடிக்கு வந்த ராதாவுக்கு இவர்கள் சம்பாசனை ஆரம்பத்தில் புரியாமல் இருந்தாலும் இறுதியில் புரிந்துகொண்டாள். ஆனால் அவளால் தன் தம்பி இப்படி செய்திருப்பான் என்று கனவிலும் நினைக்க முடியவில்லை.

க்ரிஷ் அமைதியாக இருப்பதை கண்ட ரேஷ்மா இதுதான் சமயம் என நினைத்து

" அவகிட்ட அப்படி கேட்டது மட்டுமில்லாம அத அவன் எனக்கே அனுப்பியிருக்கான் அங்கிள். இவன் மனசுல எப்படிப்பட்ட ஒரு மோசமான எண்ணம் இருந்திருந்தா இப்படி பண்ணியிருப்பான்" என்று கூற இப்போது க்ரிஷ் குழப்பமடைந்தான். ரேஷ்மா ஏன் அவளின் மொபைலுக்கு மீனாக்‌ஷியின் போட்டோவை அனுப்பியதாக கூறவேண்டும். அவனை பொறுத்தவரை மீனாக்‌ஷி அவனுக்கு போட்டோ அனுப்பவேயில்லை. அவள் அவனுக்கு போட்டோ அனுப்பிய விடயம் அவனுக்கே தெரியாதே. அவனின் மொபைல்  தொலைந்ததாக இப்போது கூறினால்  யாரும் நம்ப கூட மாட்டார்கள் என்பது அவனுக்கு புரிந்தது. இன்றோடு அவனின் வாழ்க்கை வேறு வழியில் பயணிக்க போகின்றது என்பதை அவன் அப்போதே தெரிந்துகொண்டான். அவன் என்ன கூறினாலும் இனி அவனி தந்தை நம்ப போவதில்லை என்பது அவரின் பார்வையிலேயே புரிந்தது. ஆனால் அவனுக்கு புரியாதது ரேஷ்மா ஏன் இப்படி தான் செய்யாததை கூறவேண்டும் என்பது. அவன் அடிபட்ட மானை போல ராதாவை பார்க்க அவள் அங்கு கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தால். அவளின் கண்ணீர் அவனுக்கு மனதில் ஆயிரம் கதைகள் கூறியது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro