கார் மேகம் மறைந்து,
கண் படாமல் தொலைந்து,
கை கோர்க்கும் நாள் வாராதோ ?
உயிர்க்கொல்லி ஒழிந்து,
உயிர் எல்லாம் செழித்து
ஒன்று கூடும் நாள் வாராதோ...?
கல்விக்கனியை கணினி கணிக்கும் காலம் ஒழிந்து நேரே சென்று பாடம் கற்கும் நாள் வாராதோ...?
எத்துணை இன்பம் கண்முன் இருந்தும்
கைகள் கட்டி வேடிக்கை பார்க்கும்
துயரம் ஒழியும் நாள் வாராதோ...?
சோத்துக்கான வழியை கொடுக்கும் - என்ற
காசுக்கான பஞ்சம் வந்த
இந்தக் கொடுமை நிலமை மாறாதோ ...?
இறைவா உன் கருணைக்கோர் ஈடுண்டோ?
உன் பிள்ளைக்குப் பல துயருண்டு
உன் பெரு நெஞ்சில் பல குணமுண்டு
உன் கோபத்தில் நியாயமுண்டு அதை சற்றே பொறுத்துக்கொண்டு
பொழிந்திடுவாய்
உன் கருணையிலே ஒரு துண்டு.♥
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro