சேவற் கோழிகள்
செம்மறியாடுகள்
செத்த மாடுகள்
சாய்ந்த மரங்கள்
சுரக்குது கண்ணீர்
தாயவள் தாக்க*
தூயவன் தயங்க**
தாழ்ந்தது தலைகள்
துயரில் சோர்ந்து.
உயர்ந்தவன் அடிக்க***
உயிர் காப்பவன் ****
உயிர் பிரிய -அதை
உற்ற கண்ணெல்லாம்
உருகிவிடாதோ?
மரம் சாய்ந்து
மண்டை பிழந்ததே
மரமண்டையே உன்
மானம் எங்கே?
புயலாய் பேசிய வசனம்
புயலுக்கு பின் அது எங்கே?
உன் வீரம் எங்கே ?
உன் இறக்கம் எங்கே?
உன் சத்தம் எங்கே ?
உன் உதவி எங்கே?
ரோட்டில் இறங்கி
நோட்டை கொடுத்து
ஓட்டை வாங்கி
நாட்டை பெற்று
வீட்டில் இருந்து
பூட்டிக்கொள்வது ஏனோ?
சோறு போடுபவன்
செத்துக் கிடக்கின்றான்
சாயவில்லயா உன் செவிகள்?
சோற்றை உண்ணும்பொழுதினில்
சிக்கவில்லையா இடையிடையில்?
எழுதிடுவேன் சரித்திரம்
கிழித்திடுவேன் என்ற
புழுதிப் புயல்களே*****
புயலினால் வருந்தியவன்
கேட்பது உதவியல்ல உரிமை
கொடுத்து விடு ஒழுங்கெனவே....
*-இயற்கை தாய்
**-விவசாயி
***-புயல்
****-விவசாயி
*****-எச்சை அரசியல்வாதிகள்
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro