தாரகை 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நடுவானில் நின்றிருந்த மஞ்சள் நிற ஆதவன் தன் நெருப்பு பார்வையை முழுவதுமாக பூமி மீது செலுத்தி கொண்டிருந்தான்...

அந்த கடும் வெப்ப நிலையிலும் வானில் காயும் கதிரவணை பொருட்பட்டுத்தாமல் எப்போதும் பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்கும் சென்னை மாநகரில் பல வானுயர்ந்த கட்டிடங்களில் இதுவும் ஒரு கட்டிடமாக அமைந்திருந்தது பிரசாத் குரூப் ஆப் ஹெர்பல் கம்பெனி...

சுற்றிலும் கண்ணாடியால் ஆன நவீன வசதிகளுடன் அமைந்திருக்கும் ஒரு வெள்ளை நிற அறையில் சிறு துரும்பு கூட அசையாமல் அந்த இடமே நிசப்தத்தில் மூழ்கியிருந்தது...

மிக பிரம்மண்டாமான அந்த அலுவலகத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்த சில பணியாட்கள் அனைவரின் முகமெங்கும் பயம் படர்ந்திருந்தது அவர்கள் அருகில் அமர்ந்திருந்த நபரை கண்டு...

அந்த அறையின் ஒரு பெரிய நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு தன் கையில் இருக்கும் பைலை பொறுமையாக திருப்பி பார்த்து கொண்டிருந்தவன்,
கம்பிரமான தோற்றத்துடனும் அளவெடுத்து வைத்ததை போன்ற உடலமைப்பை உடையவனாகவும் அமர்ந்திருந்தான்...

பார்த்ததும் எவரும் எளிதில் கண்டு பிடித்து விடலாம் அவன் ஒரு கோபக்காரன் முரடன் என்றும்...

கருப்பு நிற கோர்ஷூட் அணிந்திருந்தவனின் முகத்தோற்றம் இரும்பினை போல் இறுகியிருந்தாலும் கண்ணிமைக்காவண்ணம் செதுக்கிய சிலையை போல் சிவந்த முகமாக அழகிற்கே உரியவனாகவும் அமர்ந்தந்திருந்தான் அவன்..

சில கணங்களுக்கு பின் சட்டென்று அருகில் இருந்தவர்களை கோபக் கணலில் முறைத்தவன் "என்ன நினைச்சிட்டுருக்கிங்க நீங்க எல்லோரும்........உங்களால இந்த சின்ன ஒர்க்ககூட ஒழுங்கா செய்ய முடியாதா.......இது எவ்வளவு இம்போர்ட்டண்ட்டான ப்ராஜெக்ட் தெரியுமா...இது ஆப்பீசா இல்லை வேற ஏதாவதா...?..என்று அவர்களை நோக்கியவன் மீண்டும் தொடர்ந்தான்...

இவ்வளவு கேர்லசான ஒர்க்கர்ஸ் என் கம்பெனிக்கு தேவையே இல்லை... இப் சம்திங் லைக் திஸ் கோஸ் வ்ரோங் அகைன் ..யூ கேன் நாட் ஒர்க் ஹேர்....
மைண்ட் இட்.." என அவன் சத்தமாக கர்ஜிக்கவும் அங்கு மென் மேலும் நிசப்தம் நிலவியது.....

தலை குனிந்து நின்ற அவனது அலுவக பணியாளர்கள் "சாரி சார் இன்னொரு முறை இந்த தப்பு நடக்காது "என ஒன்று சேர்ந்து கூறவும்...

அவன் பார்வையை சிறுதும் வேறு புறம் அகற்றாமல் "ரமேஷ்.... "என அவன் கத்தினான் சற்று சத்தமாக..

அவன் கூப்பிட்ட அடுத்த நொடியே அங்கு ஓடி வந்து நின்றவர்
"சார் சொல்லுங்க சார் " என்றார்
பணிவாக....

"அவங்கள போக சொல்லுங்க.. இன்னைக்கு ஈவினிங்குல்ல இந்த மொத்த ப்ராஜெக்ட் ஒர்க்கும் முடிஞ்சிருக்கணும்" என்றான் அவன் சினத்துடன்....

"ஓகே.. சார் "என்ற ரமேஷும் அங்கிருந்த பணியாளர்களை வெளியில் அனுப்பிவிட்டு அவரும் அங்கிருந்து  வெளியில் சென்று விட்டார்....

வெளியே சென்றவர்களில் ஒரு சிலர் மட்டும் கூட்டம் கூடினர்.....

"ஏய் திவ்யா என்ன டி இந்த சார் இப்படி சொல்லிட்டாரு..எப்படி டி இந்த ஒன் வீக் ப்ராஜெக்ட்ட இன்னைக்கு ஒரே நாள்ள முடிக்க முடியும்...கண்டிப்பா முடியாது.."என்றாள் லலிதா எரிச்சளுடன்..

"இல்லை  இல்லை... இன்னைக்கே முடிச்சு தான் ஆகணும்.. இல்லைனா  நம்ம வேலையே போய்டும் "என்றான் தினேஷ் ஒருவித பயத்துடன்...

"வேலைனா மிஸ்டேக் ஆகத்தான் செய்யும் அதுக்காக இப்படிலாம் பண்ண கூடாது.... சரியான சிடு மூஞ்சி... எப்பவும் முகத்தை உர்னு வெச்சுகிட்டு.." என்றாள் ஷாமிலா சிடுசிடு குரலில் ....

அவர்களை முறைத்த அவர்கள் தோழி பிரவீனா "ஏய் அவர பத்தி அப்படிலாம் சொல்லாதீங்க டி.. அவர் ரொம்ப நல்லவர்.. அவர் வேலையதான அவர் செய்றாரு.. மிஸ்டேக் பண்ணது நம்ம தப்பு தான.." என்றாள் அவள் அவர்களை வசை பாடியவனுக்கு ஆதரவாக....

லலிதா," வாடி வா.. நீ என்ன அவருக்கு வாக்காளத்தா..."

பிரவீனா, "ச்சச்ச.. அப்படிலாம் ஒன்னும் இல்லை டி.. நீங்க பேசறது தப்புனு பட்டது அதான் சொன்னேன் அவ்ளோ தான்.."

"நானும் பாத்துட்டு தான் இருக்கேன் உன் போக்கே சரி இல்லையே "
என்றான் பிரபா நமட்டு சிரிப்புடன்...

லலிதா," நாங்க பேசறத விடு..மேடம் நீங்க பேசறது எங்க போய்டு முடிய போகுதோ தெரியல...அந்த ப்ரீத்தி மாதிரி நீயும் ஆகிடாத.." அவள் நக்கலாக கூறவும்..

ஏய் பிரவீனா மனசுல விபரிதமான ஆசையெல்லாம் வளர்த்துகாத டி.. நீ நினைக்கிறது கோபுரத்து உச்சியில இருக்கிறது.... நம்ம நினச்ச உடனே நம்ம கைக்கு கிடைச்சிறாது.." என்று தன் தோழிக்கு இலவச அறிவுரை வழங்கினாள் திவ்யா...

அவர்கள் கூறியதை சிறுதும் புரிந்து கொள்ளாதவள் "இல்லை டி அப்படிலாம் இல்லை... "
என தன் ஆசையை மனதுடன் அடக்கி வைத்து கொண்டாள் பிரவீனா.

ஷாமிலா,"சரி டி வாங்க வேலைய ஆரம்பிக்கலாம்.."..

அனைவரும் சென்று வேலையை தொடர்ந்தனர்...

அறையில் தன் இருக்கையில் அமந்திருந்தவன் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாமல் கண்களை அங்கும் மிங்கும் அலைய விட்டு எதையோ ஆழமாக சிந்தித்து கொண்டிருந்தான் அபிநயன்.....

அபிநயன்..... பிரசாத் குரூப் ஆப் கம்பெனியின் சிஇஓ....இந்தியாவில் டாப் டென் கம்பெனிகளில் இதுவும் ஒன்று.... தாய் சிறு வயதிலேயே இறந்து விட அவன் தந்தையே தாயாக இருந்து அவனை படிக்க வைத்து இந்நிலைக்கு கொண்டு வந்தது..சில வருடங்களுக்கு முன் தந்தையும் இறந்து விட தன் தந்தைக்கு பிறகு அவர் கம்பெனியை தானே முழு பொறுப்புடன் நடத்தி வருகிறான்..

மூன்று வருட தன் கடின உழைப்பால் அந்த கம்பனியை பல்மடங்கு உயரத்திற்கு கொண்டு வந்தவன் பல விருதுகளை வாங்கி குவித்தவன் புகழின் உச்சியில் இருந்தும் அவன் மனதில் துளியும் நிம்மதி இல்லை...

வறண்டு போன வாழ்வை எண்ணி கொண்டிருந்தவன் கதவு தட்டும் ஓசை கேட்டு நிஜ உலகிற்கு வந்தான்...

எஸ் கமின் என்று அவன் குரல் கேட்டு உள்ளே வந்தார் ஜெனரல் மானேஜர் ரமேஷ்......

சார்..

எஸ்... என்ற குரலுடன் நிறுத்தி கொண்டவன் வந்தவனை என்ன என்பது போல் பார்க்க " சார் இந்த வீக் ப்ரோடெட்ஸ்க்கு கொட்டஷன் ரெடி பண்ணிருக்கேன்... அத செக் பண்ணிட்டேன்.. நீங்க பாத்து சைன் பண்ணிட்டீங்கனா அத நான் மார்க்கெட்டிங்கு அனுப்பிடுவேன் "
என்ற மானேஜர் அவனிடம் பைலை நீட்டினார்...

அதை வேகமாக வாங்கிய அபிநயனும் சில நிமிடங்களில் அதை படித்து பார்த்தவன் அவன் கையையெழுத்தை போட்டு விட்டு மானேஜர் ரமேஷிடம் கொடுக்க ரமேஷும் அங்கிருந்து சென்று விட்டார்...

அருகில் இருந்த லேண்ட் லைன் போனை எடுத்து காதில் வைத்து ஒரு சில நம்பரை டயல் செய்தவன் "ப்ரீத்தி இமிடியெட்டா என் கேபின்க்கு வாங்க..." ஒரு நொடியில் கூறிவிட்டு அவன் கைபேசி அழைப்பை துண்டித்தான்..

"எஸ் சார் "என்றவளோ கைபேசியை பார்க்க அழைப்பு துண்டிக்க பட்டிருந்தது...

அவள் கைபேசியை முறைத்தவள் இரண்டு நிமிடத்தில் அவன் முன் வந்து நின்றாள் ப்ரீத்தி..

ப்ரீத்தி இரண்டு ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் அபிநயனின் பர்சனல் அசிஸ்டன்ட்டாக பணி புரிகிறாள்... அவள் சற்றே வசதியான வீட்டு பெண் என்பதால் நவ நாகரிக உடை அணிந்து பகட்டாக இருப்பது அவளது வழக்கம்....வெள்ளை நிறை சட்டையும் கருப்பு நிறத்தில் முட்டிக்கு மேல் ஸ்கர்ட்டும் ஆபிஸ்க்கு அணிவது அவளுக்கு வழக்கமான ஒன்று...யாராவது கேட்டால் சிஇஓ பிஏ என அலட்டி கொள்வாள்.....சிவந்த நிறமானாலும் சுமாரான அழகுடையவள்... அபிநயனிடம் மட்டும் சற்று வழிந்து கொண்டு பேசுவாள்..

"சார் சொல்லுங்க சார் " என்க..

"டுமோரோ செய்ய போற ப்ரோடெக்ஸ்சோட மார்க்கெட்டிங் பைல்ஸ் எல்லாம் ஈவினிங்குள்ள என் கேபின்ல இருக்கனும்..அது நான் கொஞ்சம் செக் பண்ணனும் அது மட்டும் இல்லாம.. இன்னைக்கு ப்ரோப்லேம் ஆன அந்த ப்ரோடெக்ஸ் பைல்சும் ஈவினிங் என் டேபிள்ல இருக்கனும்.... "என முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் கூறியவன் "நீங்க போகலாம் " என்க..

"ஓகே சார் "என்றவள் அங்கிருந்து வெளியில் சென்று விட்டாள்..

"என்ன இந்த சார் எப்போ பாத்தாலும் மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு இருக்காரு.. கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்... வேலைய மட்டும் கிலோ கணக்குல குடுத்துருவாரு ..எப்படி நான் இந்த பைல்ஸ் ஈவினிங்குள்ள ரெடி பண்றது.. இப்போவே லஞ்ச் டைம் ஆக போகுது... ஆப்டேகுள்ள அந்த எல்லா ப்ரோடேக்ஸ் பைல்சும் எப்படி முடிப்பேனோ...இன்னைக்கு என் நிலைமை என்ன ஆகுமோ..ஓ மை காட்.." என புலம்பி கொண்டே தன் இருக்கைக்கு சென்று வேலையை தொடங்கினாள் ப்ரீத்தி....

மதியநேரத்திற்குள் பாதி வேலைகளை முடித்திருந்தனர் பிரவீனா மற்றும் அவளின் நண்பர்கள்...

பிரவீனா, சரி சாப்பிடலாம் வாங்க..என்று அழைக்கவே...

தினேஷ், "சாப்பிடறதுல மட்டும் கரெக்ட்டா இரு" என அவன் அவளை கேலி செய்தான் ..

பிரவீனா,"டேய்..போடா.. சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு...." என்றாள் அவள் முகத்தை சுருக்கி..

லலிதா, "டேய் தினேஷ் சும்மா அவள கிண்டல் பண்ணிக்கிட்டு... நீ சாப்பாட்டு விஷயத்துல கரெக்டா இருக்க மாட்டியோ அப்போ நீ சாப்பிட வராத நாங்க போறோம்" என லலிதா தன் தோழி பிரவீனாக்கு ஆதரவு பேசினாள்...

தினேஷ் எதுவும் பேசாதவன் லலிதாவை முறைத்து கொண்டு அமைதியாக நின்றான்...

"டேய் தினேஷ் இதுக்கெல்லாமா கோச்சிக்குவ அவ ஏதோ கிண்டலா சொல்றா.. உன் மூஞ்சுக்கு இதெல்லாம் செட் ஆகல.. வா வந்து சாப்பிடு" என ஷாமிலா அழைக்க

டேய் வா நம்ம போகலாம் என்ற பிரபா தினேஷை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்...

அனைவரும் சாப்பிட கேன்டீனுக்கு சென்றனர்....

அங்கிருந்த ஒரு பெரிய மேசையை சுற்றி அமர்ந்தவர்கள் அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை எடுத்து வைத்து சாப்பிட தொடங்கினர்...

ஷாமிலா, "எப்படியோ பாதி முடிச்சிட்டோம்.. இன்னும் பாதி இருக்கு அதை முடிச்சு குடுத்துட்டு தான் வீட்டுக்கு போக முடியும் போல.."

பிரபா, "முடிச்சிருவோம் நம்ம முடிச்சிட்டு வீட்டுக்கு போயிறலாம் பட் இன்னைக்கு நம்ம செய்ய வேண்டிய ஒர்க்ஸயும் இன்னைக்கு முடிச்சிட்டு தான் போகணும்னு சொல்லப்போரார் பார்.."

லலிதா, "நீ வேற ஏன்டா.. கொஞ்சம் அமைதியா இருடா.. அவர் மறந்தாலும் நீயே மாட்டி விட்ருவ போல.."

தினேஷ், "உங்கள கூட விட்ருவாரு லேடீஸ்னு.. பட் நாங்க தான் மாட்னோம்.."

திவ்யா, "அவர் நார்மலா பேசுனா கூட பரவாயில்ல..ஆனா அவர் அப்படியே கோவமா பேசுறாரு... அவர் மூஞ்சுல எண்ணெய் ஊத்தி கடுகு போட்டா வெடிச்சிரும் போல" என நகைத்தாள் அவள்.

பிரவீனா, "ஆரம்பிச்சுட்டிங்களா.. அவரோட கேரக்டர் அப்படி டி.. சும்மா அவர கொற சொல்லிட்டே இருக்கீங்க..."  என்றவள் தன் நண்பர்களிடம் கோபித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் செல்வதை பார்த்து கொண்டிருந்த அவளது நண்பர்கள் அவளின் செயலில் சற்றே புருவம் சுருக்கினர்...

பிரபா மற்ற ,"எனக்கென்னவோ பிரவீனா அபிநயன் சார லவ் பன்றாளோனு தோணுது..."

தினேஷ், "ஆனா அவர் இவள அக்ஸப்ட் பண்ணுவாரா...ம்ம் நோ சான்ஸ்னு தான் தோணுது.."

திவ்யா, "ஒருவேளை அவர் ஓகே சொல்லிட்டா..."

லலிதா,"அது எப்படி டி சொல்லுவாரு.. அவரு எவ்வளவு பெரிய கம்பெனிக்கு ஓனர்... இவளோ சாதாரணமா குடும்பத்து பொண்ணு.. அவருக்குனும் ஏதாவது ஆசை இருக்கும்ல.."

ஷாமிலா, "பிரவீனாக்கென்னடி அவ்ளோ அழகா இருக்கா..நல்ல பிரில்லியண்ட் கேர்ள் அப்புறம் என்ன..எல்லாம் பாசிட்டிவா தான் நடக்கும்.."...

லலிதா, "நீங்களே அவ மனசுல ஆசைய வளத்து விடாதீங்க.. இது கிடைக்கலனா அவளுக்கு தான் கஷ்டம்..."

"ஆமா லலிதா சொல்றதும் சரி தான்" என்றான் பிரபா..

தன் கேபினில் அமர்ந்திருந்தவன்   மடிக்கணினியில் கண்களை நிலைத்திருந்தவன் மனதில் சட்டென ஒரு வித உணர்வு தோன்ற சட்டென மடிக்கணினியை மூடியவனின் கண்களில் கண்ணீர் தேங்கியது....

பிரவீனா அங்கிருந்து தனியாக சென்று அவள் இருக்கையில் அமர்ந்தவள் "என்ன இவளுங்க ஓவரா தான் போய்ட்டுருக்காளுங்க...எப்பவும் சார ஏதாவது சொல்லி கிண்டல் பண்ணி திட்டிகிட்டு..அவர் ஆபிஸ்ல இருந்து கிட்டு அவரயே திட்றாங்க.. என்னால இவங்கள மாதிரிலாம் இருக்க முடியாது பா... செய்ற வேலைக்கும் வேலை கொடுக்கறவங்களுக்கும் நம்ம எப்பவும் உண்மையா இருக்கனும்.. அதோட சார் என்ன தான் கோவக்காரரா இருந்தாலும் சார எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... கோவம் இருக்க இடத்துல தான் குணமிருக்கும்னு ஒரு பழ மொழியே இருக்கு.." என பிரவீனா நினைத்து கொண்டிருந்தாள்..

"எக்ஸ்கியூஸ்மி" என ஒரு குரல் கேட்க தன் யோசனையில் இருந்து வெளியில் வந்தவள் குரல் வந்த திசையை திரும்பி பார்த்தாள்..

"ஹலோ..." ஒரு வாலிபன் டிப் டாப்பாக உடை அணிந்து அவள் முன் நின்றிருந்தான்.

"ஹாய்.." என்றாள் இவளும் அவனை நோக்கி..

"ஹாய் நான் இப்போதான் தான் இந்த கம்பெனிக்கு புதுசா ஜாயின் பண்ணிருக்கேன்.. இது என் பஸ்ட் டே.. உங்க கிட்ட என்னை இண்டர்டியூஸ் பண்ணிக்கலாம்னு வந்தேன்..." என அவன் சற்றே தயக்கமுடன் கூறினான்..

" ஓ.. காங்கிரடுலேஷன்ஸ்.. ஐ அம் பிரவீனா.. நான் ப்ரோடெக் மார்க்கெட்டிங்ல ஒர்க் பண்றேன்...நான் இங்க டூ இயர்சா ஒர்க் பண்றேன்.."

"மை செல்ப் அசோக்.. நானும்  ப்ரோடேக்ட்ஸ் மார்க்கெட்டிங்ல தான் பா ஜாயின் பண்ணிருக்கேன்.." என்று அவனை அறிமுக படுத்தி நின்றான்...

"ஓ சூப்பர்ப்.." என்றாள் பிரவீனா புன்னகை முகமாய்.

"பிரண்ட்ஸ்..." என அசோக் அவளிடம் கையை நீட்ட சிறிது யோசித்தவள் "பிரண்ட்ஸ்" என புன்னகையுடன் அவனுடன் கை குலுக்கினாள்..

நண்பர்களாகிய இருவரும் சில நிமிடம் பேசிகொண்டிருந்தனர்...

தன் அறையில் சோகமே நிலையாக அமர்ந்திருந்த அபிநயனின் விழிகளில் நீர் கோர்திருந்தது....
அவன் தன் கைபேசியை கையில் எடுத்து பார்க்க அதில் இருந்த புகைப்படத்தை கண்டவனின் சிறு கண்ணீர் துளி கீழே சிந்தியது..

"என்ன மன்னிச்சுரு டா...உன் முகத்தை பாக்கலான அந்த நாளே எனக்கு நல்லாருக்காது...நான் இந்த அளவுக்கு உன் கிட்டருந்து விலகியிருக்கேன்னா அதுக்கு காரணம் உன்னுடய பிடிவாதம் தான்...எனக்கும் வேற வழி இல்லை உன் ஹெல்த் மட்டும் தான் எனக்கு ரொம்ப முக்கியமா இருக்கு.. இப்போ ஆபிஸ்லயும் ஒரு பிரச்சனை... அது யாரு செய்றா யாரால இந்த ப்ரோப்லேம் வந்ததுனு தெரியல... அது எல்லாத்தையும்  கூடிய சீக்கிரத்துல நான் கண்டு பிடிக்கணும்...
அதுவரைக்கும் நான் இப்படி இருந்தா தான் உனக்கு நல்லது...இது எல்லாமே இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்.. அப்புறம் நான் எப்பவும் உன்ன இப்படி பிரிஞ்சிருக்கவே மாட்டேன்.." என்று மனதிற்குள் எண்ணி கொண்டிருந்தவனோ விழி நீரை
துடைத்து விட்டு தன் வேலையை தொடங்கலானான்....

ப்ரீத்தி புலம்பிக்கொண்டே தன் வேலை செய்துக்கொண்டிருந்தவள் சட்டென மனதிற்குள் சிரித்து கொண்டாள்.....

"அபிநயன் பாஸ் ... எனக்கு உங்கள எவ்வளவு பிடிக்கும் தெரியுமா ஆனா நீங்க தான் எப்பவும் சிடுமூஞ்சி சிகாமணி மாதிரி முகத்தை இஞ்சி திண்ண கொரங்கு மாதிரி வெச்சுகிறீங்க...நீங்க சிரிச்சா எவ்வளவு அழகா இருப்பீங்க தெரியுமா.. ஆனா உங்க முகத்துல சிரிப்புனு ஒன்ன நான் பார்த்ததே இல்லை.....ஆனாலும் சும்மா சொல்ல கூடாது நீங்க முறைச்சிட்டுருந்தாலும் ரொம்ப அழகா தான் இருக்கீங்க..
நான் மட்டும் உங்க லைப்ல வந்துட்டனா அப்புறம்  எப்பவும் நீங்க ஹாப்பியாதான் இருப்பிங்க பாருங்க ....
என்று தனக்குள் பேசிக்கொண்டவள் சட்டென அச்சச்சோ என்று கத்தினாள் சற்று சத்தமாக...

அவள் விழியை உருட்டி கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரும் நம்மள கவனிக்கல...என்று தனக்கு தானே சொல்லிகொண்டவள்
ஒருவேளை அவருக்கு ரிலேட்டிவ் யாராவது இருக்காங்களா.. அப்படி இல்லனா ரிலாஷன்ஷிப் ஏதாவது இருக்குமா..என்று சிந்தித்தவள்....
ச்ச ச்ச பாஸ பாத்தா அப்படி தெரியல.. அப்படிலாம் இருக்காது" என மென்மையாக சிரித்து கொண்டாள் அவள்...

மறுபுறம்....... ஒரு பெரிய மாளிகை வீடு கண்களை கவரும் கட்டிட வேலைப்பாடுகளுடன் வெண்மை நிறத்தில் அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது...

வீட்டை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடபட்டிருந்தது.... வீட்டை சுற்றி பசுமையான தோட்டங்கள் அமைந்திருந்தாளும் ஆங்காங்கே சிசிடிவி பொறுத்தபட்டிருந்தது...

அந்த மாளிகை வீட்டில் பத்து பதினைந்து பணியாட்கள் இருந்தும் மூன்று பணிபெண்கள் மட்டும் சமையல் வேலைக்கும் முக்கிய வீட்டு வேலைகளைகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்...

அதில் ஒருவர் தனலட்சுமி அந்த வீட்டில் பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிகிறார்... அதனாலேயே அவர் அந்த வீட்டு நபர்களுக்கு நம்பிக்கை நிறைந்தவரகவும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவும் உள்ளார்...

மற்ற இரு பணியாட்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தனர்..

அந்த பிரம்மாண்டமான வீட்டில் அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டிருந்தது...

அந்த வீட்டின் மாடியில் அமைக்க பட்டிருந்த பெரிய படுக்கையறையின் கட்டிலில் படுத்திருந்த பெண் வேகமாக எழுந்து அமர்ந்தாள்..

அவள் எழுந்ததும் விழியை கசக்கி கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க அந்த அறையில் யாருமே இல்லை அவளை தவிர்த்து....

அந்த விசாலமான அறையில் கட்டிலுக்கு அருகிலேயே மிகப்பெரிய பெரிய கண்ணாடியாளான ஜன்னல் அமைக்கப்பட்டிருந்தது...

வானில் தவழும் வெண்மேகங்கள் ஜன்னலின் வழியே அவளை எட்டி பார்த்து சிரித்து கொண்டன...

அந்த அகன்ற வெளிச்சத்தில் கண்கள் கூசியவளோ சட்டென எழுந்து ஓடி ஜன்னலை திரையால் மூடி நின்றாள்....

மேகங்கள் அவள் செயலில் முகம் வாடிப்போனவை சற்றே பிரிந்து சென்று ஆதவனுக்கு வழி விட்டன....

அவள் அங்கிருந்து எழுந்து குளியல் அறைக்கு சென்றவள் சில நிமிடங்களில் முகம் கழுவிக்கொண்டு வெளியில் வந்து நின்றாள்....

அங்கு வரிசை அமைப்பில் நின்றிருந்த அவளது வார்ட்ரோபை திறந்தவளோ ஒரு டவளை எடுத்து முகத்தை துடைத்து விட்டு அந்த துணியை அங்கிருந்த ஹாங்கரில் மாட்டினாள்...

"விமலா அக்கா...."என்று அவள் மெல்லிய குரலில் சற்று சத்தமாக அழைத்த நொடி அங்கு ஓடி வந்த பணியாளர் விமலா "சொல்லுங்க மா" என்று பணிவுடன் கேட்கவும்...

"பூஜை ரூம்ல இருந்து குங்குமம் கொண்டு வாங்க" என்றவள் கட்டில் அருகில் இருக்கும் கண்ணாடி மேசையின் ட்ராவை திறந்து ஒரு சிவப்பு நிற வட்ட பொட்டை எடுத்து கண்ணாடி பார்த்து நெற்றியில் வைத்து கொண்டாள்...

"சரி மா " என்ற விமலா அங்கிருந்து சென்று விட....

"ஏம்மா.. குடிக்க ஏதாவது கொண்டு வரட்டுமாமா.." என மற்றொரு பெண்மணி பின்னாலேயே ஓடோடி வந்தார்..

அவள் அவரை விழி சுருக்கி பார்த்தவர் "இல்லை...தனம்மா எனக்கு எதுவும் வேண்டாம்..இப்போ தான டிபன் சாப்பிட்டு படுத்தேன் அதுக்குள்ள என்ன அவசரம்..." என்றவள் நீங்க போங்க எனக்கு ஏதாவது வேணும்னா நான் சொல்றேன் என்றவள் காலையில் வாரிய தலை முடி லேசாக கலைந்திருக்க அதை மேலாக வாரிக்கொண்டாள்....

தனலட்சுமி அங்கிருந்து சென்று விட விமலா குங்கும சிமிழுடன் அங்கு ஓடி வந்தார்..

"அம்மா இந்தாங்க" என்று அவளிடம் நீட்டவும் அவள் அதை வேகமாக வாங்கியவள் பின் புறம் இருக்கும் கண்ணாடி புறம் திரும்பி நெற்றி வகுட்டில் குங்கமத்தை சூடினாள்...

"விமலாக்கா...எத்தனை முறை சொல்லிருக்கேன் அம்மானுலாம் சொல்லாதீங்கனு.... பேர் சொல்லியே கூப்பிடுங்க...." என்றவள் வெளியில் செல்ல...

"அம்மா மதியம் ஆகிருச்சு வந்து சாப்பிடுங்க மா .." என்றார் பணியாள் தயக்கமுடன்...

"பரவாயில்ல.. நான் அப்புறம் சாப்பிடுறேன்க்கா .." என்றாள் அவள் முகத்தை சுருக்கி கொண்டு..

"நீங்க சாப்பிடலான சின்ன ஐயா எங்கள தான் மா திட்டுவாரு.. நீங்க மாத்திரை சாப்பிடணும்ல.." பணியாளர் விமலா கூறவும்....

அவள் சற்று பெருமூச்சு விட்டு நின்றவள் "நீங்களாம் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ... எதுக்கு இப்படி பயப்படுறீங்க....எனக்கு வேணும்னா நானே சொல்றேன்.... அவர் உங்கள எதுவும் திட்ட மாட்டாரு அவர்கிட்ட நான் பேசிக்கிறேன் " என்றவாரு அங்கிருந்து வெளியில் சென்று நுழைவு அறையில் அமர்ந்தாள்...

அவள் அங்கு அமர்ந்த அடுத்த நொடியே அவளது செல்பேசி சினுங்கவும் அவள் ஒரு நொடி கூட தாமதிக்காமல்  சட்டென கைபேசியை எடுத்து அட்டன் செய்து காதில் வைத்தாள்.....

"ஹலோ டியர் ... " என மறுபக்கத்தில் இருந்து குரல் கேட்கவும்.....

அவளோ எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள்..

"ஜானு.. என்ன டா...இப்போ தான் எழுந்தியா..?..."

"ம்ம்.."

"சரி சீக்கிரம் சாப்பிடு... லஞ்ச் டைம் ஆகிருச்சு பாரு...சாப்பிட்டா தான டேப்லெட் போடமுடியும்.. ஒன் ஹர்க்கு அப்புறம் ஜூஸ் ஏதாவது குடி.. நான் நைட் வந்துடுறேன்..ஓகே.."

"ம்ம்.."

"ம்ம்னா என்ன  ஏதாவது பேசு...."

அவள் அவன் பேச்சில் சற்றே கோபமடைந்தவள் "நான் என்ன பேசணும்  உன் கிட்ட...உனக்கும் எனக்கும் என்ன ரிலேஷன்ஷிப் இருக்கு அதுவாவது ஞாபகம் இருக்கா... நான் உனக்கு யாரு என் கிட்ட நீ இப்படி பட்டும் படாம பேசிட்டுருக்க.... ஓ... ஓ...நீ பேசிறதே இதக் கேக்க மட்டும் தான..காலைல போன் பண்ணி சாப்டியா மாத்திரை போட்டியா ஜூஸ் குடிச்சியா..மதியம் போன் பண்ணி சாப்டியா மாத்திரை போட்டியா அதே மாதிரி நைட் போன் பண்ணி சாப்டியா மாத்திரை போட்டியா ..இது மட்டும் தான உனக்கு என் கிட்ட பேசனும்....நைட் நான் தூங்கினதுக்கப்புறம் வீட்டுக்கு வருவ.. காலைல நான் எழுந்துக்கிறதுக்கு முன்னாடி போயிடுவ...ஓ ஆமா இத மறந்துட்டேன் பாரு....சார் தான் பிசி மேன் ஆச்சே...சரி சரி ... உனக்கு நிறைய ஒர்க்ஸ் இருக்கும் நீ அதலாம் பாரு.. நான் போன வைக்கிறேன்..." என கோபமாக கூறிவிட்டு போனை கட் செய்தாள் அவள்..

அவன் கைபேசியையே சில நொடி உற்று பார்த்து கொண்டிருந்தவன் "ஜானு உனக்கு இப்போ என் பிரச்சனைய சொல்லி புரியவைக்க முடியாத சுவிட்ச்சேஷன்ல நான் இருக்கேன்.... உன் பீலிங் எனக்கு புரியாம இல்லை.. பட் என்னுடைய நிலைமை அந்த மாதிரி.. உன்கிட்டருந்து விலகியிருக்க வேண்டிய கட்டாயம்" அவன் மனதிற்குள் கூறிகொண்டிருக்க...

"எனக்கு உன் பயம் புரியுதுடா. எனக்காக தான் நீ இவ்வளவும் செய்றனும் புரியுது... ஆனா இந்த தனிமை என்னை கொள்ளுது என்னால முடியல....எனக்கு உன் அன்பு வேணும்... நீ வேணும்.. நான் உன்ன பாத்தே பல மாசம் ஆகுது..எதுக்காக என் கிட்டருந்து ஒளிஞ்சு வாழுற..." என்று உள்ளுக்குள் கூறி கொண்டவள் கைகளால் முகத்தை மூடி கொண்டு அழ தொடங்கினாள்..

சில நிமிடங்களுக்கு பின் "அம்மா.. சாப்பாடு" என
வேலைக்காரப்பெண்மணி  சாப்பாடு ட்ரோலியை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தவும் சட்டென கண்களை துடைத்து கொண்டவள் அருகில் நின்ற பணியாளரை பார்த்தாள்...

அந்த பெண்மணி அவளுக்கு அருகில் இருந்த டேபிள் மீது தட்டு வைத்து உணவை பரிமாற அவளுக்கு சாப்பிட விருப்பம் இல்லாமல் சாப்பிட தொடங்கினாள்..

அபிநயன் அலுவலகத்தில்..

பிரபா மற்றும் அவன் நண்பர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்கள் இருப்பிடத்திற்கு செல்ல பிரவீனா அசோக்கிடம் பேசிகொண்டிருப்பதை பார்த்தவர்கள் "டேய் தினேஷ் யாருடா இவன் நம்ம பிரவீனா கூட பேசிட்டுருக்கான்" என்றான் பிரபா..

"டேய் அவன் நியூ இன்னைக்கு தான் புதுசா ஜாயின் பண்ணிருக்கான்.." என்றாள் லலிதா பிரபாவை பார்த்து..

ஷாமிலா, "அதுக்குள்ள இந்த பிரவீனா இவன் கூட பிரண்ட் ஆகிட்டாளே "..

"ஏய் வந்துட்டீங்களா" என அங்கு வந்த அவள் நண்பர்களை பார்த்த பிரவீனாவோ ," ஷாமிலா, திவ்யா, இவன் தான் அசோக் இங்க புதுசா ஜாயின் பண்ணிருக்கான்.." என்றவள் அசோக் புறம் திரும்பி "அப்புறம் அசோக் இவங்களாம் என் பிரண்ட்ஸ்.. இவன் பிரபா, இவ லலிதா, அப்புறம் இவங்க ஷாமிலா, தினேஷ், திவ்யா.. " எனஅனைவரையும் அறிமுகம் செய்து வைக்க ஹாய் என அவர்களும் அசோக்கிடம் கை குலுக்கினர்...

மாலை கதிரவன் அந்தி சாயும் நேரம் ஆகியும் வேலையை சிறு தாமதமாகவே முடித்தனர் பிரவீனாவும் அவள் நண்பர்களும்..

ப்ரீத்தி மறுநாள் ப்ரோடெக் பைல்சை முடித்து அபிநயனிடம் ஒப்படைத்து விட்டு அன்றைய தவறான ப்ரோடெக் பைல்சை சரி செய்து கொண்டிருக்கும் ஸ்டாப்சிடம் சென்றவள் "கைஸ் பாஸ் சொன்ன இன்னைய ஒர்க்ஸ முடிச்சிட்டிங்களா...."என்று வினவவும்...

"வந்துட்டாளா.. இவள பாத்தாலே எனக்கு இரிட்டேட் ஆகுது.. ச்ச அவளும் அவ டிரஸ்சும்" என ஷாமிலா காதில் கிசு கிசுத்தாள் லலிதா..

உதட்டை மடித்து "ஓகே அத என் கிட்ட பைலாவோ இல்லை பென்றைவ்வாவோ சப்மிட் பண்ணிட்டு நீங்க கிளம்பலாம்.." என்ற ப்ரீத்தி தினேஷையும் பிரபாவையும் பார்த்தவள் "பட் தினேஷ் அண்ட் பிரபா நீங்க மட்டும் டுடே செய்ய வேண்டிய ஒர்க்ச முடிச்சிட்டு தான் போகணும்னு பாஸ் சொல்லிருக்காரு.... நீங்க இருந்து ஒர்க் முடிச்சிட்டு எய்ட்டோ கிளாக்கு போகலாம்..

கேர்ள்ஸ் நீங்க மட்டும் டுமாரோ வந்ததும் டுடே ஒர்க்க முடிச்சிட்டு தான் டுமாரோ ஒர்க்க ஸ்டார்ட் பண்ணனும்னு பாஸ் சொல்லிட்டாரு.. இன்னைக்கு ஒரு நாள் தான் உங்களுக்கு எக்ஸ்யூஸ்.. டூமோரோ முடிக்கலனா நீங்களும் எய்ட்டோ கிளாக் தான் வீட்டுக்கு போகணும்னு பாஸ் சொல்லிட்டாரு" என்று ப்ரீத்தி கூறினாள்..

"இத அவர் சொல்றாரா இல்லை இந்த வெள்ளை கொரங்கு சொல்லுதா.." என கிசுகிசுத்தான் பிரபா..

பிரபாகரன் தன்னை பற்றி தான் ஏதோ பேசுகிறான் என்பதை புரிந்து கொண்ட ப்ரீத்தி "என்ன பிரபாகரன் .." என்று அவனை நோக்கி புருவத்தை உயர்த்தினாள்....

"ஒண்ணுமில்ல மேம்" என்றவன் அவன் பைலை அவளிடம் கொடுக்க மற்ற அனைவரும் அன்றைய வேலையை முடித்து அவளிடம் ஒப்படைக்க அவளோ பை கைஸ் என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்..

தினேஷ் தலையில் அடித்து கொண்டுவன் "ச்ச இன்னைக்கு நான் யாரு முகத்துல முழிச்சினோ தெரியல இன்னைக்கு முழுக்க நாய் படாத பாடுபடுறேன்" என அலுத்துக்கொண்டான் அவன்..

"நீ மட்டும் இல்லை நானும் தான்.. இனிமேல் நம்ம குரூப்க்கு குடுக்குற ப்ரோடெக் பைல்ச கரெக்டா ரெடி பண்ணனும்.."  பிரபா கூறிகொண்டிருக்கும் போதே .

"சரி டா நாங்க கிளம்புறோம் பை" என்ற பெண்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்..

பிரபாவும் தினேஷும்  தங்கள் வேலையை தொடங்கினர்..

ஆதவன் மறைய மறைய சிறிது சிறிதாக அனைத்து பணியாளர்களும் வெளியில் சென்று கொண்டிருந்தனர்..

ப்ரீத்தியும் தன் வேலையை முடித்து கொண்டவள் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்..

இரவு மணி எட்டை நெருங்க பிரபாவும் தினேஷும் மானேஜரிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்....

சில மணி நேரத்தில் மேனேஜரும் அபிநயனிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்..

ஆபிஸே விரித்தோடி போய் இருந்தது....... மின் விளக்குகள் பல இடங்களில் அணைக்கப்
பட்டிருந்தது...

அபிநயனின் அறையில் மட்டும் மின் விளக்கு எறிந்து கொண்டிருக்க அவன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தவன் தன் பணியை  செய்து கொண்டிருந்தான்....

வேலைகளுக்கு இடையில் வீட்டில் என்ன நடக்கிறது என்று கண்காணித்துகொண்டிருப்பான் அவன்...இதுவரை அபிநயன் அவன் பர்சனல் விஷயத்தை எவரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை... அங்கு வேலை செய்யும் யாருக்கும் அவன் குடும்பம் வாழ்க்கை பற்றி எதுவும் தெரியாது..

அவன் மனதில் இருப்பவள் உணவும் மாத்திரையும் உண்டாளா என இரவு மறுபடியும் வீட்டிற்கு போன் செய்து விசாரிப்பவன் இரவு நேரம் பதினோரு மணியை கடக்க அவள் உறங்கி விட்டாளா இல்லையா என சிசிடிவியில் அறிந்து உறுதி செய்து கொண்ட பின்னரே அவன் வீட்டிற்கு கிளம்புவது வழக்கம்.

அன்று காரில் அமர்ந்து வீட்டிற்கு சென்றவனுக்கு சந்திரன் கூட துணைக்கு வரவில்லை...
நேராக தன் அறைக்கு சென்று பார்க்க அவனின் அவளோ அங்கு கட்டிலில் உறங்கி கொண்டிருப்பாள்..

வேலை செய்யும் பெண்களிடம் அன்றைய அவள் நிலையை கேட்டு அறிந்து கொள்பவன் பின் அவர்களை அனுப்பி விட்டு
அவள் அருகில் சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, சிறிது நேரத்திற்குபின் சென்று குளித்து விட்டு, உணவை உண்பான்..
பின் அவள் அருகில் சென்று அவளை தன் மார்போடு அணைத்து கொண்டு உறங்கி விடுவான் ..

காலை அதுபோல் அவள் விழிக்கும் முன்னரே எழுந்து ஆபிசுக்கு சென்று விடுவது வழக்கம்...

மறுநாள் காலை....கதிரவனின் மஞ்சள் ஒளிக்கதிர் முகத்தில் பட்டு கண்விழித்தாள் அவள்.

அவள் பார்வை அவள் படுக்கையில் மறுபக்கம் விழ...அந்த இடமே வெற்றிடமாக இருப்பதை கண்டவளின் கண்களில் கண்ணீர் தேங்கியது..

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro