12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த நாள் காலையில் சீக்கிரமே எழுந்தவள் .நீராடி அவளது அலமாரியை திறக்க அதில் அத்தனை உடைகள் இருந்தாலும் எதை போடுவது என்று குழப்பமாக இருந்தது அவளுக்கு .

ஒவ்வொன்றாய் எடுத்து எடுத்து பார்த்தவள் கிட்ட தட்ட அரை மணி நேரமாக அலமாரியையே அலங்கோலப் படுத்தியும் ஒரு உடையையும் தேர்வு செய்யாமல் இருந்தால் .மனதிற்குள் "என்னடா இது மேலாப்புல என்ன இருக்கோ அத எடுத்துட்டு போயிருவேன் இன்னைக்கு இப்டி உருட்டிட்டு இருக்கேனே "என்று நினைத்தவள் "எல்லாம் இவனால்" என்று அவனை செல்லமாக மனதுள் திட்டியவள் நேற்று அவள் புடவை அணிந்திருந்தபோது அவன் வைத்த கண் வாங்காது பார்த்தது ஞாபகம் வர தன்னிடம் இருந்த 3 சேலைகளில் அவனுக்கு பிடித்த அடர் நீல நிறத்தில் இருந்த designer சேலையை உடுத்தி கொண்டவள் எப்பொழுதும் அவள் செய்யும் மிதமான ஒப்பனையுடன் அவனை காணும் ஆவலுடன் வெளியே வந்தவள் "அம்மா coff...."என்று கூறுமுன் அவள் வார்த்தை தடை பட்டது அவன் தரிசனத்தால்.

அடர் நீளத்தில் சட்டையும் சந்தன நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தவன் அங்கே ஒரு sofaavil அமர்ந்திருக்க அவனுக்கு எதிரில் இருந்த ஒரு sofaavil அவள் அப்பாவும் அம்மாவும் அமர்ந்திருக்க அதற்கு அருகில் பதட்டமாக நின்றிருந்தான் ஹரி விக்னேஷ் .

அவளை கண்டவன் தனது புன்முறுவலுடன்"குட் மார்னிங் சது உனக்காக தான் வெயிட் பண்ணேன் "என்க

அவளுக்கோ மண்டைக்குள் "அட ஊதுங்கடா சுங்குஹ் "என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது .

ஹரியின் அருகில் வந்து நின்றவள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் "தம்பி எப்படா வந்தான் ?"என்று வினவ

அவனோ"10 நிமிஷமாச்சு அவரு வந்து ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் சதுவும் வரட்டும்னு உக்காந்துருக்காரு எதை பத்தி பேச போறாருனு தெரிலடி"என்க அவன் எதை பற்றி பேச வந்திருப்பான் என்பதை ஊகித்தவள் அவனிடம் கண்களால் கெஞ்சிக்கொண்டிருந்தால் வேண்டாம் என்று அவனோ அவளை சட்டை செய்யவே இல்லை .

பின் அவள் அப்பாவிடம் திரும்பியவன் "அங்கிள் நா உங்க பொண்ண விரும்புறேன் .கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்குறேன் "என்க அவள் அப்பா அவளை பார்த்தார் என்ன இது என்பதை போல்

அதை கவனித்தவன் "அங்கிள் அவளை பாக்காதீங்க நா விரும்புறேன்னு தான் சொன்னேன் அவ விரும்புறானு சொல்லல நேத்து தான் அவடயே சொன்னேன் "என்க

அவரோ "என் பொண்ணு விருப்பம் என்னன்னே தெரியாம என்ன தைரியத்துல என் கிட்ட வந்து பேசுற ?"என்க

அவனோ சளைக்காமல் "அங்கிள் நா உங்க பொண்ண காதலிக்குறேன்னு சொல்லல உங்க கிட்ட அவளை கல்யாணம் பண்ணிக்க நெனைக்குறேன்னு தான் சொன்னேன் .ஒரு 5 மினிட்ஸ் நா சொல்றத பொறுமையா கேளுங்க அப்பறோம் உங்க decision எதுனாலும் நா ஏத்துக்குறேன்."என்றவன் சம்மதத்திற்காய் அவர் முகம் நோக்க அவர் தலையை அசைத்து தனது சம்மதத்தை தெரிவித்தார்

பின் பேச துவங்கினான் வித்யுத் "அங்கிள் எனக்கு அம்மா கிடையாது 15 வயசு இருக்கேல தவறிட்டாங்க .அப்பா இருக்காரு ஆனா இல்ல அத பத்தி இப்போ என்னால தெளிவா சொல்ல முடியாது உங்க பொண்ணுட தான் முதல்ல என்ன பத்தி எல்லாத்தையும் சொல்லணும்னு நினைக்குறேன் .என்றவன் தொடர்ந்தான் .எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா பேரு அதிதி .இந்த வருஷம் juneoda 17வயசு முடுஞ்சது அவளுக்கு .மத்தபடி சொந்தம்னு சொல்லிக்க எனக்கு வேற யாரும் இல்ல.டெல்லில தனியா தான் வள்ர்ந்தேன் என் தங்கச்சியையும் வளத்தேன்.படிச்சது எல்லாமே முழுக்க முழுக்க scholarshipla .இன்னும் 1 yearla மெடிசின் முடுச்சுடுவேன்.நா AIIMS டெல்லில பாஸ்ட் 3 yearsaah ரேங்க் holderaah இருக்கறவன் பாஸ் அவுட் ஆகெலயும் நல்ல அகாடெமிக் performanceoda தான் வெளிய வருவேன்.

blood cancerku மருந்து கண்டுபிடிக்க நம்ம நாடும் US உம் சேந்து பண்ற ஆராய்ச்சில கலந்துக்குற 2 மானவர்கள்ல நானும் ஒருத்தன் .மெடிசின் முடிச்சதும் அங்க போய் என் higher studies பண்றதுக்கு என்ட இப்போவே call லெட்டர் இருக்கு அங்கிள் இன்னும் 3 எர்ஸ்ல வெளிய வந்தேன்னா என்னால மாசத்துக்கு பல லட்சம் சம்பாதிக்க முடியும் .

இப்போவே மாசத்துக்கு 2 லட்சம் சம்பாதிக்குறேன் இன்டென்ஷிப்ல.இது வரைக்கும் உங்க பொண்ண கல்யாணம் பண்ணி தரத்துக்கு ஒரு மாப்ள பாத்தீங்கன்னா அவனோட பேமிலி அண்ட் பைனான்சியல் ஸ்டேட்டஸ் பத்தி தெருஞ்சுக்கணும்னு நெனப்பீங்கள்ல அதுக்காக பேசினேன் .இப்போ உங்க பொண்ண லவ் பண்ற வித்யுதா பேசுறேன் .அங்கிள் எனக்கு என் அம்மா செத்ததுக்கப்புறோம் தப்பு பன்னாலோ நல்லது பன்னாலோ சொல்றதுக்கு யாரும் இல்ல .இதுல என் தங்கச்சியையும் வளத்ததுனால என்னோட lifela அந்தந்த வயசுல கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை நா அனுபவிச்சதில்ல.பொறுப்பா இருக்கனும் இருக்கணும்னே நா என்ன கடுமையாவே தான் ஆகிகிட்டேன்.நா நெனைக்குறது தான் சரி நா பண்றது எல்லாமே சரி அப்டினு இருந்தேன்.சொன்னா நம்ப மாடீங்க நா 15 வயசுகப்ரோம் சிரிச்சதே இல்ல .உங்க பொண்ண பாத்த மொத நாளே என்ன சிரிக்க வச்சா அங்கிள்.நா பண்ற தப்ப எல்லாம் சொல்லி,என்ன திருத்தக்க வச்சா,என்னோட உணர்வை எல்லாம் வெளிப்படுத்த வச்சா,பொண்ணுங்க நெறய பேரு என் அழக பாத்து பழகுவாங்க அப்பறோம் என் குறைகளை பாத்து வெலகிடுவாங்க இவ ஒருத்தி தான் என் நிறை குறை எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு எனக்கு முதல் முதல்ல அழகான நடப்பையும் நண்பர்களையும் குடுத்தவ.என்னோட தேவதை அங்கிள் உங்க பொண்ணு.அவ எனக்கு கெடச்சா என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவேன் ."என்று கூறி முடிக்க

அவனை ஆராயும் பார்வை பார்த்தவர்."இதை எல்லாம் ஏன் என் கிட்ட சொல்லிட்டு இருக்க என் பொண்ணுட்ட சொல்லிருக்கலாமே அவளுக்கு புடுச்சுருந்தா நாங்க என்ன எதிர்த்தா நிக்க போறோம் "என்க

அவனோ "நீங்க அவளுக்காக ஓத்துருந்துருப்பீங்க அங்கிள் ஆனா உங்க மனசுல எப்போவுமே ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்துருக்கும் நல்லவனுக்கு தான் குடுக்குறோமா நம்ம பொண்ணன்னு .அது மட்டும் இல்லாம அவ்ளோ நல்ல உறவு நமக்குள்ள இருந்துருக்காது .எனக்கு அவ மட்டும் வேணும்னா எங்களுக்குள்ள காதல் மட்டுமே போதுமே அங்கிள் நா அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறேன் .எனக்கு அவ அவ குடும்பத்தோட வேணும் .நா தொலச்ச அம்மா அப்பா பாசத்தை உங்க மூலமாவாச்சும் திரும்ப அனுபவிக்க நினைக்குறேன் அங்கிள்.எனக்கு நீங்க அவளை என் கைல புடுச்சு குடுக்கேல முழு மனசோட புடுச்சு குடுக்கணும் .அதான் உங்கட்ட பேசிட்டு இருக்கேன்.உங்க பொண்ண எனக்கு தருவீர்களா அங்கிள்? "என்று கேள்வியாய் அவர் முகத்தை பார்க்க ஹரி விக்னேஷும் அவள் அம்மாவும் சைந்தவியும் அவர் முகத்தை கூர்ந்து நோக்க

சைந்தவியோ "கணேஷா கணேஷா ஓகே சொல்ல வை ஓகே சொல்ல வை "என்று பல முறை தன்னுள் கூறி கொண்டிருந்தாள்.

ஒரு முடிவெடுத்தவராக தன் மனைவியின் புறம் திரும்பியவர் "ராஜி மாப்பிள்ளைகு cofee குடுமா"என்க அனைவரின் முகத்திலும் 1000 வாட்ஸ் பல்பு எரிய கண்ணீர் திரையிட ஓடி வந்த சைந்தவி அவள் அப்பாவை அணைத்து கொண்டவள் "thankspa "என்க

அவரோ"உன்ன இத்தனை வருஷமா வளத்தை எனக்கு தெரியாதாமா உன் மனசுல என்ன இருக்குனு ?என்ட சொல்ல தயங்குறன்னு தான் ஹரியை விட்டு கேக்க விட்டேன் "என்க

தலையை திருப்பி தம்பியை அவள் முறைத்து "துரோகி "என்க

அவனோ காதை கையால் பிடித்து கொண்டவன் "சாரி அக்கா "என்க

அவளோ "உன்ன அப்பறமா வச்சுக்குறேன் "என்றவள்

தன் தந்தையிடம் திரும்பி "அப்ரோம்பா"என்க

அவரோ "நா வக்கீலுமா எனக்கும் சிலரை எல்லாம் தெரியும்ல பையன பத்தி விசாரிச்சு பாத்தேன் ஒருத்தர் கூட தப்பா சொல்லல சட்டுனு கோவப்படுவாருங்கறத தவிர்த்து "என்று கூற

அவளோ "என்ட்ட கோவ பட மாட்டான்ப்பா"என்று அவள் அவனுக்காக வாதிட

அவரோ "என் அருமை மகளே அத இந்த தம்பி காலங்காத்தால உனக்காக வந்து எங்க சம்மதம் இல்லாம நீ எந்த காரியமும் பண்ண மாட்டேன்னு தெரிஞ்சு எங்கட பேச வந்தப்போவே புரிஞ்சுக்கிட்டேன் எவ்ளோ காதலிக்குறான் உன்னனு .நானும் காதலிச்சு கல்யாணம் பண்ணவன் தானம்மா எனக்கு தெரியாதா ?"என்று கேட்டவர் பின் மகளின் மலர்ந்த முகத்தை கண்டவர் "போ பொய் காபீ எடுத்துட்டு வா "என்று அனுப்பி வைக்க ஓரக்கண்ணால் அவள் வித்யுத்தை பார்க்க அவனோ அவள் அப்பா முன் தான் இருப்பதை கூட சட்டை செய்யாமல் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.

சிரித்து கொண்டே உள்ளே சென்றவள் .அனைவர்க்கும் கோபீ எடுத்து வந்து கொடுத்தால் .பின் அவள் அப்பா அருகே அவள் அமர போக அவள் அம்மா "தம்பி பக்கத்துல போய் உக்காருடி ஜோடி எப்படி இருக்குனு பாக்குறேன்" என்க

அவளுக்கோ "இந்த அம்மா வேற என் நெலம தெரியாம அவன் பக்கத்துல போய் உக்கார சொல்றாங்களே அவன் பக்கத்துல போனாலே உதறுதே "என்று நினைத்து கொண்டே இருக்க அவர்கள் அம்மா அப்பா கவனிக்கிறார்களா என்று நோக்கிய வித்யுத் அவர்கள் ஏதோ பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் சடாரென்று அவள் கை பற்றி இழுக்க அவன் அருகிலேயே தொபுக்கென்று அமர்ந்தாள் சைந்தவி .

அவனை முறைத்தவள் "கேடி" என்று முணுமுணுக்க அவனோ அவளை பார்த்து சிறு புன்னகையை சிந்தியவன் "thank you mrs .கேடி "என்க அவளுக்கு தான் குடித்த காபீயை முழுங்கவும் முடியவில்லை துப்பவும் முடியவில்லை.

பின் இருவரும் ஒருவாறு காபீயை குடித்து முடித்து அவள் அம்மாவின் கட்டாயத்தால் காலை உணவையும் முடிக்க அங்கே அமர்ந்திருந்தவர் அவள் அப்பாவிடம் "அங்கிள் நா இவளை வெளிய கூட்டிட்டு போலாமா" என்க

அவரோ "தாராளமா கூட்டிட்டு போ ஆனா லுஞ்சுக்குள்ள கூட்டிட்டு வந்துரனும் இன்னைக்கு லஞ்ச் இங்க தான் "என்க அவனும் தலை ஆட்டிவிட்டு அவளை கூட்டிக்கொண்டு சென்றான் .அவன் பின்னால் அமர சொல்ல அவளுக்கு இன்று அவனோடு முதல் முதலாய் ஒரு காதலியாய் பயணிக்க போகும் உணர்வு புதுமையாய் இருந்தது .ஏறி அமர்ந்தவள் அவன் தோளில் அழுத்தமாய் கை வைத்து கொள்ள சிரித்தபடியே வண்டியை கிளப்பினான்.

எங்கே போகின்றோம் என்ற அவள் கேள்விக்கு அவன் "முக்கியமான ஒருத்தர "என்று கூற அவள் அதன் பின் எதுவும் கேட்கவில்லை இன்று ஏனோ பேசுவதை விட மௌனமாய் இருக்க அவளுக்கு பிடித்திருந்தது . அவன் அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்தவள் அப்படியே நிற்க அவள் கை பற்றி உள்ளே அழைத்து சென்றவன் லட்சுமி அம்மாவை அழைத்தான்.அவர் வந்ததும் "அந்த ரெண்டு பேரும் எங்கயும் போயிருக்காங்களா?" என்க அவளுக்கோ யாரை குறிப்பிடுகின்றான் என்று புரியவில்லை எனினும் நின்றவள்

லட்சுமி அம்மாவின் பதிலை கேட்டால் "அவுங்க ரெண்டு பேரும் 1 மாசத்துக்கு வீட்டுக்கு வர மாட்டார்களாம் தம்பி ஏதோ மும்பைலயோ எங்கயோ நம்ம ஹோட்டல் இடுஞ்சுருச்சாம் அதுனால அத இருந்து சரி பண்ணிட்டு தான் வருவார்களாம் "என்று கூற

அவனோ "சந்தோஷம் 1 மாசத்துக்கு நிம்மதியா இருப்பேன்" .என்றவன் சைந்தவியை அருகில் வரவைத்து "இது லட்சுமி அம்மா இந்த வீட்டுல ரொம்ப நாலா வேல பாக்குறாங்க இந்த வீட்டுல என்மேல பாச வச்சுருக்குற ரெண்டாவது ஜீவன்"என்று கூறியவன்

யாருப்பா இது என்ற லட்சுமி அம்மாவின் குரலிற்கு அவளுடன் தன் கையை கோர்த்து கொண்டவன் அவரிடம் திரும்பி "லக்ஷ்மிம்மா எங்க ஜோடி எப்படி ?" என்று சிரித்து கொண்டே கேட்க அவருக்கு ஆனந்தத்தில் கண்களே கலங்கிவிட்டது அவள் தலையை வருடியவாறு "மஹாலக்ஷ்மியாட்டம் இருக்கம்மா நல்லா இருங்க ரெண்டு பேரும் என்று மனம் நிறைய ஆசிர்வதித்தார்."அவளும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அவர் உச்சி குளிர்ந்து போனார்.

பின் அவளை அதிதியின் அறைக்கு அழைத்து சென்றான் வித்யுத் .அவளை சுட்டி காட்டியவன் "இது என் தங்கச்சி அதிதி .என் உலகமே இவ தான் .நா வளர்த்த முதல் குழந்தை இவ .அண்ணா அண்ணான்னு என் மேல உயிரையே வச்சிருந்தா .ஆனா இப்போ அவ என்ன அண்ணனு கூப்டு 3 மாசம் ஆகுது "என்றவனின் குரல் கரகரத்தது.

அவன் தோளை ஆதரவாய் பற்றியவள் அதிதியின் கட்டிலில் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்து கொண்டால் .அவள் தலையை கோதி விட்டால் .மற்றொரு ஓரத்தில் வித்யுத் சென்று அமர்ந்து கொண்டான் .அவளை பார்த்துக்கொண்டே பேசினான் அவள் "எப்படி இப்டி ஆச்சு ?" என்று வினவ

அவன் "3 மாசத்துக்கு முன்னாடி collegela இருந்து அவ வெளிய வரேல ஒரு car அடுச்சு தூக்கிருச்சு என் கண்ணு முன்னாடியே .உடனே ஹாஸ்பிடல் தூக்கிட்டு போனேன் reticular activating systemla டேமேஜ் ஆயிருச்சு அதுனால swelling வந்து கோமாகு போய்ட்டா"என்க

அவளோ "அவளுக்கு motivate பண்றமாரி விஷயங்களை பேசுனாலே அவ சரி ஆய்ருவாளே "என்று கூற

அவன் "எனக்கு என் தங்கச்சிய இந்த நெலமைல பார்த்து பேச்சே வரல நா நேத்து தான் அவட்ட 3 மாசத்துக்கு அப்பறோம் பேசினேன் "என்றவன்

தலை குனிய அவன் தலையை நிமிர்த்தியவள் "உன் நெலம புரியுது "என்றவள்

அதிதியிடம் திரும்பி "ஹே அதிதி குட்டி உன் அண்ணன் பாரேன் என்ட இவ்ளோ அழகா ஒரு தங்கச்சி இருக்கிறதா சொல்லவே இல்ல.இதுல சார் என்ன லவ் வேற பண்ணி எங்கப்பட்டையும் அம்மாட்டையும் permissioneh வாங்கிட்டாரு விட்டா இப்போவே தாலி கட்டிறுவான் போல.நீ செம cuteaah இருக்க தெரியுமா "என்றவள் அவள் எந்த பிரதிபலிப்பும் காட்டவில்லை என்பதே இல்லாமல் அவளிடம் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தாள்.

அந்த சாதனத்தை அவன் பார்க்க அவள் பேச பேச அதில் அதிதியின் உடலில் முன்னேற்றம் சிறிது சிறிதாய் வருவதை பார்த்தான்.பின் சற்று நேரம் அவளிடம் பேசியவள் அவனிடம் திரும்பி "இனி காலேஜ் முடுச்சதும் என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வா நா அதிதிட்ட டெய்லி பேசுறேன் லேட்'ஸ் ஹோப் போர் தி பெஸ்ட் "என்றால்.அவனும் சரி என்று கூறியவன் அவளை தன் அறைக்கு அழைத்து சென்றான் .

அறைக்குள் நுழைந்தவள் ப்பாஹ் "செமயா வச்சுருக்க டா உன் ரூமஹ் நான் கூட இவ்ளோ நல்லா வச்சுருக்க மாட்டேன்" என்று அவன் ரூமை ஆராய்ந்து கொண்டிருக்க அவள் பின் வந்தவன் அவளை அணைத்தான் .

சிரித்தவள் "என்ன சார் கட்டிலாம் புடிக்குறீங்க விடுங்க சார் "என்க அவளை மேலும் இறுக்கமாய் கட்டி பிடித்தவன் "எல்லாம் சொன்ன இன்னும் நீ உன் வாயால அந்த வார்த்தையை சொல்லலையே செல்லம் "என்க

அவன் கூற வருவது புரிந்தும் புரியாதது போல் அவள் "எந்த வார்த்தை ?"என்று வினவ அவளை மேலும் இறுக்கியவன் "கேடி நடிக்காத ஒழுங்கா சொல்லு "என்று கூற

அவனின் முகத்திற்கு நேராய் திரும்பியவள் அவன் கண்ணோடு தன் கண்ணை சிறிது நேர உறவாட விட்டவள் "i love you விது.i love you so much " என்றால் .

அவளை மீண்டும் அணைத்து கொண்டவன் திடீரென்று ஏதோ தோன்ற அவளை விளக்கி நிறுத்தியவன் கண்களில் மகிழ்ச்சியுடன்"என்னனு கூப்பிட்ட?"என்று கேட்க

அவளோ "விதுனு கூப்பிட்டேன் ஏன்?"என்க அவளை கை பற்றி அவனது அலமாரி அருகில் அழைத்து சென்றவன் அந்த அலமாரியிலிருந்து அந்த பெண்மணியின் புகைப்படத்திற்கு எடுத்தவன்

அதை பார்த்து"சாரு உன் மருமக உன்ன மாறி இருக்கானு சொல்லிருக்கேன்ல இப்போ பாரு நீ கூப்டுற மாறியே என்ன அவ விதுனு கூப்டுறா "என்றவன் அவள் குழப்பமாய் பார்ப்பதை பார்த்தவன் அவளை balconyku அழைத்து சென்றவன் அவளை சோபாவில் உட்கார வைத்து அவள் மடியில் படுத்து கொண்டவன் அந்த புகைப்படத்தை அதற்கு முன் இருந்த மேஜையில் வைத்தவன் ."சது என் lifela நடந்த எல்லாத்தையும் இன்னைக்கு உன்ட சொல்லணும்னு நினைக்குறேன் என்ன பத்தின எதுவும் உனக்கு தெரியாம இருக்க கூடாது "என்றவன் தலையை திருப்பி அந்த புகைப்படத்தை எடுத்தவன்" இது தான் என் அம்மா சாரு சாருமதி ......."என்று தன் அன்னையின் கதையை கூற துவங்கினான் . 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro