24

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பூஜா "ஷொபா இவனுங்கள சமாளிக்குறதுக்குள்ள ஒரு ஜுராசிக் parkaye சமாளிச்சிறலாம் போலடா"என்க

சைந்தவியோ "ஒழுங்கா பேசிருந்தாலே அவன் விட்ருப்பான் சொதப்பிட்டு நாயே dialogueaah அடிக்குற வந்து தொள.என்றவள் அந்த பூங்காவிற்கு சென்றால்.பூஜாவிடம் "நீ இங்க வெயிட் பண்ணுடி நா பாத்துட்டு வந்துருறேன் "என்றவள் உள்ளே சென்றால்.

அங்கே ஒரு பெஞ்சில் இவளின் வருகைக்காக விஷ்வா காத்திருந்தான்.அங்கே சென்றவள் "என்ன ஏதோ பேசணும்னு சொன்னீங்க அங்கிள் ."என்க

அவனோ அவளை எதிர் இருந்த பெஞ்சை காட்டி "உக்காந்துட்டு பேசலாமாமா"என்க அவளும் சென்று அமர சிறிது நேரம் மௌனமாய் இருந்தவன் திடீரென்று இரு கையையும் கூப்பி "அன்னைக்கு அவ பேசுனதுக்கு மன்னிச்சுருமா "என்க அத்தனை வயதுள்ள ஒருவர் தன் முன் கை கூப்பி இருப்பதை பார்த்தவள் பதறி அவர் கையை பிடித்தவள் "ஹையோ அங்கிள் என்ன நீங்க என் அப்பா வயசிருக்கும் உங்களுக்கு நீங்க போய் என் முன்னாடி கை கூப்பிக்கிட்டு இறக்குங்க அங்கிள்.அவுங்க பேசுனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க "என்க

அவனோ "பண்ணக்கூடிய பாவத்தை எல்லாம் ஏற்கனவே பண்ணிட்டேன்மா அதான் எல்லாத்தையும் இழந்து நிக்கிறேன் .இனிமே நா இழக்க எதுவும் இல்ல ஆனா என் புள்ளைங்க நல்லா இருக்கனும்.என் பையன் அவன் அம்மா செத்தப்றோம் சிரிச்சே நா பாத்ததில்லமா நீ வந்ததுகப்புறோம் தான் அவன் முகத்துல சிரிப்ப நா பாக்குறேன் "என்க

அவளோ "நீங்க எங்க அங்கிள் உங்க பையன பாத்தீங்க பெத்த பையனையும் பொண்ணையும் எக்கேடோ கேட்டு போங்கன்னு விட்டுட்டு ஆண்ட்டிக்கு காரியம் பண்றதுக்குள்ள கல்யாணம் தான பண்ணீங்க "என்று ஆதங்கமாய் கேட்க

ஒரு வறட்டு புன்னகை செய்தவன் "கல்யாணம் மட்டும் தான்மா பண்ணேன் .அவன் முன்னால் போய் பார்க்கல but I was watching them from distance"என்க

அவளோ புரியாமல் "புரியல" என்க

அவனோ சாரு இறந்ததற்கு பின் ரம்யா பேசிய அனைத்தையும் கூறினான் அவன் அனைத்தையும் கூறினாலும் அவளுக்கு இவனை நம்பவா வேண்டாமா என்று சஞ்சலம் இருக்க அவள் தெளிவுறாத முகத்தை பார்த்தவன் "என்னடா இவனை எப்படி நம்புறதுனு யோசிக்கிறியாமா நீ யோசிக்கிறது சரி தான் ஆனா நா சொல்றது முழுக்க முழுக்க உண்மை "என்க

அவள் மேலும் நம்பாத பார்வை பார்க்க அவனோ "என் சாரு என் மேல வச்சிருந்த காதல் மேல சத்தியம் "என்க அவளோ "அங்கிள் எதுக்கு சாத்தியம்லாம் நம்புறேன் ஆனா இதை எல்லாம் ஏன் என்ட சொல்லிட்ருக்கீங்க?"என்க

அவனோ "என் பையனுக்கும் பொண்ணுக்கும் ரம்யாவால பிரச்னை வராம இருக்க நா பாத்துப்பேன் ஆனா அதிதிக்கு இன்னொருத்தண்ட இருந்து பிரச்னை வராம இருக்க என்ன பண்றதுனு எனக்கு தெரிலம்மா"என்க

அவளோ "என்ன அதிதிக்கு என்ன பிரச்னை யாரால பிரச்னை ?"என்க விஷ்வாவோ "விக்ரம்...... " என்றான்

சைந்தவி "விக்ரமா யாரு அந்த விக்ரம் ?"என்க

விஷ்வா "exhinos குரூப் of கம்பனிஸ் தெரியுமா ?"என்க

அவளோ "ஆங் நல்லாவே தெரியுமே ரொம்ப பெரிய கம்பெனி .எதுக்கு கேக்குறீங்க" என்க

விஷ்வா "அந்த கம்பெனியோட ஒரே பையன் .குடி ,கும்மாளம் அப்டினு எல்லா கெட்ட பழக்கத்துக்கும் சொந்த காரன் .அவனுக்கு adhithiya எப்படி தெரியும் ஏன் அவ பின்னாடி சுத்துறான்னு தெரில ஆனா அன்னைக்கு ஒரு நாள் எனக்கு அவுங்க கம்பெனில இருந்து கால் வந்துச்சு நா போனேன் ..........

அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த விஷ்வாவிற்கு ஒரு கால் வர அதை எடுத்தவன் "ஹலோ "

என்க அங்கோ"என்ன மிஸ்டர் விஷ்வா .நல்ல இருக்கீங்களா ??உங்க பொண்ணு இருக்காளே ப்ப்பாஆஹ் என்ன figureuh யா.எத்தனையோ பொண்ண பாத்துருக்கேன் ஆனா உன் பொண்ணு வேற லெவல். .

"

என்க "ஹே யார்டா நீ ??என்ன தைரியம் இருந்தா என்டயே என் பொண்ண பத்தி இப்டி பேசுவ?"என்க

அங்கோ"ஹே ஷ்ஷ்ஷ் என்ன சத்தம் ஓவராக போடுற பிபி வந்துர பொதுயா ஒழுங்கா நா சொல்லுற இடத்துக்கு இன்னும் அரை மணி நேரத்துல வா உன்ட பேசணும் "என்று விட்டு வைத்து விட்டான் .

விஷ்வா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவன் சொன்ன ஹோட்டலிற்கு சென்று அவனிற்காக காத்திருந்தான் .

அங்கே வந்தான் விக்ரம்.ஆறடி உயரம் ஹிந்தி பட ஹீரோ போல் தான் இருந்தான் ஆனால் கண்களில் தான் அத்தனை அலட்சியம் நடையிலும் ஒரு திமிர் .அவனிடம் வந்தவன் "பரவால்லயே நா சொன்னதும் வந்துட்ட "என்க

விஷ்வாவோ "ஹே யார்டா நீ என்ன தைரியம் இருந்தா என் பொண்ண பத்தி என்டயே இவ்ளோ அசிங்கமா பேசுவ "என்க

விக்ரம் "உன் பொண்ண பத்தி உன்ட சொல்லாம உன் பக்கத்துக்கு வீடு காரன்ட சொல்ல முடியு்மா .என்றவன் பின் ஆங் என்ன கேட்டா நா யாரா??echinos குரூப் of கம்பனிஸோட ஒரே பையன் விக்ரம் ."என்க

அவனது கேரக்டர் பற்றி ஏற்கனவே தன் தொழில் வட்டத்தின் மூலம் அறிந்து வைத்திருந்த விஷ்வா சற்று உதறலெடுக்க "நீ நீயா உனக்கு என்ன வேணும் இப்போ ஏன் என் பொண்ண டார்கெட் பண்ணுற ?"என்க

அவனோ "அதான் போன்லயே சொன்னேனே எத்தனையோ பொண்ண பாத்துருக்கேன் ஆனா உன் பொண்ணு வேற லெவேல்னு "என்க

பொறுமை இழந்த விஷ்வா "என்ன வேணுங்குற நீ ?"என்க

அவனோ "பரவால்லயே ஸ்ட்ரெயிட்டாஹ் matterku வந்துட்டியே

ஒன்னும் வேணாம் உன் பொண்ணு தான் வேணும் "என்க

விஷ்வா "புரியல "என்க

அவனோ "உன் பொண்ண கல்யாணம் பண்ணி தரணும்னு கேக்குறேன் "என்க

பொறுமை இழந்த விஷ்வா அவன் சட்டையை கொத்தாக பிடித்தவன் "பொருக்கி நாயே ஒரு நாளைக்கு ஒரு தேவ படுற உன்ன மாறி pervertku என் பொண்ணு கேக்குதா ?கொன்றுவேன் "என்க

அவனோ "வேண்டாம் மிஸ்டர்.விஷ்வா இது பெரிய பாதிப்பை உன் பொண்ணுக்கு தான் தரும் "என்க

அவனோ "முடுஞ்சத பண்ணிக்கோ போடா "என்று எழுந்து வந்து விட ஒரே வாரத்தில் விஷ்வாவிற்கு அதிதி அடிபட்டு கோமாவில் இருப்பதாய் செய்தி வர நொறுங்கி போனான்.

அந்த செய்தி தந்த அதிரிச்சியில் இருந்தவனுக்கு போன் வர அதை எடுத்து காதில் வைத்தவனுக்கு நாராசமாக ஒலித்தது விக்ரமின் சிரிப்பொலி விஷ்வா "யாரு ?"என்க

அவனோ "என்ன மாமா அதுக்குள்ள மறந்துட்டியா விக்ரம்ம்ம்.என்ன உன் பொண்ணு komaல கெடக்குறாளா ?"என்க

விஷ்வா"ஹே ஹே ஹே என்னடா என் புள்ளய என்னடா பண்ண ஏன்டா இப்டி பண்ண என் பொண்ணு என்னடா பாவம் பண்ணா உனக்கு ?என்னடா வேணும் உனக்கு ?"என்க

அவனோ"நா தான் ஏற்கனவே சொல்லிட்டேனே எனக்கு என்ன வேணும்னு .நீ நா சொன்னதை செஞ்சேனா atleast அவ உயிரோடையாச்சும் இருப்பா இல்ல......"என்க

விஷ்வா "உன் கால்ல கூட விழுறேன்டா என் பொண்ண விட்டுறுடா சின்ன பொண்ணுடா அவ "என்க

அவனோ "நீ கால்ல விழுறதுக்கா நா இவ்ளோவும் பண்றேன் ஒழுங்கா உன் பையனையும் உன் பொண்ணயும் சென்னைக்கு உன்கூட கூட்டிட்டு வா மிச்சத்தை நா பாத்துக்குறேன் போலீஸ்ல சொல்லணும்னு நெனச்ச......என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்'

என்க விஷ்வாவும் அவன் கூறியதை செய்தான் .

இதை சைந்தவியிடம் கூறி முடிக்க கண்ணில் க்ரோதம் கொப்பளிக்க அவனை பார்த்தவள் "உண்மையிலேயே அவ அப்பா தானா சார் நீங்க .எவனோ ஒருத்தன் மெரட்டுனான்னு அவன் கைல தார வார்க்க போறீங்களா அவளை .அசிங்கமா இல்ல ramyaaku பயந்துட்டு அவளை கல்யாணம் பண்ணேன் ,விக்ரமுக்கு பயந்துட்டு அவளை இங்க கூட்டிட்டு வந்தெங்குறீங்க."என்க

அவனோ "என்னால பயப்புடுறத தவிர்த்து ஒன்னும் பண்ண முடியாதுமா அவனை எதிர்த்து என்னால எதுவும் பண்ண முடியாது .அதான் உன்ட உதவி கேக்குறேன் என் பொண்ண ஏதாச்சும் கண் காணாத இடத்துக்கு அனுப்சு வச்சுரும்மா "என்க

அவளோ "அங்க அவளுக்கு அவனால பிரச்னை வராதுன்னு என்ன நிச்சயம் ?"என்றவள் அவன் முகத்தை தொங்கப் போடுவதை பார்த்து சிறிது நேரம் யோசித்தவள் ஏதோ சிந்தனை தோன்ற அவனிடம் திரும்பியவள் "நீங்க உதவி பண்ணா நீங்களும் ராம்யாட்ட இருந்து தப்பிக்கலாம் அதிதியும் அவன்ட இருந்து தப்பிக்கலாம் "என்றவள் அவன் என்ன என்பதை போல் பார்க்க தன் திட்டத்தை கூற துவங்கினால்.

இங்கு இது ஏதும் தெரியாத அதிதி கோச்சிங் கிளாசில் முதல் நாளை முடித்து ஹரியுடன் வீடு திரும்பி கொண்டிருந்தாள்.

அவள் cyclein வேகத்திற்கு வேகத்தை குறைத்து ஆவலுடன் வந்து கொண்டிருந்தான் ஹரி .

அதிதி ""ஹரி நீ காலேஜ் படிக்குறேல அப்பறோம் என் இன்னும் cycleல போற ?"என்க

ஹரியோ "இருக்குற வேலைல exercise பண்றதுக்குலாம் டைம் இருக்க மாட்டேங்குது அதி அதான் கொஞ்ச தூரம் தான காலேஜ் cycleல போலாம்னு. "என்க

அதிதி "அண்ணி சொன்ன மாறி சரியான பிட்னெஸ் பைத்தியம் தான் நீ "என்றவள் திடீரென்று நிறுத்த

ஹரி "என்னாச்சு அதி ஏன் இங்க நிறுத்துற ?"என்க

அவளோ "ஹரி ஹரி ஐஸ் கிரீம் பாரேன் வா போய் சாப்பிடலாம் "

என்க அவனோ "ஹே என்ன வெளயாடுறியா ?மழை மூட்டமா இருக்கு இதுல உனக்கு ஐஸ்கிரீம் கேக்குதா ?"என்க

அவளோ கண்ணை சுருக்கி அவன் தாடையை பிடித்தவள் "ஹரி ஹரி பிலீஸ்டா செல்லம்ல வாங்கி தாடா "என்க அவள் கண்ணசைவிற்கே மயங்குபவன் அவள் தாடையை பிடித்து கொஞ்சினாள் என்ன ஆவான் .

ஹரி "சரி வா "என்றவன் ஆவலுடன் சென்று ஐஸ்கிரீம் வாங்கினான் .

icecreamai பிரித்தவள் "ஏன் செல்லமே நீ இல்லாம 4 மாசமா நா எவ்ளோ தவிச்சேன் தெரியுமா இன்னைக்கு உன்ன ஆச தீர சாப்பிடுறேன் பாரு .என்றவள் கையில் வழியும் இஸ்கிரீமையும் சாப்பிட்டு கொண்டு வாயில் ஆங்காங்கே இஸ்கிரீமை ஒட்டவைத்து ரசித்து ருசித்து சாப்பிட ஹரியோ அவளை பருகுவதை போல் பார்த்துக்கொண்டே ஐஸ் கிரீமை உண்டு கொண்டிருந்தான்.அவன் பார்வை அவள் இதழில் ஒருமுறை நிலைக்க அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தவள் என்ன என்று கேட்க தலை அசைத்தவன் தன் விரல் கொண்டு அவள் இதழில் இருந்த ஐஸ் கிரீமை துடைத்து விட்டான்.

அவளுக்கு அந்த வருடலும் ஏதோ பழக்க பட்டதை போல் இருந்தது .

அதிதிக்கு அவன் கையின் வருடல் பழக்க பட்டதை போல் இருக்க அன்று அவன் குரலும் பழக்க பட்டதை போல் இருந்ததை அவள் எங்கே என்று யோசிக்கும் போது அவள் நெற்றியில் ஒரு மழைத்துளி விழ தன் நெற்றியை வருடியவளுக்கு அன்று அவளுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தவனின் ஞாபகம் வர அது இவன் தான் என்று இன்று அறிந்து கொண்டால் .அவளுக்கு கோபம் வரவில்லை காரணமின்றி உதட்டில் ஏனோ புன்னகை விரிந்தது .

அவனோ அவள் புன்னகையின் அர்த்தத்தை உணராது அவள் தோளை தொட்டவன் "ஹே அதி என்ன சிரிக்குற ?"என்க

அவளோ மனதில் "மவனே kiss பண்ணிட்டு எதுவும் தெரியாத மாறி இவ்ளோ நாலா இருந்துருக்கு நீ உன்ன..... ஆஹான் இப்போ காமிச்சுக்க கூடாது உன்ன கவனிக்க வேண்டிய நேரத்துல கவனிச்சுக்குறேன் பிராடு "என்று

நினைத்தவள் அவனிடம் "ஒன்னும் இல்லடா மழை வருதுல அதான் குஷி ஆயிட்டேன் "என்க

அவனோ "நா தான் அப்போவே சொன்னேன்ல ஐஸ் கிரீம் வேண்டாம்னு இப்போ பாரு மழை வந்துருச்சு நாளைக்கு ஏதாச்சும் காச்சல் அடிக்குது தல வலிக்குதுன்னு சொல்லு அப்டியே உன்ன "என்று அவள் கழுத்திற்கு கையை கொண்டு செல்ல

அவளோ "ஹலோ அதெல்லாம் நா ஸ்ட்ரோங் பாடி ஒன்னும் ஆகாது "என்று கையை மடக்கி இல்லாத அர்ம்ஸை காட்ட அடுத்த நிமிடம் "ஹச்சு" என்று அவள் தும்ம

அவனோ "ஆங் ட்ரைலர் ஸ்டார்ட் ஆயிருச்சு இனி nightuh மெயின் picture தெருஞ்சுரும் "என்க அவள் "ஈஈ" என்று பல்லை காட்டி இளிக்க மழையும் வெளுத்து வாங்க ஆரம்பித்ததை பார்த்தவன் இனி என்ன செய்வது என்று யோசிக்க அவனிடமோ ஒரு ஜெர்கின் இருந்தது.

அவள் அடுத்தடுத்து தும்முவதை பார்த்தவன் சடாலென்று அவள் கையை பிடித்து அருகிழுத்தவன் அவள் "ஹே ஹரி என்ன...."என்க அவனோ அவளை பார்த்து "ஷ்ஷ்ஷ் "என்று அவள் இதழில் தன் விரலை வைத்து "அதி மழை செமயா பெய்யுது உனக்கு தும்ம வேற செய்யுது எனக்கும் மழை ஒத்துக்காது சோ இந்த ஜெர்கின தலைக்கு மேல போட்டுக்கலாம் ரெண்டு பேரும் தள்ளிட்டு போயிரலாம் cycleah கொஞ்சம் தூரம் தான "என்க அவளுக்கு அவன் பேசிய எதுவும் காதில் விழவில்லை அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் .

அவள் அவனையே பார்ப்பதை உணர்ந்தவன் தானும் சற்று நேரம் அவள் கண்ணை பார்க்க இடி இடித்ததில் சுய உணர்வை பெற்றவர்கள் எதுவும் பேசாது நடக்க ஆரம்பித்தனர் .

வீட்டிற்கு வந்ததும் அவள் உள்ளே செல்ல இவன் தனது வீட்டிற்குள் செல்ல போக அவளை "அதி "என்று அவன் அழைக்க திரும்பியவளிடம் "போய் ஒழுங்கா தலையை தொவட்டு அண்ட் சுடு தண்ணி குடுச்சுரு கோல்ட் வராது "என்க அவளும் மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டு உள்ளே செல்ல எத்தனித்தாள்.

அவள் உள்ளே சென்றதும் தலையை சிலுப்பியவன் உள்ளே சிரித்து கொண்டே செல்ல அங்கே இவர்கள் இருவரையும் இரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டிருந்ததை இருவரும் கவனிக்க வில்லை .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro