18

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வேலை முடித்து வந்த ஜானுக்கு அயர்வாக இருந்தாலும் அதையும் மீறிய மகிழ்ச்சி முகத்தில் இருந்தது அவளது மனம் இன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை நினைத்து நினைத்து மகிழ்ச்சி கொண்டது. 

அந்த நினைவிலேயே வீட்டிற்கு வந்தவள் வரவேற்பறையில் அனைவரும் அவளுக்காக காத்திருப்பதை கண்டு குழம்பினாள். ஏனெனில் எப்பொழுதும் அவள் வேலை விட்டு வருகையில் அனைவரும் உறங்கி இருக்க இன்று அவர்கள் காத்திருப்பது அவளிற்கு புதியதாக இருந்தது. அவள் குழப்பத்தோடு தன் அன்னையை ஏறிட அவளின் அன்னையோ"ஜான்வி போய் உன் டிரஸ்சை எடுத்து வை"என்க 

அவளோ குழப்பமாக" எதுக்குமா எடுத்து வைக்கணும் ?எங்க போறோம்?" என்று கேட்க

 அவரோ சற்று வருத்தம் நிறைந்த குரலில்" உன் அப்பாவோட அம்மா அதான் உன்   பாட்டி இறந்துட்டாங்க ஜான்வி. நாம ரெண்டு நாள்  சொந்த ஊருக்கு போகணும். நீ போய் ரெண்டு நாளைக்கு தேவையான டிரெஸ்ஸை எடுத்து வை" என்றவர் ஆதிசேஷன் இடம் திரும்பி" நீ அக்காவுக்கு போய் ஹெல்ப் பண்ணு" என்க அவனும் தலையாட்டினான் ஜான்வியுடன் மேலே சென்றேன்.

ஜான்விக்கு அவர் கூறியதில் சிறிது வருத்தமே இருந்தது அவளுக்கு அவளின் பாட்டியை பிடிக்காது.அவளின் அன்னையை கொடுமை செய்தவர் அல்லவா எப்படி பிடிக்கும். மேலே சென்றவள் தன் தம்பியுடன் தனது உடமைகளை எடுத்து வைக்க அவனும் சிரிப்புடன் இருந்தான். அவன் சிரிப்பதைப் பார்த்து குழம்பி அவள் அவன் தலையிலேயே ஒரு டிரஸ்சை தூக்கிப்போட அவன் அப்பொழுது அவளை கவனித்தான். 

ஆதிசேஷன் "இப்ப எதுக்கு மினியன் என்ன அடிச்ச?" என்று கேட்க

அவளோ" டேய் பனை மரம் பாட்டி செத்ததுக்கு போறோம் நீ என்னன்னா பிக்னிக் போற மாதிரி பல்ல காட்டிகிட்டு இருக்க.?" என்க

 அவன்" இன்னும்கொஞ்ச வருஷத்துல செஞ்சுரி அடிக்க இருந்த பாட்டி செத்ததுக்கு நான் எதுக்கு feel பண்றேன்? நா என் கவி டார்லிங்கஹ் பார்க்க போற ஆனந்தத்துல இருக்கேன் "என்க 

அவளோ ஒரு டாப்ஸை எடுத்து அவன் தலையிலேயே போட்டவள்" ரொம்ப பல்ல காட்டாதடா கண்டுபுடுச்சுர போறானுங்க "என்க 

அவள் தலையிலேயே கொட்டியவன் "அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ சீக்ரம் ட்ரெஸ்ஸ எடுத்து வை "என்று விட்டு விசிலடித்தபடி வெளியே சென்றுவிட்டான் .

அவனை பார்த்து தலையில் அடித்தவள் கீழே தன் உடமைகளுடன் வர அந்த இரவில் அவர்கள் கூடலூருக்கு பயணமாகினர் .

முன் இருக்கையில் அவளின் தந்தை ஓட்ட அவளின் அன்னை அருகில் அமர்ந்து கொண்டார் .பின் இருக்கையில் ஆடி சேஷனும் ஜான்வியும் அமர்ந்து கொள்ள அவர்களின் பயணமும் தொடந்துகியது 

.கொஞ்ச நேரம் சென்றிருக்க திடீரென்று அவளின் அலை பேசி சிணுங்கியது .என்ன என்று அவள் பார்க்க கௌதம் தான் "என்ன பண்ற" என்று கேட்டிருந்தான் .

அருகில் பார்க்க ஆதி சற்று கண்ணயர்ந்திருந்தான் ,.ஹப்பாடி என்று நினைத்தவள் பதில் அனுப்பினாள்  "மணி ஒண்ணுக்கு மேல ஆச்சு தூங்கலையா ?"என்க 

அவனோ "ம்ம்ஹும் இல்லடி தூக்கம் வரல நீ ?"என்க

 அவளோ "ப்ச்ச் எனக்கும் தூக்கம் வரல.வேணுனா songs கேளுடா தூக்கம் வரும் "என்க

 அவனோ "அவ்ளோவா songs கேக்க மாட்டேன் ஜானு "என்க 

அவளோ "songs கேக்க மாட்டியா என்ன பிறவி நீ ?எந்த விதமான சூழ்நிலைல இருந்தாலும் பாட்டு கேட்டா மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும் அமைதியாவும் ஆகும்.  நீ நா அனுப்புற songs கேளு "என்க 

அவனோ "சரி அனுப்பு "என்று கூற அவள் அவளிடம் இருந்த மெல்லிசையான பாடல்கள் அனைத்தையும் அனுப்பினாள்.

அவளிற்கு முன்பே வா என் அன்பே வா பாடல் மிகவும் பிடித்த ஒன்று அதை தான் முதலில் அவள் அனுப்பி விட்டு அவள் தன மொபைலில் அதை கேட்க அவனோ அவள் அனுப்பிய பாடல்களில் இருந்து அந்த பாடலை முதலில் தேர்வு செய்தவன் அந்த பாடலின் இனிமையில் கண்ணயர துவங்க ஜான்வியும் அப்படியே உறங்கிவிட்டாள் கூடலூரில் அவளிற்கு காத்திருக்கும் பிரெச்சனைகளை அறியாது .

ஐந்து மணி நேரத்திற்கு பின் அதிகாலை ஆறு மணி அளவில் அவர்கள் சொந்த வீட்டிற்கு நெருங்கிட அவர்களை வரவேற்றது என்னவோ ஒப்பாரிக்குரல்கள் தான் .சேகரன் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே பரிதவிப்புடன் ஓட பார்வதியின் கண்களிலும் நிற்காமல் கண்ணீர் வழிந்தது தனது மாமியாரின் சடலத்தை பார்த்து .

ஜான்வி உணர்ச்சிகளற்று இறுக்கமான முகத்துடன் வர ஆதியின் கண்களோ அப்பட்டமாகவே ராகவியை தேடியது .அவனின் கையை நறுக்கென்று கிள்ளிய ஜான்வி "ஆதி என்ன இருந்தாலும் இங்க ஒரு உயிர் போய் இருக்கு இப்டி சந்தோஷமா முகத்தை வச்சுக்காத"என்க

அவனோ கையை தேய்த்தவன் "சரி சரி எனக்கென்ன தெரியும் "என்க

அவளோ அவனை முறைத்தவள் "ஆமாமா இதெல்லாம் தெரியாது எவனயாச்சு அடிக்குறதுனா மட்டும் நல்லா தெரியும் "என்று கூறியவள் தனது போனினை silentil போட்டு விட்டு உள்ளே உறவினர்களுடன் சென்று அமர்ந்து விட அவனும் ராகவியை தேடி கண்டுபிடித்தவன் அவளிற்கு பின் சென்று அமர்ந்து கொண்டான் .

ரேவதி ஜான்வியை கவனித்தவர் இன்னும் இரண்டு நாட்களில் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தபடி "உன் பேரன் கல்யாணத்த பாக்காம இப்டி சீக்கிரமா போய் செந்துட்டியே அம்மா "என்க ஆதியும் ஜான்வியும் ஒரே நேரத்தில் ரேவதியை ஒரு மார்க்கமாய் பார்த்தனர் ஏனெனில் அவர்களின் பாட்டியின் வயது தொன்னுத்தி ஒன்று.

அவர் மேலும் "சாகுற வயசாம்மா உனக்கு "என்று கூற ஆதி சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை கைகளால் மூடி சிரிக்க துவங்கி விட்டான் .ராகவி அதட்டும் குரலில் "ஆதி சிரிக்கிற இடமா இது ?"என்க

அவனோ "உன் அம்மா செத்த வீட்லயும் என் அக்காவை உன் நொண்ணனுக்கு கட்டி வைக்க தூண்டில் போடுது அது உனக்கு தெரியலையா ?தொன்னுத்தி ஒரு வயசு உங்க ஊருல அல்பாயுசா டி ? "என்க

அவளோ வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள் "அறிவுகெட்ட அம்மா" என்று .

கௌதம் அன்று காலையில் வந்து சென்னையில் இறங்கியவன் ஜான்விக்கு அழைக்க அது எடுக்கப்படவே இல்லை .மீண்டும் மீண்டும் முயற்சிக்க முழு ரிங் போய் கட்டானது .அதில் கோபமுற்றவன் "கால் கூட எடுக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கா வரட்டும் "என்று தனக்குள்ளே பொருமிக்கொண்டு அலுவலகத்திற்கு சென்று விட்டான் .

அன்று முழுவதும் அவனிடம் அவனின் கீழ் பட்ட பாடை நான் கூறியா தெரிய வேண்டும் .அன்று அவர்களின் பணி hcl மென்பொருள் நிறுவனத்தின் மராமத்து பணி .உணவுண்ணும் சமயம் அவன் வேலைப்பளு இன்றி இருக்கும் சமயம் அனைத்திலும் அவளிற்கு அழைப்பு விட அதுவோ அடித்து அடித்து ஓய்ந்ததே ஒழிய அவள் எடுத்த பாடாய் இல்லை

.உணவு இடைவேளை முடிந்த பின் அப்படி தான் அவளிற்கு அழைப்பு விடுத்தவன் அவள் எடுக்காமல் போக அந்த எரிச்சலை எங்கு காட்டுவது என்று தெரியாமல் பார்வையை சுழல விட்டான் .அங்கு ஒரு காதல் ஜோடி தோட்டத்தை போல் புல்வெளி அமைக்கப்பட்டு அதிலிருந்த பெஞ்சில் அமர்ந்து கைகளை கோர்த்து ,முத்தம் கொடுத்து என்று அத்துமீறி சில்மிஷம் செய்துக்கொண்டிருக்க வேலை செய்பவர்களோ வேலையை பார்க்காமல் அவர்களை கவனித்துக்கொண்டிருந்தார்கள் .

எரிச்சல் எல்லாம் அந்த ஜோடியின் புறம் திரும்ப கை ஸ்லீவை மடக்கி விட்டவன் அவர்களின் எதிரில் சென்று நின்றான் .அவன் வந்து நிற்பதையே அந்த ஜோடியார் இருவரும் இரண்டு நிமிடத்திற்கு பின் தான் உணர்ந்தனர் .அவனின் உஷ்ணப்பார்வை சுட்டெரித்ததோ என்னவோ இருவரும் நிமிர்ந்து அவனை பார்க்க கௌதமோ பொரிய துவங்கிவிட்டான் "அறிவில்லை பொது இடத்துல இப்டி தான் behave பண்ணுவீங்களா இதென்ன வேல பாக்குற இடம்னு நெனச்சங்களா இல்ல beachunu நேனைசீங்களா ?"என்று கோபத்துடன் கத்த

அந்த இளைஞனோ கோபமுற்றவன் எழுந்து நேருக்கு நேராய் நின்றவன் "ஹலோ எங்களுக்கு தெரியும் நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க "என்க

அவனோ அவனை அலட்சியப்படுத்தியவன் அந்த பெண்ணிடம் திரும்பி "அவன் தான் அறிவுகெட்ட தனமா அங்க இங்க தொட்டுக்கொட்டு இருக்கான்னா உனக்கு அறிவில்லையா ?"என்க

அவளோ "ஹலோ என்ன overaa பேசுறீங்க நாங்க லவ் பண்றோம் "என்க

அவனோ ஏளனமாய் சிரித்தவன் இருவரையும் காட்டி "எது இதுக்கு பேர் loveaah ?அங்க கொஞ்சம் திரும்பி பாருங்க "என்க அவர்களை தான் காட்சிப்பொருளை போல் அங்கு வேலை செய்பவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர் அவர்களை கடப்பவர்கள் சிலரின் பார்வையில் அருவருப்பும் இருந்தது. அதை பார்த்து அந்த இருவருக்குமே ஒரு அசவுகரியம் எழ அந்த ஆடவனின் முன் சொடுக்கிட்டவன் "காதலிக்கிற எவனும் தான் காதலிக்கிற பொண்ண பத்திரமா பாதுகாக்க தான் நினைப்பான் இப்டி காட்சிப்பொருளா ஆக்க மாட்டான் "என்று கூற இருவரும் தலை குனிந்தனர் .

அவர்கள் முன் சொடுக்கிட்டவன் அவர்கள் நிமிர "இனிமே இப்டி இந்த areala எவனாச்சு கொஞ்சி கொலாவிக்கிட்டு இருக்குறத பார்த்தேன் டைரக்ட் கால் உங்க அப்பா அம்மாக்கு தான் "என்று சுற்றி அதே போல் அமர்ந்திருந்த ஜோடிகளுக்கு கேட்குமாறு கூறியவன் அவர்களிடம் திரும்பி "இங்க என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன் "என்று கர்ஜிக்க அந்த இருவரும் விட்டால் போதுமென்று தெரித்துவிட்டனர் அவ்விடத்திலிருந்து .

அவன் சுற்றி பார்க்க அந்த மூன்று ஜோடியும் தெறித்து ஓடி விட்டனர் .ரோகினி அவனையே பா.... என்று பார்த்துக்கொண்டிருக்க அவனோ அவளை முறைத்தவன் "உ.."என்று ஆரம்பிக்க அவளோ அவன் ஆரம்பிக்குமுன்னே ஓடிவிட்டாள் ஆள விடுடா சாமி என்று .

ஜான்வியின் பாட்டியை அடக்கம் செய்து அவர்கள் வீடு திரும்பி அவரவர் அறைக்குள் செல்ல மணி பத்திற்கு மேல் ஆகி இருக்க அயர்வாய் தனக்கும் மேலும் மூன்று உறவுக்கார பெண்களுக்கும் ஒதுக்கப்பட்ட அறைக்குள் வந்தவள் அப்பொழுதே கவனித்தால் கவுதம் அவளை பத்து முறை அழைத்திருப்பதை .தலையில் அடித்தவள் அப்பொழுதே நேற்று அவனிடம் பாடி இறந்ததை கூறவில்லை என்று நினைவில் வர தன்னை தானே திட்டிக் கொண்டவள் பெண்கள் உறங்கிவிட்டனரா என்று பார்க்க மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் .

மெல்ல எழுந்தவள் பூனை நடையிட்டு அந்த அறையை ஒட்டி இருந்த பலகாணிக்கு வந்தவள் கௌதமிற்கு அழைக்க அவனோ முதல் அழைப்பை எரிச்சலில் துண்டித்தான் .அவன் துண்டித்ததிலேயே அறிந்துகொண்டால் அவனின் கோபத்தின் அளவை .ஜான்வி மனதில் கடவுளே என்ன காப்பாத்து அந்த சிடுமூஞ்சி கிட்ட இருந்து என்று வேண்டியவள் மீண்டும் அழைக்க அவனோ முழு ரிங்கும் போய் cut ஆகும் சமயத்தில் எடுத்தவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை .

அவளும் பேசாமல் இருக்க அவனும் பேசாமல் இருந்தான் ,இப்படியே ஐந்து நிமிஷம் செல்ல அவனோ பொறுமை இழந்து "seri நா cut பண்றேன் நீ இப்டியே காதுல phoneah வச்சுக்கிட்டு இரு "என்க

அவளோ "அச்சோ அத்து ப்ளீஸ் cut பன்னீராதடா "என்க

அவனோ பொரிய துவங்கிவிட்டான் "என்ன பாத்தா பைத்தியக்காரன் மாறி இருக்காடி ?எத்தனை கால் காலைல இருந்து என் ஒரு தடவ எடுத்து பேசுனா கொறஞ்சு போயிருவியா ?"என்று கத்த

அவன் அவளிடம் முதல் முறை கத்துவதால் அரண்டவள் கண்களில் தன்னிச்சையாக கண்ணீர் சேர்ந்து விட குரல் உடைந்துவிட்டது உடைந்த குரலில்" பாட்டி இறந்துட்டாங்க ஊருக்கு வந்துட்டோம் அதான் எடுக்கல ....சாரி "என்று விட்டால் அழுதுவிடுவேன் என்ற குரலில் கூற

அவள் கூறிய செய்தியிலும் அவளின் அழுகை குரலையும் கேட்டவனிற்கு தன் மீதே கோபம் வந்தது தன்னை தானே புறமண்டையில் தட்டிக்கொண்டவனின் குரல் முழுதும் மாறி மென்மை ஆகி இருக்க அவளோ தேம்ப துவங்கி இருந்தாள் .

கௌதம் "ஹே ஜானு சாரிமா நெறய தடவ கூப்டு நீ எடுக்கலயா அதான் கோபத்துல பேசிட்டேன் ப்ச்.. அழாதடி "என்க

அவளோ கண்களை துடைத்தவள் "நா ஒன்னும் அழலை "என்று முறுக்கி கொள்ள

அவனோ புன்னகைத்தவன் "ஓஹ் அப்ப கண்ணு வேர்க்குதோ "என்று கேட்க

அவளோ "சரி சரி ஓட்டாத "என்று சிறிது நேரம் சிறிது பேச

அவனோ வைக்க போகும்முன் "ஆமா அதென்ன அத்து ?"என்க

அவளோ தான் மனதில் கூப்பிட்டுக்கொண்டிருந்த செல்லப்பெயரை வெளியே கூறிவிட்டோமே என்று நினைத்து நாக்கை கடித்தவள் "அத்துவா என்னது ?"என்க

அவனோ "ஏய்ய் கேடி நீ கூப்பிட்டதை கேட்டுட்டேன் சொல்லு "என்க

அவளோ "நீ ஜானுனு கூப்டுற மாதிரி தான் "என்று கூற

அவனோ சிரித்தவன் "நல்லா தான் இருக்கு அப்டியே கூப்டு "என்க

அவளும் சிரித்தவள் "ம்ம் சரி" என்றவள் உள்ளே பெண்கள் யாரும் எழுந்து விட கூடாதே என்று நினைத்தவள் அவன் இன்று நடந்த சம்பவத்தை கூறப்பபோகும்முன் "டேய் ரெண்டு நாளைக்கு இங்க பேச முடியாதுடா எல்லாரும் சுத்தியே இருப்பாங்க பை "என்று கூற

அவன் மனதில் ரெண்டு நாளா என்று நினைத்தாலும் வெளியே "சரிடி பாத்துக்கோ குட் நைட் "என்று கூறி வைக்க அவளும் புன்னகையோடு அழைப்பை துண்டித்தவள் உள்ளே செல்ல அவள் பேசியதை ஒரு ஜோடி காதுகள் கேட்டுக்கொண்டிருந்ததை அவள் அறியவில்லை .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro