33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ரேவதி தனது மகனிற்கு ஜான்விக்கும் திருமணம் உறுதி செய்து விட்டு சென்று விட ஜான்வியோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் இருந்தாள் .சேகர் பணி முடிந்தது என்பதை போல் தனது நண்பனை பார்க்க செல்கிறேன் என்று வெளியே செல்ல பார்வதியோ மகளின் திருமணம் முடிவான மகிழ்ச்சியில் அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை வருடினார் .

பார்வதி "ஜான்வி அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா .இப்போ தான் நீ பொறந்த மாறி இருக்கு அதுக்குள்ள உனக்கு கல்யாணம் ஆக போகுது "என்று பெற்றவரின் பூரிப்புடன் கூற ஜான்வியோ

இதற்கு மேல் தன்னை கட்டுப் படுத்த முடியாது என்று உணர்ந்தவள் அவர் கையை விலக்கி "அம்மா கொஞ்சம் tiredaa இருக்கு நா ரெஸ்ட் எடுக்குறேன் "என்று கூற

அவரும் நேற்று காய்ச்சலின் வீரியத்தால் அப்படி இருக்கிறது போல என்று நினைத்தவர் அவள் கன்னம் வருடி "சரிடா நீ தூங்கு அம்மா சாப்பிடேல உன்னை எழுப்புறேன் "என்று கூற அவளும் மௌனமாய் ஒரு தலை அசைப்புடன் மேலே சென்று விட்டாள்.அதன் பின் இரண்டு நாட்கள் செல்ல ஜான்வியின் வாழ்வு இயந்திரத்தனமாக மாறி இருந்தது .காலையில் எழுவாள் ,பெயரிற்கு உன்ன வேண்டும் என்பதற்காக உண்ணுவாள் .என்ன சாப்பிடுகிறாள் என்று கூட உணராது தான் உண்ணுவாள் அலுவலகம் சென்று வேலை பார்ப்பாள் மீண்டும் உண்ணுவாள் உறங்குவாள் .ஓயாது பேசுபவள் பேசுவதையே மறந்திருந்தாள்.

முதலில் இதை காய்ச்சலின் அசதி என்று நினைத்த பார்வதி இரண்டு நாட்கள் ஆனபின்னும் அவள் அப்படியே முகத்தில் வெறுமை தாங்கி இருப்பது மனதின் உள்ளே குழப்பத்தை உண்டு பண்ணியது .அவர் கண்ட அவரின் புதல்வி இது அல்லவே!சதா வாயடித்துக் கொண்டு ,அவர் அடுப்படியில் வேலை செய்தால் அவரின் பின்னே நின்றுகொண்டு ஏதாவது குறும்பு செய்து கொண்டு ,ஆதியுடன் வம்பளந்து கொண்டு இருப்பவள் இன்றோ தனது அறையே கதி என்று இருக்கிறாள்.தானாக பேசினாலும் ம்ம் ம்ம்ஹும் என்று இரண்டு பதிலுடன் முடித்துக் கொள்கிறாள் ,திடீரென்று காரணமே இல்லாமல் கண்களில் அவளறியாது கண்ணீர் வழிய அமர்ந்திருக்கிறாள் ,காலையில் எழுந்து வரும் பொழுது முகம் எங்கும் இரவெல்லாம் அழுததை போல் வீங்கி ,ரத்த சிவப்பான கண்களுடன் எழுந்து வருகிறாள் .திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் இப்படியா இருப்பாள் ?என்று நினைத்து குழம்பினார் ,அவளிடம் கேட்டாலும் "நல்ல தான்மா இருக்கேன் "என்று கூறி அத்துடன் அவ்விடம் விட்டு அகன்று விடுகிறாள் .என்ன ஆனது ஏன் மகளிர்க்கு என்று நினைத்தே குழம்பிக் கொண்டிருந்தார் பார்வதி.

பிரவீன் ஒரு அலுவலக வேலையாக ஒருவாரம் பெங்களூரு சென்றிருந்தவன் அன்று தான் மீண்டும் அலுவலகம் வந்து சேர்ந்தான் .இந்த ஒரு வாரமாக ஜான்வி அழைத்து பேசவும் இல்லை அழைத்தாலும் பதில் இல்லை .ஜீவிதாவும் அவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் இந்த வாரம் அவள் பேசவே இல்லை என்று .என்ன ஆச்சு இந்த அரை அடிக்கு என்று நினைத்தவாறு அலுவலகம் வந்தவன் அவள் வரும் நேரம் அவளின் மேஜையின் அருகில் காத்திருந்தான் .

ஜான்வியோ இரண்டு மணிக்கு சரியாய் தனது மேஜைக்கு வந்தவள் அங்கே பிரவீன் இருப்பதை பார்த்து ஒரு வரவழைக்கப்பட்ட புன்னகையை சிந்த பிரவீன் அவளிடம் நன்றாக சண்டை இடும் நோக்கில் இருந்தவன் அவள் முகத்தில் இருந்த வெறுமையையும் விரக்தியையும் பார்த்த நொடியில் கண்டுகொண்டுவிட்டான் .அவள் அவளின் இருக்கையில் அமர்ந்து கணினியை ஸ்டார்ட் செய்ய ப்ரவீனோ குழப்பத்துடன் "என்னாச்சு ஜான்வி ?are you alright ?"என்று கேட்க

அவளோ "ஒன்னும் ஆகலேயே "என்று உணர்ச்சி துடைத்த முகத்துடனே கூறியபடி வேலை பார்க்க துவங்கினாள்.

பிரவீனோ அவளின் நாற்காலியை தன் புறம் திருப்பியவன் "என்ன ஆச்சுன்னு கேக்குறேன்ல சொல்லு "என்று கூற

ஜான்வியோ ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவள் "வீட்ல கல்யாணம் fix பண்ணிட்டாங்க. நிச்சயம் ரெண்டு மாசத்துல .அத்த பையன் கூட "என்று கூற பிரவீனோ அதிர்ந்தான் .

படபடப்புடன் அவளை பார்த்தவன் "ஹே என்னடி சொல்ற கெளதம் ப்ரோக்கு தெரியுமா? சொன்னியா ?இப்போ என்ன பண்றது ?"என்று கேட்க

அவளோ விரக்தியாய் புன்னகைத்தவள் "ம்ம் சொன்னேன் .happy married lifenu wishes சொன்னான்."என்று கூற பிரவீனிற்கு இது மிகவும் அதிர்ச்சிகரமாய் இருந்தது .அவன் கண்களில் இவளிற்கான காதலை பலமுறை தெளிவாக கண்டிருக்கிறானே .

பிரவீன் "ஹே ஏதாச்சு விளையாடி இருப்பாரு ஜான்வி .அவர் உன்ன அவ்ளோ லவ் பண்ணாரு நானே நெறைய தடவ அவர் கண்ணுல பாத்துருக்கேன் "என்று கூற

ஜான்வியோ எரிச்சல் அடைந்தவள் "அப்டி நம்பினதுக்கு தான் நல்லா கற்பனை பண்ணிக்குற ஜான்வி.நான் friendaa தான் உன்ன பார்த்தேன் அப்டினு சொல்லிட்டான்.என்னவோ நான் எந்த பையனோடையும் friendaave இருந்தது இல்லாதது மாதிரி எனக்கு லவ்வுக்கும் நட்புக்கும் வித்யாசம் தெரியாதது மாதிரி . விடு பிரவீன் அவ்ளோ தான் "என்று கூற .

பிரவீனிற்கோ கௌதமின் செய்கைகள் விசித்திரமாய் தோன்றியது . அன்று மண்டபத்தில் கூட நன்றாக தானே இருந்தான் . சரியாக ஜீவிதா திருமணம் முடிந்த பின் தான் ஜான்வியை அவன் தவிர்க்கிறான். என்ன ஆனது ? என்று யோசித்தவனிற்கு அப்பொழுதே அன்று இரவு வந்து கெளதம் குடித்தது நினைவில் வந்தது .

பிரவீன் அவளை தன புறம் திருப்பியவன் "அன்னைக்கு ஜீவிதா marriage reception ஞாபகம் இருக்காடி ?"என்று கேட்க

அவளோ மறக்க முடியுமா என்று நினைத்தவள் நினைவு இருக்கிறது என்பதை போல் தலை ஆட்ட

அவனோ "அன்னைக்கு நைட் கெளதம் ப்ரோ குடிச்சாரு "என்று கூற

இவளோ அதிர்ந்தாள் அவனிற்கு குடிப் பழக்கமே இருந்தது இல்லையே அன்று ஏன் குடித்தான் என்று நினைத்தவள் ஜான்வி "என்னடா சொல்ற ?குடிச்சானா ?நல்லா தான என்கிட்டே பேசுனான் அன்னைக்கு "என்று கூற

பிரவீனோ "ஆமா ஜான்வி அன்னைக்கு குடுச்சாரு குடுச்சுட்டு ஆதி அண்ணாவை கட்டி புடுச்சு ஒரே அழுகை ."என்று கூற

ஜான்வியின் காதல் கொண்ட மனமோ "ஒரு வேளை அவன் தானாய் விலகாமல் விலக்கி வைக்கப் பட்டு இருக்கிறானோ?" என்று சந்தேகம் எழுப்ப

மூளையோ "வேண்டாம் ஜான்வி அவ பேச்சு கேக்காத .என்ன காரணமா இருந்தாலும் எப்படி ஒருத்தனால லவ் பண்ற பொண்ண விட்டு குடுக்க முடியும் ?"என்று கேட்க

மனமோ "தவிர்க்க முடியாத காரணமா இருந்தா ?கொஞ்சம் அவன் பக்கம் இருந்தும் யோசிக்கலாமே"என்று கேட்க

மூளையோ "எந்த காரணமா வேணா இருக்கட்டுமே இவ sidela இருந்து கொஞ்சம் கூட யோசிக்காம இவ மனச hurt பண்ணிட்டு தான போனான் .இப்போ அவன் sidela இவ ஏன் யோசிக்கணும் ?"என்று அவள் ஈகோவை தூண்டிவிட்டது .மீண்டும் கோபம் வர தன் வேலையை பார்க்க துவங்கிவிட்டாள்.

பிரவீன் "என்ன ஜான்வி ஏதாச்சு சொல்லு "என்று கூற

அவளோ "என்ன சொல்ல சொல்ற ?இப்டி இருக்குமோ அப்டி இருக்குமோனு யோசுச்சு நம்பிக்கையை வளர்த்து நா பட்டது போதும்."என்று கூற

பிரவீன் கோபத்துடன் "ஈகோ காட்டுற இடமா ஜான்வி இது?உன் life டி "என்று கடிந்துகொள்ள

அவளோ கோபத்துடன் தன் அலைபேசியை அவன் கையில் கொடுத்தவள் "எத்தனை கால் பண்ணிருக்கேன்னு பாருடா இந்த ஒரு வாரத்துல .தெனம் இருநூறு missed கால் .எப்போ கால் பண்ணாலும் switched ஆப் .மூணு நாள் முன்னாடி என் கெளதம் பொய் சொல்லுற?என்ன பிரெச்சனைடா சொல்லு அப்டினு அவனுக்கு இன்ஸ்டாக்ராம்ல மெசேஜ் பண்ணேன் .அதுகாப்புறோம் அவனோட social media அக்கௌன்ட் எல்லாத்துலயும் என்ன பிளாக் பண்ணிட்டான் .நீ சொன்ன மாதிரி இருந்தா எதுக்கு டா இப்டி எல்லாம் நடந்துக்கணும் ?போதும் பிரவீன் என்னால முடியல விட்டுரு. "என்று அழுகை குரலில் கூறியவள் தன் வேலையை பார்க்க துவங்கி விட்டாள் .பிரவீனிற்கோ இவனின் செய்கைகள் அனைத்தும் குழப்பமூட்டுவதாய் இருந்தது .என்ன ஆனாலும் சரி என்று இன்று ஆதியிடம் பேசி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் .

அன்று இரவு எட்டு மணிக்கு ஷிபிட் முடித்து வீட்டிற்கு வந்த பிரவீன் தனது அறையில் அமர்ந்து ஆதிசேஷனிற்கு அழைத்தான் .ஆதி சேஷன் அப்பொழுது படித்துக் கொண்டிருந்தவன் பிரவீனின் எண்ணை பார்த்து எடுத்தவன் "சொல்லுங்க அண்ணா "என்று கூற

பிரவீனோ "அது ஆதி .... எப்படி ஆரம்பிக்குறதுனு தெரியல "என்று கூற

ஆதியோ "என்ன அண்ணா இவ்ளோ யோசிக்கிறீங்க ?சும்மா சொல்லுங்க என்ன சொல்லணும் ?"என்று கேட்க

பிரவீனோ "அது.... ஆதி ஜான்வி கெளதம் அப்டினு ஒருத்தர லவ் பண்ரா .அன்னைக்கு கூட நீ அவங்கள parkla சேர்த்து பார்த்தியே?"என்று கூற

ஆதியோ அவன் கொஞ்சமும் எதிர்பார்க்காத பதிலை கூறினான் "தெரியுமே .இப்போ கெளதம் அவளை லவ் பண்ணலன்னு சொல்லிட்டு போனதும் தெரியும் "என்று கூற

பிரவீனோ அதிர்ந்தவன் "எது உனக்கு தெரியுமா ?"என்று கேட்க

ஆதியோ "ம்ம் தெரியும் .அன்னைக்கு பார்த்ததுக்கு அப்பறோம் விசாரிச்சேன் .பையன் ரொம்ப நல்லவரா இருந்தாரு அண்ட் அக்காவுக்கும் ரொம்ப புடுச்சுருந்தது அவ கிட்டயும் சொன்னேன் எனக்கு ஒகே அப்டினு ஆனா அவர் இப்போ அவ மேல லவ் இல்லனு சொல்லிட்டு கொலை குத்தம் பண்ண கொலையாளி மாறி தலை மறைவாகிட்டாரு " என்று கூறி சிரிக்க

பிரவீனோ கடுப்பானவன் "ஆதி be சீரியஸ் .ஜான்வி அவ இயல்பையே தொலைச்சுட்டு உக்காந்துருக்கா .எனக்கு என்னவோ அவர் தானா அவளை விட்டு விலகுன மாதிரி தெரியல.இந்த நேரத்துல ஜான்விக்கு marriage வேற fix பண்ணிருக்கீங்க "என்று கூற

ஆதியோ "கண்டிப்பா தானா விலகலை அவரை விலக்கி தான் வச்சுருக்காங்க .அது யாருன்னும் எனக்கு தெரியும்" என்று கூற

பிரவீனோ ஆவலுடன் "யாருடா ?"என்று கேட்க

அவனோ "என் அப்பா தான்.முதல்ல guess தான் பண்ணேன் ஆனா இன்னைக்கு அவர் ரூம்ல இருந்து அவரோட செல்லமான மனசாட்சி அதாவது அவரோட டைரி சுட்டுட்டு வந்ததுல தான் confirm ஆச்சு அவர் தான் அப்டினு "என்று சொல்ல

பிரவீனோ "அப்போ ஜான்வி கிட்ட சொல்லிறலாம் ஆதி .கெளதம் ப்ரோவை காண்டாக்ட் பண்ணிரலாம் அது ஒன்னும் கஷ்டம் இல்ல.இந்த கல்யாணத்தை நிறுத்தணும் "என்று கூற

ஆதியோ "கெளதம் ஒத்துக்குவாருனு நெனைக்குறீங்களா ?கண்டிப்பா மாட்டாரு .எங்கப்பா ஜான்வியோட உயிரை பகடைக்காயா வச்சு அவரை விலக்கி இருக்கார் .கண்டிப்பா ஜான்வி கிட்டயே அவளை லவ் பண்ணலன்னு தைரியமா சொன்னவாறு நம்ம கிட்ட பொய் சொல்ல எவ்ளோ நேரம் ஆகும் ?"என்று கேட்க பிரவீனிற்கோ இடியாப்ப சிக்கல் போல் தோன்றியது இந்த பிரெச்சனை .

பிரவீன் "இப்போ நிச்சயம் வேற ரெண்டு மாசத்துல வச்சிருக்கீங்க.என்னடா பண்றது ?"என்று கேட்க

ஆதியோ "டென்ஷன் ஆகாதீங்க அண்ணா.நிச்சயம் கண்டிப்பா நடக்கும் அதுவும் அபிக்கும் ஜான்விக்கும் தான் நடக்கும் "என்று கூற

பிரவீனோ கோபமானவன் "என்ன ஆதி உளறுற?எதுக்கு இதுல தேவை இல்லாம அபி அண்ணாவை வேற இழுத்து விடுற ?"என்று கடிந்து கொள்ள

ஆதியோ சிரித்தவன்"கண்டிப்பா நீங்க நெனைக்குற மாதிரி ஏதும் நடக்காது . "என்று அவன் திட்டத்தை கூற

பிரவீனோ அதை கேட்டு பிரம்மித்தவன் "டேய்ய் நீ மட்டும் இன்ஜினியரிங் பண்ணாம law பண்ணிருந்தன்னு வையேன் எங்கயோ போய் இருப்ப டா .என்ன ஒரு கிரிமினல் புத்தி "என்று கூற

ஆதியோ "ஹாஹா உங்களோட புகழ்ச்சிக்கு நன்றி அப்பறோம் இது எதையும் உங்க அரை அடி frienduh கிட்ட உளரீராதீங்க ,ஜீவிதா அக்கா கிட்டயும் தான் .காரியமே கேட்டுரும் ரெண்டும் சரியான ஓட்ட வாய் ."என்று கூற

பிரவீனோ புன்னகைத்தவன் "எங்குட்டோ நல்லபடியா முடுஞ்சா சரிடா"என்று கூறி வைக்க ஆதியோ புன்னகையுடன் போனினை வைத்தவன் அறையின் வாயிலில் கை கட்டி நின்றிருந்த உருவத்தை பார்த்து திகைத்தான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro