36

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அங்கு ஒரு கலவரத்தையே செய்து விட்டு தன் எதிரில் சாவகாசமாக அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் .அவளோ அவன் பார்ப்பதை பார்த்து முகம் சுருக்கியவள் "ஏன் டா இப்டி பாக்குற எனக்கு வயிறு வலிக்க போகுது உனக்கும் வேணுமா ?"என்று அவனிடம் இஸ்கிரீமை நீட்டியவள் பின் மீண்டும் அதை தன் புறம் இழுத்து "வேணும்னா ஆர்டர் பண்ணிக்கோ "என்று மீண்டும் தனது ஐஸ் கிரீமை சுவைக்க துவங்கினாள்.

அவனோ அவளை பார்த்தவன் "ஜானு என்ன நெலமைல இருக்கோம்னு தெரிஞ்சு தான் பண்ணுறியா ?வீட்டை விட்டு வெளிய வந்துட்ட டி.அடுத்து எங்க போக போறோம் ?என்ன பண்ண போறோம் ?நீ இங்க வேல பாக்குற நான் இன்னும் ஒன் வீக்ல சென்னைல join பண்ணனும் .அது வரைக்கும் என்ன பண்றது?கல்யாணம் பண்ணாம எங்க தங்க வைக்குறதுனு நான் ஏகப்பட்ட டென்ஷன்ல இருக்கேன் நீ கூலா ஐஸ்கிரீம் சாப்டுட்டு இருக்க ?"என்று கேட்க

ஜான்வியோ ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்தியவன் "உனக்கு தான் இது திடீர்னு நடந்தது நான் நீ எங்க அப்பா கிட்ட பேச வரேன்னு சொன்னபோவே நெனச்சேன் இது தான் நடக்கும்னு .ட்ரெஸ்லாம் already
பேக் பண்ணி வச்சுருந்ததுலயே தெரிய வேணாம்?"என்று கேட்க

அவனோ ஒற்றை புருவம் தூக்கியவன் வேறு என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறாய் என்பதை போல் பார்க்க அவளே தொடர்ந்தாள். ஜான்வி "அண்ட் இது நா ஏதும் பண்ணல சென்னைக்கு என்ன transfer பண்ணிட்டாங்க அஞ்சு நாள்ல அங்க போக வேண்டியதா இருந்துச்சு.இப்போ நாலு நாள் லீவு போட்ருக்கேன்ல லீவு முடுஞ்சதும் அங்க போய் join பண்ணனும் .ஜீவி கிட்ட சொல்லிருந்தேன் அவ ஹாஸ்டல் ரெடி பன்றேன்னு சொல்லிருந்தா."என்று கூற கௌதமிற்கு அப்பொழுதே ஆதித்யா மற்றும் திவ்யாவிடமும் மூன்று மாதமாய் தொடர்பற்று இருந்தது நினைவில் வந்தது .

அவன் கலவரத்தோடு அவள் முகத்தை பார்த்தவன் "ஆதி அண்ணாக்கு எல்லாம் தெரியுமா ?"என்று கேட்க

அவளோ நமட்டு சிரிப்பு சிரித்தவள்" நேத்து நைட் வரைக்கும் என்ன நடந்துச்சுனு தெரியும் இன்னைக்கு வீட்டை விட்டு வெளிய வந்தது தெரியாது உன்மேல கொலை காண்டுல இருக்காரு திவ்யா அக்காவும் தான். எதுக்கும் சென்னை போனதும் face பண்ண காத்திரு "என்று கூற அவனோ செத்தேன் என்று நினைத்தவன் தன் அருகில் நிழலாடுவதை பார்த்து யாரென்று நிமிர பிரவீன் அவனை முறைத்தபடி நின்று கொண்டிருந்தான் .ஜான்வி "வாடா சொன்னதை செஞ்சுட்டியா ?"என்று கேட்க

அவனோ "செஞ்சுட்டேன் டி "என்றவாறு அவளின் சான்றிதழ்களின் நகல்களை கொடுத்தவன் கௌதமை முறைத்தான் .கெளதம் அவனின் முறைப்பிற்கான அர்த்தத்தை உணர்ந்தவன் அவன் கரத்தை பற்றி "சாரி பிரவீன் "என்று கூற

அவனோ "sorrylaam வேணாம் ப்ரோ இனியாச்சு ஏதாச்சு பிரச்னை வந்தா சொல்லுங்க friends கிட்ட முன்னாடியே நீங்க இதான் பிரச்னைனு சொல்லிருந்த இவ்ளோ தூரம் வந்துருக்காது "என்று கூற அவனும் சரி என்று தலை ஆட்டினான் .

பிரவீன் "இனி அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கீங்க ?"என்று கேட்க

அவனோ "நோ டவுட் marriage தான் பிரவீன் .ஆனா கொஞ்சம் register officela procedureslaam பாக்கணும் .ஒன் month ஆகும்னு நினைக்குறேன்."

என்று கூற

பிரவீன் தலை ஆட்டியவன் "தெரியும் ப்ரோ .அது வரைக்கும் ஜான்வி அங்க ஜீவி பார்த்து வச்சுருக்குற ஹாஸ்டெல்ல இருந்து வேலைக்கு போகட்டும்.நா பஸ் டிக்கெட் புக் பண்ணிட்டேன் இப்போ மணி ஒன்னு மூணு மணிக்கு பஸ் .டிக்கட் message forward பண்ணிட்டேன் ஜான்விக்கு.ஆதி ப்ரோ காலைல அஞ்சு மணிக்கு கோயம்பேடுல வந்து கூப்ட்டுக்குறேன்னு சொன்னாரு .செம காண்டுல இருக்காரு பாத்து handle பண்ணுங்க .நீங்க எப்படி releive ஆயிட்டிங்களா இல்ல மூணார் போகணுமா ?"என்று கேட்க

கெளதம் "இன்னும் ஒன் வீக்ல chennaila join பண்ணனும் பிரவீன். நா releive ஆய்டு தான் இங்க வந்தேன் "என்று கூற

அவனும் தலை ஆட்டியவன் பின் ஜான்வி அங்கிருந்த வாஷ்ரூமிற்கு செல்ல பிரவீன் அவனை பார்த்தவன் "ப்ரோ அவ குடும்பம் சொந்தம் எதுவும் வேணாம்னு உங்கள நம்பி வீட்டை விட்டு வெளிய வந்துருக்கா .நிறைய பட்டுடா இந்த மூணு மாசத்துல சோ இனி ஒரு தடவ அவளை ஹர்ட் பண்ணாம பாத்துக்கோங்க .இனி ஒரு தடவ அவளை அழ வைக்காதீங்க "என்று கூற

அவனும் சரி என்பதாய் சிரித்தபடி தலை அசைத்தவன் அவன் கையை பிடித்து "என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குறேன் கவலைப்படாத "

பின் அவள் வர பிரவீன் "ஓகே டி அரை அடி பத்திரமா இரு .போயிட்டு கால் பண்ணு, டெய்லி போன் பண்ணி என்ன நடந்துச்சுனு சொல்லு,கேப்லயே போயிட்டு வா ,ஊர் சுத்தணும்னா தனியா சுத்தாத "என்று அறிவுரைகளை அள்ளி தெளித்தவன் அங்கிருந்து விடை பெற கிளம்ப கௌதமோ மணியை பார்த்தவன் அது ஒன்றரை என்று காட்ட ஜான்வியை பார்த்தவன் "இன்னும் ஒன்றை மணி நேரத்துல பஸ் சாப்பிட்டு கெளம்பலாமா ?"என்று கேட்க அவளும் சரி என்று தலை அசைத்தாள்.

அதன் பின் இருவரும் உண்டுவிட்டு சென்னை பேருந்தில் ஏறி அமர்ந்தனர் .

கெளதம் ஜான்வியிடம் பேசியபடி வர ஜான்வியோ பேருந்து எடுத்த சிறிது நேரத்திலேயே அவன் தோளில் வாகாய் சாய்ந்து தூங்கி விட்டிருந்தாள் .தன தோளில் பாரம் கூடுவதை உணர்ந்து திரும்பியவன் தனது ஒரு கையை பிடித்தபடி ஆழ்ந்த தூக்கத்தில் லேசாய் வாயை பிளந்தபடி உறங்குபவளின் வதனத்தை கண்டு புன்னகைத்தான் .அவள் நெற்றியில் புரளும் முடியை அவள் காதின் பின் சொருகியவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து அவள் தலை மேல் தனது தலையை சாய்த்து உறங்கி விட்டான் .

இத்தனை நாள் எங்கெங்கோ அலைந்து தன் கூடு வந்து சேர்ந்த நிம்மதி இருவர் மனதையும் நிறைத்து இருந்தது .மூன்று மாதமாய் இருவரின் இமைகளையும் தழுவாத நிம்மதியான உறக்கம் இன்று இருவரையும் அன்பாக தழுவிக்கொண்டது .நேரம் செல்ல அதிகாலை முதலில் விழித்தது கெளதம் தான் .எழுந்தவன் சுற்றி இன்னும் கருமை படர்ந்து இருக்க நேரத்தை தனது கடிகாரத்தில் பார்க்க அது நான்கு நாற்பத்தி ஐந்து என்றது .

வெளியே பார்க்க சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையை பார்த்தவன் இன்னும் பதினைந்து நிமிடத்தில் பேருந்து நிலையம் வந்து விடும் என்பதை உணர்ந்தவன் தனது இடது புற தோள் பட்டை வலி எடுக்க அப்பொழுதே கவனித்தான் நேற்று இரவு உணவை கூட உண்ணாமல் தன் தோள் சாய்ந்து உறங்கியவள் இன்னும் தன தோளில் சாய்ந்தபடியே உறங்குவதை .

பேருந்தில் கசிந்த மெல்லிய இரவு விளக்கின் ஒளியின் தெரிந்த அவள் பால்முகம் கண்டு புன்னகைத்தவன் அவள் முகத்தை லேசாய் வருடியபடி மெல்லிய குரலில் அழைத்தான் "ஜானுமா "என்று அவளோ சிணுங்கியபடி அவன் கையை மேலும் இறுக்கமாய் பிடித்தவள் வாகாய் சாய்ந்து உறங்க அவனோ அவள் செய்கையில் புன்னகை விரிய அவள் கன்னத்தை தட்டியவன் "டேய்ய் கிட்ட வந்துட்டோம் டா எந்திரி "என்று கூற மெல்ல மெல்ல கண்ணை திறந்தவள் கண்ணை சுருக்கி அவன் முகத்தையே இரண்டு நொடி கூர்ந்து பார்த்தவள் தூக்கம் மொத்தமாய் விலக அப்பொழுதே சுற்றுப்புறத்தை பார்த்தாள் .

பேருந்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தவளிற்கு அப்பொழுதே நேற்றைய நினைவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் நினைவில் வர அவனின் தோளில் சாய்ந்து அப்படியே உறங்கி இருக்கிறோம் என்று அப்பொழுதே அவள் புத்திக்கு உரைத்தது .கொட்டாவி விட்டவாறு நெட்டி முறித்தவள் அவனை பார்த்து சிரித்து "குட் மார்னிங் அத்து கை ரொம்ப வலிக்குதாடா? நைட் fullaa அப்டியே தூங்கிட்டேன் போல"என்று கூற

அவனோ இல்லை என்று புன்னகையோடு தலை அசைத்தவன் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழையவும் அவளோடு தனது உடமைகளை எடுத்துக் கொண்டு இறங்கினான் .இன்னும் இருள் அந்த இடத்தை முழுவதும் சூழ்ந்து இருக்க அந்த விடிந்தும் விடியாத காலை வேளையிலும் கோயம்பேடு பேருந்து நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது .கௌதமும் ஜான்வியும் பேருந்தில் இருந்து கீழ் இறங்க ஜான்விக்கு இது வரை ஒரு முறை கூட வந்திராத சென்னை மாநகரிற்கு தன்னவனை மட்டும் நம்பி வந்தது ஒரு வித உணர்வை உடலெங்கும் பாய்ச்ச தன்னிச்சையாக கௌதமின் கரங்களோடு தனது கரத்தை கோர்த்துக் கொண்டாள் ஜான்வி .தானும் அவள் கையை தன் கையோடு இறுக்கிக் கொண்டவன் அவள் கண்களை பார்த்து புன்னகைக்க இருவரின் மோனநிலையையும் கலைத்தது ஜீவிதாவின் குரல் .

அடியே அரை அடி என்ற கத்தலுடன் ஜான்வியின் அருகில் வந்தவள் அவளை தாவி அணைத்துக் கொள்ள ஜான்வியும் தன் தோழியை அணைத்துக் கொண்டாள் .கெளதம் அவளின் பின்னே பார்க்க ஆதி அவனை தான் வெட்டவா குத்தவா என்பதை போல் முரைத்துக் கொண்டிருந்தான் .கெளதம் அவனின் பார்வையில் தலை குனிந்தவன்" அது ...ஆதி அண்ணா "என்று ஏதோ கூற வர அடுத்த நொடி கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தான் ஆதி .

தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த தோழியர் அடி விழுந்த சத்தத்தில் கௌதமின் புறம் திரும்ப ஜீவிதா என்ன தான் கௌதமின் மேல் கோபத்தில் இருந்தாலும் பொது இடத்தில் ஆதி இப்படி அடித்திருக்க வேண்டாமென்று நினைத்தவள்"ஆதி என்ன பண்றீங்க பப்ளிக் placela ?"என்று கேட்க

ஆதியோ அவள் புறம் கனலென திரும்பியவன் "நீ எதும் பேசாத ஜீவி ,இவன் பண்ண காரியத்துக்கு வேற என்ன பண்ண சொல்ற ?மூணு மாசம் இருக்கானா இல்லையா எதுவும் தெரியாது .எங்க போனான் என்ன எதுன்னு ஒண்ணுமே தெரியாம எத்தனை நாள் புலம்பி இருப்பேன் ?இவன் கிட்ட ஒரு விஷயமாச்சு இது வரைக்கும் நான் மறைச்சுருப்பேனா ?சொந்த தம்பி மாறி தான நடத்தினேன் ?ஆனா இவன் பண்ண முட்டாள் தனமான காரியத்தால் எத்தனை பேர அழ வச்சிருக்கான் இவன் இந்த மூணு மாசமா?திவ்யாலாம் டெய்லி போன் பண்ணுவா ஏதாச்சு தெருஞ்சுதா அண்ணா தெருஞ்சுதா அண்ணான்னு .நாங்க எல்லாம் என்ன செத்தா போய்ட்டோம்னு இவன் அப்டி அனாதை மாறி போய் உக்காந்துருந்தான் "என்று கத்த

கௌதமோ அவன் கையை பிடித்தவன் "அண்ணா சாரி அண்ணா "என்று கூற அவனோ இன்னொரு அரை அறைந்தவன் பின் அதே வேகத்தோடு அவனை அணைத்துக் கொண்டான் .ஜான்வியும் ஜீவிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்ள அதன் பின் நால்வரும் பேசியபடி மகிழுந்தில் பயணித்தனர் .முதலில் ஜான்வியை அவளிற்கு பார்த்திருந்த விடுதியில் இறக்கி விட்டவர்கள் அதன் பின் கௌதமை அவனிற்கென பார்த்து வைத்திருந்த மேன்ஷனில் இறக்கி விட்டனர் .

நாட்கள் அதன் போக்கில் செல்ல கெளதம் ஒரு வாரத்தில் ஜான்வியும் அவனும் இருப்பதற்கு வசதியாய் இரண்டு படுக்கை அறை கொண்ட அபார்ட்மெண்டை வாடகைக்கு பார்த்திருந்தான் .ஜான்வியும் அவனும் சேர்ந்தே அங்கு பால் காய்ச்ச அன்றே அங்கிருந்த சிறுசுகளின் தோழியாய் மாறி போனாள் ஜான்வி .

அதன் பின் அவர்கள் இருவரின் திருமண பதிவிற்கான வேலைகளும் விரைவில் முடிய அன்று காலை திருமணம் என்னும் நிலையில் ஜீவிதா மற்றும் ஆதியின் வீட்டில் அனைவரும் இவ்விருவரின் திருமணத்திற்காக கூடி இருந்தனர் .பேச மாட்டேன் என்று முரண்டு பண்ணிய திவ்யாவை விடாமல் அழைத்து பேச வைத்திருந்தான் கெளதம் .

ஜான்வியின் தாய் ,ஆதி ,பிரவீன் ,திவ்யா மற்றும் இன்னும் பல நண்பர்கள் அவர்கள் வீட்டில் நிறைந்திருக்க அங்கே கலகலப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஜான்வியையும் கௌதமையும் அனைவரும் சேர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்தனர்.ஜீவித்தாவும் இன்னும் சில தோழிகளும் சேர்ந்து ஜான்வியை ஒரு அறையில் பட்டுப்புடவையில் ஆபரணங்களோடு சேர்த்து அவளை எளிமையாய் அலங்கரித்துக் கொண்டிருந்தனர் .ஜான்வியின் தாய் அப்பொழுதே"ரெடியா ஜீவி "என்றபடி உள்ளே நுழைந்தவர் தங்க நிற பட்டுப் புடவையில் ,ஆபரணங்களுடன் சிகை அலங்காரமும் சேர்ந்து மான்விழிகளில் மை தீட்டி மணப்பெண் கோலத்தில் இருந்த தன் மகளை பார்த்து ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்று விட்டார்.

ஜான்வி அங்கிருந்த கண்ணாடியில் அவரின் பிம்பத்தை பார்த்து புன்னகைக்க அவரோ அவளின் அருகில் வந்து நெற்றியில் முத்தமிட்டவர் ஜீவிதாவிடம் திரும்பி "ஜீவி டைம் ஆச்சுமா .கெளதம் ரெடின்னு நெனைக்கிறேன் நீங்க சீக்ரம் இவளை கூட்டிட்டு முதல்ல கோவிலுக்கு போங்க நான் பின்னாடி வந்துருறேன் "என்று கூற

ஜீவிதா "சரி அம்மா' என்றவள் பின் ஏதோ கேட்க வந்து வந்து தயங்க

அதை கண்டு கொண்ட பார்வதி "என்னடா ஏதோ கேக்கணும்னு நெனைக்குற போல ?"என்று கேட்க

ஜீவிதா "என்னனு சொல்லி ஆண்ட்டி நீங்க சென்னை வந்தீங்க அங்கிள் எப்படி விட்டாரு ?"என்று கேட்க

அவரோ "அவர்கிட்ட யாரு பெர்மிஸ்ஸன் கேட்டா ?எங்க போறன்னு கேட்டாரு என் பொண்ணு கல்யாணத்துக்கு போறேன் ஆதியையும் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் "என்று இயல்பாக கூற

ஜீவிதா "எதுவும் சொல்லலையா ?"என்று கேட்க

அவரோ "வழக்கம் போல கத்துனாரு காதுலயே வாங்கிக்கலை.அவரோட வறட்டு பிடிவாதம் அர்த்தமற்ற கோபத்துக்கு எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல் மதிப்பு குடுக்க முடியல ஜீவிதா "என்று கூற அவளும் தலை அசைத்தாள் .

அதன் பின் ஜான்வியை அழைத்துக் கொண்டு அவர்கள் முன் ஒரு மகிழுந்தில் சென்று விட இங்கே கௌதமோடு ஆதியும் ஆதி சேஷனும் ப்ரவீனும் போராடிக் கொண்டிருந்தனர் .பிரவீன் "ப்ரோ பொண்ணுங்க கூட சாரிக்கு இவ்ளோ safety பின் போட்டுருக்க மாட்டாங்க ப்ரோ சுத்தி சுத்தி பதினஞ்சு பின் குத்திருக்கோம் இதுல பெல்ட் வேற விழாது ப்ரோ வாங்க ப்ரோ "என்று கூற

கௌதமோ "அவிழ்ந்துறாதுல ப்ரோ ?வேணுனா உள்ள pant போட்டுக்கவா ?"என்று கேட்க

சேஷன் "பாவா worst பண்றீங்க பாவா நீங்க "என்று கூற

ஆதி அவன் தலையிலேயே தட்டியவன் "அதான் விழாதுனு சொல்றோம்ல வாடா டைம் ஆச்சு இந்நேரம் ஜான்வி கோவிலுக்கே போயிருப்பா "என்று கூறி அவனை அழைத்து சென்றனர் .மூன்று நாட்களாக தான் அழைத்தாலும் பேசாமல் அலையவிட்டுக் கொண்டிருந்தவளைக் காணப் போகும் ஆவலில் அவனிற்கு வேட்டி நழுவுவது கூட மறந்திருந்தது .அதன் பின் அனைவரும் அங்கிருந்த விஷ்ணு கோவில் ஒன்றிற்கு சென்றவர்கள் பிரகாரத்திற்கு செல்ல அங்கே பிரகாரத்தின் முன் மணக்கோலத்தில் ஜீவிதாவுடன் சிரித்து பேசியபடி நின்றிருந்த ஜான்வியை கண்களாலே மேலிருந்து கீழ் வரை அளவெடுத்தான் கெளதம் .

ஜான்வி அப்பொழுதே அவனின் வரவை பார்த்தவள் முதல் முதலில் வேட்டி சட்டையில் கம்பீரமாய் வந்தவனை கண்டு சூப்பர் என்று ஜாடை காட்டினாள் .அதன் பின் சடங்குகள் விரைவாய் நடந்தேற கடவுளின் சன்னதியில் உற்றார் உறவினர்கள் முன் தன்னவளின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் ஜானுவை தன் உயிருடன் உறவோடு இணைத்துக்கொண்டான் ஜானுவின் அத்து .இந்த நொடிக்காக எத்தனை காலங்கள் எதிர்பார்த்து காத்திருந்தாள் ஜான்வி .கனவுகள் அனைத்தும் நிஜமாக ஆனந்த கண்ணீருடன் அவனை நோக்கியவள் அவன் எதிர்பாரா விதமாய் அவன் சட்டை collorai பற்றி இழுத்தவள் எம்பி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

அவள் செய்கையில் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓஓ என்று குரல் கொடுக்க கௌதமோ வெட்கத்தை மறைக்க சிரித்தவாறு கழுத்தை அழுந்த தேய்த்தவன் தானும் தன்னவளின் நெற்றியில் முத்தமிட்டான் .அதன் பின் பிரகாரத்தை சுற்றி முடித்தவர்க கௌதமின் தந்தை காலிலும் ஜான்வியின் தாயார் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர் .அதன் பின் நேரே ரெஜிசஸ்டர் ஆபீஸ் சென்றவர்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர் .

எல்லாம் முடிந்து இருவரும் மகிழுந்தில் அருகருகில் அமர கௌதமின் கரங்களோடு தனது கரங்களை கோர்த்துக் கொண்ட ஜான்வி அவன் தோளில் இன்று உரிமையாய் சாய்ந்து கொண்டாள் .தோழனா என் காதலனா என்று அவள் தேடிய தேடலின் விடையாய் அவள் கணவனாய் அவளின் தலையை தன் தோளிலும் அவளிற்கான காதலை மனதிலும் தேக்கி அமர்ந்திருந்தான் கெளதம் .

கதை முடியல guys epilogue இருக்கு

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro