அதிகாலை முடிவில்
அரைத் துயிலதனில்
அலையெனக் கைவீசி
அங்கும் இங்கும் தேடி
கட்டிலின் விளிம்பில்
எனைக் கண்டுபிடித்தே
கைபிடித்திழுத்து என்
கார்குழலதை ஒதுக்கி
என் முகமதை அவன்
மார்பில் பதுக்கி
கட்டியணைத்தே
காதல் வெப்பமூட்டி
குட்டியாய் ஒரு தூக்கமிட
சாளரத்தின் சந்தில்
எட்டிப் பார்க்கும்
இளங் கனலியே , உனைத்
தட்டிக் கேட்பாரில்லை
என்ற துணிவில் உன்
சுட்டிக் கதிர்களால்
என்னவனை நீயும்
தொட்டுத் துயில்தான்
கலைப்பாயோ ? எனைத்
திட்டவிடாமல் நீ
திரும்பப் போய்விடேன் ...
- வாணிகா நவின்
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro