கலைந்து செல் கனலியே ..

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அதிகாலை முடிவில்
அரைத் துயிலதனில்

அலையெனக் கைவீசி
அங்கும் இங்கும் தேடி

கட்டிலின் விளிம்பில்
எனைக் கண்டுபிடித்தே

கைபிடித்திழுத்து என்
கார்குழலதை ஒதுக்கி

என் முகமதை அவன்
மார்பில் பதுக்கி

கட்டியணைத்தே
காதல் வெப்பமூட்டி

குட்டியாய் ஒரு தூக்கமிட
சாளரத்தின் சந்தில்

எட்டிப் பார்க்கும்
இளங் கனலியே , உனைத்

தட்டிக் கேட்பாரில்லை
என்ற துணிவில் உன்

சுட்டிக் கதிர்களால்
என்னவனை நீயும்

தொட்டுத் துயில்தான்
கலைப்பாயோ ? எனைத்

திட்டவிடாமல் நீ
திரும்பப் போய்விடேன் ...

- வாணிகா நவின்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro