26

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்பு அவனது காதலை அனைவரின் முன்னிலையில் கூறினான் ஆனால் அதையும் நடிப்பென நினைத்த எழில் " போதும் சும்மா எல்லாரும் நடிக்க வேண்டா... நடுச்ச வரைக்கும் போதும் " என்று தன் தந்தையிடம் " அப்பா நா உங்க கூடவே வர என்ன கூப்ட்டுட்டு போயிருங்க ப்ளீஸ்.. " என்க..

அன்புவோ அவளிடம் " நா ஒன்னும் நடிக்கல... நெஜமாவே உன்ன ரொம்ப புடிச்சுருக்கு... புடிக்காமதான் கல்யாணம் பண்ண ஆனா இப்போ ரொம்ப ரொம்ப புடுச்சுருக்கு..." என்க..

அவளோ தாத்தாவிடம் " தாத்தா ஊருக்கு போகலாம் தாத்தா... இனி இங்க இருக்க வேண்டா... நம்ம கிட்ட பணம் வேணும்னா இல்லாம இருக்கலாம் ஆனா நமக்கு ரோஷம் இருக்கு குணாமாமா இப்படி ஒரு வார்த்த கேட்டதுக்கு அப்றமும் இங்க இருந்தா நமக்கு தான் அசிங்கம் " என்று...

குணசேகரனைப் பார்த்து " நான் ஒன்னு நாடகம் போட்டோ, இல்ல உங்க சொத்துக்காகவோ உங்க பையன கல்யாணம் பண்ணல... எனக்கு உங்க சொத்தும் வேண்டா உங்க பையனும் வேண்டா... நல்ல வசதியான பெண்ணா பாத்து அன்புக்கு கட்டி வெச்சுருங்க... " என்க...

எழிலின் தாய் " எழில் அன்புதான் உன்ன புடுச்சுருக்குனு சொல்லரான்ல அப்றம் எதுக்கு இப்போ தேவை இல்லாம பேசுற... " என்க...

எழில் " இல்ல மா இது சரியா வராது ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவனும் அவங்க அப்பா மாதிரி கேள்வி கேப்பான்... வேண்டா " என்க...

தாத்தா " அது மாமா ஏதோ கோவத்துல சொல்லீருப்பாங்க மா.. " என்றதற்குள்..

அன்புவின் தந்தை " நாடகம் போட்டு கல்யாணம் பண்ணி இப்போ ஒரு மாசத்துல என் பையன இப்படி மயக்கி வெச்சுருக்கா பாரு... " என்று அன்புவிடம் திரும்பி " டேய் இவ என்ன டா இவளவிட அழகா இன்னொரு பெண்ண நான் உனக்கு கட்டி வெக்கறன் டா.. " என்க...

எழிலின் தந்தை " அப்போ என் பொண்ணு வாழ்க்கைக்கு யாரு பதில் சொல்லுவா... " என்க...

அன்பு " இது எங்க புருசன் , பொண்டாட்டி பிரச்சண இதுல யாரும் தலையிட வேண்டா " என்று எழிலின் கரம் பற்றி " உன்கிட்ட பத்து நிமிசம் தனியா பேசனும் " , என்று அவனது அறைக்கு இழுத்து சென்றான்...

உள்ளே சென்றதும் கதவை தாளிட்டு அவளிடம் " என்ன லூசூ மாதிரி பேசீட்டு இருக்க.. " என்க..

அவளோ " எதுக்கு வெளிய பொய் சொன்ன... உனக்கு இது நல்ல சேன்ஸ் பேசாம உண்மைய சொல்லீட்டு டிவர்ஸ் பண்ணிர வேண்டியதுதானு... அதான் இப்போ பஞ்சாயத்து வந்துருச்சுல்ல இதுலையே எல்லாத்தையும் முடுச்சுக்கலாம்ல இப்போ பொய் சொல்லி அப்றம் அதுக்கும் பெரிய பஞ்சாயத்து வரும் " என்க.

அவனோ " நா ஒன்னும் பொய் சொல்லல நெஜமா உன்ன லவ் பண்ற.. அதான் அன்னைக்கு கிஸ் பண்ண... " என்க...

அவளோ முழிக்க அவனோ " எங்க அம்மா பொய் தான் சொல்லீருக்காங்க ஆனா எனக்கு கோவம் வரல.. ஏன்னா அந்த பொய்னால தான் நீ எனக்கு கெடச்ச.. ஐ லவ் யூ எழில்..." என்க...

அவளோ " இல்ல அன்பு இது சரியா வராது... வேண்டா..." என்க...

அவனோ ஏன் என்று பார்க்க அவள் " உங்க அப்பா என்ன எவ்லோ கேவலமா பேசுறாரு...... அப்றம் உனக்கு வந்துருக்கறது லவ்லா இல்ல,, வைஃப்னு ஒரு அபெக்சன்தான். கல்யாணம் பண்ணியாச்சு லவ் பண்ணிதானு ஆகனும்னு நீ நெனச்சு வந்ததுதான்.. ஒரு டூ மன்த்ஸ்ல உனக்கு என் ஞாபகமே இருக்காது... இது லவ் இல்ல.." என்க...

அவனோ கோவமாக " நா ஒன்னும்  சின்ன பையன் இல்ல அபெக்சனுக்கும் லவ்க்கும் வித்தியாசம் தெரியாம இருக்க... இதோ இந்த கண்ணுதான் டி இத டெய்லியும் பாக்கனும்... எல்லாரு கிட்டையும் நீ பேசி என்கிட்ட மட்டும் பேசாம போகும்போது எப்படி வலிக்கும் தெரியுமா... உன்ன என்கூட பேசவைக்க எவ்லோ ப்ளான் பண்ணுவ  தெரியுமா..." என்க...

அவளோ " அதுதான் அன்பு நா உன்கூடவே இருந்து உன்கிட்ட பேசம இருக்கனு உனக்கு தோனீருக்கு அத தான் நீ லவ்னு நெனைக்கற.. இல்ல வேண்டா இது செட் ஆகாது.. நம்ம பிருஞ்சரலாம்... " என்று கூற

அவனோ அவளிடம் எதுவும் பேசாமல் அணைத்து இதழ்களில் முத்தமிட.. அவளோ அவனை தள்ள அவன் மேலும் அழுத்தமாக முத்தமிட அவளும் அமைதியானாள்... நிமிர்ந்து அவளது கண்களைப் பார்த்து " என்ன நடந்தாலும் உன்னவிட்டு நா போகமாட்ட... நா உன்ன லவ் பண்ற டி உனக்கு புரியுதா நா சொல்லறது.. நீ இல்லாம நா இல்ல..." என்க...

அவளோ " இல்ல அன்பு இது ஜஸ்ட் அபெக்சன்தான்.... லவ் இல்ல... அன்ட் நா உன்ன லவ் பண்ணல சாரி " என்க..

அவனோ " ம்ம்ம்ம் டைம் எடுத்துக்கோ நா வைட் பண்ற... " என்க..

அவளோ மனதிற்க்குள் " டேய் நான் தா டா இவ்லோ நாள் வைட் பண்ண இந்த வார்த்தைய கேக்க... எனக்கு இது போதும்... ஒருவேல நாளைக்கு நீயும் உங்க அப்பா மாதிரி என்ன பேசீட்டா நான் செத்துருவன் டா.. கண்டிப்பா நீயும் கோவம் வந்தா அப்படி தானு பேசுவ.... அதுவும் நான் உன்ன லவ் பண்ண விஷயம் தெருஞ்சா மணிகூட நானும் ட்ராமா போட்டனுதான் நீயும் சொல்லுவ... இல்ல அன்பு என்னால அத தாங்கவே முடியாது.. எனக்கு இந்த வார்த்தை போதும் அப்றம் நீ கட்டுன தாலி போதும்..." என எண்ணினாள்...

அவனோ " யோசுச்சாச்சா ஓகே வா... சரி லவ் யூ சொல்லு " என்க...

அவளோ " ஹலோ நா உன்ன லவ் பண்ணல.. நீ என்ன லவ் யூ சொல்ல சொல்ற.. மாட்ட.." என்க..

அவனோ " உனக்கும் என்ன புடிக்கும்னு தெரியும்.. லவ் இருக்குனும் தெரியும்.." அவள் எப்படி என்று பார்க்க " லவ் இல்லாம தான் நான் கிஸ் பண்ணும் போது அமைதியா இருந்தயா... அது எப்டி சும்மா தள்ளிவிட்ற மாதிரி நடிப்பு... உனக்கு புடிக்கலனா என்ன அப்பீருப்ப... ம்ம்ம்ம் மேடம்க்கும் என்மேல லவ் இருக்கு.." என்க..

அவளோ " இல்லையே நான்லா உன்ன லவ்வே பண்ணல.. நா எப்போவாச்சும் உன்கிட்ட அந்த மாதிரி பேசீருக்கனா இல்லல.. " என்க...

அவனோ " ஹோ... லவ் இல்லாமதான் இன்னும் என்ன இப்படி புடுச்சுகிட்டே பேசறையா எழில்..." என்க ... அப்பொழுதுதான் பார்த்தாள் அவனது சட்டையில் இடது கை பகுதியை அவள் பிடித்திருப்பதை...

வெடுக்கென்று கையை எடுத்தவள் " இல்ல அன்பு லவ்லா சுத்தமா இல்ல.. நீ தேவை இல்லாம ம்மேஜின் பண்ணாத... நா எங்க அம்மா, அப்பா கூட போற .. கொஞ்ச நாள்ள உனக்கு என் ஞாபகமே இருக்காது... அப்றம் நீ சந்தோசமா இரு.." என்க..

அவனோ " சரி கொஞ்ச நாள் கழுச்சும் நான் மேடம்ம நெனச்சுகிட்டே இருந்தா... உன் ஞாபகமா இருந்தா..." என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க...

அவளோ " இல்ல பா உனக்கு ஞாபகம் இருக்காது..." என்க.. அவனோ " இருந்தா..." என்க ..

இருக்காது.... என்று அவள் அழுத்தமாக கூற... அவனோ " நீ இப்போ உன் அம்மா, அப்பாகூட போ... உனக்கு எப்போ லவ் வருதோ அப்போ இங்க வா.." என்க..

அவளோ மனதிற்க்குள் " லவ் இல்லாம இருந்தா நீ சொல்லறது சரி ... ஆனா நான் செட் ஆகாதுனு போற அப்படி வரமாட்ட இதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது...  " என எண்ண...

அவனோ " நீயா என்கிட்ட பேசற வரைக்கும் நா உன்ன டிஸ்டப் பண்ணமாட்ட... உனக்கா தேணும்போது பேசு... நா வைட் பண்ற... " என்க... அவளும் சரி என்று வெளியில் சென்றாள்...

அங்கு சென்றவள் ஊருக்குச் செல்ல தயாராக அவளுடன் அனைவரும் செல்ல ஆயத்தமானனர்.. மூன்று அண்ணன்களுக்கும் மணியின் மீது இருந்த நம்பிக்கை உடைந்தது...

அன்பு தாத்தாவை தனியாக அழைத்து " தாத்தா எழில் கொஞ்ச நாள் ஊருல இருக்கட்டும் .. அவளும் என்ன லவ் பண்றா தாத்தா என்னவிட்டு ரொம்ப நாள் பிருஞ்சு இருக்க மாட்டா... நீங்க எதுக்கும் பாத்துக்கோங்க அடிக்கடி அப்டேட் குடுத்துட்டே இருங்க.. " என்க..

தாத்தாவும் சரி என்றார்.. சிலபல திட்டங்களையும் இருவரும் தீட்டினர்... எழில் இனியா, இசையிடம் கூறிவிட்டு செல்ல அன்புவிடம் எதுவும் கூறவில்லை...

மகாலட்சுமியின் திட்டத்தின் படி அழகாக அண்ணன் தங்கையை பிரித்தார்... இரு குடும்பத்திற்க்கும் பேச்சு வார்த்தையின்றி இருந்தது...

நிறுவனத்தில் ரவி அன்புவுடன் மிகவும் நல்லவன் போல் நடித்துக் கொண்டு இருந்தான்...  கௌதமோ இனியா, இசையிடம் நல்லவன் போல் நடித்துக் கொண்டு இருந்தான்... எழில் கிராமத்தில் தனியாக இருக்க மனதில் கவலை இருந்ததால் பெங்களூரில் " டிசைனிங் கோர்ஸ்" படிப்பதற்க்காக...

அங்கு விடுதியில் தங்கி படித்தாள்... அன்பு கூறியவாறே அவளிற்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை.. இசை, இனியாவிடம் அன்பு அனைத்தையும் கூறினான் ஆனால் இனியாவிற்கோ எழிலிடம் சத்தியம் செய்ததால் எதுவும் வெளியில் கூற முடியாத நிலை...

தினமும் இனியா, இசையுடன் வீடியோ கால் செய்து எழில் பேசுவாள்,, இனியாவின் மூலமாக அன்புவைப் பற்றி தெரிந்து கொண்டாள்... அதே போல் இசையிடம் அன்பு கேட்டு தெரிந்து கொண்டான்...

காலம் யாருக்கும் காத்திருக்காமல் ஓடிக்கொண்டே இருந்தது...

6 மாதங்களுக்கு பிறகு....

இனியாவிற்கு ஏழாவது மாதம் வளைகாப்பு விழாவிற்க்காக இசையும், அன்புவும் இரு குடும்பத்தையும் கஷ்டப்பட்டு ஒருவாறு சமாதானம் செய்து கிராமத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...

அண்ணன் தங்கைக்கு இடையில் பேச்சு வார்த்தை இல்லாததால் விழா ஏற்பாடு கலை இழந்து நடைபெற்றது...

விடிந்தால் விழா என்னும் நிலையில் எழில் பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வந்தாள்... உள்ளே நுழைந்தவளது கண்கள் அவனையே தேட அவனோ தென்படவில்லை... சோகமாக இனியாவிடம் சென்று கேட்க

இனியா " அண்ணனுக்கு முக்கியமான ஒரு வேலை டி,,, மதியம் தான் போச்சு,,, நீ போயி ரெஸ்ட் எடு டி... நாளைக்கு நைட் அண்ணா வந்துரும் " என்க..

அவளிடம் சாதாரணமா சரி என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றவள் கதவை சாத்திவிட்டு அழுகத்தொடங்கினாள்...

Next part la pakkala ta ta 👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro