பகுதி 32

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பகுதி 32

வைபவின் கைபிடித்து பார்க்கிங் ஏரியாவிற்கு வந்த நிக்கிலிடம் வைபவ் "மச்சி நீதான் கிளம்புறன்னா என்னையும் எதுக்கு கிளம்ப சொன்ன நான்தான் 2ஹவர்ஸ் பர்மிஷன் போட்டுருக்கேன்ல.... உன்னைதானே உன் மேனேஜர் அவசர வேலையா கூப்பிட்டார் என்னை ஏன்டா இழுத்துக்கிட்டு வந்த" என்றான்.

அவனை ஏற இறங்க ஒரு லுக் விட்ட நிகில் "பேசிட்டியா.... பேசி முடிச்சிட்டியா..... அங்க நடக்கறதுல்லாம் பார்த்தல்ல இது பெரிய சமாச்சாரம் போல இருக்கு. இது எப்படியும் பெரிய இஷ்யூவா ஆகிடுச்சி இதுல சம்மந்தபட்டுருக்கிறது பெரிய ஆள் போல இருக்கு "என்றான்.

"அதனால என்னடா அவன் எவ்வளவு பெரிய ஆளா வேனும்னா இருக்கட்டும். நமக்கும் அவங்களுக்கும் என்ன இருக்கு ஒரு மனிதாபிமான முறையிலதானே ஹெல்ப் பண்றோம்". வைபவ்

"மாப்ள..". என்ற பேச வந்தவனை 'நீ இவ்வளவு சுயநலமா இருப்பியா மச்சி" என்றான் வருத்தமாக.

"இல்லடா இது பயம் தான்டா நீரோடை போல தெளிவா போற உன் லைப்ல ஏதாவது ஆச்சுன்னா? அதுக்குதான்டா பயப்புடுறேன். இந்த அவசர உலகத்துல நாம நல்லதுக்குன்னே போனாலும் நமக்கு ஏதாவதுன்னா இந்த சமூகம் திரும்பி பார்க்காதுடா".

"ம்..... கரெக்ட் மச்சி... பட் எனக்கு ஏதாவதுன்னலும் இப்படித்தான் எங்க அம்மாவையும் விட்டுடுவியா" என்றான் உணர்ச்சி மாறாக் குரலில்.

வைபவ் கூறியதில் வெடுக்கென திரும்பியவன். அவனை பிடித்திருந்த கையை விட்டுவிட்டு பைக் கீயை எடுத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கோபமாக கிளம்பியவனை" நிகில்... நிகில்" என்று அழைத்தும் திரும்பி பார்க்காமல் வேகமாக பறந்தான்.

தாடையை அழுந்த தேய்த்து 'ரொம்பதான்டா கோவம் வருது... அப்புறமா கவனிச்சிக்கிறேன் உன்னை' என்றவனது மனதில் நண்பனை நினைக்க சிறு புன்னகை பிறந்தது.

"சே !!!!! அந்த பொண்ணுக்கு ஏதோன்னு சொன்னாங்களே என்ற நினைவு வர மறுபடியும் மருத்துவமனைக்குள் சென்று வைஷாலியின் அறைக்கதவை திறந்தான். அங்கு கண்களில் நீருடன் ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் பிதற்றியவள் அவளுக்கும் அவளின் தோழிக்கும் நடந்ததை கூறிக்கொண்டிருந்தாள் . கடைசியாக அவள் ஏன் என்னை காப்பத்தினிங்க என்று முகத்தை மூடி அழுதபோது ஏதோ ஒன்று அவன் நெஞ்சை பிழிந்தது. அவளின் கண்ணீர் அவன் மனதை உறுத்த அவளின் விழிகளில் வழிந்த நீரை காண பொறுக்காமல் கதவை திறந்து வெளியே வந்து இருந்தான் வைபவ்.

வைஷாலி கூற கூற அத்தனையும் கேட்ட சிவாவுக்கும் கௌஷிக்கிற்க்கும் இதயம் உலைகளமாக கொதித்துக்கொண்டிருந்தது. அவனை நேரில் கண்டால் அடித்தே கொல்லும் அளவிற்கு வெறியே ஏற்பட்டது இருவருக்கும். தன் காதல் மனைவியினை பார்த்தும் , தாய் இல்லமால் தன்னை வளர்த்து தந்தையையும் பறிகொடுத்து நிராதரவாய் நிற்க்கும் வைஷாலியை பார்த்தும் ஆத்திரத்தில் கையை ஓங்கி பக்கத்தில் இருந்த சுவற்றில் குற்றியவன் வேகமாக விறுவிறு என்று அறையை விட்டு வெளியேறினான். அவனை பின் தொடர்ந்து வெளியேறிய சிவா அங்கு ரவுண்ட்ஸில் இருந்த நர்சிடம் வைஷாலியை பார்த்துக்கொள்ளுமாறு கூறினான்.

வெளியே வந்தவர்களின் எதிரே ஸ்வேதாவின் தந்தையும் மற்றும் விஜயபாஸ்கரின் நண்பருமான ராஜரத்தினம் வந்தார்.

நேராக கௌஷிக்கை கண்டவர் அவளை பற்றி ஏதும் தோண்டி துருவாமல் அவனின் மனநிலமையை கருத்தில் கொண்டு "வைஷூ எப்படி இருக்கா" என்பதை மட்டும் விசாரித்தார். அவரின் கைகளை இருக்கமாக பற்றிக்கொண்டு "இன்னும் கான்சியஸ் வரல அங்கிள்". என்றான் கவலையாக.

தலையை இடவலமாக அசைத்தவர்" ம்..." என்று பெருமூச்சி விட்டு " உன் அப்பாகிட்ட இப்போதான் பேசிட்டு வந்தேன்..... அங்க மாதுரி பெரிய ரகளையே நடத்தி வைச்சிடுச்சு... அதான் அவனால உனக்கு ஆறுதலா உன் கூட இருக்க முடியலை" என்றார் வருத்தமாக.

"அம்மாவா!! அம்மா என்ன பண்ணாங்க அங்கிள்". அவன் அதிர்வில் சுதாரித்தவர் என்ன பண்ணுவாங்க?!? உங்க அம்மா தாம் தூம்முன்னு குதிப்பாங்க... சரி அதை விடு இப்போ ஆகவேண்டியத பாரு" என்று அவனின் சிந்தனையை திசை திருப்பினார்.

"நீங்க இங்க இருங்க நான் இப்போ வந்துடுறேன்". என்று செல்ல இருந்தவனை நிறுத்தியவர் "என்னப்பா ஏன் இவ்வளவு அவசரமா எங்க போற"என்றார்.

"அது... அது..." என்று வர்த்தைகள் வர தத்தளிக்க கலங்கயபடி திரும்பினான். அந்த இடத்தில் நின்றிருந்த வைபவை பார்க்க "நீங்க... நீங்க அந்த இடத்தில இந்த செல்ல மட்டும் தான் பார்த்திங்களா இல்வ வேற ஏதாச்சும் இருந்ததா" என்றான் கேள்வியாக.

அப்போது நிக்கிலுக்கு கிடைத்த பென்டிரைவ் நியாபகம் வர " ம் ஆமா கௌஷிக் ஒரு பிளாக் கலர் பென்டிரைவ் கிடைச்சது . பட் எனக்கு டைம் இல்லாத காரணத்தால அதுல என்ன இருக்குன்னு என்னால நோட்பண்ண முடியல என் கிட்ட சேப்டியாதான் இருக்கு. இருங்க எடுத்துட்டு வரேன்". என்று கிளம்ப "இருங்க வைபவ் நானும் வரேன்". என்று கூறி அவனுடன் சென்றான்.
______________________________________________

"அண்ணே நான் தொழிலுக்கு வந்து இது என்னோட முதல் கொலை.... "என்று குஷியாக கூறிக்கொண்டே " நம்ம பாஸ் எந்த பொண்ண அண்ணே போட சொன்னாரு " என்றான் ஒருவன்.

"எந்த பொண்ணா இருந்த என்னடா... அவளுங்க ரெண்டுபேராலதான் இன்னைக்கு தம்பிக்கிட்ட நல்ல வாங்கி கட்டிக்கிட்டேன். அவங்களாலல தம்பிக்கு தொந்தரவா இருக்கும்போது ரெண்டுபேரையும் போட வேண்டியதுதான்" என்றான் மற்றோருவன்.

"சரி சரி இந்த இந்த வார்ட்பாய் டிரஸ்ஸால நம்மல யாருக்கும் அடையாளமே தெரியாது.... இல்லண்ணே????"

"ஆமா, ஆமா இந்தா இந்த மாஸ்க மாட்டிக்க கேமரால நம்ம முகம் தெரிஞ்சிட போகுது".

"நீ ரோம்ப புத்திசாலிண்ணே உனக்கு எல்லாம் விவரமா தெரிஞ்சிருக்கே!!".

அவன் கூறியதற்கு மீசையை முறுக்கி விட்டவன் "அண்ண பலத்துலத்துலயும் பெரியவன்தான்டா" என்றான்.

"ஏதோ எவிடன்ஸ் எவிடன்ஸ்னு சொன்னாரே என்ன அண்ணே".

"அதுலதான்டா போதபொருள் கடத்தலோட லிங்குல இருக்க ஆளுங்க பேரு அப்புறம்" சற்று ரகசியமாக சுற்றும் முற்றும் பார்த்து அவன் பக்கத்தில் சென்று "கருப்பு பணத்தை கொடுத்து வைச்சு கொடுக்கல் வாங்கல் வச்சிக்கிட்ட பெரும்புள்ளிகளோட பேரு இருக்குடா". என்றான்.

"அண்ணே உனக்கு எப்படிண்ணே எல்லா விவரமும் தெரிஞ்சி இருக்கு"

"ஹா... ஹா.... அண்ணண பாத்து கத்துக்கோ எல்லாத்தையும். அதுதான்டா நான்". என்று அவன் பிரதாபத்தை அள்ளி விசியபடி இருந்தான்.

சரி ,சரி வா வந்த வேலைய பாப்போம் என்று அறைக்குள் நுழைந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வைஷாலியின் முகத்தை தலையனையால் அமுக்க, காலை ஒருவன் பிடித்துக்கொண்டான் டியூட்டி நர்ஸ் இன்ஜக்ஷன் செலுத்த அறைக்குள் நுழைய இருவரையும் பார்த்துவிட்டு கத்த ஆரம்பித்தார்.

கத்தி முனையில் நர்சினை மிரட்டி தாங்கள் வந்த வேலையை நிறைவேற்றி கொண்டிருக்க பென்டிரைவை எடுத்தவர்கள் அவளிடம் காட்ட அறைக்குள் நுழைய இங்கு நடந்திருந்த சம்பவங்களை பார்த்ததும் உடனே சுதாரித்த கௌஷிக்கும் வைபவும் ஆளுக்கு ஒருவராக பிடித்து அவர்களை வீழ்த்த போராடினர் நர்ஸ் வெளியே சென்று கத்த அனைவரும் வந்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டனர்.

ஏற்கனவே கரண் நண்பனிடத்தில் தொலைபேசியில் கூறியதில் ஏசிபியின் உதவியுடன் நடந்த விஷயங்களை கூற அவர்களை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்து உண்மைகளை அறிந்தனர்.
_____________________________________________"டேய் முட்டாள் என்ன நினச்சிகிட்டு இருக்க உன் மனசுல..... என்னை, என் சாம்ராஜியத்தை, அழிக்க வந்திருங்கியா!?!?.... உன்னை". என்று கண்கள் சிவக்க எதிரில் நின்றிருந்த மகனை பளார் என்று கன்னத்தில் அறைந்தார்.

கண்னத்தில் கை வைத்தபடியே "டேட் "என்று பேச எழுந்தவன்.

"அந்த மினிஸ்டர் பொண்ணதானேடா பாத்து வைச்சேன் . கண்டாறவி உனக்கு ஏன்டா இப்படி மைண்ட் போச்சி... சரி தொட்ட அதோட விட வேண்டியதுதானே ஏன்டா அவள அங்க வர வைச்ச உன்னால எவ்வளவு பெரிய ஆபத்துல மாட்டிக்கிட்டோம் தெரியுமா?? "

"அவகிட்ட பென்டிரைவ் கிடைச்சி இருக்கு அதுல இருக்க டீடெய்ல்ஸ்ல வெளிய தெரிஞ்சா எவ்வளவு பெரிய ஆளுங்கலெல்லாம் மாட்டுவாங்க!!! இதுஎல்லாம் தெரியாம வயசு கோலாறுல ஆடிகிட்டு இருக்க!?!?."

"அவளை போட்டுட்டியான்னு கேட்டேன் அப்பவே போட்டேன்னு சொன்னவன் எப்படிடா உயிரோட இருக்கா அதுவும் பேப்பர்ல நீயூஸ் வேற வந்திருக்கு."

"அது வந்து டேட்...." . என்று இழுத்தவன் தந்தையின் கனல் முகத்தை கண்டு "அவ கூடதான் நான் படிச்சேன் அவளால காலேஜ்ல எனக்கு ரொம்ப அவமானம் ஆகிடுச்சி..... அதுவும் இல்லாமா நீயெல்லாம் ஒரு ஆம்பளையான்னு கேக்குற அளவுக்கு கொண்டு வந்தா வைஷ்ணவி.... வைஷாலி கிட்ட என்னை நெருங்ககூட விடல அந்த திமிர் பிடிச்ச வைஷ்ணவி.... அப்போவே நான் அவளை ஏதாவது செய்யனும்னு நினைச்சேன்... ஆன அதுக்கு சந்தர்ப்பம் அமையல!! எதிர்பாரத விதமா வைஷாலி நம்ம கம்பெனிலேயே நான் உங்க பையன்னு தெரியாம இங்க வேலைக்கு சேர்ந்தா... அவள பார்த்ததும்... என்று முகத்தை தொங்க விட்டவன் இவ்வளவு தூரம் சொல்லிட்ட இதையும் சொல்லு என்று விமலின் தந்தை கூற சிறிது நேர இடைவேளைவிட்டு அப்புறம் "டேட் வைஷாலிய இங்க வர வெச்சேன் அவளை தேடிக்கிட்டு அந்த வைஷ்ணவியும் வந்தா".

" அந்த திமிர் பிடிச்சவள பார்த்ததும் என்னோட வெறி அதிகமாகிடுச்சி... என்னை காலேஜ்ல அவமானபட வைச்சவ நல்ல இடத்துல வாழறாலாம் மும்பைல என் பிரண்ட் மூலமா கேள்விபட்டேன். இப்போ என் கைல மாட்டி இருக்கவே அவளோட மானத்தை வாங்கி அவளை வாழ முடியாத அளவுக்கு பண்ணனுமுன்னு நினைச்சேன். அதனால அவளை நாசமாக்கி அவளோட பேரு கெடுக்கனும், இந்த ஊருக்குள்ளே அவ தலை நிமிரதாபடி செய்யனுமுன்னு இப்படி பண்ணேன். பென்டிரைவ் அவளுங்ககிட்ட சிக்கிக்கவும் நம்ம ஆளு மூலமா அவளை லாரில தூக்கிடசொன்னேன் சே..... உயிபோல பொழச்சிட்டா அவ மண்புழ போல டேட் வெட்ட வெட்ட உருவாகுறா . அவளை....." என்று ஆத்திரம் மேலிட பேசியவனை ஒரு குரல் கலைத்தது.

என்னடா பண்ணுவ அவளை .... என்ன பண்ணுவ... உன்னையெல்லாம் வெளியே விடுறதே தப்புடா என்று எகிறி மூக்கில் ரத்தம் வழியும் அளவிற்கு குத்து விட்டான் கௌஷிக்.

ஏய்...... யார்டா நீ? எதுக்கு இங்க வந்து என் பையனை அடிக்கிற? நீ எப்படி உள்ள வந்த? டேய் எங்கடா போனிங்க? ...... வீடு திறந்திருந்த உள்ள நுழைஞ்சிடுவியா நாய் மாதிரி என்று அவேசமாக கத்த

"யுவர் அன்டர் அரஸ்ட் மிஸ்டர் வேதமூர்த்தி" என்று ஏசிபியின் கம்பிரக்குரல் வந்தது.

"அரஸ்ட்டா!!!! எதுக்கு? ஏன்? நான் யார் தெரியுமா? ஒரு பிஸ்னஸ் மேன் எதுக்கு என்ன காரணத்துக்கு அரஸ்ட் பண்ணுவிங்க?? "என்று எதிர் கேள்வி கேட்க.

"அதுக்கு ஆதாரம் இருக்கு மிஸ்ட்டர் வேதமூர்த்தி... அதுவுமில்லாம உங்க மகன் ஆஸ்பிட்டல்ல வைச்சி அவங்க ரெண்டு பேரையும் கொலை செய்ய ஆளை அனுப்பி இருக்கான். இதுக்கு அந்த கேடுகேட்ட இன்ஸ்பெக்டரும் உடந்தை . எல்லாரையும் அரஸ்ட் பண்ணியாச்சி இப்போ நடக்குறிங்களா... இல்லை இன்னும் அடுக்கடுக்கி சொல்லவா... என்று ஏசிபியின் குரல் மேலோங்க தலைகுனிந்தபடி இருந்த மகனை பார்வையால் எரித்தவர் "என் லாயருக்கு ஒரு போன் பண்ணனும் என்றார்.

"ஒரு மண்ணும் பண்ணமுடியாது எதுவா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு போய் பேசலாம் நடங்க என்று கை விலங்கு மாட்ட காவல் துறையினரால் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டனர்.

"தேங்கஸ் சார்" என்றவனது குரல் கரகரத்து கூற "நீ என் பிரண்ட் கரணோட தம்பி அவனுக்காக வந்தாலும் இந்த கும்பல பிடிக்க காரணமா இருந்த உனக்குதான் தேங்க்ஸ் சொல்லனும். இவனுங்க செய்துகிட்டு இருக்க இல்லீகல் பிஸ்னஸ்ஸால நம்ம இளைஞர்கள் எல்தனையோ பேரோட வாழ்க்கை பறிபோகுது . இவனுங்களெல்லாம் நாட்டுக்கு பெருத்த நஷ்டம் என்னை கேட்டா இவனுங்கள ஆயூசுக்கும் வெளியே வராதபடி உள்ளயே வைக்கனும் . இல்லை அரபுநாடுபோல நடுரோட்ல வெச்சிசுடனும்" என்றார் கோபம் கொப்பளிக்க. "நீ உன் மனைவியபாரு இந்த நீயூஸ் வெளிவந்த பத்திரிக்கை ஆபீஸ்ல இதை போட்டவனோட முட்டிய பேக்கனும் அம்போதான் எது போலி எது உண்மைன்னு தெரிஞ்சபிறகு போடுவானுங்க. ஆங் இந்த நீயூசுக்கு தவறானதுன்னும் அதுக்கு இவனுங்களோட இல்லீகல் பிஸ்னஸ் காரணமின்னும் போட சொல்லலாம்" என்றார் ஏசிபி.

"சார் வைஷாலியபத்தி நீயூஸ் எதுவும் வேண்டாம் சார் பீளிஸ்" என்று இரு கரம் கூப்பியவனின் கரங்களை கிழே இறக்கி விட்டவர் ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்கும் அளவுக்கு இருக்க எதுவும் நான் மீடியாவுக்கு சொல்லல என்று தோளை தட்டினார்.

______________________________________________

"சுனோ ஜி இப்போ என் பையன நான் பாத்தே ஆகனும்"

அவன இப்போ பாத்து என்ன பண்ண போற"

"இப்போ வரிங்களா என் கூட இல்லை நான் மட்டும் போகட்டுமா" என்றார் எழுந்து அமர்ந்து.

"என்ன மாதுரி இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு போற"

"இப்போ வரிங்களா இல்லை....." என்று எழுந்து நீற்க.

"ஆனா ஒரு பொம்பளைக்கு இவ்வளவு அவசரம் ஆகாது. அங்க நடந்தத பத்தி நம்ம பையன் நம்மகிட்ட எதுவும் பேசல அதுக்குள்ள ஏன் அவசரபடுற".

"அவன் எப்படி பேசுவான் அதான் என் புள்ள நொந்து போய் இருப்பான்....நம்மகிட்ட எப்படி பேசரதுன்னு கலங்கி இருப்பான்.... இப்படி ஒரு நியூஸ் வந்து என் புள்ளைய நாலு பேர் முன்னாடி தலை குனிய வைச்சிட்டாளே உங்க ஒழுக்கங்கெட்ட சின்ன மருமக...". என்றார் மாதுரி.

"மாதுரி வார்த்தைகள்ள கவனம் இருக்கட்டும் வார்த்தை வரம்பு மீறுது".

"இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லைநான் கேட்டதுக்கேவா இந்த ஊர் உலகம் கேக்குமே......அந்த வீணா அவ... அவ எவ்வளவு கேவலமா கேட்டா தெரியுமா??... நான் எவ்வளவு கூனிகுறுகி போனேன் தெரியுமா ???..." என்றார்.

கரண் நின்றிருக்க பார்த்த மாதுரி கரண் "எனக்கு பிளைட் டிக்கெட் புக் பண்றியா இல்லையா" என்றார் .

"அம்மா அப்பா இவ்வளவு சொல்றார் ஏன் மா புரிஞ்சிக்க மாட்டண்றிங்க... இந்த நிலைமைல எதுவும் வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்".

"நீ போடுறியா இல்ல எல்லாத்தையும் பிச்சி போட்டு போய்டவா". என்று மிரட்ட கரண் தந்தையை பார்க்க அவர் கண்களால் சம்மதம் கொடுக்க "ம்" என்றான் கரண்.

மாதுரி மிகவும் நல்ல குணம் கொண்டவர்தான் ஆனால் குடுப்ப கௌரவம் மதிப்பு இவற்றிற்கு எல்லாம் குத்தகைகாரர் போல் நடந்துகொள்ளும் சுபாவம் கொண்டவர். கௌரவம், கௌரவம் என்ற ஒரு சொல்லை வைத்தே மகனின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்க துணிந்தார். அவரின் அவசர முடிவினால் மணமான சில காலங்கலிலேயே பிரியவேண்டிய நிலை உண்டானது. சிறிது ஆர அமர தன் மருமகள் எப்படி அவர் குடும்பம் எப்படி என்பதை யோசித்திருந்தால் வார்த்தைகளை விட்டு இப்படி மகனின் வாழ்க்கையே கேள்விகுறியாக மாற காரணமாய் இருந்திருக்க மாட்டார். இந்த ஏவுகனை இங்கிருந்து புறப்பட்டு அங்கே வெடிப்பதற்கு தயராகி வந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் சென்னை வந்து இறங்க மாலை 5 மணி ஆனது . மகனுக்குப் போன் செய்து தாங்கள் வந்த விஷயத்தை கூறியவர் மருத்துவமனை உள்ளே மனைவியை அழைத்து சென்றார். அவசரசிகிச்சை பிரிவில் இருக்கும் பக்கத்தில் இருந்த இடத்தில் ராஜரத்தினமும் சிவாவும் நின்றிருந்தனர்.

சிவா கண்டதும் முறைத்த மாதுரி அதன் பின் அவனிடத்தில் திரும்பவே இல்லை மாதுரியை பார்த்த ராஜரத்தினம் "எப்படி இருக்கு மா" என்றார்.

"இன்னும் சாகலைண்ணா..... இந்த கேடுகேட்ட விஷயத்தையெல்லாம் கேட்டுட்டு உயிரோடதான் இருக்கேன்" என்றார் அழுத்தமாக சிவாவிற்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே.

"மாதுரி வைஷு" என்றவரை

"அண்ணா இதுல யாரும் தலையிட வேண்டாம் இழந்தத யாரலையும் மீட்டு தர முடியாது..
அதே போல உடைஞ்சத யாரலையும் ஒட்டவைக்க முடியாது.... இப்போ எங்களுக்குள்ள உறவும் அப்படித்தான்... என்றார் மாதுரி.

"அத்தை பிளிஸ் சொல்றத கேளுங்க". என்றான் சிவா

"அத்தையா.....உனக்கு அத்தையா......... உன் அருமை தங்கச்சி பண்ணி வந்த வேலைக்கு அவளை வெட்டி போட்டிருக்கனும் நீங்க செல்லங்குடுத்து மடியில உட்காரவைச்சி இருக்கிங்க இதுல இந்த உறவுமுறை வேறயா" என்று எடுத்தெறிந்து பேசினார்.

"மாதுரி பிளிஸ் வாய் அடக்கி பேசு உனக்கு ஆத்திரம் வந்தா என்ன பேசறன்னே தெரியாது நெல்லை கொட்டிட்டா அல்லலாம் சொல்லை கொட்டிட்டா அல்ல முடியாது புரிஞ்சி பேசு" என்றார்.

இவை அனைத்தும் லேசாக சாத்தி இருந்த கதவின் உபயத்தால் சற்று முன்னர்தான் நினைவு திரும்பிய வைஷ்ணவியின் காதில் விழுந்தது.

ஏன் நம்ம அத்த இவ்வளவு கோவமா இருக்காங்க. நான் எப்படி இங்க வந்தேன் ஏதேதோ சொல்றாங்க பேரு கெட்டுபோச்சா!!?! என்ன நடந்தது? என்று நியாபக படுத்தபார்த்தவளுக்கு பின் மண்டையின் காயத்தால் தலை சுக்கு நூறாக சிதறுவது போல் இருந்தது.

"என்னை மட்டும் நல்லா அடக்கி வைங்க உயிருக்கும் மேலா ஒரு பொண்ணுக்கு இருக்க வேண்டியது மானம் அதையே விட்டுட்டு இங்க வந்து படுத்து இருக்கவளுக்குகாக நான் பொறுமையா போகனுமா".

"அத்த இது ஆஸ்பிட்டல் என்ன நடந்துச்சின்னு தெரியாம ஏன் என் தங்கச்சிமேல நெருப்ப அள்ளி கொட்டரிங்க நான் சொல்றத காது கொடுத்து கேளுங்க" என்று அவன் கூற

நீ என்ன சொல்லுவ என் தங்கச்சி ரொம்ப நல்லவ அந்த நைட்டு அவ பால் குடிக்க தான் அங்க போனான்னா.... போடா மெட்ராஸ்ல படிச்சி கிழிச்சது எல்லாம் இதுதானா சே சந்தனமுன்னு நெனச்சி சேற தூக்கி" பூசிக்கிட்டோம்" என்றார் கேவலமான பார்வையுடன்.

"இன்னொருமுறை என் தங்கைய பேசினா நல்லா இருக்காது எனக்கும் கோபம் வரும்" ஏன்றான் சிவா.

"சிவா நீயாச்சும் நான் சொல்றத கேளு" அவ அவசரப்பட்டு புத்தி கெட்டுப்போய் இப்படி பேசுர". என்று அவனின் கைகளை பிடித்தார் விஜயபாஸ்கர்.

"சார் இது icu உங்க இஷ்டத்துக்கு கத்திக்கிட்டு இருக்கிங்க இது விசிட்டர்ஸ் அவரா இருந்தாலும் கொஞ்சம் காமா இருங்க பீளிஸ்" என்று நர்ஸ் கூறி சென்றார்.

இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மாதுரி அறைக்குள் நுழைந்தார். மனைவி என்ன ரகளை செய்யபோகிறாளோ என்று பயந்து விஜயபாஸ்கர் அவரைத்தொடர்ந்து சிவா, ராஜரத்தினம் என்று நுழைந்தனர்.

உள்ளே தலையில் கட்டுடன் கையில் கட்டு என்று படுத்திருந்த வைஷ்ணவியை பார்த்ததும்

"உன்னையெல்லாம் நல்ல பொண்ணுண்ணு நம்பி என் பையனுக்கு கடடி வச்சேன் . இப்படி ஒரு துரோகத்தை செய்துட்டு நல்லவ மாதிரி இங்க வந்தே படுத்துகிட்டு இருக்க".

வைஷ்ணவி புரியாமல் பார்க்க

"உன் பேரு அசிங்கமனதுமட்டும் இல்லாம என் குடும்ப குல கௌரவத்தையே குலைச்சிட்டியே நீ நல்லா இருப்பியா?...... என் உயிர் இருக்கிற வரைக்கும் என் வீட்டுல காலடி எடுத்து வைச்ச மறு நொடி என் பொணம்தான் வெளியே போகும்"..... இனி என் முன்னாடியோ இல்லை என் பையனோட வாழ்க்கையிலையோ தயவு செய்து வந்துவிடாதே". என்று எச்சரித்து திரும்பி போகும் சமயம்.

தன்னைத்தான் இவ்வளவு நேரம் பேசினார்களா என்ற அதிர்விலிருந்து மீண்டவள் தீர்மான தெளிவான தோணியில் ஒரு நிமிஷம் என்று பேசிய வைஷ்ணவி "என்னை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு நான் எப்படிபடவன்னு தெரியுமா உங்களுக்கு.....????. எப்படி வாய் கூசாம இப்படி எம்மேல சேத்த வாரி அடிக்கிரிங்க.... என் மனசால கூட ஒருத்தரையும் நினைக்காம வாழ்ந்தவ நான்....".

"நான் எவ்வளவு பவித்திரமானவன்னும், பதிவிர்தைன்னும் உங்களுக்கு நிரூபிக்கனுமா....?? என்னை பெத்த பொண்ணா பார்த்திருந்தா இப்படி பேச தோணி இருக்குமா .....?? உங்க பொண்ண யாரவது இப்படி சொல்லி இருந்தா என்ன சொல்லி இருப்பிங்க அவ அப்படிபட்டவ இல்லன்னு சொல்லி இருப்பிங்கல்ல ஆனா உங்க வாயில இருந்து அப்படி ஒரு வார்த்த வந்ததா சொல்லுங்க??... வீட்டுக்கு வந்த மருமக மேல நம்பிக்கை வைக்க தெரியல!!! ஏதோ எவனோ சொன்னான்னு இப்படி விசாரிக்காமலே முடிவு எடுக்கரிங்க சே ...."

"ராமனுக்கு சீதை எவ்வளவு உண்மையா இருந்தாங்களோ அதே அளவுக்கு உங்க மகனுக்கு உண்மையாதான் இருந்தேன்... அந்த சீதை நெருப்புல குதிச்சி அவளை நிறுபிச்சிக்கிட்ட நான் எதுல குதிச்சி உங்களுக்கு நிறுபிக்கனும்..."
.

"இந்த நிமிஷம் சொல்றேன் நீங்க என்ன என்னை ஒதுக்கறது... என்னால இனி உங்க குடும்பத்துல வாழ முடியாது". நீங்க போகலாம் உங்க மகனையும் தாரளமா உங்க பக்கமாவே வைச்சிக்குங்க". என்றாள் தீரக்கமாக.

"அண்ணா இனி ஒரு நிமிஷம் கூட இவங்க இங்க இருக்கக்கூடாது வெளிய போக சொல்லுங்க.... இவங்க யார்முகத்துலயும் முழிக்க எனக்கு விருப்பம் இல்லை அப்படியே என்னை யாரவது பார்க்க முயற்சி பண்ண யாருக்குமே சொல்லாம எங்கயாவது போய்டுவேன்".... என்றவளது கண்களின் ஓரம் நீர் கசிந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro