காதல் 27

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

💕ரியா(கதாநாயகி)தன் பிம்பத்தை மெச்சுத்தல்லாக கண்ணாடியில் பார்த்தபடி இருந்தாள்...

மேம் உங்களுக்கு நான் சொன்னதுலாம் புரிஞ்சிதா??

அவளை ஏளனமாய் பார்த்த ரியா,நான் டைரக்டர் சார் கிட்ட பேசனும் எனச் சொல்ல

"அவர்கிட்ட நீங்க என்ன பேசனும்"சிந்திக்காமல் கேள்வி எழுப்பிய மாதவி " ஐ மீன் சார் கிட்ட என்ன சொல்லி வர சொல்லுனும்னு கேட்ட மேம் என்றபடி சமாளித்தாள்

எனக்கு ஸ்கிரிப்ட்ல டௌட்னு சொல்லு...

மேம் எந்த டௌட்டா இருந்தாலும் என்கிட்ட  என பேச துவங்கியவளை

அதிகாரமாக டூ வாட் ஐ செட் என்றாள் ரியா👿

சரி என்றவாறு வெளியேறிய மாதவி,ரியாவை மனதிற்குள்ளே திட்டித் தீர்த்தாள்...

மேக்கப் பேய்க்கு ரித்விக் சார் கிட்ட ஒரு நாள் இளிச்சு பேசலனா நாள் ஓடாது போல...அதிகாரத்தை பாரு டூ வாட் ஐ செட்-ஆ!!!அப்படியே பல்லையெல்லாம் தட்டனும் அவள என்றவாறு ரியாவை திட்டி தீர்த்த மாதவி ரித்விக்கிடம் விரைந்தாள்...

தூரத்தில் நின்று கைப்பேசியில் தன் நண்பனிடம் பேசிக் கொண்டிருந்த ரித்விக்,மாதவி காற்றில் கைகளை வீசி ஏதோ புலம்புவதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்...

அவள் தன்னை தேடுகிறாள் என உணர்ந்தவன்,அவளை கவனிக்காததுப் போல் மறுபுறம் திரும்பி நின்றுக் கொண்டான்...

அவள் தன்னை அழைத்த பிறகே அவளிடம் திரும்பியவன்...ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என்பதுப் போல் கேட்க,மாதவி சொல்ல வந்ததை மறந்து அவனையே பார்த்தபடி இருந்தால்...

ஹலோ!!டே ட்ரிமீங்கா??அவனின் குரல் கேட்டு கனவு உலகத்தில் இருந்து வெளியே வந்தவள் அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் விழித்தாள்...

போய் யோசிச்சிட்டு வந்து சொல்றியா??😋அவன் குறும்பாக கேட்க அவளோ சரி என்பது போல் தலையசைத்துவிட்டு நகர்ந்தாள்...

இரண்டடி எடுத்து வைத்தப் பிறகே அவன் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் புரிய   அவனை திரும்பி பார்த்தால்...

அங்கு அவன் ஒரு விரலால் அவன் உதடை மூடி சிரிப்பை மறைப்பதை பார்த்த மாதவி ஈஈஈ என வழிந்தபடி தலையில் அடித்துக் கொண்டாள்...

அதைக் கண்டு சற்று தடுமாறியவன் முகத்தை வேறு பக்கம் திரும்பி,மீண்டும் அவள் வந்ததற்கான காரணத்தை வினவினான்

அதன் பின் அவனிடம் ரியா அழைத்ததை வேண்டா வெறுப்பாக கூறி முடித்தாள்....

ரியாவை காண செல்பவனை,அவ கூப்பிட்ட உடனே ஒடிடு...எனக்குனு வந்து சேருரது எதுவும் உருப்படிய இல்ல எனச் சலித்துக் கொண்டவளாய் தான் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்தால் மாதவி!!

அவன் சென்று இருபது நிமிடங்கள் ஆனா பின்னும் அவன் கேரவனை விட்டு வெளியே வராததால்,வெளியே மாதவி குட்டிப் போட்ட பூனைப் போல் அதன் கதவின் அருகே அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தாள்😂😂

உள்ளே அப்படி என்னதாடா பண்ற??என் கற்பனை எங்கெங்கயோ போதே😰😨எனத் தன்னை தானே திட்டிக் கொண்டாள்...

💕💕💕💕💕💕💕💕💕💕

சட்டபடி திருமணம் செய்ததில் இருந்து இனி தங்கள் இருவரையும் யாரும் பிரிக்க முடியாது என்பது ஒரு வகையில் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் தன் பெற்றோரையும் தோழிகளையும் பார்க்கும் போது உண்டாகின்ற குற்ற உணர்வை அனுஷியாவால் தவிர்க்க முடியவில்லை...

ஆனாலும் வருண் சொல்லும் வரை அவற்களிடம் சொல்ல மாட்டேன் என அவனுக்கு உறுதி அளித்திருந்ததால் அமைதிக்காத்தாள்...

நான்கு நாட்களாக வரணிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் குறுஞ்செய்தியும் வராமல் இருந்ததால்....காத்திருந்துப் பார்த்தவள் அவனை அழைக்க அவனின் எண் தொடர்ப்பு எல்லைக்குள் இல்லை என்று வந்தது...

அவனை பார்க்காமல் ஏதோ ஒன்று குறையாக இருப்பதுப் போல் உணர்ந்தவள் அலுவலக வேலை முடிந்தபின் அவனைக் காண அவனது பொட்டிக்கிற்கு சென்றாள்...

அங்கு சென்ற பிறகே அவன் வேலை காரணமாக ஒருவரை காண நான்கு நாட்களுக்கு முன் மும்பைக்கு சென்றிருப்பதாக அறிந்தாள்...

அவனை நான்கு நாட்கள் காணதது,அவன் தன்னை ஒரு பொருட்டாக மதித்து சொல்லாமல் சென்றது,இன்று அவனை காண வந்து ஏமாற்றம் அடைந்தது என எல்லாம் சேர்ந்து கண்கள் கலங்கி வெளியே வந்தாள்...

உன் லைப்ல எனக்கு முக்கியத்துவம் இவ்வளோதானா வருண்??என்ற எண்ணத்தோடு இலக்கே இல்லாமல் தன் வண்டியை செலுத்தினாள் அனு😔

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

சாதனாவிடம் இருந்து விலகிய ஜீவன் அவள் தன்னை நோக்கி எறிந்த சட்டையை பின்புறமாக கழுத்தில் போட்டுக் கொண்டு அதனின் கைகளை இணைத்து முன்புறம் முடிந்துக் கொண்டான்....

அவனுடன் நடனம் ஆடியதிலும்,அவன் ஸ்பரிசத்தினாலும் நிலைத் தடுமாறி இருந்த சாதனாவை "அவன் இதயத்தை பாதிக்கும் உணர்வை அவள் மட்டும் தான் கொடுக்க முடியும்" என்ற வார்த்தைகள் அவளை முழுமையாக சாய்த்தது....

ஏதோ நினைவு வந்தவளாய் கண்ணாடியில் தன் சிகையை சரி செய்துக் கொண்டிருந்தவனை தன் புறம் திரும்பியவள் அவன் கழுத்தில் முடிந்திருந்த சட்டையின் கைகளை பிடித்து இழுத்து

இன்னும் அந்த பொண்ணுக் கூட அப்படி ஆடிட்டு இருந்ததுக்கு காரணம் சொல்லலையே என்றாள்😂😎

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro