தென்றல் 19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


கீர்த்தி என்ன கூறப்போகின்றால் என பார்த்துக்கொண்டிருந்த திவ்யாவும் அவினாஷும் கீர்த்தி கூறிய பதிலை கேட்டு அப்படியே ஆச்சரியமடைந்தனர்.

"என்ன தொடாம, ஒரு பொண்டாட்டிக்கிட்ட என்னவெல்லாம் கிடைக்குமோ அது எதுவுமே வேணாம்னா நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ரெடி.ஆனா எனக்கு 5 லட்சம் ரூபா பணம் வேணும்" என்று கூற இப்போது திவ்யா

"எதுக்கு கீர்த்தி இப்போ 5 லட்சம் கேட்குற " என்று கேட்டவளை கீர்த்தி

"எனக்கு முன்னாடி எங்க அக்காக்கு கல்யாணம் பண்ணனும் .எனக்கு லோன் கிடைக்க அர்ரேஞ் பண்ணாலும் சரி ,இல்ல கடனாவே நீங்க கொடுக்கறதுன்னாலும் சரி" என்றவளை அவினாஷ்

'கடனும் இல்ல லோனும் இல்ல.எங்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு.நான் அதுல தரேன்"என்று கூறினான்.இதை கேட்ட கீர்த்தி

"காச குடுத்துட்டு அப்புறமா சொல்லி காட்ட கூடாது" என்று கூற திவ்யா கோவம் வந்து

"ஆமா நானும் வந்ததுல இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன் என்ன நீ எதுக்கெடுத்தாலும் அவன் மனச காயப்படுத்துறதுலயே இருக்க" என்று கேட்டவளை அவினாஷ்

"திவ்யா அவகிட்ட எதுவும் கேட்க வேணாம்.நான் பணத்தை அரேஞ்ச் பண்றேன்.அப்புறம் கீர்த்தி உன்ன என் பக்கத்துலயே வெச்சிக்கிட்டு உன்மேல என் சுன்டு விரல் கூட படாம என் காதல நான் உனக்கு உணர்த்துவேன்.அதுக்கு அப்புறமா நம்ம சேர்ந்து வாழலாம்" என்றவனை அவள்

"அது நடக்கிறப்போ பார்த்துக்கலாம்.ஆனா ஒன்னு அவினாஷ் என்கிட்ட ஏதும் தப்பா நடந்துக்க டிரை பண்ணா நான் கண் காணாத இடத்துக்கு போயிடுவேன்.ஒன்னு அது உலகத்துல இருந்தாலும் சரி,உலகத்த விட்டு என்றாலும் சரி" என்றவளை அவன் சரி என ஆமோதித்தான்.

இவர்கள் இருவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு வீடு வந்த திவ்யா ,மித்ரனிடம் எல்லாவற்றையும் கூறினால்.இதைக்கேட்ட மித்ரன்

"ஆமா அர்ஜுன் ஏன் அவினாஷ் கிட்ட அப்படி நடந்துகிட்டான்?" என்று கேட்க திவ்யாவும்

"அதுதான்ணா எனக்கும் புரியல " என்று கூறினால்.இதைக்கேட்டுக்கொன்டிருந்த ஷாக்சிக்கு அன்று கேம்பிங்க் சென்ற போது நடந்த எல்லாமே தெளிவாக புரிந்தது. அறைக்குள் வந்த திவ்யாவிடம் ஷாக்சி

"திவ்யா அன்னைக்கு நான் சொன்னேன்ல கேம்பிங்க்ல வெச்சி.எனக்கு இப்போ எல்லாமே க்ளியர் ஆகிடிச்சி.ஜானவி மித்ரன காதலிச்சிருக்கா,அவினாஷோ கீர்த்தி மேல பைத்தியாம இருக்கான்" என்று கூற திவ்யா

"அப்போ அர்ஜுன்?" என்று கேட்க

"ஆஹ் ,அர்ஜுன் என்ன லவ் பண்றாரு.லூசு கேட்குறத பாரு.அர்ஜுன் கண்டிப்பா உன்னத்தான்டி லவ் பண்றாரு.இவ்வளவு பெரிய வாயடியா இருந்த உனக்கு அது தெரியலயா?இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா " என்று கூற திவ்யா நடந்தவற்றை எல்லாம் மீட்டிப்பார்க்க அர்ஜுனும் அவளை காதலிப்பது அவளுக்கு புரிந்தது.

"என்னடி எதுவும் தெரியாத மாதிரி நடிக்காத சரியா.உனக்கு எல்லாம் தெரியும்னு எனக்கு தெரியும் "என்று ஷாக்சி கூற

"இல்ல ஷாக்சி,நிஜமாவே அவரு என்ன லவ் பண்ணுவாருன்னு நினைக்கல.அப்புறம் இந்த லவ் எந்த அளவுக்கு சக்சஸ் ஆகும்னு தெரியல.அர்ஜுன் நல்லவருதான்.ஆனா.....உனக்கு இன்னும் 2 வாரத்துல நான் சொல்ரேன்.அது வரை என் வாய கின்டாம கொஞ்சம் பொறுமையா இரு.ஒரு முக்கியமான மேட்டர் ஒன்னு இருக்கு"என்று கூறியவளை ஷாக்சி

"நீ சொல்ரத அப்புறமா சொல்லிக்க.மித்ரன் ஜானவி,அப்புறம் திவ்யா அர்ஜுன் ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா பண்ணிட்டா சரி"என்று கூற

"இல்லை ஷாக்சி ,உன் கல்யாணம் எப்போ நடக்குதோ அன்னைக்குதான் எனக்கும் கல்யாணம்"என்று கூற ஷாக்சி

"என்னடி உனக்கு பைத்தியம் ஏதும் பிடிச்சிருக்கா.என்ன யாரு கல்யாணம் பண்ணிக்குவா?" என்று கேட்க கோவமடைந்த திவ்யா

"இப்போ உனக்குத்தான்டி பைத்தியம்,ரவி உன்ன காதலிச்சான்தானே.அவருகிட்ட பேசலாம்.உனக்கு நடந்த கொடுமைய சொல்லலாம்.அவரு ஏத்துப்பருடி" என்று கூற இப்போது திவ்யாவை முறைத்த ஷாக்சி

"திவ்யா,திஸ் இஸ் த லிமிட்.உன் வேல எதுவோ அத மட்டும் பாரு.நீ கல்யாணம் பண்ணு இல்ல பண்ணிக்காம போ.என் வாழ்க்கை எப்படி இருக்கனும்னு நீ சொல்ல தேவையில்ல.அதுவும் ரவி கூட எல்லாம் என்னால இனிமே வாழ முடியாது.அவனுக்கு மத்தவங்க யூஸ் பண்ண பொருள பாவிக்கிர பழக்கம் இல்ல.இதை அவன் என்கிட்டயே பல தடவை சொல்லிருக்கான்.அவன கல்யாணம் பண்ணி நாளைக்கு அவன் ஏதும் சொல்லிட்டான்னா கண்டிப்பா நான் உயிரோட இருக்குறதுக்கு அர்த்தம் இல்லாம போயிடும்" என்று கூற ஷாக்சி கூறுவதில் இருக்கும் நியாயம் புரிந்தாலும் இவளை இப்படியே விடக்கூடாது என்று நினைத்த திவ்யா

"உன் கல்யாணம் நடக்குற மேடைலதான் எனக்கும் கல்யாணம்.இதுக்கு எவன் ஒத்துக்குறானோ அவன்தான் எனக்கு மாப்பிள்ளை.அது அர்ஜுனா இருந்தாலும் சரி எவனா இருந்தாலும் சரி" என்று கூறினாள்.

"ஹேய் என்னடி இப்படி பேசுற, என் நிலமை தெரிஞ்சும் உன்னால எப்படி திவ்யா இப்படி பேச முடியுது"என்று ஷாக்சி கேட்க திவ்யாவோ

"இங்க பாரு ஷாக்சி,நம்ம ரோட்ல போகும் போது நமக்கு தெரிஞ்சு ஒரு நாய் நம்மல கடிச்சிதுன்னா என்ன பண்ணுவோம்.டாக்டர் கிட்ட போய் ஊசி போட்டுகிட்டு அத அப்பவே மறந்துடுவோம்.நம்ம அதை ஞாபகம் வெச்சிகிட்டு ஆயுசுக்கும் அத நினைச்சி கவலை பட்டுகிட்டு இருக்க மாட்டோம்.அதே போலதான்டி உன் நிலமையும்.நாய் கடிக்கிறப்போ சரி நமக்கு நினைவு இருக்கும் .ஆனா உனக்கு நடந்தது உனக்கே தெரியாதுடி.இதுல உன் தப்பு என்ன இருக்கு"என்று கேட்க ஷாக்சியும் அவளின் அறிவுரையில் கொஞ்சம் தெளிவு பெற்றாலும்

"இல்லைடி .இப்போ இருக்குற நிலமைல என்ன யாரு கல்யாணம் பண்ணிக்க போறா?"என்று கேட்க சந்தோசமடைந்த திவ்யா

"அப்போ உன் நிலமை தெரிஞ்சி உன்மேல நிஜமாவே அன்பு வெச்சி ,உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு யாரும் வந்தா நீ பண்ணிப்பியா?"என்று கேள்வியாக கேட்க ஷாக்சி

"என்னடி ஏதோ ப்ளான் பண்ணிட்டுதான் கேட்குற போல.சரி திய்வா அப்படியே இருந்தாலும் எல்லோரும் கூடி இருக்கிறப்போ என் நடத்தைய பத்தி யாரும் தப்பா பேசினா நான் அந்த இடத்துலயே உயிர விட்டுடுவேன்.இதுக்கு மேல உன் இஷ்டம்"என்று கூறி செல்ல திவ்யா தான் செய்ய வேண்டிய வேலைகளை இப்பொழுதே திட்டம் தீட்ட தொடங்கினால்.

-------------------------------

மணமேடையில் தேவதை என ஷாக்சி ஜொலிக்க அவள் அருகில் அவளை தன் வசம் ஆக்கிக்கொளளப்போகும் கர்வத்தில் மணாளனாக மித்ரன் அமர்ந்திருந்தான். அவனை நிமிடத்து ஒரு தடவை திரும்பி பார்த்த ஷாக்சி ,ஒவ்வொரு தடவையும் அவனது முகத்தில் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை காட்டிக்கொண்டிருந்தது அவளுக்கு குழப்பதை கொடுத்தது.ஒரு வேளை மித்ரனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லையோ என்று நினைக்குமளவு அவன் முகம் கடுகடுப்பை காட்ட,மறு கணமோ அவனை விட இந்த உலகத்தில் சந்தோசமானவன் யாருமில்லை என்று எண்ணுகின்ற அளவுக்கு சந்தோசத்தை காட்டிக்கொண்டிருந்தது.

ஐயர் மந்திரங்களை சொல்லிக்கொண்டிருக்க மண்டபத்தில் ஒரு சல சலப்பு உண்டாகியது.எல்லோரும் ஒருவர் முகத்தை மற்றவர் குழப்பத்துடன் பார்த்துகொண்டிருக்க இப்போது மண்டபத்தில் இருந்தவர்கள் ஷாக்சியை ஒரு மாதிரியாக பார்க்க துவங்கினர்.மணப்பெண் அருகில் இருந்த ஒரு பெண் தனது மொபைலுக்கு வாட்சப்பில் வந்த வீடியோவை மித்ரனுக்கு காட்ட அவன் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போய் இருந்தான்.அந்த வீடியோவை பார்த்த ஷாக்சிக்கு உலகமே இருண்டது போல இருந்தது.உடனே அவள் மித்ரன் பக்கம் திரும்பி

"மித்ரன் இது எனக்கு நடந்த கொடுமைன்னு உங்களுக்கு தெரியும்ல.இதனாலதான் நான் கல்யாணமே வேணாம்னு இருந்தேன்.இப்போ என்னால உங்களுக்கும் கெட்ட பேரு.நான் உன்மைலயே அப்படிபட்ட பொண்ணு இல்ல மித்ரன்.ப்ளீஸ் நீங்களாச்சும் என்ன புரிஞ்சிக்கோங்க"என்று கூற இதை கேட்ட மண்டபத்தி இருந்த கல் நெஞ்சம் படைத்த ஒருவர்

"ஆமாமா ,அதெப்படிமா உனக்கு நடந்தது கொடுமைன்னு சொல்ர,ஆனா அப்புறாமாஆ நீ கர்ப்பம் ஆகி இருக்க.உன் விருப்பம் இல்லாம நீ எப்படி கர்ப்பம் ஆகின"என்று கேட்க இனியும் தன்னால் இந்த சமூகத்துக்கு தான் ஒரு நடத்தை கெட்டவள் அல்ல என்பதை நிரூபிக்க முடியாது என நினைத்தவள் அருகில் இருந்த குத்து விளக்கை எடுத்து தன் வயிற்றில் குத்திக்கொண்டாள்.பக்கத்தில் இருந்த மித்ரன் உடனே பதறி அவளை தன் மடியில் கிடத்த ஷாக்சியோ

"மித்ரன்,நான் உங்கள ஆரம்பத்துல ஒரு ப்ரெண்டாதான் பார்த்தேன்.ஆனா போக போக உங்க மேல எனக்கு காதல் வந்திடிச்சி.ஏதோ கடவுள் புன்னியத்துல உங்க கூட வாழலாம்னு நினைக்கிறப்போ ,என்னை அறியாமலேயே எனக்கு நடந்த கொடுமையால உங்க வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்க நான் விரும்பல.இந்த ஊரு என்ன நடத்தை கெட்டவன்னு சொல்லிக்கட்டும்.ஆனா உங்க மனசுல இந்த ஷாக்சி அப்படி பட்டவ இல்லைன்னு சொல்லுங்க மித்ரன்"என்று கூற அவனோ முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருந்தவனை ஷாக்சி

"ப்ளீஸ் மித்ரன் உங்க ஷாக்சி நடத்த கெட்டவ இல்லைன்னு சொல்லுங்க ப்ளீஸ் மித்ரன் சொல்லுங்க.ப்ளீஸ் மித்ரன்.ப்ளீஸ் "என்று அனற்றிக்கொண்டே கண் மூடினால்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro