30

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மூன்று நாட்களின் முன், சாரதா வீட்டில்..

" நீ என்ன கரியம் பண்றேன்னு உனக்கு புரியுதா ஜனனி?" என்று சாரதா ஜனனியை பார்த்து கோபமாக கேட்க ஜனனி சாரதாவின் கோபத்தை ரசித்தாள்.

" அம்மா நீ கோபப்படும் போது கூட ரொம்ப அழகா இருக்க. ஆனா இந்த ஜீவா நான் கோபப்பட்டா ரொம்ப கேவலமா இருப்பேன்னு சொல்றான்மா"

" வாயை மூடு ஜனனி. ஜீவா வயசென்ன உன் வயசென்ன. அவர போய் அவன் இவன்னு சொல்ற. சாரதா என்ன பொண்ணு வளர்த்திருக்கான்னு பார்க்குறவங்க என்னத்தானே தப்பா நினைப்பாங்க. எத்தனையோ வாட்டி இத நான் உன்கிட்ட சொல்லிட்டேன். ஆனா நீ கேட்குறதா இல்ல. சரி அதை விடு. நீ பண்ற காரியம் உனக்கே நல்லா இருக்கா. ஒரு அம்மாக்கு பொண்ணு பண்ற காரியமா இது. நினைக்கும் போது உடம்பெல்லாம் கூசுது" என்று கூற ஜனனிக்கு தன் குட்டு வெளிப்பட்டுவிட்டது புரிந்தது. இருந்தாலும் அவள் சாரதாவை மேலும் குழப்ப எண்ணினாள்.

" அப்படி என்ன பண்ணேன், எனக்கு புரியலயே. கொஞ்சம் விளக்கமா சொல்லு கேட்கலாம்" என்று கூற அவளை முறைத்த சாரதா,

" எனக்கு ஜோடி சேர்த்து விட பார்க்குறியா. நீயும் ஜீவாவும் பேசிக்கிட்டத நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். எனக்கு ஜீவா மேல முன்னாடி இருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. அவரு என்ன இம்ப்ரஸ் பண்ண முயற்சி பண்றார்னு. ஆனா அது எதுக்குன்னு அப்போ புரியல" என்றவளை ஜனனி தீர்க்கமாக பார்த்தாள்.

" உண்மைய சொல்லு. உனக்கு நிஜமா தெரியல. அவரு ஏன் உன்ன இம்ப்ரஸ் பண்ண டிரை பண்றாருன்னு. குழந்தை எனக்கே தெரியுது, வளர்ந்த உனக்கு தெரியலயா. சரி உனக்கு தெரியலன்னே வெச்சிக்கலாம். ஆமா ஜீவா உன்ன விரும்புறாரு. உனக்கு இதுல என்ன கஷ்டம். அவர கட்டிக்கிட்டு சந்தோசமா இருப்பியா, அதை விட்டுட்டு இப்படி தைய தக்கான்னு குதிக்கிற"

" என்ன ஜீவாவ நான் கட்டிக்கனுமா? புரியாம பேசாத. என் வயசென்ன அவரு வயசென்ன"

" அம்மா வயசெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. சச்சின், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், பும்ரா இவங்க எல்லோருக்கும் அவங்க பொண்டாட்டிய விட வயசு கம்மிதான்" என்று கூற சாரதாவுக்கு தலை சுற்றியது. முன்னாடி எல்லாம் சச்சினை மட்ட்ம் உதாரணமாக கூறுபவர்களுக்கு இப்போது பெரிய லிஸ்ட் இருப்பது பேரிடியாக இருந்தது. இருந்தாலும் சாரதா மனம் மாறுவதாக இல்லை.

" சரி ஒத்துக்கிறேன். அவங்க எல்லோருக்கும் வயசு வித்தியாசம் இருக்குன்றத. ஆனா அவங்க பொண்டாட்டி யாருக்கும் உன்ன போல ஒரு பெரிய குழந்தை இல்லையே. இதுக்கு என்ன சொல்ல போற" என்று கூற ஜனனி கோபமானாள்.

" அப்போ உனக்கு இருக்குற ப்ராப்ளம் நான் தான்ல. நான் இல்லைன்னா நீ ஜீவாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருப்பே. அப்படித்தானே சொல்ல வர்ற". இதை கேட்ட சாரதா தன் தலையில் அடித்துக்கொண்டு,

" உனக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா இல்லையா. நீ வேணும்னே வீம்புக்கு பேசுற. வீம்புக்கு பேசுற உன்கிட்ட என்னால விவாதிக்க முடியாது".

" இப்போ என்னதான் சொல்ல வர்ற, ஜீவாவ உனக்கு கட்டிக்க இஷ்டமா இல்லையா?" என்று ஜனனி தீர்க்கமாக கேட்டாள். சாரதாவும் அதற்கு கொஞ்சமும் சலைக்காமல்,

" இல்ல எனக்கு இஷ்டமில்ல" என்றாள். குழந்தை போல அடம்பிடிக்கும் தன் தாயை தீர்க்கமாக பார்த்தவள்,

" ஓக்கே பைன், உன் வாழ்க்கையில முடிவெடுக்க எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு நீ சொல்லும் போது, என் வாழ்க்கையிலயும் முடிவெடுக்க உனக்கு எந்த உரிமையும் இல்ல. நான் இனிமே என் இஷ்டத்துக்குத்தான் இருப்பேன்" என்றாள். ஜனனி இப்படி கூறுவது சிறு பிள்ளைகள் மிட்டாய் கேட்டு கொடுக்காவிட்டாள் தான் ஏதாவது செய்து கொள்வேன் என்று அழுவது போல இருந்தது.

" ஜனனி மேடம். ஐஸ் க்றீம் வாங்க காசுக்கு என்கிட்டதான் வரனும்" என்று ஜனனியை கலாய்த்தாள்.

" நான் ஏதோ விளையாட்டா பேசுறேன்னு நினைச்சிட்டேல்ல. உனக்கி இந்த ஜனனி யார்னு காட்டுறேன். எனக்கும் இப்போ கல்யாணம் பண்ற வயசு வந்துவிட்டது தானே. என் வயசுல உனக்கு நான் இருந்திருப்பேன். நான் எவனையாச்சும் கட்டிக்கிட்டு அவன் கூட போயிடுறேன். நீ தனியாவே இரு" என்று கூற சாரதா சிரித்து விட்டாள்.

" உன்ன யாரு செல்ல்லம் இந்த வயசுல கட்டிக்குவா. சைல்ட் மேரேஜ்லாம் இப்போ பண்ண முடியாது. அப்படி பண்ணா ஜெயிலுக்குத்தான் போகனும்" என்று சாரதா அவளை கலாய்க்க ஜனனி அவளை பார்த்து குரூரமாக புன்னகைத்தாள்.

" நான் ஓக்கேன்னு சொன்னா என்ன கட்டிக்க ஒருத்தன் இருக்கான்மா. அவன் இந்த போலீசுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். யாருன்னு தெரியும்ல" என்று கூற சாரதாவின் முதுகுவடம் சில்லிட்டது. ஜனனி கூறுவது அவள் தம்பியை பற்றித்தான் என்று அவளுக்கு புரிய சில நானோ செக்கன்கள் போதுமாக இருந்தது.

" ஜனனி என்ன பேசுற, முதல்ல இப்படி பேசுறத நிறுத்து. ஏற்கனவே உன்ன எப்போ அவனுக்கு கட்டிக்கொடுப்பேன்னு எங்கம்மா கேட்டுக்கிட்டே இருக்காங்க. இதுல நீ வேற இப்படி போய் எதுவும் சொல்லி வைக்காத. அப்புறம் என்னால கூட உன்ன காப்பாத்த முடியாம போயிடும்" என்று பயமாக கூறினாள். சாரதாவுக்கு எப்போதும் தன் தாய், தம்பி மீது பயம் அதிகம். அவர்கள் எது கூறினாலும் அவள் தட்டியது கிடையாது. ஜனனியை தன் தம்பிக்கு மணமுடிக்க அவர்கள் கேட்டதை அவள் எப்படியோ தட்டிக் கழித்து வருகின்றாள். ஆனால் எத்தனை நாளைக்கு என்பது அவளுக்கு தெரியவில்லை.

" அம்மா, நான் சும்மா லொலாய்க்கு பேசுறேன்னு நினைச்சியா. நீ ஜீவாவுக்கு ஓக்கே சொல்லலைன்னா நான் இதத்தான் பண்ண போறேன். உன் பொண்ணு வாழ்க்கை சீரழியுறத பார்த்து நீ நிம்மதியா சந்தோசமா வாழ்ந்துக்க" என்று கூற சாரதா பளார் என்று ஜனனியை அறைந்தாள்.

முதல் அடி. தன் தாயிடம் இருந்து ஜனனி வாங்கும் முதல் அடி. அதுவும் அவள் தாயின் திருமணத்திற்காக. பொதுவாக வீடுகளில் மகள்களின் காதல் தெரிய வரும் போது பெற்றோர் பிள்ளைகளை அடிப்பது உண்டு. ஆனால் இங்கு தன் தாய்க்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நினைத்த மகளுக்கு தாயின் கையால் அடி விழுவது சற்று வித்தியாசமானதுதான்.

" என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசுற. நீ இல்லைன்னா நான் செத்துடுவேண்டி. உனக்கு ரொம்ப சுதந்திரம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சி. என்ன பேச்சு பேசுற நீ. என்ன போல கோழையா இல்ல்லாம நீ ரொம்ப தைரியமா வளரனும்னு உனக்கு எல்லா விசயத்துலயும் நான் விட்டுக்கொடுத்து போனது தப்போன்னு இப்போ தோனுது" என்றவளுக்கு அழுகை பீரிட்டது.

கண்களில் கண்ணீருடன் நிற்கும் தன் தாயை கண்ட ஜனனிக்கு மனது பாரமானாது. இருந்தாலும் அவளுக்கு இந்த விடயத்தில் விட்டுக்கொடுக்க மனமில்ல. இதுதான் நல்ல சந்தர்ப்பம். இதை விட்டால் தன் தாயின் வாழ்க்கை இப்படியே போய்விடும்.

" ரொம்ப அழுது டிராமா போட வேண்டாம்". இதை கேட்ட சாரதாவின் மனது வெம்பியது.

" நானா ஜனனி டிராமா போடுறேன். நான் கோழைதான் ஜனனி. உன்ன மாதிரி தைரியமானவ கிடையாது. அம்மாக்கு பயந்த பொண்ணு நான். ஆனா உனக்காக நான் எதுவும் பண்ணுவேன். ஆனா இப்போ நீ கேட்குறத என்னால பண்ண முடியாது. ஏன், எனக்கு இதுல விருப்பம் இருந்தா கூட உன் பாட்டி, மாமா எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. ரொம்ப கேவலமா பேசுவாங்க. ஏன் கொலை கூட பண்ண தயங்க மாட்டாங்க. உனக்கு ஏன் இது புரியிதில்ல. பதினாழு வயசுல என் வாழ்க்கை அழிஞ்சி போயிடிச்சின்னு நினைச்சேன். ஆனா பதினைஞ்சாவது வயசுலேயே நீ வந்துட்ட. அன்னையில இருந்து இந்த நொடி வரைக்கும் உனக்காகத்தான் நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். ஆனா என்ன பார்த்து டிராமா போடுறேன்னு சொல்லிட்டேள்ள". சாரதாவின் பேச்சில் இருந்து ஜனனிக்கு சரியான ஒரு பாய்ண்ட் கிடைத்தது.

" அப்போ உனக்கு ஜீவாவ கட்டிக்க இஷ்டம்தான், ஆனா உங்கம்மாவையும், தம்பியையும் நினைச்சு உனக்கு பயம் அதுதானே" என்று கேட்டாள்.

" ஜனனி நான் சொல்ல வர்றது உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது. அவங்க விருப்பத்துக்கு மாற்றமா நம்ம ஏதும் பண்ணோம்னா நம்மள கொல்லக்கூட தயங்க மாட்டாங்க. அவங்கள பத்தி உனக்கு தெரியாது. என் தம்பி பண்ணிரண்டு வயசுலேயே ஒரு கொலை பண்ணியிருக்கான்னு ஊருல பேசிக்குவாங்க. எங்க ஊர்ல இந்த கெளரவக் கொலை எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணம். குடும்பத்தோட மானமா, இல்லை பொண்ணோட உசிரான்னு வரும் போது மானம்தான் முக்கியம்னு கொலை பண்ற ஊரு என் ஊரு. உனக்கு இதெல்லாம் தெரியக்கூடாதுன்னு நான் எதுவுமே சொல்லல" என்றாள். இவை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஜனனி அடுத்து கேட்ட கேள்வி சாரதாவை கோபம் கொள்ள செய்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro