6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


அதுல்யா அவனை பார்த்து அதிர்ந்தவள் அடுத்த நிமிடம் கொண்டுவந்த காபி கப்பை சக்தி மற்றும் மேகாவின் முன் வைத்து விட்டு சமையலறையின் உள்ளே சென்று விட்டால் படபடப்பை குறைக்க வேண்டி .

சிவத்தமிகாவோ பிறந்தது முதல் காணொளியிலுள்ள வீடியோ கால்லிலும் மட்டும் கண்டு வளர்ந்த தந்தையின் ஸ்பரிசத்தை முதல் முதல் அனுபவிப்பதால் அவளது மழலை மொழியில் அவன் கழுத்தை கட்டியபடி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள்.

சஞ்ஜீவ் தன்னவளின் ப்ரதிபிம்பமாய் சிறு உருவில் தன் கையில் இருக்கும் மகளை கண் கொட்டாமல் பார்த்தவன் அவள் பேசிய பாஷைகள் ஏதும் புரியவில்லை என்றாலும் கவனித்து கேட்டபடி சக்தியின் அருகில் வந்து அமர்ந்தான். சக்தி 3 நெடிய வருடங்கள் கழித்து நண்பனை பார்த்தவன் அவனை ஒரு நெகிழ்ச்சியுடன் நோக்க மேகாவோ கடுகடுத்த முகத்துடன அமர்ந்திருந்தாள் .

சக்தியிடம் திரும்பியவன் " எப்படி டா இருக்க ?" என்று கேட்க

அவனோ " உன் அருமை தங்கச்சிய கல்யாணம் பண்ணா எப்படி இருப்பேன் " என்று கேட்க சஞ்ஜீவ் மேகாவை ஒரு எதிர்பார்ப்புடன் நோக்க அவளோ சக்தியை முறைத்தவள் சடுதியில் எழுந்து சமையலறை பக்கம் திரும்பியவள் " அத்து நாங்க கிளம்புறோம் டி " என்று கூறி பாதி காபி குடித்தபடி இருந்த சக்தியை அவன் கூறுவது எதையும் பொருட்படுத்தாமல் இழுத்து சென்றாள் .

வாசலை கடக்கும் முன் ஒரு முறை சஞ்ஜீவின் புறம் திரும்பியவள் குறிப்பாக அதுல்யாவை காட்டி தலை அசைக்க சஞ்சீவ் கன்னக்குழி விழ புன்னகைத்தவன் சரி என்னும் விதமாக தலை அசைத்தான் .

காரில் ஏறியதும் சக்தி மேகாவை முறைத்தவன் " this is too much மேகா . 3 வருஷம் கழிச்சு பாத்துக்குறோம் இப்டி இழுத்துட்டு வர.... என்ன நெனச்சுருப்பான் அவன்?" என்று கேட்க

அவளோ seat பெல்ட்டை மாட்டியபடி காரை உயிர்பித்தவள் " உனக்கு தா அறிவில்ல எனக்கு அறிவிருக்குனு நெனச்சுருப்பார் . இன்னும் அவங்களுக்குள்ள எதுமே சரி ஆகல .... 3 வருஷமா அவ அவரோட பேசுறதே இல்ல . பொண்டாட்டிய பாக்கணும்னு நெனைப்பாரா இல்ல கரடி மாறி இருக்க உன்ன பாப்பாரா ?" என்று கேட்க

சக்தி அவளை ஆராய்ச்சியுடன் நோக்கியவன் " என்ன திடீர்னு சப்போர்ட் உன் அண்ணன் காரனுக்கு ஓவரா இருக்கு " என்று கேட்க

மேகா சிரித்தவள் "அதான் சொல்லிட்டியே அண்ணன்னு " என்று கூறியபடி அவர்களுக்கு தேவையான தனிமையை தந்து விடை பெற்றாள் .

சஞ்ஜீவ் மகள் காட்டும் விளையாட்டுப்பொருட்களில் கவனத்தை பதித்து அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாலும் கண்கள் என்னவோ சமையலறையின் உள்ளே சென்று மறைந்த மனைவியின் பிம்பத்தை காணவே ஏங்கியது . தான் வாங்கி வந்திருந்த பொம்மைகளை மக்களிடம் எடுத்து காட்டியவன் " எப்படி இருக்கு டா குட்டிமா " என்று கேட்க

அவளோ அந்த வாத்து பொம்மைகளை பார்த்தவள் " அய்ய்ய் தூப்பர் பா." என்று அந்த வாத்து பொம்மைகளை வாங்கியவள் "இடு பா இடு மா இடு பாப்பா " என்று கூறி அதை வைத்து விளையாட துவங்க வாயில் கதவு சாற்றி இருப்பதை உறுதி செய்துகொண்டு மகள் விளையாடுவதில் கவனமாகிவிட்டதை அவதானித்தவன் மெல்ல சமயலறைக்குள் தான் வாங்கி இருந்த சோப்பு bubble உடன் சென்றான் .

அங்கே சமையலறையை ஒட்டி ஒரு சிறிய balcony அமைப்பு இருக்கும் அதில் சில செடிகளும் இருக்கும் . சமயலறையில் மனைவி இல்லாததை உணர்ந்தவன் அந்த balconyin புறம் பார்க்க கைப்பிடியில் கை வைத்தபடி அம்மாவாசை இரவில் நிலவை தேடியபடி நின்றுகொண்டிருந்தாள் அவனின் அதுல்யா .

அவள் அருகில் சென்று நின்றவன் இரண்டு நிமிடம் மெளனமாக இருந்தான் . அவன் அருகில் இருப்பதை உணர்ந்த அவளின் உடல் ஒரு முறை இறுகி மீண்டும் தளர துவங்கியது . ஐந்து நிமிடம் நீடித்த கனமான மௌனத்தின் பின் அவள் புறம் தான் வாங்கி வந்த சோப்பு bubble நீட்டியவன் " அத்து உனக்காக தா வாங்கிட்டு வந்தேன் " என்று கூற அவளோ அதை பார்த்தவள் கணவனை நேருக்கு நேர் பார்த்து அவன் கையையும் பார்த்தவள் ஒரு சிரிப்பை உதிர்த்து வேறு புறம் திரும்பிக்கொண்டாள் அமைதியாக .

அவனுக்கோ அந்த அமைதி மனதை அழுத்த அவள் தோளில் கை வைத்து தன் புறம் திருப்பியவன் " போதும் அத்து ப்ளீஸ் 3 வருஷமா இந்த மௌனம் ... இந்த அமைதி.... நா அப்டி சொன்னதும் தப்பு தான் அதுக்கப்புறோம் உன்ன கேட்காம அவ்ளோ பெரிய முடிவெடுத்ததும் தப்பு தான் .. இன்னும் எத்தனை வருஷம் என்ன தண்டிப்ப ? என் பழைய அத்துவா வரவே மாட்டியா டி? " என்று தவிப்புடன் கேட்க

அவளோ அவன் கையில் இருந்து அந்த bubbleai வாங்கியவள் ஏதும் கூறாமல் அதில் இருந்து bubblesai ஊதினாள். அவள் இரண்டு மூன்று முறை ஊதி முடிக்கும் வரை பொறுமை காத்தவன் அவள் கண்களில் உயிர்ப்பில்லாமல் ஏதோ கடமைக்கென செய்வதை போல் ஊதுவதை கவனித்தவன் மீண்டும் அவள் ஊதப்போக அவள் கையை பிடித்தவன் " அத்து ப்ளீஸ் " என்று கேட்க

அவளோ ஒரு பெருமூச்சுடன் அதை மூடி வைத்தவள் " நா பேசினாலே தான் உங்களுக்கு தலைவலி வந்துரும் , நிம்மதி போயிரும் நா எதுக்குங்க பேசணும் ?" என்று கேட்க

அவனோ அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன் " அப்போ நா என்ன சூழ்நிலைல இருந்தேன்னு உனக்கும் தெரியும்ல. ஏதோ கோவத்துல பேசிட்டேன் டி. நா பண்ண தப்பு மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுமா அத்து ?நம்ம லவ் தெரியலையா" என்று கேட்க

அவளோ அவன் வாங்கி தந்த bubbleai புன்னகையுடன் வருடியவள். "என்னோட லவர் சஞ்ஜீவஹ் எனக்கு ரொம்ப நல்லா தெரியும் ...." என்றவள் அவனை சுட்டிக்காட்டி " ஆனா என்னோட கணவன் சஞ்ஜீவ பத்தி எனக்கு எதுவும் தெரியாது .... அவனை தெரிஞ்சுக்க , புரிஞ்சுக்க நெனச்சு என்ன நானே தொலைச்சுட்டு நிக்குறேன். " என்று கூறியவள் கண்ணில் ஒரு மெல்லிய கோடாய் கண்ணீர் வழிய அவளை தன் புறம் இழுத்தவன் அவள் தலையை தனது மார்பில் அழுத்தியபடி வானை நோக்க அவளோ எந்த வித மறுப்பும் இல்லாமல் அவனுடன் ஒன்றிக்கொண்டாள்.

மெல்லிய விசும்பல் எழ அவளின் தலையை தன் மார்பில் அழுத்தியவன் " சாரி டி அம்மு .... " என்று கூற அவளோ ஏதும் கூறாமல் அவன் மார்பில் ஒரு குத்து குத்தினாள். அவளின் முகத்தை நிமிர்த்தி கண்ணோடு கண் பார்த்தவன் " நா பண்ணது தப்புனு எனக்கு நல்லாவே தெரியும் ..... மன்னிச்சுருனு கேக்க முடியாது மறந்துரு ...... நீ நான் நம்ம பாப்பா போதும். " என்று கூற

அவளோ அவனில் இருந்து பிரிந்தவள் " நேரமாயிருச்சு சமைக்கணும் " என்று கூறி சமயலறைக்குள் சென்றாள். அவனோ அவள் பதில் கூறாமல் சென்றதில் மனம் அடிவாங்க அந்த balconiyil நின்று அந்த இரவின் நட்சத்திரங்களை என்ன துவங்கினான் . அப்படியே சமையல் அறையின் உள்ளே பார்த்தவன் லாவகமாக ஒரே நேரத்தில் அத்தனை வேலைகளை பார்க்கும் மனைவியை கண்ணில் நிரப்பினான் . அவன் கண்களில் கடந்த காலம் பசுமையாக விரிந்தது .

அன்று துவங்கிய அதுல்யா மட்டும் சஞ்ஜீவ் காலை காபி நேரமும் சூரிய உதயமும் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது . மற்ற நேரங்களில் நண்பனாக இருப்பவன் பயிற்சி கூடத்தில் கறாரான ஆசிரியனாக தான் வளம் வந்தான்.இப்படியே ஒரு மாத காலம் முடிந்திருக்க இன்னும் அவள் பயிற்ச்சிகாலம் முடிய மூன்று நாட்களே இருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை அதுல்யா பயிற்சி வகுப்பு இல்லாத காரணத்தால் அவளது அத்தையின் வீட்டில் அமர்ந்து நாவல் ஒன்றை படித்துக்கொண்டிருந்தாள் . அப்பொழுது ஏதோ ஒரு பைக் வந்து நின்றது . வாயிலிற்கு வந்தவள் அங்கே நெடு நெடுவென்று ஒடிசலான தேகத்துடன் ஒருவன் பையுடன் மாடி ஏறுவதை பார்த்தவள் அவன் முன் சென்று நின்றாள் .

அதுல்யா " ஹலோ hold on hold on .. யாரு தம்பி நீ? நீ பாட்டுக்கு வந்த மேல எறிகிட்டு இருக்க " என்று கேட்க அரவம் எட்டு வெளியே வந்த சஞ்ஜீவ்வ் அவள் செய்யும் கலாட்டாவில் சிரிப்புடன் கையை கட்டியபடி நின்றுகொண்டிருந்தான் .

அந்த நெடியவனோ சஞ்ஜீவை பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்தவன் " ஐயோ அக்கா நா இங்க மேல் மாடி காலினு சொன்னாங்க அக்கா அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன் கா " என்று மேல் மாடி காலி என்பதை அவள் தலையை சுட்டிக்காட்டியபடி சொல்ல

அவளோ அவன் கேலியை உணர்ந்தவளாய் " ஹலோ என்ன என் வீட்டுக்குள்ள வந்து என்னையே கலாய்க்கிறியா மேல தான் என் அடியாளு ஒருத்தன் இருக்கான் நா ம்ம்னு சொன்னா போதும் உன்ன ஒடச்சு போட்டுருவான் " என்று கூற

சஞ்ஜீவ் " அடியாளா " என்று நினைத்தவன் அவளின் குறும்பில் விரிந்த இதழ்களை கடினப்பட்டு இருக்க

அந்த இன்னொருவனோ " ஐயோ அக்கா பயமா இருக்கே " என்று கூற அதற்குள் வெளியே வந்தஅவளின் அத்தையோ அதுல்யாவின் தலையில் செல்லமாய் தட்டியவர் " ஏய்ய் வாலு வந்தோனே ஆரம்பிச்சுட்டியா ..." என்றவர் அந்த இன்னொருவன் புறம் திரும்பி " வா பா சஞ்ஜீவ் உன்ன பத்தி சொல்லிட்டான் . வாடகை மாசம் 2000 ரூபாய் மத்தபடி கரண்ட் , வாட்டர்லாம் உங்க செலவு தான் . அட்வான்ஸ் pay பண்ணிட்ட மேல போ" என்று கூற

அதுல்யாவோ அவன் சஞ்ஜீவின் நண்பன் என்று கூறியதிலேயே திகைத்தவள் சஞ்ஜீவ் அங்கே கை கட்டிக்கொண்டு அவளை முறைப்புடன் பார்ப்பதை பார்த்து அசடு வழிய சிரித்தாள். அவளின் அத்தை உள்ளே சென்று விட சக்தியோ சஞ்ஜீவின் அருகே சென்றவன் " என்ன மச்சான் இந்த அக்காக்கு அடியாலா இருக்கியாம் சொல்லவே இல்ல " என்று கூற

அதுல்யாவோ அவனை முறைத்தவள் சஞ்ஜீவை நோக்கி ஒரு பாவமான பார்வை பார்த்து வைக்க வெளிவர துடித்த சிரிப்பை அடக்கியவன் அவள் அருகில் சென்று " என்ன இதெல்லாம் ?" என்று கேட்க

அவளோ " அது அப்டி இல்ல சஞ்ஜீவ் நீங்க என்ன விட ஒரு அடி ஜாஸ்தியா இருக்குற ஆளா அதான் அடிஆள் னு சேர்த்து சொன்னேன் .... அடுப்புல மோரு பொங்குது நா போய் பாக்குறேன் " என்று கூறி உள்ளே ஓடி விட மோர் பொங்குகிறது என்று அவள் கூறியதிலேயே அவளின் சமையல் திறன் அறிந்தவன் சிரித்தபடி மேலே சென்று விட்டான் .

சஞ்சீவ் மேலே வர அவனின் நண்பன் சக்தியோ அவனை குறுகுறுவென்று பார்த்தான் . அதை கவனித்த சஞ்ஜீவ் " என்னடா அப்டி பாக்குற ?" என்று கேட்க

அவனோ " இல்ல விச்வாமித்ரரா இருந்த என் மச்சான் ன்ன திடீர்னு ஒரு சின்ன பொண்ணுக்கு அடியால் அவதாரம் எடுத்துருக்கான்னு பாக்குறே " என்று கூற

அவனோ " நல்ல பொண்ணுடா .. கொழந்த மாறி துறுதுறுனு இருப்பா அதான் " என்று கூற

சக்தியோ நமட்டு சிரிப்புடன் தலை ஆட்டியபடி அடுக்க துவங்கினான் " எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி தென்றல் மாதிரி என்று பாடியபடி .

ஒரு அரை மணி நேரம் சென்றிருக்க அவர்கள் வீட்டின் கதவை தட்டியபடி நின்றிருந்தாள் அதுல்யா கையில் ஒரு டப்பாவுடன் .

அவளை கண்டவன் நெற்றி சுருங்க " என்ன திடீர்னு இங்க கைல என்ன டப்பா அத்த வீட்ல இல்லையா " என்று கேட்க

அவளோ அவனை நிறுத்துமாறு கூறியவள் " முதல்ல வீட்டுக்கு வந்தவங்கள வா னு சொல்லணும் ரெண்டாவது இப்டி படபடன்னு கேள்வி கேட்டா எனக்கு மறந்துரும் ஒன்னொன்னா கேளுங்க " என்று கூற

அவனோ சிரித்தபடி அவளை உள்ளே அழைத்தவன் " போங்க மேடம் " என்று கூற அவளும் ஒரு மிடுக்குடன் உள்ளே நுழைந்தவள் " சக்தி அண்ணே "என்று கூற

அவனோ சிரித்தபடி திரும்பியவன் அங்கே அதுல்யாவை பார்த்து " அக்கா சொல்லுங்கக்கா " என்று குறும்புடன் கேட்க

அவளோ சிரித்தபடி அவனிடம் டப்பாவை நீட்டியவள் " கேசரி செஞ்சேன் அண்ணே சாப்பிடுங்க " என்று கூற அவனோ சஞ்சீவை பார்த்தவன் எடுத்து அதில் இருந்து ஒரு வாய் வைக்க அவன் கண்கள் விரிந்து கலங்க துவங்கி விட்டது .சஞ்ஜீவ் அவனின் முகபாவத்திலேயே அவள் செய்து வைத்திருக்கும் லட்சணத்தை உணர்ந்தவன் கண்களாலேயே ஏதும் சொல்லாதே என்று கூற அவனும் விழுங்க முடியாமல் விழுங்கியவன்

அவள் " எப்படி நா இருக்கு முதல் தடவ சமைச்சதே உங்களுக்காக தா " என்று கூற

அவனோ " ரொம்ப நல்லா இருக்கு மா " என்று கூறியபடி அதை ஓரம் எடுத்து வைக்க

அதுல்யாவோ " அப்போ சாப்பிடுங்க ணா ஏன் எடுத்து வச்சுடீங்க ?" என்று கேட்க அவனோ சஞ்ஜீவை பாவமாக பார்த்தான் . சஞ்ஜீவ் அவனிடம் இருந்து டப்பாவை பிடுங்கியவன் " என்ன உன் அண்ணனுக்கு தா தருவியா எனக்குலாம் இல்லையா " என்று கேட்டபடி அதில் இருந்ததை சாப்பிட துவங்கினான் . அப்பொழுது தான் அவள் கேசரியில் கலர் பொடிக்கு பதில் காஷ்மீரி மிளகாய் பொடியை தூவியது தெரிந்தது. கஷ்டப்பட்டு முகத்தில் ஏதும் காட்டாமல் சாப்பிட்டவன் அவளை வெளியே அழைத்து சென்றான் .

அவளோ அவன் உண்ணுவதையே பார்த்தவள் அவனிடம் இருந்து பிடுங்கி " என்ன நீங்க மட்டும் சாப்பிடறீங்க நானும் சாப்பிடுவேன் " என்று கூறி ஒரு வாயை வைத்ததுமே கண்கள் விரிந்து விட்டது அதன் மட்டமான சுவையில் . அதை அங்கே இருந்த செடியின் அருகில் துப்பியவள் இரும ..... சிரித்த சஞ்ஜீவ் உள்ளிருந்து ஒரு bottleai எடுத்து வந்து தந்தான் . அதை குடித்தவன் அவனை உற்றஉணவுடன் பார்த்து " sorrypa இப்டி சொதப்பும்னு நினைக்கல ... youtube பாத்து தான் செஞ்சேன்... " என்று கூற

அவனோ அவளிடம் இருந்து தண்ணீரை வாங்கியவன் " பரவால்ல விடு ஆனா இனிமே செய்யேல எந்த பொருள்னு செக் பண்ணிட்டு செய். முக்கியமா நீ சாப்பிட்டு பார்த்துட்டு குடு " என்று கூற

அவளும் மண்டையை ஆட்டியபடி " ப்ச்... எனக்கு மட்டும் செய்றதுன்னு செய்யவே தோணாது .... இப்டி சொதப்புறேன். பாருங்க கைல கூட சுட்டுகிட்டேன் .... wasteaa போச்சு " என்று கூற அவளின் கசங்கிய முகம் மற்றும் காயம் கண்டு என்ன தோன்றியதோ

அவன் சட்டென்று " பரவால்ல எனக்கும் குடு " என்று கூற அவனே அவன் என்ன கூறினான் என்று கூறிய அடுத்த 2 நிமிடத்தில் தான் உணர்ந்தான்.

அதற்குள் அவளோ முகம் விகசிக்க அவன் கையை பற்றியவள் " அப்போ சரி இன்னும் ஒரு மாசத்துல காலேஜ் சேருரதுக்குள்ள சமயலஹ் கத்துக்குறேன் கலக்குறேன் " என்று கூறி கீழே ஓடி விட ஓடும் அவள் பின்னே இதயம் ஏனோ நழுவி செல்வதை போல் உணர்ந்தான் சஞ்ஜீவ். 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro