1.

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சன்டே டிஸ் என்ன பண்ணலாம்னு இல்லாத மூளைய போட்டு குடைஞ்சு நாட்டுக்கோழி னு டிசைட்(decide) பண்ணா சாயங்காலம் கோவிலுக்கு போகணும் சோ நோ என் வி சொல்லிட்டா தாய்க்குலம்.

சரி நாத்தம் (வட்டார மொழி for non- veg) தான் இல்ல ஒரு பன்னீர் கிரேவி ஆச்சும் கிடைக்கும்னு பாத்தா அதுக்கும் ஆப்பு வைக்க வந்துட்டா வனஜா...எங்கொக்கா...அவளுக்கும் மாமாக்கும் பன்னீர் பிடிக்காது. மருமகனுக்கு பிடிக்காதது என் தாய்க்குலம் செய்ய மாட்டேனு சொல்லி அரைமணி நேரம் ஆச்சு.
ஆகமொத்தம் இன்னிக்கு என் சாப்பாட்டுல மண்ணு...அய்ய நிஜமாவே மண்ணு விழுந்துட்டு...இதுக்குத்தான் சொன்னேன் வீட்டுக்கு வெளிய வச்சு சாப்பிட வேண்டாம் னு ,கேட்டாதான.கோவிலுக்கு வந்தமா கும்பிட்டு போனமானு இருக்கிறது கிடையாது. சோத்து சட்டியோட போராடுறதே எனக்கு பொலப்பா போச்சு.
இந்த சாப்பாட இப்ப தூரப்போட வேண்டிய பொறுப்பு என் தலைல. Huh.  எல்லா சாப்பாடும் போச்சு. எனக்கு சாப்பாடு மேல இருந்த ஆசையே போய்டுச்சு.அதான் நான் நாங்க எடுத்துருக்க ரூம் பக்கமா நடய கட்டிட்டேன். ஷப்பா...பச்ச புள்ளய என்னமா படுத்துறாங்க...வனஜா வர்றதுக்குள்ள ஒரு குட்டி தூக்கத்த போடுவோம். கண் முழிப்பு தட்ட என்னனு பாத்தா...மணி 9.சே இம்புட்டு நேரமா தூங்கிட்டேன். தாய்க்குலம் எங்க? நா தூங்குறத பாத்தும் எழுப்பாம போயாச்சு போல! சரியில்லயே. என்னயா நடக்குது இங்க? ஆமா இது என்ன ரும் கலர் மாறுன மாதிரி இருக்கு. ஏன் என் மேலு எல்லாம் ஈரமா இருக்கு? அய்யோ எழில் பாப்பா திருப்ப என்மேலயே உச்சா போய்டாளா?இந்த வனஜாக்கு பொறுப்பே இல்ல.புள்ளய பெத்துக்கிட்டா மட்டும் போதுமா ? பொறுப்பா வளர்க்க வேண்டாம்? ஆமா மணி ஒன்பதா ஆச்சு. இன்னுமா இவுங்க கோயில்ல இருந்து வரல. உப்...இது என்ன ரும் லாக் துறக்க மாட்டேங்கு? அய்யோ ! காட்ஜி உனக்கு ஏன் என் மேல இவ்ளோ காண்டு. நா உண்டு என் சோறு உணாடு னு வீட்ல கிடந்துருப்பேன். சும்மா இருந்தவள இங்க வர வச்சு இப்படி பசியில கொல்றியே. இதெல்லாம் நியாயமா? இதென்ன பாக்ஸ். அட டிபன் டப்பா. தாய்க்குலத்துக்கு அம்புட்டு பாசமா ? இருக்கலாம். சரி சாப்ட்டுட்டு யோசிக்கலாம்.
ஒவ்வொறு கவளமாய் உள்ளே செல்ல செல்ல நடந்தது இதோ :

அடுத்த பகுதியில்.

Xxxxxxxx

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro