பகுதி 19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவனைப் பார்த்து பயந்தவள் எப்படியாவது கேட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் எச்சிலை விழுங்கி கொண்டு "நீங்க நந்துவ லவ் பண்ணுறீங்க தான??" என கேட்க
அடுத்த நொடியே அவன் பளார் என்று அறைந்தான் அவள் கன்னத்தில்.

அவன் அறைந்ததில் கண்கள் கலங்க அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏன் மேஹா ஏன் உன்னால மட்டும் எப்படி இப்படிலாம் பேச முடியுது நீயா ஒன்னு புரிஞ்சுப்ப அது சரியா தப்பானு யோசிக்காம மத்தவங்களையும் சேத்து உனக்காக பீல் பண்ண வைக்கிற"எனக் கூறியவன்

"அப்போ நீ நான் நந்துவை லவ் பண்ணுறேனு நினைச்சு தான் போனியா ??"

அவள் இரண்டு கன்னத்திலும் கை வைத்துக் கொண்டு ஆமாம் என்று தலையசைக்க

அவளை அடிக்க வந்த கைகளை கட்டுப்படுத்தியவன் "ஓஓஓ மேடம் ஊரை விட்டு போனா நான் நந்துவை கல்யாணம் பண்ணிப்பேன் அதான் மேடமோட பிளேன் கரெக்ட்டா??"அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்க

அவன் புருவம் உயர்த்தி கேட்கும் அழகில் மயங்கியவள் கன்னத்தில் கை வைத்து அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மேஹா மேஹா என பலமுறை அழைத்தும் அவள் அசையாமல் இருக்க"இவ ஒருத்தி எப்போ பார்த்தாலும் ட்ரீம்ஸ்க்கு போயிட்டு"தலையில் அடித்துக் கொண்டவன் அவள் முன் சொடக்கிட்டான்.

அவன் சொடக்கிட கைகளை முன்னாடி கொண்டு வர அதைக் கண்டு அடிக்க தான் வருகிறான் என கைகளால் முகத்தை மூடியவள் சொடக்கிடும் சத்தம் வந்ததும் மெதுவாக கைகளை விலக்கி மனோவைப் பார்த்தாள்.

"நான் கேட்டதுக்கு இன்னும் எதுவும் சொல்லலயே ???"என மனோ கேட்க

"நீங்க அன்னைக்கு முகி அண்ணா கிட்ட சொன்னீங்களே!!!!"மேஹா கூற

"எப்போ???"

"அண்ணா கல்யாணதப்போ..."

"அய்யோ"என தலையில் அடித்துக் கொண்டவன்"உன்னை இன்னும் இரண்டு அடி போடலாம் தப்பே இல்லை"எனக் கூறி விட்டு மறுபடியும்
அவளைப் பார்த்து முறைத்தான்.

" எப்போ பார்த்தாலும் சும்மா முறைச்சுக்கிட்டே இருக்கிறது தான் வேலை இந்த லாலிபாப்புக்கு ம்ம்க்க்கும்"என மனதில் புலம்பியவள் "எதுக்கு மறுபடியும் அடிக்கிறீங்க நான் என்ன பண்ண??"
எனக் கேட்க

மறுபடியும் அவளைப் பார்த்து முறைத்தான்.

(மனோ என்ன பேசுனானு சொல்லாம இப்படி இவங்க பேசுனா நமக்கு எப்படி புரியும் அறிவே இல்லை இந்த லவ் பேர்ட்ஸ்க்கு வாங்க நம்ம போயி பாக்கலாம்🤔🤔🤔)

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

"ஏய் முகி என் குட்டிமா டா அவ தான் இந்த மியூசிக் போடுவா அவளே தான் என்னோட காதல் எனக்கு கிடைச்சிருச்சு"என முகியை கட்டிக் கொண்டு மனோ கத்த மேஹா உறைந்து போய் நின்றிருந்தாள்.

முகி என்னவென்று புரியாமல் மனோவிடம் "உன் காதலா??"என்று கேட்க

"ஆமா டா என் குட்டிமா"

"குட்டிமாவா நீ என்கிட்ட சொன்னதில்லையே டா"

"இப்போ சொல்றேன் டா"என மனோ ஆரம்பிப்பதற்குள் முகிலின் அம்மா முகியை அழைக்க அவன் சென்று விட்டான்.

மனோவும் அவனுடனே செல்ல மேஹா தான் ஒன்றும் புரியாமல் மனோ செல்வதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அவரோட காதலா???அப்போ அவரு நந்துவை நினைச்சுட்டு தான் எனக்கு டிவோர்ஸ் வேணும்னு சொன்னாரா???அப்போ என் மனோ சார் எனக்கு இல்லையா??"என மனதில் பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க நந்து வந்து அவள் தோள் பட்டையின் மீது கை வைத்தாள்.

அவளைப் பார்த்து உதட்டளவில் சிரித்தவள் "சூப்பரா கிட்டார் பிளே பண்ண"எனக் கூற

"தேங்க் யு டி"என்றவள் "என்னடி மனோ சார் சரினு தலை ஆட்டுனதும் தான் பாடுன அவ்ளோ ஸ்பெஷலா அவரு"

"என்ன சொல்வது என தெரியாமல் விழித்தவள் அவரு எங்க சார் டி அதான் தலைவலிக்குது நான் போறேன்"எனக் கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்

இரவு சாப்பிடும் போது மனோ நந்துவின் அருகில் அமர்ந்து அவளுடன் சிரித்துக் கொண்டே சாப்பிடுவதைக் கண்டவள் தான் அந்த இடத்தில் இருக்க மாட்டோமா என மனம் ஏங்குவதை அவளால்தடுக்க முடியவில்லை.

இரவு தூங்காமல் அனைவரும் அமர்ந்து கதை அளந்து கொண்டிருக்க பெண்கள் அனைவரும் தங்கள் கைகளுக்கு மெஹந்தி வைத்துக் கொண்டிருந்தனர்.

நந்துவும் மேஹாவும் வைக்காமல் மற்றவர் வைப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க

"ஏன் நந்து நீ வைக்கலையா??"என மனோ கேட்டுக் கொண்டு அவள் அருகில் அமர

"எனக்கு பிடிக்காது மனோ சார் அவங்க போடுற வரை காத்து இருந்து அது காயுற வரை கை அசைக்காம வெச்சு அப்புறம் கை கழுவி சப்பா!!!!!! கஷ்டோ கஷ்டோ"எனக் கூறிச் சிரிக்க

"ஹா ஹா மெஹந்தி வைக்க பிடிக்காதுனு சொல்லுற பொண்ண பர்ஸ்ட் டைம் பாக்குற"

"ஈஈஈஈஈ விடுங்க பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டா நானே இருந்துக்கிறேன்"என்றவள் "உங்களுக்கு என்ன சார் வேலை இங்கே "எனக் கேட்டாள்

"சும்மா நீ என்னை சார்னு கூப்பிடாத மனோனு கூப்பிடு"எனக் கூற

"ஓகே மனோ"என்றவள அவனைப் பார்த்து சிரித்தாள்

"சார்னு கூப்பிடு"என மனோ தன்னிடம் கூறியதை நினைத்து பார்த்த மேஹா நந்துவிடம் கூறியதைப் பார்த்து வேதனை அடைந்தவள் அறைக்கு செல்ல எழுந்தாள்.

"எனக்காக நீ இன்னைக்கு மெஹந்தி வெச்சுக்கோ கை நீட்டு நானே வெச்சு விடுறேன்"என்று மனோ கூற

"ஹா ஹா நீங்களா??இதோ மேஹா கூட வைக்கல அவளுக்கு முதல்ல வைங்க நல்லா இருந்தா நான் வெச்சுக்கிறேன்"எனக் கூறி நந்து சிரித்தாள்.

"அவளுக்கு நான் போட்டா பிடிக்காது அப்படி தானே மேஹா"எனக் கேட்க

அவன் தன் கைப் பிடிக்கும் நிமிடத்திற்க்காக காத்திருப்பவளிடம் இப்படி கேட்டால் என்னவென்று கூறுவாள்?? அவனுக்காக ஆமாம் என்று தலையசைத்தவள் அறைக்குள் சென்று விட்டாள்.

அடுத்த நாள் காலையில் மனோ பட்டு வேஷ்டி சட்டையில் மண்டபம் முழுவதும் பரப்பரப்பாக சுத்திக் கொண்டிருந்தான் அவனுடன் நந்துவும் இருந்தாள்.

தன் அறையை விட்டு வெளியே வந்த மேஹாவின் கண்களில் முதலில் பட்டது மனோ தான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அருகில் நந்து இருப்பதைக் கண்டதும் தன் பார்வையை மறுபுறம் மாற்றிக் கொண்டாள்.

நந்து மேஹாவைக் கண்டதும் "மனோ அங்க பாருங்களேன் மேஹாவை எவ்ளோ அழகா இருக்காள்ள"

அவளைக் கண்டவன் ஒரு நிமிடம் இமைகளை அசைக்காமல் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஹலோ என்ன மனோ சார் என் தோழியை சைட் அடிக்கிறீங்களா??"என நந்து சிரித்துக் கொண்டே கேட்க

"இல்லை நந்து ஒரு செகண்ட் ஸ்டக் ஆகிட்டேன் மேஹா தானா னு நிறைய டைம் உத்து உத்து வேற பார்த்தேன் நிஜமாவே அழகு தான் அவ" என்றவன் பார்வை அன்று முழுவதும் மேஹாவைத் தான் சுற்றி சுற்றி  வந்துக் கொண்டிருந்தது.

தன் மனம் நிறைந்தவளை தன்னவளாக்கி கொண்ட முகில் சோனியைப் பார்த்து கண்ணடிக்க

அவள் அவனைக் கிள்ளி வைத்தாள்.

முகில் ஆஆஆ என்று கத்த

என்னாச்சு சார் என அர்ஜூ கேட்க

"கிள்ளி வைச்சுட்டா டா"என்றவன் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சோனியைப் பார்க்க

"மெட்டி போட வைப்பாள் பிறகு உன்னை முட்டி போட வைப்பாள் "இது பழசு சார்.

" இப்போ கிள்ளி வைப்பாள் அப்புறம் கொள்ளி வைப்பாள்"இது புதுசு சார் எனக் கூறிச் சிரிக்க

மண்டபத்தில் உள்ள அனைவரும் இதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

"என் சோனி அப்படிலாம் பண்ண மாட்டா மங்கல காரியம் நடக்கும் போது இப்படி பேசாத டா"என்றவன் சோனியைப் பார்த்து அப்படிலாம் பண்ண மாட்ட தான எனக் கேட்டான்.

அவனைப் பார்த்துச் சிரித்தவள் மாட்ட என தலையசைக்க

பாத்தியா அப்படிலாம் பண்ண மாட்டா என அர்ஜூவிடம் கூற

அவங்க வாய் திறந்து எந்த வாக்குமூலமும் தரல சார் என்றவன் முகிலைப் பார்த்து சிரிக்க

"உன்னையும் மதிச்சு நான் கூப்பிட்டேன்ல உன்னால எவ்வளவு முடியுமா அவ்வளவையும் சிறப்பா செஞ்சுட்ட போடா எனக்கு நம்பிக்கை இருக்கு நம்பிக்கை அதானே எல்லாம்" என்றவன் அர்ஜூவைப் பார்த்து இளித்தான்.

மாலை வரை சடங்கு,சம்பிரதாயம் நடைபெற மனோவை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றவன் குட்டிமாவைப் பற்றி கேட்டான்.

"நான் லவ் பண்றேன் டா அவ தான் எனக்கு எல்லாம் அவ இல்லாம நான் இருக்க மாட்டேன் டா அவ கூட இருக்கும் போது எனக்குத் தெரியல அவ என்னை விட்டு பிரிஞ்சு வந்ததும் தான் அவ எனக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுக்கிட்ட"என மனோ கூறிக் கொண்டே போக மேஹா தன் கண்களில் வரும் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியாமல் அவ்விடத்தை விட்டு
சென்று விட்டாள்.

இவ்வளவு நேரம் ஏன் அதைக் கேட்டோம் என மனதால் நொந்து கொண்டு மனோவை விட்டு பிரிவதே சிறந்தது என முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் விட்டாள்.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

"ஆனால் நீங்க நான் லவ் பண்றேன் டா னு சொன்னீங்களே."

"அப்படி சொன்னேன் ஆனால் நந்துவைனு சொன்னேனா??எதையும் முழுசா கேக்குறது இல்ல"

"அப்போ லவ்??"

"நிலா"

"நிலா வா???? யாரு அது"

"என் குட்டி தேவதை அவ, எனக்காக அந்த கடவுள் அனுப்புன தேவதை ,என் வாழ்க்கையை கொஞ்ச நாள் மட்டும் அழகாக்கின தேவதை எனக்கு கிடைச்ச பொக்கிஷம் ஆனா நான் அவளை இழந்துட்டேன் தொலைச்சுட்டேன்"
என்றவன் குரல் கலங்க

அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்
"யாரு சார் அவங்க சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம் அவங்களை"என மேஹா தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

"கிடைக்க மாட்டா இவ்ளோ நாள் தேடிட்டேன் கிடைக்கல"என்றவன் மேஹாவைப் பார்க்க

ஆயிரம் மொழி பேசும் அவன் விழிக்ள் கலங்கி இருப்பதைக் கண்டவள் மனமோ வேதனைக் கொள்ள

"உங்க காதல் உண்மை சார் கண்டிப்பா நீங்க சேருவீங்க"எனக் கூறினாள்.

"ம்ம்ம் மேஹா நம்ம கிளம்பலாம்" என்றவன் காரை ஸ்டார்ட் செய்து ரேடியோவை ஆன் செய்தான்.

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே

இந்த வரிகளைக் கண்டு அவன் மனம் நிலாவையும் இவள் மனம் மனோவையும் நினைத்தது.

என்னோட முதல் காதலும் நீங்க தான் முடிவும் நீங்க தான் சார் நீங்க ஹேப்பியா இருக்கணும் உங்க நிலா கூட உங்களை சேத்தி வைப்பேன் எவ்வளவு நாள் ஆனாலும் சரி என்றவள்  வெளியே தெரியும் நிலவைப் பார்த்தாள்.

ஏனோ நிலவை என்றும் இரசிப்பவள் இன்று பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள்.

எவ்வளவு நாள் ஆனாலும் நிலாவை அவனுடம் சேர்த்து வைப்பேன் அதுவரை அவனுடம் இருக்கும் நாட்கள் தான் தனக்கு பொக்கிஷம் என நினைப்பவள் நாளையே நிலாவை பற்றி தெரிய வரும் என்பதை அறிந்தால்??



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro