பகுதி 6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பனியில் மூடி போன பாதை மீது
வெய்யில் வீசுமா
இதயம் பேசுகின்ற வார்த்தை
உந்தன் காதில் கேட்குமா
அடி மனதில் இறங்கி விட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்

என்னன்னவோ பேசி பாவையின் மனதை கொன்று விட்டான்....
என் மனோவா இப்படி.......
அனைவரையும் கொள்ளை கொள்ளும் குழந்தை சிரிப்புடன் வலம் வரும் என்னவன் எங்கே???
யாரையும் துன்புறுத்தாமல் அனைவருடனும் நட்புடன் பழகும் என் மன்னவன் எங்கே??
என் மனோவிற்கு கோபமாக கூட பேச தெரியாதே.....

நான் தான்..
நான் மட்டும் தான் காரணம்...
நான் அவர் வாழ்வில் வந்திருக்கக் கூடாது....
என் இன்பத்திற்காக அவரைத் துன்பத்தில் தள்ளி விட்டுவிட்டேனே...
நான் பேராசைக்காரி தான்....
இனிமேல் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்....
அவர் வாழ்வில் இனி இந்த மேஹா இல்லை....

ஒரு முடிவுடன் முகத்தில் புன்னகையை பூசிக் கொண்டு கீழே சென்றாள் மேஹா....

அகி பேபி....எனக்கு தராம சாப்பிடுற??
ஆஆஆ என்று அவர் முன் வாய் நீட்ட...

அவர் அதெல்லாம் தரமாட்ட போ.....என்று சாப்பிட ஆரம்பித்தார்...

அகி பேபி...அவ்வளவு தானா???
அவள் பேக் ரௌண்டில் சோக கீதம் பாட  டைனிங் டேபிளிலில் அமர்ந்தவளைக் கண்டு

நீயா பேசியது ....
என் அன்பே நீயா பேசியது.....

இதான தொங்கச்சி உன் பேக் ரௌண்ட்ல பாடுது என முகில் காலாய்க்க

அவளின் முறைப்பில்

சாரி தங்கச்சி எனக் கூறி முகில் மறுபடியும் சிரித்தான்...

ஹாஹா என சிரித்தவள் அதே அதே என்க...

அகிலா சிரித்துக் கொண்டே உனக்கு இல்லாததா இந்தா செல்லம் ஆஆஆ காட்டு என கை நீட்ட.......

அவளும் ஆசையாக முன் வர

சோனி வந்து வாங்கிக் கொண்டாள்...

அவள் முகம் வாட....
ஏனோ மனோவின் முகமும் வாடியது...
தானாக அவன் கைகள் அவள் வாயின் அருகே உணவினைக் கொண்டு செல்ல.....

அதைப் பார்த்து தன் இரண்டு விழிகளையும் திறந்து திறந்து பார்த்தாள்....

அங்குள்ள அனைவருக்கும் ஆச்சர்யம் தான்....
ஏன் மனோவிற்கும்!!!!!!

உடனே தன் கைகளை கீழே இறக்கியவன் சாப்பிடாமல் எழுந்து சென்றான்....

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களும் பாதி உணவிலே எழுந்திரிக்க....
அவர்களை திட்டி சாப்பிட வைத்து தானும் சாப்பிட அமர...
உணவு ஒரு பருக்கை கூட உள்ளே செல்ல வில்லை...

தட்டிலே சிறிது நேரம் கழித்தவள்...
எழுந்து சென்று விட்டாள்...

மனோ யாருடனும் பேசாமல்,கேட்ட கேள்விக்கு ஒரு வரியில் பதிலத்துக் கொண்டிருந்தான்....

இரண்டு நாட்களும் இதே  நிலை தொடர முகி அவனைக் காணச் சென்றான்..

மச்சி என்னாச்சுனு சொல்லு??ஏன் இப்படி முகத்தை வச்சுருக்க...பார்க்க சகிக்கல எனக் கூற

என் மூஞ்சியே அப்படிதான் எனக் கூறியவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள....

அவனுக்கு சிரிப்பு தான் வந்தது....
ஏன் இவன் இப்படி இருக்கிறான் என  தெரியவில்லை...
ஆனால் தன் தோழன் இப்படி இருப்பது பிடிக்கவில்லை....

மச்சி விளையாடாத......

யாரு நானா...நானா டா...நீங்க தான்டா...என் வாழ்க்கையே போச்சு...அவ்ளோதான் இனிமேல்...

என்ன இனிமேல்??....என்ன போச்சு??
அவனும் மனோவின் கோபத்திற்கு ஈடு கொடுத்து பேச......

முகியைக் கட்டிக் கொண்டவன் "மச்சா...என்னால முடியல டா...எனக்கு அவ வேணாம் டா..."சிறு குழந்தை போல் அழ

"சரி வேணாம்...விடு...நீ இப்போ இதை பத்தி யோசிக்காத....வா நம்ம வேலைக்கு போகலாம்...நீ வேலைக்கு போனா சரி ஆகிடுவ சரியா??"

"ம்ம்ம்...."எனக் கூறியவன் அவன் அறைக்குள் சென்றான்....

இவர்கள் இருவரும் பேசியதை மேஹா கேட்பாள் என இருவரும் எதிர்ப்பார்க்கவில்லை...(நானும் பா..😑😑😑இந்த புள்ள சும்மா இருக்காம இதையும் கேட்டுட்டு அப்புறம் அழுகும்😶😶நான் திட்டு வாங்கணும் ரீடர்ஸ் கிட்ட🙊🙊)

மேஹா தான் உன் வாழ்க்கைடா...அத யாரு நினைத்தாலும் மாத்த முடியாது.....எதாவது செய்யுறேன்...
உங்கள சேத்தி வைக்கிறேன்....

முகிய ஸ்டுடண்ட்டா பாத்திருக்க...
பிரஃபசரா பாத்திருக்க....
நண்பனா கூட பாத்திருக்க...
இப்போ மாமா வா பார்ப்ப...🙊🙊
அய்யோ...தூது புறாவா இருந்து...சேத்து வைப்பேன்னு சொல்ல வந்தேன்....
அவன் பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருக்க....

அவருக்கு நான் வேணாம் அண்ணா...என மனதில் தனக்கு தானேக் கூறிக் கொண்டவள்  அறைக்குச்  சென்றாள்....

சோபாவில் படுக்க செல்ல....

"ஏய் அங்கே படுக்காதே...இங்கேயே படுத்துக்கோ...உனக்கு தான் ஏசி ஒத்துக்காதுல.."
இரண்டு நாட்களாக அவனும் கூறிக் கொண்டே தான் இருக்கிறான்...

இரண்டு நாட்களும் வெளியே ஊஞ்சலில் படுத்தவள் ....
இன்றும் வெளியே செல்ல எத்தனிக்க....

"அது என்னோட ஊஞ்சல்...அங்கே நீ படுத்தா எனக்கு கோபம் வரும்..."

"ம்ம்ம் " அவள் சோபாவில் அமர....

இங்கே  படுத்துக்கோ....அவன் கூறி முடிப்பதற்குள்...

"சார்...உங்களுக்கு என்ன தான் பிரச்சினை....நான் இங்கே தூங்குறது என்னோட விருப்பம்....நீங்க ஏன் இப்படி தொல்லை பன்னுறீங்க???" அவள் கூற

"ச்ச்சசசச....நானும் தப்பா நினைச்சிட்டேன்...நீ மாறிட்டனு...நீ இப்படி தான்...பஜாரி தான்...
எனக்கு இப்படி அதிகமா பேசிட்டு இருந்தாலே பிடிக்காது....இரண்டு நாள்
அமைதியா இருந்த...அந்த ஒரே காரணத்துக்காக தான் இங்கே படுத்துக்கோனு சொன்ன...நீ எங்கேயோ படு....எனக்கு என்ன???"கத்தியவன் சென்று படுத்துக் கொள்ள.....

இவளுக்கு தான் தூக்கம் வரவில்லை...

"நீங்க இப்படி இல்லை மனோ.....நீங்களே சொல்லிருக்கீங்க...எனக்கு அதிகமா பேசுற பொண்ணு தான் பிடிக்கும்.....
அவ பேசிட்டே இருக்கணும்...நான் அதை ரசிச்சுட்டே இருக்கணும்னு...
என்னை பிடிக்காத ஒரே காரணத்திற்காக ஏன் உங்களையே மாத்திக்கிறீங்க??...."
அவனின் ஒவ்வொரு செயலுக்கும் தன் மேல் பழியைப் போட்டுக் கொண்டவளுக்கு தூக்கம் வர கண்களை மூடினாள்.....

அவள் தூங்கியதைக் கண்டு கொண்டவன் அவளுக்கு போர்த்தி விட்டு வெளியே சென்று நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்....
(என்ன தான் இருக்கோ அந்த நிலாவில்???🤔)

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

தினமும் நிலாகிட்ட என்ன புலம்ப வெச்சுட்டாலே......
உள்ளே எட்டிப் பார்க்க......
அவள் மெத்தையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்....

எல்லாம் அவனால தான்....
அவன் தான் காரணம்...
அவன் மட்டும் என் கைல கிடைத்தான்
செத்தான்....
எருமை,பன்னி,பரதேசி..........
(இதற்கு மேல் நம்ம ஹீரோவும் பேச மாட்டாரு...ரொம்ப நல்ல ஹீரோ பா😁😁)

இந்த பாராட்டுக்கள் அனைத்திற்கும் சொந்த காரர்....நம் முகில் தான்...
அவன் செய்த செயல் அப்படி???

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
ஊஞ்சலில் தூங்கியவன்
அதிகாலையிலே எழுந்து கொண்டான்.....

உள்ளே சென்று மேஹாவைக் காண
அவள் கைகளைக் குறுக்கி படுத்துக் கொண்டிருந்தாள்...
இடையில் எழுந்திருந்தால் போல....
அவன் போர்த்தி விட்ட போர்வையை மெத்தையில் தூக்கி எறிந்து விட்டு
படுத்துக் கொண்டிருக்கிறாள்...

திமிர் பிடித்தவள்.....திட்டிக் கொண்டே தயாரனவன் கீழே செல்ல.....

அகிலா,முகி,சோனி அனைவரும் அமர்ந்திருந்தனர்...

குட் மார்னிங் மா எனக் கூறியவன் சோபாவில் அமர.....

குட் மார்னிங் டா கண்ணா அவன் தலையை வருடியவர் சமையலறைக்கு சென்று காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தார்...

அதைப் பருகியவன்.....
அம்மா நான் வேலைக்கு போறேன்...
இன்னைக்கே கிளம்புறேன்..
என்று கூறிவிட்டு செய்தித்தாளில் மூழ்க....

மச்சா படம் பாக்குறியா?? முகி கலாய்க்க...

அவன் கால்களை மிதித்தவன் சோனியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.....

அடுத்து நடக்கவிருக்கும் விபரீதம் அப்படி....

மேஹா எழுந்து தயாராகி வர....
அகிலா கூறியதை கேட்டவள் அப்படியே உறைந்து நின்றாள்.....

மனோவிற்கோ ஹார்ட் அட்டாக் வராத குறை தான்....

அய்யோ நான் இவரை விட்டு விலகணும்னு நினைச்சா...இப்படி பன்றாங்களே எல்லாம்....புலம்பிக் கொண்டே அவள் அகிலாவிடம் செல்ல....

மனோ அவளைப் பார்த்து முறைத்தான்..
(அவ எதுவும் பன்னலயே டா)....

என்னவா இருக்கும்????🤔🤔

யோசிங்க....
Sorry for late upd babys...
Na next upd nalaiku kudukren kandipa....

Gd nyt😍😍....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro