அகரம் என்ற ஓசையுடன் பூவுலகில் உதித்தாய்
ஆதவனாய் விண்ணுலகை விடியச்செய்கிறாய்
இசையாய் இல்லத்தில் வளம் வந்து
ஈ என புன்சிரிப்புடன் புன்னகைத்தாய்
உள்ளம் நெகிழ சான்றோரிடம் பழகி
ஊற்றாய் அன்பை கொடுத்து மகிழ்கிறாய்
எதிலும் சங்கடம் காட்டாமல்
ஏழ்மை என திகலும் கோபத்தில்
ஐ என்ற பெண்ணழகுடன்
ஒற்றை விழி பார்வையால்
ஓயாமல் கண்களை சிமிட்டுகிறாய்
ஔதசியம்(பால்) போல் மனம் கொண்டவளே
*******************
-கவிஞனின் கவியாய் பூத்து
-ஙங்கலந்தன(கடவுளைப்பற்றி) நம்பிக்கை கொண்டு
-சலங்கையாய் புன்னகை சேர்க்கிறாயே மற்றவரிடத்தில்
-ஞமலி(மயில்) போல் அழகுக்கு அழகாய் பிறந்தாய்
-டம்பம்(ஆடம்பரம்) இல்லா வஸ்திரத்தில் ஜொலிக்கிறாய்
-இ(ண)க்கம் கொண்ட மனதால் மனம் ஈர்க்கிறாய்
-தமிழ் மொழி கொண்ட உன் நாமம் அழகு
-நல்வாழ்த்துக்களால் நீ மேன்மை அடைவாய் கண்மணியே
-பசுமையான பேச்சினில் உள்ளம் குளிர வைத்தாயே
-மனை(வீடு) போல் அடைக்கலம் தருகிறாய்
-யவனன் போல் நீ வீரமுடன் திகழவேண்டும்டா
-ரம்மியமான பொழுதுகளாக மறைகின்றாய்
-லட்சியம் என்ற ஒன்றை மனதில் கொள்ளாத சிறுபிள்ளையடி நீ
-வஞ்சகம் இல்லா பண்பை மேற்கொள்கிறாய்யே
-கு(ழ)ந்தை முகம் கொண்டு குலைந்து செல்கிறாய்
-க(ள)ம் கண்டு சிந்தனை செய்கிறாய்
-ம(ற)தி வேண்டும் என்று வேண்டி செல்கிறாய்
-ம(ன)ம் சிறக்க மனம் குளிர வேண்டுகிறேன்
உனக்காக நான்
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro