கச்சகம்(குரங்கு) போல நான் இங்கு சுற்றித் திரிந்து
காண்மரமாக(ஆலமரம்) காலம் கடந்து வளர்ந்து வருகிறேனடி
கிலுசிதம்(வறுமை) வந்தது போல என் இமைகள் இமைப்பதில்லை ஏனோ
கீலகம்(தந்திரம்) கொண்டு எனை இசைக்கிறாய்
குரள்வளையோ உந்தன் பெயரறியாமல் சிக்கித் தவிக்கிரத்தடி
கூவிளி(அழைப்பு) ஒன்று அழைக்க மறுக்கிறாய் ஏனடி
கெருமத்தம்(பறவை) கொண்டு நற்செய்தி கொடுப்பாயா கண்மணியே
கேளாரின்(பகைவர்) நகைத்தலுக்கு முற்றுப்புள்ளி என்றோ தெரியவில்லை
கைவசம்(வசீகரம்) வேண்டாம் உன் அன்பு போதும்
கொடுமை எனும் கார் இருட்டில் இருந்து எனை மீட்டிட வருவாயா
கோட்டி(பைத்தியம்) ஆகி விட காத்திருக்கிறேன் உன்னால்
கௌமோதம்(கார்த்திகை) மாதம் தீபம் ஏற்ற வந்துவிடு காத்திருக்கிறேன் உனக்காக
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro