🥰 கைம்பெண் 😭

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

*_மலர் மாலைகள் சூடி
வகட்டினில் செந்நிற குங்குமமிட்டு
மணாளன் கைகளில் ஸ்பரிசம் தொட்டு
வாழ்க்கையே நீ தானடா என்று அக்னி வளம் வந்து
சான்றோர்கள் முன்னிலையினில் கரம் பிடித்தேன் உன்னை... _*

*_நித்திரையில் கவி பாடி
விடியனிலில் துதி பாடி
அழைப்பினில் நாமம் சொல்லி அழைத்தாயடா _*

*_நான் கண்ட சொர்க்கமும் நீதானே
நீ அடைந்த சொர்க்கமும் நான் தானே
நாம் பெற்ற நர்செல்வமும் அன்பு தானடா _*

*_காலம் செய்த பிழையா
இல்லை நீ செய்த பிழையா
இல்லை நான் செய்தது தான் பிழையா _*

*_பயணத்தில் பேருந்து இடைநின்றது போல
என் வாழ்க்கை பயணமும் இடைநின்றது ஏனோ
நீ சூடிய குங்குமம் ஏனோ கரைந்து போனது
நான் தொட்ட உன் ஸ்பரிசம் உணர்வற்று போனது
நீ தொட்ட பூவுடலோ உயிரற்று போனதடா
உன் ஜனனம் முடிவுற்ற செய்தியை கேட்டபோது... _*

*_யருமாறியா நம் சொர்கம் ஏனோ கார் இருள் சூடி கொண்டது
நாம் நடந்த பாதையெல்லாம் முள்ளாகி போனது
பார்வையெல்லாம் உன் முகமே தோன்றுதடா
கைகள் எல்லாம் உன்னை சரணடைய தேடுதடா
இமைகள் இமைக்க மறுக்கிறதே உன்னை காணாமல்
நான் என்ன செய்ய நான் என்ன செய்ய
கதறுகிறேன் நான் _*

*_பிரம்மன் செய்த பிழையால்
இன்று நான் தனி மரமாக காட்சியளிக்கிறேன்
ஊரார் வாய் தூற்றுகிறது
ஆடவர் பார்வை சுட்டெரிக்கிறது
எந்தன் அரண் எல்லாம் பழுதாகி போனதடா
நீ இவ்வுலகில் இல்லை என்ற ஒற்றை கூற்றினால் _*

*_நீ கூறிய வார்த்தைகள் மட்டுமே
என்னை உயிர்ப்புடன் இருக்க வைக்கின்றது
என்றோ கூறினாய்
"நானில்லை உலகிலும் நீ முன்னேறி வாழவேண்டுமடி"
என்று நீ கூறிய வார்த்தைக்காக இன்றும் நான் பயணிக்கிறேன்.... _*

*_எதற்க்காக அவ்வாறு கூறினாய் என்று
அன்று நான் கேட்க மறந்தேன்
இன்று விடை தேடி அலைகிறேன் _*

*_சொர்கம் கிடைக்கவில்லை
சொந்தம் கிடைக்கவில்லை
நிம்மதி கிடைக்கவில்லை
வெள்ளை வஸ்திரம் மட்டுமே கிடைத்ததடா..._*

*_நான் இனியும் வாழ்வேன் உந்தன் வார்த்தைக்காக..._*

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro