காதல் 41

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

💕மாதவியின் உடல் நடுங்குவதை உணர்ந்தவன்....அவள் கைகளைச் சுட்டிக்காட்டி இப்படிதா அன்னைக்கு எனக்கும் இருந்துது என அவன் கிசுகிசுக்க அதை நினைவுக் கூர்ந்தவளின் கன்னங்கள் சிவந்தது😍💋

அன்று!!💕💓

மாதவியுடன் பல முறை வெளியே செல்வது ஒவ்வொன்றையும் அவளுடன் பகிர்ந்துக் கொள்வது என அவளிடம் மிகவும் நெருக்கமாக இருந்த சுவேதாவிற்கு(ரித்விக் தங்கை)அவள் தன் அண்ணனுக்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றாமல் இல்லை.....

ஆனால் அவனது விருப்பம் முக்கியமே!!!என எண்ணியவள்,அவன் விருப்பத்தை அறிந்துக் கொள்ள விருப்பினாள்...

அவள் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் போதெல்லாம் யாராவது ஒருவர் அவள் காதுபட ரித்விக்-மாதவியை சேர்த்து பேசுவதை கேட்க அவளுக்கு அது சிறு நம்பிக்கையை தந்தது....

அதை உறுதி செய்யவே அன்றைய வார இறுதியில் தன் நண்பர்கள் உட்பட மாதவியையும் மூவி டைம் என்ற பெயரில் அழைத்திருந்தாள்....

வீட்டின் உள்ளே நுழைந்த மாதவியின் கண்கள் ரித்விக்கை தேட அவன் வெளியே சென்றிருக்கக்கூடும் என நினைத்தவள் அங்கு இருந்த வேலையாட்களிடம் சுவேதாவை பார்க்க வேண்டும் எனக் கூற அவளுக்கு இரண்டாவது மாடியில் இருக்கும் தியேட்டர் ரூமிற்கு வழி காண்பித்து அங்கு சுவேதா அவளை வர சொன்னதாக கூறினர்...

மாடிகளில் தன் கைப்பேசியை பார்த்துக் கொண்டே ஏறியவள் எதிரே வந்த ரித்விக் கவனிக்காமல் இருக்க, அவள் கவனத்தை ஈர்க்க அவளை வழி மறைத்து நின்றான்...

வழி மறைத்தவனய் பார்த்தவளின் உதடுகள் தன்னையும் அறியாமல் விரிய....உற்சாகமாக ஹாய் சார்!!என்றாள் பதிலுக்கு வசிகரமான புன்னகையுடன் ஹாய் மாதவி!! என்ன இங்க??எதாவது ப்ராப்ளமா??

அவன் சிரிப்பை கண்டு காட்!!அப்படி சிரிக்காதடா😍💓எனக் கீழே குனிந்து அவள் முனுமுனுக்க..பின் அவன் கேட்ட கேள்விகளுக்கு மறுப்பாக தலையசைத்தவள்!!!சுவேதா மூவி டைம்னு இன்வைட் செஞ்சுருந்தா அதான் என்றாள்

அதை கேட்டவனுக்கு திரும்பி சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது....இவ்வளவு நேரம் தன் தங்கை தன்னை வற்புறுத்தியும் இப்போ மூவியெல்லாம் பார்க்க விருப்பம் இல்லை!! முக்கியமா உன் பிரண்டஸ் கூட எனக் கூறி வந்தவன் அவளின் நண்பர்கள் கூட்டத்தில் மாதவியும் இப்பொழுது கலந்திருப்பதை மறந்தான்...

ஓகே!!!மேலே ரைட் சைட் மூன்றாவது ரூம் தியேட்டர் ரூம் என சொல்லி அவனை அனுப்பியவன்....தான் என்ன கூறி அங்கே செல்வது என சிந்தித்தப்படியே அவனும் அங்கு சென்றான்....

அங்கு சுவேதா அவளுடைய ப்ளான் சொதப்பியதில் சோகமாக இருக்க...மற்றவர்கள் எல்லாம் என்ன படம் பார்ப்பது என்ற குழப்பத்தில் இருக்க,அதில் ஒருவன் "A MOMENT TO REMEMBER"என்ற கொரியன் படத்தை பரித்துரைக்க,அதையே பார்ப்போம் என முடிவெடுத்தனர்...

ஆங்கில சப்டைட்டில் உடன் கூடிய அந்த படம் ஒரு கட்டிட தொழிலாளிக்கும் அந்த கம்பனி முதலாளியின் மகளுக்கும் மத்தியில் இருக்கும் காதலை காண்பித்திருக்கும்....

படம் துவங்கிய சில நொடியில் உள்ளே நுழைந்த ரித்விக் ஸ்கிரீனை பார்த்தபடி " நீ ரொம்ப கம்பல் பண்ண சோ.....வந்துட்டன்"என்றவனை பார்த்த சுவேதா முழு பல்வரிசையும் காட்டி சிரித்தாள்....

அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நகர்ந்தவன் மாதவியிடம் நெருங்கி அவள் அருகில் இருந்த ஆடவனை இடம் மாறும்படிக் கூறி,அவளருகில் அமர்ந்தான்.....

விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க,ஸ்கிரினின் ஒளியில் மாதவியின் கண்விழி அங்கும் இங்கும் சுழற்வதை பார்த்துக் கொண்டே இருந்தவன் அவள் தன் புறம் திரும்பி கண்களாலே ஸ்கிரினை சுட்டிக்காட்ட உதடை சுழித்தபடி ஸ்கிரீனின் புறம் கவனத்தை திருப்பினான்...

சிறிது நேரம் படத்தை ஆர்வமாக பார்த்த மாதவிக்கு ஒரு கட்டத்தில் கண்கள் சொக்க சோபாவில் சாய்ந்தால்...பக்கத்தில் இருந்த ரித்விக்கின் தோளில் அவள் தலைபட இனிமையாக அதிர்ந்தவன் அவளை பார்க்க நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்....அவளுக்கு வாகாக அவன் சோபாவில் சரிய அவன் தோளில் இலகுவாக தலை சாய்த்தவள் அவன் கழுத்தில் முகம் புதைத்தாள்....

அந்த இனிமையான உணர்வில் மூழ்கியவனை மேலும் இம்சிக்க அவள் உதடுகள் அவன் கழுத்தில் உரச கைகள் இறுக்கி சோபாவை பற்றிக் கொண்டான்.....என்னோட கன்ட்ரோல ரொம்ப சோதிக்கிறாளே என நொந்துக் கொண்டவன்,ராட்சசி தனியா இருக்கும் போது இந்த மாதிரி ஏதாவது செஞ்சு பாரேன்!!!என மனதிற்குள் நினைத்தவன் அவள் மேல் தலை சாய்த்து படம் பார்க்க சிறிது நேரத்தில் அவள் நெருக்கம் தந்த சுகத்தில் அவனும் உறங்கிப் போனான்....

படம் முடிய மின்விளக்குகள் போடப்பட்டது....

அவர்கள் இருந்த நிலையை பார்த்து சிலர் சிரிக்க இதை சிறிதும் எதிர்பார்க்காத சுவேதா அவர்களை தன் கைப்பேசியின் கேமரா மூலம் பதிவு செய்தால்....சிரிப்பொலி கேட்டு ரித்விக் முழுத்துக் கொள்ள அவளை விலக்கவும் விரும்பாமல் அப்படியே இருக்கவும் முடியாமல் நெளிந்தவன் மாதவி என அவள் தோளில் தட்டினான்...

திரும்பும் பொழுது அவள் உதடு அவன் கழுத்தை தொடர்ந்து தாடையை உரசியபடி விலகினாள்.....அதில் மூச்சுவிடுவதை மறந்தவன் அவள் விலகிய பின்பே மூச்சறைப்பதுப் போல் உணர்ந்தான்...

தன் நிலையும் சுற்றி இருந்த நண்பர்களின் சிரிப்பிற்கான அர்த்தமும் மாதவிக்கு சில நொடிகளுக்கு பிறகே விளங்க...."எனக்கு அர்ஜென்ட் வர்க் இருக்கு நான் கிளம்புற சுவேதா" என எங்கோ பார்த்தபடி சொல்லி செல்ல அனைவரின் கவனமும் ரித்விக்கிடம் திரும்பியது..."ஓ காட் ஒரு இப்பார்டன்ட் கால் பண்ணனும்"என்றபடி அங்கிருந்து வெளியேறினாள்.......

அனைவரும் ஒரே நேரத்தில் சிரிக்க அதில் ஒருவள் "தே ஆர் சோ க்யூட், ஆடரபில் கப்பில்" என்றாள்.....

சுவேதாவிற்கு தேவையான பதில் கிடைத்துவிட சரியான நேரத்தில் இதை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்த எண்ணினாள்

இன்று💕

அன்றைய நிகழ்வு இன்றும் இருவருக்கும் ஒரு புது உணர்வை கொடுக்க தன்னை வலைத்து அணைத்திருந்த அவனை விலக்கியவள் பைக்கை விட்டு கீழே இறங்கி "முன்னாடி தள்ளி உட்காருங்க!!" என்றாள் மிரட்டும் தோனியில்....

முன் இருந்ததே அவனுக்கு வசதியாக இருந்ததால்...எனக்குதான் பைக் ஓட்ட தெரியாதே மாது!!😅என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அப்பாவியாக நடித்தவனின் எண்ணம் அறிந்தவளாய் "பரவாயில்ல நான் சொல்லி தர" என்றபடி தலைகவசத்தை அவனுக்கு அணிவித்தால்...

இது க்ளட்ச்,இது க்யர்,இது ஆக்ஸ்லேடர் என ஒவ்வொன்றையும் சிறு பிள்ளைக்கு சொல்வது போல் எடுத்துரைத்தவள்....பைக் ஓட்டும் முறையை விளக்கிவிட்டு அவனை விட்டு தொலைவில் அமர்ந்தாள்...

அதற்காகவே வேண்டும் என்றே அவன் ஆக்சிலேட்டர் அதிகமாக கொடுக்க,வண்டியை கட்டுப்படுத்த அவனை அணைத்தப்படி முன்னே க்ளச் மற்றும் ப்ரேக்கை பிடித்து வண்டியை நிறுத்தினாள்.....

தலைகவசத்தை கழட்டியவனின் தலையில் தட்டியவள் சிரிக்க அவளை பார்த்த அவனும் சிரிக்க பின்னிருந்து அவன் தோளில் தலைசாய்த்தவள் "இடியட்" என முனுமுனுக்க.....இருவரும் நண்பர்கள் என்ற வட்டத்தில் தங்களை நிறுத்திக் கொண்டாலும் சுற்றியிருந்தவர்களுக்கு காதலர்களாகவே தென்பட்டனர்.....

இவர்களின் அழகிய நிமிடங்கள் பத்திரிக்கையாளர்களின் பதிவி செய்ததை அறியாமல் இருந்தனர்.....

ரித்விக் முதலில் காதலை சொல்வானோ அல்லது அந்த படங்கள் அவர்கள் காதலை ஊருக்கு சொல்லுமோ!!!



💕💕💕💕💕💕💕💕💕💕💕

அடுத்த நாள் விடயலிற்கு பிறகு தன் வீட்டிற்கு செல்ல அனு தயாராக....இருவருக்குள்ளும் எந்த ஒரு உரையாடலும் இல்லாமல் இருந்தது.....

அவளை அவள் வீட்டின் அருகில் விட்டவனை பார்த்து "நம்ம கல்யாணத்தை பற்றி வீட்டில சொல்ல தைரியம் வந்தா மட்டும் என்ன கான்டக்ட் பண்ணு!!என்ன நமபர் சேஞ் பண்ண வெச்சுடாத" என கூறி சென்றாள்.....

வீட்டின் உள்ளே நுழைந்த அனுவை பார்த்து முறைத்த அவள் அம்மா.....அந்த பையன் யாரு??லிவ்விங் டுகெதரா என அவளை அறுவெறுப்பாக பார்த்தப்படி கேட்க....

அப்படியே சோபாவில் சரிந்தவளின் கண்களில் இருந்து நீர் வழிய....என்ன ஆச்சு???என்றவரின் மிரட்டலில் மயங்கி விழுந்தால்....

💕💕💕💕💕💕💕💕💕💕💕

பப்பில் இருந்த ஜீவன் மூன்றாவது சாட்சை குடிக்க....ஏய் மச்சா என்ன ஆச்சுனு சொல்லு!!!இப்போ எதுக்கு இவ்வளோ குடிச்சுட்டு இருக்க.....சாதனாவுக்கற தெரிஞ்சா என்ன நினைப்பாங்க??என்ற தன் நண்பனை பார்த்து வலியுடன் சிரித்தவன் அவளை ஏன்டா நான் இப்போ பார்க்கனும்...

இப்போதா என் லைப் எனக்கு பிடிச்சா மாதிரி போயிட்டு இருக்கு அதுக்கூட கடவுளுக்கு பிடிக்கலையா???

இப்போ சாதனாவுக்கு இதெல்லெல்லாம் தெரிய வந்தா எப்படிடா எடுத்துப்பா!!!என் பாஸ்ட அக்சப்ட் பண்ணிப்பாலா??என்கூட பேசாம பொய்டுவாளாடா என்றபடி கேட்ட கேள்வியே திரும்ப திரும்ப கேட்டவனின் நிலைத்தடுமாறி அவன் மேலே சாய்ந்தான்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro