5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்று பூங்காவில் அதன் பின் சலசலத்தபடியே இருவரும் நடந்து அங்கிருந்த ஊஞ்சல் சறுக்குமரங்களில் இன்னும் சிறுகுழந்தையாய் ஆடி மகிழும் குழந்தைகளை கண்டு ரசித்தபடி பேசிக்கொண்டிருந்தனர் .

சஞ்சீவ் அவள் கண்களில் ஊஞ்சலை கண்டு எழும் மின்னலை கண்டவன் " ஊஞ்சால்னா ரொம்ப புடிக்குமா ?"

என்று கேட்க

அவளோ "ஆமாம் சஞ்சீவ் ஆனா ஒரு குறிப்பிட்ட வயசுக்குமேல பார்க்ல ஊஞ்சல்ல விளையாட வெட்கமா இருக்குமா அதுனால விளையாடறத நிறுத்திட்டேன் . ஆனா ஆசையாவும் இருக்கும் " என்று கூற

அவனோ அவளை பார்த்தவன் " ஆசையா இருந்தா எதுக்கு வெட்கப்படணும் போய் விளையாடு " என்று கூற

அவளோ அவனை நோக்கி நக்கலான பார்வையை வீசி " பார்ரா ரூல்ஸ் ராமானுஜமா பேசுறது? " என்று கேட்க

அவனோ அங்கே காலியாக இருந்த ஒரு ஊஞ்சலுக்கு அவளோடு நடந்தவன் " பொது இடத்துல அடுத்தவங்க முகம் சுழிக்குறமாதிரி இல்லாத எதை வேணும்னாலும் செய்யலாம் தப்பில்ல " என்று கூற

அவளோ அதான என்று நினைத்தவள் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு அவனை நோக்கியவள் " தள்ளிலாம் விட மாட்டிங்களா ?" என்று கேட்க

அவனோ அவளை நோக்கி ஒரு நக்கல் பார்வையை வீசியவன் " கால் கடவுள் அதுக்கு தான் மேடம் குடுத்துருக்காரு நீங்களே உங்கள ஆட்டிக்கோங்க " என்று கூறியபடி அங்கிருந்த ஒரு மர பெஞ்சில் அமர்ந்து கொண்டான் .

அவள் சிரித்தமுகமாக சிறிது நேரம் ஆடியவள் பின் ஆசை அடங்கியதும் அவனை நோக்கி வர அவனும் புன்னகை நிறைந்திருந்த அவள் முகத்தை ஒரு நொடி கண்ணில் நிரப்பியபடி அவளுடன் நடந்தான். அவளை வீட்டில் வந்து விட்டவன் தனது சிறிய அறைக்குள் செல்லப்போக அவளோ அவனை நிறுத்தியவள் " சாப்டாச்சா சஞ்சீவ் ?" என்று கேட்க

அவனோ புன்னகையுடன் " ஏன் மேடம் சமைச்சு தர போறீங்களா ?" என்று கேட்க அவளோ ஒரு நொடி நாக்கை கடித்தவள் அவனை பார்த்து அசடு வழிய சிரிக்க அந்த பாவனையில் சிரிக்க துடித்த இதழை கட்டுப்படுத்தியவன் " பக்கத்துல இருக்குற messla தான் சாப்பிடுவேன் நான் பாத்துக்குறேன் " என்று கூற அவளும் ஒரு சிறு தலை அசைப்புடன் உள்ளே சென்றுவிட்டாள் .

தனது ஒற்றை படுக்கை அறைக்கு வந்தவன் முகமோ யோசனையில் சுருங்கி இருந்தது . சஞ்சீவ் " நானா இப்டி இவ்ளோ சீக்கிரமா ஒரு பொண்ணுகிட்ட வம்பிழுத்து பேசுனேன் ?" என்று ஆச்சர்யமாக நினைத்தவன் அந்த அறையின் ஜன்னலில் இருந்து பார்க்க அவள் கீழே ஒரு தெருநாய்க்கு உணவிட்டுவிட்டு அது அருகே வரும்பொழுது ஓட்டமெடுத்து வீட்டின் உள்ளே வந்து இரும்பு கதவின் வழியாக அது சாப்பிடுவதை எட்டிப்பார்க்கும் காட்சி பட இதழ் விரித்து புன்னகைத்தவன் " unique பீஸ் இவ " என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் இளைப்பாற துவங்கினான் .

அடுத்த நாள் காலையில் எழுந்தவன் அவனது அறையை ஒட்டி இருந்த மொட்டைமாடிக்கு ட்ராக் பாண்ட் டி ஷர்ட் சகிதம் ஜோக்கிங்கிற்கு ஏற்றவாரு வர அங்கோ அவனுக்கு முன் ஒரு யோகா பாயில் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தாள் அதுல்யா .

அவள் சூரிய நமஸ்காரம் செய்வதை ஆச்சர்யத்துடன் நோக்கியவன் அடுத்து நேரமாவதை உணர்ந்து அப்படியே கீழிறங்க அவளோ கண்கள் மூடி யோகாவை தொடர்ந்தபடி இருந்தாள். அவன் அரை மணி நேரம் ஜோகிங் முடிந்து வந்தபொழுது தான் அவளும் தனது யோகாவை முடித்து அவனை நோக்கி புன்னகைத்தாள் . அவனும் பதிலுக்கு புன்னகைத்தவன் சிரித்தபடி " யோகாலாம் தெரியுமா ?"

என்று கேட்க

அவளோ " ம்ம் தெரியும் டெய்லி one ஹௌர் பண்ணுவேன் பண்ணலேன்னா மிஸ்டர் ரமேஷ் கருத்தூசி போடுவாரு " என்று கூறியபடி அங்கே தனியாக ஒரு ஓரத்தில் வைத்திருந்த பிளாஸ்கில் இருந்து வர்ரதேநீரை தனக்கு ஊற்றிக்கொண்டவள் கைப்பிடி சுவற்றில் சாய்ந்தபடி அவனிற்கு வேண்டுமா என்று கேட்க அவனோ சிறிது தயங்கியவன் பின் தனது அறையில் இருந்து தனது கப்பை எடுத்து வந்து ஊற்றிக்கொண்டான் .

சிரித்தபடி சூரியன் மீது மெதுவாக உதயமாவதை பார்த்தவள் " எனக்கு இப்டி யோகா பண்ணிட்டு டீ குடுச்சுட்டே sunrise பார்க்க ரொம்ப புடிக்கும் .உங்களுக்கு ?" என்று கேட்க

அவனோ அந்த சூரியஉதயத்தை அவனறியாமலே ரசித்துக்கொண்டிருந்தவன் "இதுவரை இப்டி நின்னு ரசிச்சதில்ல சோ பெருசா ஒப்பீனியன் இல்ல " என்று கூற

அவளோ " ஏன்? எந்திரிச்சோனே பால்பாக்கெட் போட போயிருவீங்களா " என்று சிரித்தபடி கேட்டவள் தேநீரை அருந்த

அவனோ சிரிப்புடன் " பால்பாக்கெட் போட்டதில்லை ஆனா நியூஸ்பெபேர் போட போயிருவேன் ...." என்று கூறியவன் அதன் பின்பே தான் உளறியதை நினைத்து அவள் புறம் திரும்ப அவளோ கலக்கமாகவோ அல்லது பரிதாபமாகவோ அவனை பார்ப்பாள் என்று நினைத்தால்

அவளோ " ஹே சூப்பர் சைக்கிள் ல காலைலயே ஊரை சுத்தலாம்ல . என் friendslaam கூட சிலர் செய்வாங்க சும்மேற் ஹொலிடேய்ஸ்ல . நா ஆனா செஞ்சதில்ல " என்று கூற அவன் இது வரை இப்படி கூறும்பொழுது அறிவுரையோ இல்லை பரிதாப முகத்தையே பார்த்து பழகியவனுக்கு இந்த காலையிலேயே ஊர் சுற்றலாம் என்று அவள் கூறிய பதில் சிரிப்பாக இருந்தது .

அவன் கேட்காமல் அமைதியாக நிற்பதில் " அட கேளுங்க என் னு " என்று கேட்க

அவனும் சிரிப்பை அடக்கியபடி " ஏன் " என்று கேட்க அவளோ "ஏன் நா எனக்கு சைல அந்த baby supportoda சேர்த்து இருக்குற cycleah கூட ஓட்ட தெரியாது . பொதக்ன்னு விழுந்து வாரி மானத்தை வாங்கிப்பேன் " என்று கூற சன்ஜீவோ அடக்கமாட்டாமல் சிரிக்க துவங்கிவிட்டான்.

அவளோ அவன் சிரிப்பதை உறைந்த புன்னகையுடன் பார்த்தவள் மனம் என்னவோ அவன் கூறிய விஷயத்தால் கலங்கி தான் போனது . அவனுக்கு பரிதாபம் பிடிக்காது என்று ஏனோ தோன்றியதால் அவனை சிரிக்க வைத்தவள் அதில் வெற்றியும் கண்டிருக்க அவன் சிரிப்பதில் ஏதோ நிறைவாக உணர்ந்தாள்.

சஞ்சீவ் " எப்படி இப்டிலாம் யோசிக்கிற ?"என்று கேட்க

அவளோ " அதுவா அய்யாசாமி ஆளு மட்டும் வளராம அறிவும் வளந்தா தான் இப்டிலாம் யோசிக்க தோணுமாம் அது உன்ன மாதிரி அம்பிக்குலாம் புரியாது " என்று கூறியபடி அவன் கையில் சிக்காமல் ஓடிவிட்டாள் . அவள் ஓடிய திசையை புன்னகையுடன் பார்த்தவன் பின் அந்த கைப்பிடியில் நின்று சூரிய உதயத்தை உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்க்க அவளோ கீழிருந்து அவனின் பிம்பத்தை எட்டிப்பார்த்தவள் ஒரு வாஞ்சையான புன்னகையுடன் உள்ளே சென்றாள்.

கண்களை மூடி இருக்கையில் உதட்டில் உறைந்திருந்த சாய்ந்திருந்த சஞ்சீவ் எங்கோ கேட்ட நாயின் குறைக்கும் சத்தத்தில் தான் சுயத்தை அடைந்தான் . கண்கள் திறந்து பார்க்க அந்த பூங்காவில் ஒன்றிரண்டு பேரை தவிர யாரும் இல்லை . கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தவன் அதில் 6 :45 என்று நேரத்தை பார்த்துவிட்டு உதட்டை சுழித்தவன் இனி அவள் இங்கே வரமாட்டாள் என்று புரிந்து போக சிரித்துக்கொண்டவன் கெஞ்சுனா மிஞ்சுற ? வரேன் டி என் பட்டர் பன். என்று நினைத்தவன் செல்லும் வழியில் வண்ண வண்ண ஒளியுடன் நடக்கும் ஒரு வாத்து பொம்மையை பார்த்தவன் அது மனதை ஈர்க்க உடனே வாங்கிக்கொண்டான் அதனுடன் ஒரு சோப்பு பபிளயும் வாங்கிக்கொண்டான் சிரிப்புடன் .

அந்த ஆல்பத்தில் மூழ்கி அவனுடனான நினைவுகளில் மூழ்கி இருந்தவளை கலைத்ததென்னவோ வாயில் மணியின் அழைப்பு சத்தம் தான் . கண்ணில் தன்னை அறியாமல் வழிந்திருந்த கண்ணீரை துடைத்துக்கொண்டவள் மணியை பார்க்க அதில் மாலை ஏழு மணி ஆகி இருந்தது . முகத்தை துடைத்துக்கொண்டவள் வாயில் கதவை திறக்க அங்கே புன்னகையுடன் நின்றிருந்தாள் மேகா அவளை பார்த்து புன்னகைத்தவள் அங்கே அவள் பின்னே ஆவலுடன் பார்க்க மேகாவோ சிரித்தவள் " உள்ள கூப்பிட மாட்டியா டி " என்று கேட்டாள்.

அவளை பார்த்து சிரித்தவள் " ஏன் கூப்பிடலேன்னா வர மாட்டியா?" என்று கேட்க அங்கே அவளை அடுத்து ஒரு நெடிய ஆடவன் கையில் ஒரு உறங்கிய குழந்தையுடன் நுழைந்தான் .

அதில் கண்கள் மின்ன சிரித்தவள் " சக்தி அண்ணா .. என்று அழைத்தபடி கையில் இருந்த குழந்தையை பார்க்க அவனோ " மேடம் நெத்துலேந்து ஒரே ஆட்டம் அதான் தூங்கிட்டாங்க வரப்போவே " என்று கூற அவளோ பஞ்சுப்பொதி போல் வாயை லேசாய் பிளந்த படி தலையில் அந்த சுருளில் சுருளான கேசத்தில் இரண்டு குடும்பி இடப்பட்டு உப்பிய கன்னத்திலிருந்து உமிழ்நீர் வடிய நீண்ட இமைமுடி கன்னத்தை தொடுமாறு உறங்கி போய் இருந்த 2 .5 வயது பெண் குழந்தையை வாஞ்சையுடன் நோக்கினாள்.

அவள் தலையை வருடியவள் சக்தியிடம் திரும்பி " உள்ள படுக்க வச்சுருங்கண்ணா இவளை கை வலிக்க போகுது " என்று கூற அவனும் உள்ளே நுழைந்து குழந்தையை அங்கு வரவேற்பறையில் இருந்த சிறிய திவானில் படுக்கப்போட்டவன் மேகாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் . அவன் மேகாவின் கணவனும் அதுல்யாவின் உடன்பிறவா சகோதரனுமாகிய சக்தி .

அதுல்ய " கோபவேயா டீயா " என்று கேட்க

சக்தியோ " என்ன வேணா போடுமா தங்கச்சி ஆனா உன் friendah மட்டும் ஹெல்ப்புக்கு கூப்டறாத coffeendra பேர்ல கழனித்தண்ணியை ஊதுறா " என்று கூற

மேகாவோ அவனை கனல் தெறிக்க முறைத்தவள்" நீ வீட்டுக்கு வா கழனித்தண்ணி ஊத்தலாமா பால் ஊத்தலாமான்னு நா முடிவு பண்ணிக்குறே " என்று கூற அதுல்யாவோ சிரித்தபடி அடுப்படிக்குள் சென்று விட்டாள்.

அவள் செல்வதை ஒரு பெருமூச்சுடன் பார்த்த சக்தி " இன்னும் பிடிவாதத்துலயே எதை எல்லாம் தொலைக்க போறான்னு தெரில " என்று கூற

மேகாவோ அவனை முறைத்தவள் " ஓஒ அப்போ சஞ்சீவ் பண்ணதுலாம் ஒண்ணுமே இல்லையா ?" என்று கேட்க

சக்தியோ இடவலமாய் தலை அசைத்தவன் " அவன் பாவம்டி அதெல்லாம் உங்களுக்கு சொன்ன புரியாது " என்று கூற மேகலாவும் சக்தியுமோ வாசலில் நிழலாடுவதை உணர்ந்து வெளியில் பார்க்க அதுல்ய அப்பொழுது தான் coffeeyudan வரவேற்பறைக்கு வந்தவள் சத்தியமாக சஞ்சீவை அவளது வீட்டில் அந்த நேரத்தில் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை . சஞ்சீவ் அவளை நோக்கி புன்னகைக்க அனைவரின் கருத்தையும் கவர்ந்தது அப்பா என்று ஓங்கி ஒலித்த ஒரு குழந்தையின் குரல் .

கண்ணில் பரவசம் போங்க அவன் குரல் வந்த திசையில் திரும்ப அந்த திவானிலிருந்து ஒரு தலையணையை கீழே போட்டு அதில் மெதுவாக இறங்கி அவனை நோக்கி தனது தத்தக்க பொத்தக்கா நடையில் ஓடி வந்தாள் அவனவளின் ப்ரதிபிம்பமாய் அவனின் அணுவிலிருந்து அவனவளின் கருவில் உதித்த அவர்கள் 2.5 வயதான மகள் சிவாத்மிகா. குழந்தையை வாரி அணைத்துக்கொண்டவன் கண்களில் மெலிதாய் தோன்றிய நீர்படலத்துடன் மனைவியை பார்த்தவன் பார்வை அவளின் பின் சுவற்றில் பெரிதாய் தொங்கிக்கொண்டிருந்த அவர்களின் திருமண புகைப்படத்தில் நிலைத்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro