காலத்தின் மாயம் நீ....
எனை ஆட்கொண்ட கற்பனையின் உச்சம் நீ....
அடி சுந்தரியே!
உன் நாவினில்....
முதலில் நஞ்சை வைத்து
பின் அமுதை வைத்தவள் அல்லவோ நீ!
நின்றன் காதல் நாடகம் அறிந்திட இத்தனை நாட்கள் தான் ஆனதே?
அந்தி சாயும் நேரத்தில்....
சிறு மழை சாரலிடும் பொழுதிலினில் ....
விழியேங்கும்....
வழியெங்கும்....
மின்மினிகள் துணை கொண்டு....
செல்வோமா இரவு நேரப்பயணம்....
உன் வேல்விழி வழி நான் கண்ட சொர்க்கம்....
இப்புவி மீது நான் பெற்ற இன்பம்....
நீர் இன்றி அமையாது இவ்வுலகு எனில்,
நீ இன்றி அமையாது என் உலகு....
______________________________________
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro