உன் தோளில் அமரும்போதெல்லாம்
புது புது உலகம் கண்டேன்;
உன் அறிவுரைகள் கொண்டு என் வாழ்க்கைக்கு அர்த்தம் உணர்ந்தேன்;
கடவுள் இல்லை என நான் நினைத்தபோது எல்லாம்
உன் முகம், செயல்கள் காண்பித்து அது பொய் என அறிந்திடச் செய்தாய்;
உன் நகலாய் இப்புவிக்கு வந்த என்னை,
நகல் உடைத்து என் தனித்துவம் விளக்கினாய்;
என் தேவைகள் நானே அறியும் முன்னே , பலர் உணர சமயம் பார்த்து பல மாயம் புரிந்தாய்;
தாயின் அன்பு வெளிப்படையாய் தோன்றிடும் போது,
தந்தை அன்பு மறைந்து அழகாய் பேசிடக் கேட்டேன்;
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro