அனிச்சம் பூ 39

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ணமக்கள் அமர்ந்த , மலரால் அழகான மகிழ்வுந்து , கோவை நோக்கிச்செல்ல , ஜீவி்காவின் ,

ழன்ற மனமும் , உறங்காத விழிகளும்
அயர்ந்த உடலும் , அமைதியைத் தேட ,
முன்னோக்கிச் செல்லும் வேகமதில்
பின்னோக்கிச் செல்லும் பிம்பங்கள் ,
கண்நோக்கியே காண்கின்ற காட்சிகளில்
மண்ணூன்றி நிறக்கும் காற்றாலைகள் ,
விண்பார்க்கும் தென்னைகளென ,
மின்னலெனக் கடந்துவிட்ட நிகழ்வுகளில் ,
காற்றோடு சென்ற குறுங் கதைகளில்
கவலை மறந்த நிலை பெற்றாள் ...

செந்தூவின் நினைவோ ரஷ்மியை நினைத்து மறுகியது,

அவள் அங்கு என்ன செய்கிறாளோ ? ராகுல் அண்ணாவின் உடல்நிலை எப்படி இருக்கிறதோ ? இவற்றையெல்லாம்விட நான் ஜீவியைத் திருமணம் செய்தது தெரிந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பாள் என்று ,

நினைவுகளைச் சிந்தித்து
நிகழ்வுளை நிந்திப்பதும் ,
துன்பங்களைச் சந்திப்பதுமாய்
இருக்கிறது அவன் மனம் .
நடந்த துயரம் புரியவில்லை ,
கடந்த தூரம்கூடத் தெரியவில்லை ...

அதிர்வேட்டின் சத்தத்தில் ,
துணுக்குற்றுக் கவனித்தப்போது
கோவை இல்லம் வந்திருந்தார்கள் ,

வாணவேடிக்கை ஓங்கி ஒலிக்க ,
வாசலில் ஆரத்தி காத்திருக்க
வாழையும் தாழையும் வரவேற்க்க
வண்ணக்கோலம் வரைந்திருக்க
வஞ்சியவள் வலப்பாதம் தடம்பதிக்க
வந்திருப்போர் வாழ்த்தி நிற்க்க
வணங்கியே நின்றாள் - அவள் தீபமதையேற்றி ...

கொல்கட்டாவிலிருந்து கிளம்பிய ஆகாஷிம் வினயும் பீளமேடு வந்தவுடன் , ஆகாஷ் செந்தூரிக்கு அழைக்கவும் செந்தூரி இருவரையும் நேராகக் கோவை வீட்டுக்கு வரச்சொல்லி இருந்ததால் இருவரும் திருப்பூர் செல்லாமல் கோவையிலேயே இருந்துவிட்டனர் .

செந்தூவிற்கோ , ஆகாஷையும் , வினயையும் எதிர்கொள்ளும் தயக்கம் ஒருபுறமும் , ரஷ்மியைப் பற்றி அறியும் பரிதவிப்பு ஒரு புறமுமாய் அவனை வதைக்க , இவனின் நிலைமை புரிந்த , வினயும் , ஆகாஷிம் , அருகில் வந்து ஆறுதலாய் தோள் பற்ற , வினயின் கரம் பற்றியச் செந்துவின் இன்னலென இருந்த இயலாமையை அவன் பார்வையில் உணர்ந்த வினய் , விடு செந்து , பார்த்துக்கலாம் ,
எங்களுக்கும் கொல்கட்டால இருந்த வரைக்கும் உன் கல்யாணவிஷயம் தெரியாது , இங்க ஏர்போர்ட் வந்தவுடன்தான் , செந்தூரி அக்கா கால் பண்ணிச் சொன்னாங்க , எங்களுக்கும் அப்பொழுதான் தெரியும் , நீ மனசப் போட்டு குழப்பிக்காம ரிலாக்ஸ்டா இருடா , என்றான் ,

மதிய விருந்து , முடிந்தும் , மண்டபத்திலிருந்து வந்த உறவுகளின் வருகை முடியவில்லை , இதில் இடை இடையே , உடை மாற்றிவிட்டு , ஃபோட்டோ , வீடியோ எனத் தொல்லை வேறு , செந்தூவின் ஒட்டுமொத்தப் பொறுமையும் கரைந்துக் குறையத்தொடங்கி இருந்தது ,

மணித்துளிகள் சிறிது சிறிதாய் நகர , வீடும் சற்றே அமைதி நிலைக்கு வந்திருந்தது , செந்தூவிற்கும் ஜீவிக்கும் , ஏதோ சற்றே கூட்டம் குறைநதது போல் தோன்றவும் , செந்தூரியே வந்து இருவரையும் ஒய்வு எடுக்குமாறு கூற ...

செந்துவோ விட்டால் போதும் என்று , வினயைய்த் தேட ,

வாசலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்த வண்ணம் தினேஷ் நிர்மல் , வினய் மூவரும் பேசிக் கொண்டிருக்க , தானும் அங்குசென்று நான்காவதாய் அமர்ந்தவன் , தினேஷின் கையிலிருந்த ஃபோனைப் பார்த்ததும் அதை வாங்கி , ரஷ்மிக்கு கால் செய்வதற்க்காக அந்த இடத்தை விட்டு நகர முயல , அருகிலிருந்த நிர்மலோ அவன் கையிலிருந்த ஃபோனை லாவகமாக தட்டிவிட்டு அது விழுவதற்குள் பிடித்து விட்டு , செந்துவிடம் ,

" சொல்லு செந்து யாருக்குக் கால் பண்ணப் போற ? ரஷ்மிக்குத் தான ? இப்போ பேசி என்னடா சொல்லப்போற ... நான் ஜீவிய கல்யாணம் பண்ணீட்டேன்னு சொல்லப்போறீயா? சொல்லுடா என்னசொல்லப்போற ...

" தெரிலடா என்னசொல்றதுன்னு தெரில .. ஆனா என்னோட மனசு ஏனோ உறுத்திக்கிட்டே இருக்குடா ...என்று கூற ..."

" இங்கபாரு செந்து நடந்த எதையும் உன்னால மாற்ற முடியாது ... ஆனா இனிவர்ற பிரச்சனைய நீ தான் ஃபேஸ் பண்ணனும் , கொஞ்சம் டைம் எடுத்துக்க , நிதனாமா யோசி , அப்புறமா ரஷ்மீட்ட பேசு ,
உடனே அவசரப்படாதடா , இப்போத்தான் மேரேஜ் முடிஞ்சிருக்கு , எல்லாரும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்காங்க , இந்தநேரத்தில வேணாம் செந்து ப்ளீஸ் ... " என்றான் நிர்மல் ,

அதைக் கேட்ட செந்து சற்றே அமைதியாக ,

" சரி டா , நீங்க இப்போ ஊருக்கு கிளம்ப வேண்டாம் , மாணிங் போலாம் " , என்று கூற ,

தினேஷ் , "நீ போ ன்னு சொன்னாலும் , நாங்க போற ஐடியால இல்ல ... அங்கிள் நாளைக்குத்தான் கிளம்பச் சொல்லிருக்கார் , நாங்க மூனுபேரும் ஹோட்டல்லதான் நைட் ஸ்டே பண்ணப் போறோம் .. " என்றான்

செந்து , " சரி வெயிட் பண்ணுங்க ..நான் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவேன் என்று கூறிச்சென்றவன் , குளித்து முடித்து வெளியே செல்ல ஆயத்தமாகும் பொழுது , ஜெயந்தி பார்த்துவிட , " செந்து எங்கடா கிளம்புற ? " எனக்கேட்க ,

செந்து " ஹிம் ...  வினய் , தினேஷோட , ஹோட்டலுக்குப் போறேன் , ஏன் மா ? " ,

நீ எங்கவேணாப் போ .. ஆனா ,  நம்ம அருணாச்சலம் தாத்தா வீட்டுக்குப் போயிட்டு அங்க நீயும் ஜீவியும் சாமி கும்பிட்டு விட்டு அதற்குப்பிறகு நீ போ செந்து , எல்லாரும் கிளம்பிட்டோம் , எனக்கூற , சலித்துக்கொண்டாலும் , மறுக்கமுடியாதவனாய் , வாசலுக்குச் சென்று , மூவரையும் அனுப்பிவிட்டு தான் பின்னே வருவதாகச் சொல்லி விட்டுவந்தான் ,

லீலாவதிக்கும் ராஜாங்கத்திற்க்கும் தன் பேத்தியே , வீட்டின் மருமகளாய் வந்தது அளவற்ற ஆனந்தம் தந்தது ,
செந்துவோ , தாத்தாவிற்க்காக , காதலித்தவளை விட்டுவிட்டு , மாமன் மகளை கரம்பிடித்திருக்கிறான் ,
ஜீவியோ தான் கேட்டுவிட்ட காரணத்திற்காகவும் , ஒட்டுமொத்த குடும்பத்திற்க்காகவும் , அத்தை மகனை ஏற்றுக்கொண்டிருக்கிறாள் , இதைவிட வேறு என்ன வேண்டும் ? ,
பெரியவர்கள் இருவருக்கும் , வீடே விழாக்கோலம் பூண்டதாகத் தோன்றியது , லீலாவதியோ தன் மருமகள் ஜெயந்தியை அழைத்த வண்ணம் இருந்தார் , ஜெயந்திக்கோ நிற்கவும் நேரமில்லாமல் இருந்தது...

லீலாவதி , 

" ஜெயந்தி ...
ஜீவி , மதியம் சரியாவே சாப்பிடவில்லை , ஒரு டம்ப்ளர் பாலாவது அவளுக்கு குடிக்க கொடுமா ...

" ஹம்... சரி அத்தை.. "

" ஜெயந்தி ... ,
பாக்கெட்பால் வேண்டாம் ,
ராமுவ பசும்பால் கரந்து வைக்கச் சொன்னேன் , அதைக் காய்ச்சிக் கொடும்மா .. "

" ஹம்ம்... சரி அத்தை .. "

" ஜெயந்தி ...
ஜீவிக்கு தலையில் வைப்பதற்க்கு , தோட்டத்தில் இருக்கிற ஜாதிமல்லியைப் பரித்து கட்டிவைக்க சொல்லி இருந்தேனே ... பூக்கட்டியாச்சான்னு பாரும்மா .... "

" ஹம்ம்... சரிஅத்தை.. "

" ஜெயந்தி ...
செந்துவுக்கும் ஜீவிக்கும் , திருஷ்டிக் கழிக்கப் பூசனிக்காய் எடுத்து வைக்கச் சொல்லியிருந்தேனே , எடுத்து வச்சிருக்காங்களான்னு பாரும்மா ... "

" ஹம்ம்... சரி அத்தை .. "

லீலாவதியிடம் , ஜெயந்தியின் நிலைமையே இப்படி என்றால் , வேலைக்காரர்களின் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது ...

இதையெல்லாம் ஹாலி்ன் சோபாவில் இருந்து அமைதியகப் பார்த்த வண்ணம் இருந்த பாலா , ஜெயந்தியைப் பார்த்து கேலியாகப் புன்னகைக்க ... ஜெயந்தியோ போகிற போக்கில் பாலாவின் தலையில் தட்டிவிட்டுப்போக ...
அதற்கும் சேர்ந்தே அட்சதை கிடைத்தது லீலாவதியிடம் ,

" ஏம்மா ஜெயந்தி , உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன் , இப்படி தலையில அடிக்கக் கூடாதுன்னு செந்துவையும் , எப்பப்பார்த்தாலும் இப்படித்தான் தலையில தட்டிக்கிட்டே இருப்ப .." என்றார் .

ஜீவி குளித்து முடித்து தன் நிறத்திற்க்குப் பாந்தமாய்ப் பொருந்துமாரு ,
பீச் வண்ணப் புடவையில் வந்தாள் , சற்றே ஈரப்பதமான கூந்தல் கற்றைகள் விசிறியென விரிந்திருந்தது அதில் , இரு காதின் ஓரமாய் மெல்லிய கற்றைகளை எடுத்து நடுவில் முடிந்து பட்டாம்பூச்சியென கிளிப் இட்டிருந்தாள் , நெற்றில் முத்தைப்போன்ற சிறிய பொட்டை ஒட்டியிருந்தாள் ,

அவள் வருவதைப் பார்த்த செந்தூரனுக்கு ...

கனகப்பூக்கள் சேர்த்துத் திரட்டிச் செய்த சிற்ப்பம் நடந்து வருவதாய்த் தெரிந்தது , இவள் புடவையைக் கட்டிக்கொண்டாளா ? இல்லை புடவையே இவளை ஆசைப் பட்டுச் சுற்றிக்கொண்டதா ? என்று தோன்றியது ,

எப்பொழுதும் பூக்கள் பிரின்ட் செய்த ஸ்கேர்ட் அன்ட் டாப்புடன் சுற்றித்திரிபவள் , இன்று காட்டன் புடவையில் பெரியமனுஷியாய் வந்துநிற்கிறாள் என்று நினைத்துக்கொண்டிருந்தான் ....

ஜெயந்தி தன் மருமகளின் அந்த எளிமையான அழகைக் கண்டுகளித்தவள் , ஜீவியை அழைத்து அவளது வகிடில் குங்குமம் வைத்து திருமாங்கல்யத்திற்க்கும் குங்குமம் வைத்து விட்டு , கட்டிவைத்திருத்த ஜாதிமல்லிச் சரங்களை அவள் தலையில் சூடிவிட்டாள் ,

அதுவரைப் பொறுமை காத்தச் செந்தூரனுக்கு அதற்கும் மேல் பொறுமையில்லை அம்மா கிளம்பலாமா ? என்றான் ,

இதோ ஒரு நிமிஷம்டா , எனக்கூறிவிட்டு ஜீவி போய் உட்காரும்மா , நான் இதோ பால் எடுத்துட்டு வாரேன் குடிச்சுட்டுக் கிளம்பலாம் , என்றவள் உள்ளே சென்று , பாலை எடுக்கப் போவதற்க்குள் , லீலாவதியே பாலைக் கொண்டு வந்திருந்தார் ,
ஜீவி கையில் பாலைக் கொடுத்துவிட்டுத் தன் பேத்தியை தன் கண்களில் நிறைத்தவர் ,
" என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு " , என்று ஜீவியின் முகத்தை தன் கரங்களால் சுற்றி திருஷ்டி கழித்தார் ,

சற்று நேரத்திற்கெல்லாம் அருணாச்சலத்தின் வீட்டின் வாசலில் அனைவரும் நிற்க்க மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ,
செந்திலின் மனைவி சுரபி மற்றும் ,
கணேஷின் மனைவி ப்ரியசகி , ஒரு முறையும் , அஸ்வதி அனன்யாவும் ஒரு முறையுமாக ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்க ,
ஜீவிகாவையும் செந்துவையும் தம்பதி சகிதமாகப் பார்த்த அருணாச்சலத்திற்க்கு உள்ளம் பூரித்தது ,
ஜீவியும் செந்துவும் ஆளுக்கொரு புறம் அருணாச்சலத்தின் கைகோர்த்து அணைத்துக்கொள்ள தன் பேரனையும் பேத்தியையும் வீட்டிற்க்குள் அழைத்துச்சென்றார் ,

வீட்டின் முற்றம் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் , பாலா , ஜெயந்தியின் தாய் அஞ்சுகத்தின் நிழற்படம் சந்தனமாலையும் , மலர் மாலையையும் தாங்கி நின்றுகொண்டிருந்தது ,
அங்கே வணங்குவதற்க்காக , ஜீவியும் செந்துவும் நிற்க ,
ஜெயந்தி ஜீவிகாவிடம் தீபம் ஏற்றச்சொல்ல எத்தனிப்பதற்க்குள் ,
செந்து பழக்கதோஷத்தில் அங்கு இருந்த வத்திபெட்டியெடுத்துத் தீபம் ஏற்றிவிட்டு , ஊதுபத்தி ஏற்றி , வணங்க ஆயத்தமாகி இருந்தான் , இருவரும் அஞ்சுகத்தின் முன் விழுந்து வணங்க அந்த நிழற்படத்தில் இருந்த மாலையில் உள்ள மலர்கள் செந்துவின் மீது உதிர்ந்தது ... இது , காற்றுவீசியதால் கூட உதிர்ந்திருக்கலாம் , ஆனால் ஜெயந்திக்கோ தன் தாய்தான் தெய்வமாக நின்று தன் மகனையும் மருமகளையும் ஆசிர்வதிப்பதாகவே உணர்ந்தார் ,
ஆனால் செந்தூவுக்கோ எப்பொழுதும் இங்குவந்து வணங்கும் போது கிடைக்கும் நிம்மதி இன்று ஏனோ குழப்பமாக மாறியிருந்தது ... அவனையும் அறியாமலே கண்கள் கலக்கமடைந்தது ...

ஜீவிகா , "அஸ்வதி , அனி , இரண்டுபேரும் இங்கேயே இருந்துட்டீங்களா ? " என்று கேட்க ,

" ஹம் தேவி அத்தை கூட வந்தோம் , அப்புறம் ஈவ்னிங் நீங்க இங்கதான் வருவீங்கன்னு அப்பா சொன்னாங்க , அதான் இங்கேயே இருந்துவிட்டோம் ... அக்கா " எனக்கூற ...

ஜெயந்தி , " அனி அஸ்வதி இனி இரண்டு பேரும் ஜீவிய அண்ணி ன்னுதான் கூப்பிடனும் , அக்கான்னு கூப்பிடக்கூடாது ..
எனக்கூற ..

" போங்க பெரியம்மா திடீர்னு எப்படி அண்ணின்னு கூப்பிடறது .. அக்கான்னே கூப்பிடறோம் பெரியம்மா ... "

" சரி உங்க இஷ்டம் ... " என்றவர் அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார் ,

எப்பொழுதும் அமைதியை மட்டுமே உணர்ந்த வீடு இன்று , உறவுகளால் நிறைந்து , பேச்சும் கூச்சலுமாய் கலகலப்பாக இருந்தது ,

ஜீவி செந்தூரி , ப்ரியசகி , அஸ்வதி , அனன்யா இவர்கள் ஒருபுறமும்

தேவி , ரேவதி , ஜெயந்தி , சுரபி என இவர்கள் ஒருபுறமுமாக ,
பேசுவதற்க்கு சுவரஸ்யமாக ஏதோ ஒன்று கிடைத்து விடும் போல ...

பாலா , ஆகாஷை கணேஷிற்கும் , செந்திலுக்கும் , அறிமுகப்படுத்த , பரஸ்பர விசாரிப்புக்களுக்குப் பிறகு , உரையாடல் ரஷ்மியைப் பறறித் திரும்பியது ...

செந்துவோ , யாரிடமும் முகம்கொடுத்துக்கூட பேசமனமின்றி , அவனது அறையில் , குழப்பத்தில் தவித்துக்கொண்டிருந்தான்

ஆகாஷ் , கணேஷிடம் " ராகுல் ஆக்ஸிடன்ட் கேஸ் பத்தின டீட்டைடைல் கேட்டிருந்தீங்க போல , அப்புறம் , ஜெயராம் மாமாவும் கொல்கட்டால இருக்க அவங்க ஃப்ரன்ட் மூலமா ப்ரஸ்ஸர் கொடுத்துருப்பாங்க போல , அதோடு , ரஷ்மி அப்பாவும் , ஆக்ஸிடன்ட்ல சந்தேகம் இருந்ததால அவரும் புஷ் பண்ணிருப்பாரு போல , போலிஸ் சைட்ல இந்த ஆக்சிடன்ட் கேஸ்க்கு , அதர் ஸ்டேட்ல இருந்துகூட ப்ரஸ்ஸர் கொடுக்கறாங்கன்னு பேசிட்டு இருந்தாங்க என்றான் ...

சிறிது நேரத்திற்கெல்லாம்
இரவு உணவு வேலை என்பதால் டைனிங் ஹாலிலும் கிச்சனிலும் அனைவரும் இருக்க , ஜீவி மட்டும் முற்றத்தை அடுத்துள்ள பெரிய ஹாலில் இருந்த உஞ்சலில் அஸ்வதியோடு அமர்ந்துப் பேசிக்கொண்டிருந்தாள் ,
அஸ்வதி சிறிது நேரத்திற்குள் சென்றுவிட ,
ஜீவிக்கோ , இரண்டு நாட்களக உறங்காத விழிகள் , தூக்கத்தை துணைக்கு அழைத்துத் துயில ஆரம்பித்திருந்தது ,
அந்த தேக்கால் செய்யப்பட்ட பலகைகொண்ட பழங்கால ஊஞ்சலில் , தன் இருகை விரல்களையும் கோர்த்து கண்ணத்திற்கு அடியில் கொடுத்து , உறங்கிக் கொண்டிருந்தாள் ,

தன் அறையில் இருந்த செந்தூரன் இதற்கு மேலும் அங்கே நேரம் செலவிட விரும்பாமல் ஹோட்டலுக்குச் செல்ல ஆயத்தமானான் , பாலாவிடமும் ஜெயந்தியிடமும் சொல்லிவிட்டு கிளம்பி வந்து முற்றம் கடக்க எத்தனித்தவன் ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருந்த ஜுவியைப் பார்த்தான் , ஜிவியோ திரும்பிப்படுபதற்காக அசைய ..

இந்தப்பலகை ஊஞ்சலில் உறங்கிப் பழக்கமில்லதா ஜீவி திரும்பிப் படுக்கும் பொழுது விழுந்துவிடுவாளோ எனப் பயந்து , செந்தூரன் வேகமாக அருகில் சென்று , அவளை எழுப்ப ...
அவளுக்கோ அதெல்லாம் கனவில் நடப்பது போல் இருந்திருக்கும் போல அவன் கரங்களையும் இழுத்து தன் இருகரங்களுக்குள் வைத்துத் தூங்க ஆரம்பித்தாள் ,

செய்வதறியாது ... இருந்தவன் , அறையில் இருந்த அஸ்வதி அனியை அழைக்க , இருவரும் ஏ ஆர் ரகுமானின் இசையை அதிரவிட்டுக் கொண்டிருந்ததால் அவர்கள் காதில் விழவில்லை போலும் ,

அவன் கைகளை அவளின் கண்ணத்திற்க்குப் பெற்றவள் அதை விடும் எண்ணமில்லாது உறங்கிக் கொண்டிருக்கிறாள் , யாரயவது பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்றால் தான் சற்றே நகர்ந்த நேரத்தில் திரும்ப முயற்ச்சித்து விழுந்து விட்டால் என்ன செய்வது என , அவளருகிலேயே மண்டியிட்டு அமர்ந்தவன் அவளது அழகிய முகத்தில் சலனமில்லாத நித்திரையைக் கண்டான் ,

அந்தி சந்திர ஒளியாய்
முந்தி வத்திட்ட இரவாய் ,
சிந்தியே நின்ற மழையாய்,
சலனமில்லாதொரு நதியாய் ,
வீசியே நின்றுவிட்டக் காற்றாய்,
பூசை முடிந்து பூட்டிய ஆலயமாய் ,
அமைதியான உறக்கதில் அழகாய் ஆழ்திருக்கிறாள் ,

அஸ்வதியின் அறையில் இருந்து ரஹ்மானின் இசையில் சையது பாடிய கவர் சாங் ஒலித்துக்கொண்டிருந்தது ...

கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு

சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவளோ

மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட

அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு ...

ஏனோ செந்துவுக்கு அந்தப்பாடல் அவளுக்காகவே பாடப்பட்டதுபோல் தோன்றியது ,

https://www.youtube.com/watch?v=v6UwIXyVFq4

அவள் கரங்களிலிருந்து தன் கரங்களை விடுவித்தவன் அவளின் மீது கவனம் வைத்தவாறு எழுந்துபோய் கபோர்டில் உள்ள தலையணையையும் விரிப்பையும் எடுத்துவந்து , விரித்துவிட்டு அவளை கைகளில் ஏந்தி விரிப்பில் கிடத்திவிட்டு , நிமிரப்போனவன் கண்களில் அவளின் திருமாங்கல்யம் பட , ஏனோ அவன் மனம் தீ தொட்ட விரலாய் , துணுக்குற்றது , குற்ற உணர்ச்சியில் தவித்தது , நான் தவறு செய்து விட்டேனா ? இந்தத் திருமணம் நடந்திருக்கக் கூடாதோ?

இவள் என்னைப் பற்றி
என்ன எண்ணுகிறாள் ,
இவள் மனதில்
நான் சரியா ? தவறா ?
உறவா ? பகையா ?
நான் யாரடி உன் மனதில் ...
நான் செய்த பிழைக்காய்
நீ தந்த விலையோ
இந்த மாங்கல்யம் ?...

கேள்வியாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் .... ,

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro