அனிச்சம் பூ 56

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ரவின் இருளைச் சிறிது சிறிதாய்க் கொள்ளை கொண்ட வெள்ளை விடியல் ஆரம்பித்திருந்தது , செந்து கொல்கட்டாவின் ஒபராய் ஹோட்டலின் அறையின் சாளரத்தின் வழி இலக்கற்ற வெற்றுபார்வையைப் பதித்திருந்தான் , அவன் சிந்தனை முழுவதும் அவன் கேள்விபட்டு உறுதிபடுத்தியச் செய்தியிலேயே இருந்தது ,

அந்தச் செய்தி , ரஷ்மியின் பசுப்பிக் லெதர்ஸ் கம்பெனியின் 80 % பங்குகள் வேறு நிறுவனத்திற்கு விற்கப்பட்டச் செய்தி , இதைக் கேள்விபட்டு , சென்றமாதத்திற்கான கொல்கட்டா பிஸ்னஸ் நியூஸில் பார்க்க அதுவும் அந்தச் செய்தியை உறுதி செய்திருந்தாலும் , பங்குகள் கைமாறியது குறித்த அதிகாரப் பூர்வத்தகவல் இன்னும் வெளியிடப் படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது ,

சென்னையில் நேற்று இந்த செய்தியைக் கேள்விபட்டதில் இருந்து அவன் மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லை , ' ரஷ்மி ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும் , அவள் இளமைப் பருவம் , மேற்கல்வி , மகிழ்ச்சி , என அத்தனையும் தியாகம் செய்து உருவாக்கிய அந்தக் கம்பனியை விற்க எப்படி இவளுக்கு மனது வந்தது , என்ன ஆயிற்று இவளுக்கு , இந்த கம்பெனிக்காவும் , குடும்பத்திற்காகவும் தானே அவள் என்னோடு வாழ ஆசைப்பட்ட திருமண வாழ்வையே உதறித்தள்ளினாள் , ஏதோ ஒரு வகையில் இதற்குத் தானும் முக்கிய காரணம் ' என்ற குற்றஉணர்ச்சியும் அவனைப் பாடாய் படுத்தியது , ' அவள் என்னை பார்க்காமல் , என்னைக் காதலிக்காமல் இருந்திருந்தால் , அவள் நிம்மதியாக இருந்திருப்பாளோ ? '
செந்துவின் மனம் தவிக்க ஆரம்பித்தது , அவன் மனம் எதிலும் ஒட்டவில்லை .

மீட்டீங்கிலிருந்து பாதியிலேயே அறைக்கு வந்தவனுக்கு , அதற்குமேலும் அங்கே இருக்க மனம்இடம் கொடுக்கவில்லை , இப்பொழுதே ரஷ்மியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட , வழக்கம் போல மொபைலில் நண்பர்கள், குடுப்பதினர்களின் எண்களை ப்ளாக் செய்துவிட்டு , ஆஃப்லைனில் போட்டவன் இரவே கொல்கட்டாவிற்கு கிளம்பினான் ,

கொல்கட்டாவின் ஹோட்டல் அறையில் சாளரத்தில் வழி விழி வைத்தவன் , அழைப்புமணியில் கவனம் திரும்பினான் , ஆர்டர் செய்த காப்பியை வாங்கி அருந்திவிட்டுக் கடிகாரம் பார்க்க காலை 8.30 எனக் காண்பிக்க , பசுப்பிக் லெதர்ஸிற்கு மொபைலில் அழைத்து ரஷ்மி , கம்பெனியில் இருப்பதை உறுதிசெய்த நேரம் , ஹோட்டலின் ட்ரேவல்ஸ் பிரிவிலிருந்து கார் தயாராக இப்பதாக அழைப்புவர , அறையிலிருந்து கிளம்பியவன் அரை மணி நேர்த்திற்கெல்லாம் பசுப்பிக் லெதர்ஸை அடைய , ரஷ்மி நிச்சயமாக அவளைப்பார்க்க தன்னை அனுமதிக்க மாட்டாள் என அவன் மனம் எச்சரிக்க , சரியான திருணத்தில் கம்பெனியின்(CFO) தலைமை நிதி அதிகாரியாகச் செயல்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளன் , நினைவிற்குவர , இளனும் இன்றைககு மீட்டீங் காரணமாக கம்பெனியில் இருக்க , செந்துவும் இளனும் ஒத்த வயதினராகவும் , ஏற்கனவே பரிச்சையமான ஒரு நட்பிலும் இருப்பதால் , இயல்பான நலம் விசாரிப்புக்களுக்குப் பிறகு , செந்து ரஷ்மியைப் பற்றிக் கேட்க , " ரஷ்மி வந்திருக்காங்க இன்றைக்கு 10 மணிக்கு மீட்டிங் , அதோடு இப்போ கம்பெனியோட மேக்சிமம் ஷேர்ச திருப்பூர்ல ஒரு டெக்ஸ்டைல் குரூபுக்கு மாத்தீட்டாங்க , அதற்குத்தான் இந்த மீட்டிங் " எனக் கூற ,

திருப்பூர் டெக்ஸ்டைல் குரூப்பா ? என செந்து சிந்தனையில் இருந்த நொடி , இளன் ரஷ்மியின் அலுவலக அறைக்கு அனுமதி பெற்று இருவரும் உள்ளே செல்ல , அங்கே ரஷ்மி இல்லை , மாற்றாக அவளின் பதவியின் பொருப்பில் அமர்ந்திருந்தது வினய் , செந்தூரனின் நண்பன் .

வினயைப் பார்த்த அதிர்ச்சியில் செந்துவும் , செந்து இன்று வருவான் என்று எதிர்பாராத தவிப்பில் வினயும் இருக்க , இருவரின் நிலைமை உணராத இளனோ " வினய் , ரஷ்மி எங்கே காணோம் ஃபேக்டரி விசிட் போயிருக்காங்களா ? .. எனக் கேட்க...

வினய் செந்துவிடம் பதித்த பார்வை அகலாமல் அனிச்சையாய் " ஆம் " எனத் தலையசைத்து " செந்து ... " என அழைத்து ஏதோக் கூறப் போக .. முகத்தில் இறுக்கமும் கண்களில் தீர்க்கமுமாய் செந்து வினயைப் பார்த்துக்கொண்டிருக்க , சூழ்நிலையை எளிதாக்க வினய் , சிரித்த தொனியில் " என்னடா பார்த்துட்டே இருக்க உட்காருடா " நான் உன்னிடம் இதைப்பற்றி ஏற்கனவே சொல்லனும்னு இருந்தேன் " என்று ஆரம்பிக்க ...

இளன் , ஹோ ... நீங்க இரண்டு பேரும் ஏற்கனவே பழக்கமா , " சரி பேசிக்கொண்டு இருங்க " என்று வெளியேற ..

செந்து , வினயின் கண்களை நோக்கி , வார்த்தைகளில் அழுத்தம தந்து " சொல்லு வினய் , இங்க என்ன நடக்குது ... , நீ எப்படி இங்க ... , நீதான் இந்தக் கம்பெனியோட மேக்சிமம் ஷேர் ஹோல்டரா சொல்லு வினய் ..." என வினயின் விடைகூற எத்தனிக்கும் சிறு மெளன நொடிகளைக் கூட கடக்க இயலாத செந்து , நிற்காமல் சென்ற பொறுமையை தக்க வைக்க , அதுவோ வேதைனை தோய்த்த வார்தைகளாய் மாறி வினயிடம் பாய்ந்தது .. " சொல்லு வினய் , ரஷ்மியிடம் இருந்து அவளுடைய உழைப்பை , அவளுடைய கனவை , விலைபேசி வாங்க உனக்கு எப்படி மனது வந்தது , சொல்லு வினய் என விழிகளை கூராக்கி , அவனைக் கேட்க ,

செந்துவின் அருகில் வந்த வினய் " செந்து இதெல்லாம் இப்போ பேச டைம் இல்லை ,10 மணிக்கு மீட்டிங் இருக்கு , நீ ரூம்குபோ ... நான் மீட்டிங் முடிஞ்சு உன்னை வந்து பார்குறேன் " என அவசரத்திலும் பொறுமையாகப் பதில் கூற..

பொறுமை இழந்த செந்துவோ , வினயின் காலரைப் பற்றி , என்னுடைய பொறுமையை சோதிக்காத வினய் , என்ன நடந்ததுன்னு சொல்லு , எனக் கூற ...

வினய் , " செந்து முதல்ல நீ ஷர்ட்ல இருந்து கை எடு , யாராவது பார்க்கப் போறங்க , நீ ரூம்கு போடா நான் வாரேன் , அங்க பேசிக்கலாம் " , எனக்கூற ... கையை எடுத்த செந்து அவனை முறைக்க ,

வினய் , " நீ நினைக்கிற மாதிரி ரஷ்மியக் கஷ்டப்படுத்துறது என் நோக்கம் இல்லை , கிருஷ்ணன் அங்கிள் ( ரஷ்மி அப்பா ) தான் ஷேர்ஸ விற்க முடிவுபண்ணினார் எனக் கூறிக் கொண்டிருக்க ...

வினயை அழைப்பதற்காக அங்கே வந்த ரஷ்மி கதவருகே நின்று நடத்தவைகளைப் பார்த்துவிட்டு , அருகில் வந்தவள் ,

செந்துவிடம் " நீங்க என்ன பண்றீங்க செந்து ஆஃபீஸ்ல வந்து ஏன் இப்படி நடந்துக்குறிங்க ? யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க , என்னோட முழு சம்மதத்தோடதான் , அப்பா இந்த ஷேர்ஸ் சேல் பண்றார் , அதோட இது அவரோட கம்பெனி , அவர் என்ன வேனாலும் செய்வார் , யாரும் எனக்காக கவலைப்படத் தேவையில்லை , இப்பவும் என்னால் மறுபடியும் பூஜியத்திலிருந்து ஆரம்பிக்க முடியும் , என் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு , நான் மத்தவங்களைப் போல அம்மா அப்பா வையோ , அவங்க பிஸ்னஸையோ நம்பி இல்லை " என அழுத்தமாக செந்தூரனின் விழிகளைப் பார்த்துக் கூற ..

அவள் செந்துவைத்தான் அப்பாவின் உழைப்பை நம்பி வாழ்பவன் , என மறைமுகமாகச் சொல்கிறாள் என புரிந்த வினய் துணுக்குற்று சினமிகுந்து ரஷ்மியைப் பார்த்துக் கொண்டிருக்க ..

ரஷ்மி பேசியதில் அதிர்ந்த செந்து " ஆமா நான் சொந்தக்கால்ல நிற்காதவன்தான் , என் அப்பாவின் நிழலில் வாழ்பவன் தான் , நான் யாரு .... என்னுடைய திறமை என்னனு .... என்னை யாருக்கும் ஃப்ரூப் பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை ரஷ்மி " எனக் கூற ..

அறையின் வெளியே நின்று இளன் , உள்ளே வர அனுமதி வேண்டி அழுத்திய அழைப்புமணி ஒலிக்கவும் , செந்து அங்கிருந்து வெளியேர எத்தனிக்க , வினய் செந்துவின் கரத்தைப்பற்றி நிறுத்த முயல ,

செந்துவோ " உன்க்கு மீட்டிங்கு டைம் ஆகிடுச்சு , நீ கிளம்பு எனக்கூற .. ,

வினய் , " செந்து ப்ளீஸ் ஹோட்டல்ல வெயிட் பண்ணு , நான் உன்னோடு பேசனும்"

எப்போ வினய் ? நான் கொல்கட்டா வந்து உண்மையைத் தெரிஞ்சிக்கிற வரைக்கும் , உனக்கு என்னிடம் பேச எதுவுமே இல்லை , ஆனா இப்போ பேசனும்னு சொல்ற , விடு நான் கிளம்பனும் என அங்கிருந்து வெளியேறி , இளனிடம் விடைபெற்றுக் கிளம்பியவன் , ஹோட்டல் அறைக்குத்திரும்பி , இங்கிருந்து கிளம்பலமா ? இல்லை வினய் வரும் வரை காத்திருக்கலாமா ? என சிந்தனையில் இருக்க , கண்களின் தவிப்புடன் வினய் தன்னை காத்திருக்க சொன்னது நினைவில் வர , வினய்காக காத்திருக்க ஆரம்பித்தான் ,

அங்கே மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேர , வினயும் ரஷ்மியும் மட்டுமே அந்த ஹாலில் எதிர்எதிராய் அமரந்திருக்க , வினய் இருக்கையில் சாய்ந்தவாறு யோசனையில் இருக்க , ரஷ்மியோ பார்வையைச் சுவரில் பதித்து , சிந்தனையைச் செந்துவிடம் வைத்திருந்தாள் , செந்துவிடம் எத்தனை முறை மானசீகமாக மன்னிப்பு கேட்டாலும் செந்துவின் காதில் அது விழப் போவதில்லை எனத் தெரிந்தும் அவள் மனதில் செந்துவிடம் மன்னிப்பு வேண்டிக்கொண்டிருந்தாள் , " சாரி செந்து , நான் முன்னமே சொன்னேன் உன்னுடைய அன்பும் அக்கறையும் என்னை பலவீனமாக்குதுன்னு , ஆனா நீ திரும்பவும் உன் அன்பால் அக்கறையால் என்னைத் தேடும் போது , என் மீதே எனக்கு இரக்கம் வருதோன்னு சந்தேகமா இருக்கு , உன்னுடைய உழைப்பையும் திறமையையும் ஒரு நொடியில் தவறாகப் பேசிவிட்டேன் ,
சாரி செந்து உன்னை நான் நோகடிச்சுட்டேன் , உன்னுடைய வாழ்க்கையில் நுழைந்து காதலின் பெயரால் உன்னை காயப்படுத்தினேன் , இதற்கே நீ என்னை தண்டிக்கலாம் , மாறாக அன்பைப் பரிசளிக்கிறாய் , அனால் நானோ , உன் அன்பிலிருந்து தப்பிக்க மீண்டும் உன்னையே குற்றவாளியாக்குகிறேன் ...
என்று ரஷ்மி , செந்துவின் நினைவில் பரிதவித்துக் கொண்டிருந்ததவள் ,

https://www.youtube.com/watch?v=hiT57YNyANM

நொடிகள் சில கடக்க ரஷ்மிக்கு தன் எதிரே இருந்த வினய் தன்னைப் பார்ப்பதாய்த் தோன்ற , கேள்வியாய் அவள் வினயைப் பார்க்க ...

வினயின் விழிகளில் கோபம் நிறைந்திருக்க , அவன் ரஷ்மிடம் , "என்ன ரஷ்மி ரொம்ப ஈசியா வார்த்தையை விடுற , செந்து அவன் அப்பா நிழலில் வாழ்பவனா ? ஆமா அவனைப் பற்றி என்ன தெரியும் உனக்கு ? ஆறு மாதம் அவனோடு பழகியதால் மட்டுமே அவனைப் பற்றி பேசுகிற உரிமை உனக்கு வந்திடாது ரஷ்மி ... நீ திருமணம் வரை வந்துவிட்டு அவனை ஏமாற்றியதற்குப் பிறகும் , உனக்கு எதுவும் துன்பம் வந்துவிடக்கூடாதுன்னு தவிச்சுப் போய் வந்திருக்கானே அந்த மனசுக்கு முன்னாடி நீ எல்லாம் ஒன்னுமே இல்ல , ஆனா அவன் மனச நோகடிச்சுட்டு யாரும் நிம்மதியா வாழ்ந்துவிட முடியாது , நான் கூட உன்னைத் தப்பா நினைச்சுட்டேன் ரஷ்மி , ஏதோ இக்கட்டான சூழ்நிலைக் காரணமாதான் வேறுவழியே இல்லாமல் செந்துவ நீ பிரிஞ்சன்னு , ஆனா இப்பத்தான தெரியுது , சூழ்நிலைய உனக்குச் சாதகமாக்கிச் செந்துவைப் பிரிஞ்சிருக்கன்னு ... உனக்குக் காதல் ஒரு பொழுது போக்கு , கல்யாணம் , காதல் இந்த மாதிரி வார்த்தைகெல்லாம் உன்னுடைய அகராதியில் அர்த்தமே இல்லை , செந்துவுக்கும் உனக்கும் இடையில் ஆயிரம் இருக்கலாம் நீ நினைப்பதைப் பேசுவது உன்னுடைய சுதந்திரம் , ஆனா தயவு செய்து என்முன்னே செந்துவை பற்றி தவறா பேசாதே ரஷ்மி .. என்று கூற...

சலனமில்லால் பார்த்துக் கொண்டிருந்த ரஷ்மியின் பதிலையெல்லாம் எதிர்பார்க்காத வினய் செந்துவைப் பார்க்க விரைந்தான் ,

ரஷ்மிக்கோ வினய் பேசியதில் துளியும் கோபம் வருவேனா என்றது , செந்துவின் மனதை நோகச் செய்ததற்கு வினய் தனக்குத் தந்த பதிலடி அவளுக்குக் கோபத்திற்கு பதிலாக மன அமைதியைத் தந்தது , செந்துவைப் பேசிவிட்டு நொந்துகொண்ட இவள் மனதிற்கு தண்டனை தாங்கிய மருந்தாகவே இருந்தது வினயின் கோபம்

ஹோட்டலில் செந்துவின் அறையை அறிந்து அவனைப்பார்த்த வினய் , " செந்து சாப்பிட்டியா எனக் கேட்க " ,

அவன் அதற்கெல்லாம் , பதில் அளிக்காமல் மாறாக " நீ என்னிடம் பேசனும் சொன்னியே அதைச் சொல்லு நான் கிளம்பனும் " என அவனைப் பாராமல் கேட்க ,

வினய் , " முதல்ல நீ வா சாப்பிடலாம் எனக்கூற ..

செந்து , " ப்ளீஸ் வினய் நான் கிளம்பனும் நீ ஏதோ சொல்ல வந்தியே அதைச் சொல்லு முதல்ல " எனக்கூற ...

வினய் நடந்ததைக் கூற ஆரம்பித்தான் , " செந்து உன்னுடைய மேரேஜ் முடிஞ்சு நான்கைந்து நாள் கழித்து , ராகுல் அண்ணா உடல்நிலைலயைப் பற்றி விசாரிப்பதற்காக ரஷ்மி அப்பாவிற்கு ஆகாஷ் மாம்ஸ் கால் பண்ணி இருக்கார் , அப்போதான் ரஷ்மி அப்பா இந்த ஷேர்ஸ விற்கலாம்னு யோசனை செய்வதாய்ச் சொல்லி இருக்கார் , ரஷ்மி இந்த கம்பெனிய கவனிக்க ஆள் இல்லை என்பதை ஒரு காரணமா காட்டி உன்னை மேரேஜ் பண்ணிக்காமல் இருந்தது , ரஷ்மி அப்பாவுக்குக் கோபத்தை உண்டு பண்ணிஇருக்கு , இந்த கம்பெனியால் அவளுடைய கல்யாணவாழ்கையே கைவிட்டு போனதால , இனியும் இதையே காரணமாக வைத்து அவள் எங்கே மேரேஜ் பண்ணிக்காம இருந்துட்டா அவள் வாழ்கை வீணாகிடுமோன்னுதான் , அவர் இந்த முடிவுக்கு வந்துவிட்டார் ,

ஆகாஷிம் நானும் ரஷ்மி அப்பாவிடம் எவ்ளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதா இல்லை , இந்த ஷேர்ஸ வேறு யாரு கைகாவது மாறிட்டா 20 % சேர்ஸ் மட்டுமே வச்சிருக்க ரஷ்மியோட நிலைமை , என்னவாகும்னு தெரியலை , ஏற்கனவே ராகுல் ஆக்சிடன்ட் , அப்புறம் உன்னை மேரேஜ் பண்ண முடியாம போனதுன்னு கவலையில் இருக்க ரஷ்மிக்கு இந்த கம்பெனி விஷயமும் சேர்ந்து அவளை நிலைகுழையச் செய்யும் , ஆனா இந்த விஷயத்தில் என்னாலும் ஆகாஷாலும் எந்த உதவியும் செய்ய முடியவில்லை ,

என் அப்பா கோவை ஸ்பின்னிங் மில்லை விற்று அதை  வேறு எதிலாவது முதலீடு செய்யலாம் என இருந்தார் , உனக்குத்தான் தெரியுமே போன மாதம் நாங்க ஸ்பின்னிங் யூனிட்டை விற்றது ,  கம்பெனில ஆடிட்டர் ஆதி , பசுப்பிக் லெதர்ஸ் ஷேர்ஸ் விஷயத்தை இளன் மூலம் கேள்விபட்டு , அப்பாவிடம் சொல்லிஇருக்கான் , அப்பா AEPC வேலையா இருப்பதால் , என்னை இந்த விஷயத்தை பார்க்கச் சொன்னார் , எனக்கு ரஷ்மியோட கம்பெனியின் ஷேர்சை வாங்குவதில் உடன்பாடு இல்லை , அதனால் ஆதியும் நல்ல ப்ராஃபிட்ல இருக்க ஷேர் ஏன் மிஸ் பண்றிங்கன்னு கேட்டுகொண்டிருந்தார் ,

ஆகாஷிடம் இதைச் சொன்னேன் , ஆகாஷ் தான் , நீ வாங்கவில்லை என்றாலும் வேறு யாரவது வாஙகத்தான் போறங்க , அதற்கு அதை நீயே வாங்கினால் , லாபம் தரும் நல்ல முதலீடாகவும் , அதே சமயம் ரஷ்மியும் அந்தக் கமபெனியில் முன்புபோல சுதந்திரமாகச் செயல்படவும் முடியும்னு சொன்னார் ,

ஆனா 80% வாங்கும் அளவு என்னிடம் முதலீடு இல்லைன்னு சொன்னேன் , அப்புறம் ஆகாஷ்தான் இருவரும் சேர்நது வாங்கலாம்னு சொன்னார் , அதோடு ஃப்யூச்சர்ல அவரோட ஷேர நானோ , இல்லை ரஷ்மியோ வாங்கிக்கொள்ளுமாறும் , இப்போதைக்கு நான் முதலீடு செய்கிறேன்னும் சொன்னார் , ஆகாஷிம்  நானும் சேர்நதுதான் இந்த 80% ஷேர்ஸை வாங்கினோம் ,

உன் மேரேஜ் அப்போ ராகுல் ஆக்சிடன்ட் ஆன பொழுது இங்க ரஷ்மியோட நிலைமையை நானும் மாம்ஸும் பக்கத்திலிருந்து பார்த்தோம் , அதனால்தான் குறைந்த பட்சம் அவளுடைய கம்பெனியில் அவள் சுதந்திரமாக செயல்பட ஒரு வாய்ப்பாக இருக்கும்மேன்னுதான் , என வினய் கூறிகொண்டிருக்க ..

செந்து , " சரி வினய் , இதே ரஷ்மியோட கம்பெனி நட்டத்தில் இருந்தா நீங்க இரண்டு பேரும் இதில் இன்வெஸ்ட் பண்ணிஇருப்பீங்களா ? எனக்கேட்க ,

வினய் , " அப்படி நட்டத்தில் இருக்க கம்பெனி ரஷ்மிக்கு எதுக்குடா ? அவள் இழந்தது பத்தாதா? அந்தப் பங்குகளை விற்பதுதானே ரஷ்மிககு நல்லது , நீ சொல்வது போல ஒருவேளை நட்டத்தில் இருநதாலும் அதை நான் வாங்கி இருப்பேன் , ஏனென்றால் அதற்கு குறைந்த முதலிடு இருந்தால் போதும் , கண்டிப்பாக இதை நான் ஒரு சவாலாக எடுத்துச் செய்திருப்பேன் , இப்பவும் சொல்றேன் இதில் நீ என்னை என்ன வேண்டுமானாலும் நினைத்துகொகொள் , ஆனா ஆகாஷ் மாமஸிற்கு , இதில் எந்த அளவு லாபக்கண்க்கு இருக்கோ அதே அளவு ரஷ்மி மீதான அக்கறையும் இருக்கு , நான் கூட இதில் தலையிட வேண்டாம்னு நினைத்தபோது , மாம்ஸ் தான் ரஷ்மிக்காக யோசித்தார் எனக் கூறிமுடிக்க .செந்துவின் முகத்தில் ஏனோ குழப்பம் குடிகொண்டது

வினய் , என்ன செந்து யோசிக்கிற , எனக்கேட்க ..

செந்து , இல்ல வினய் நீயும் ஆகாஷ்மாமாவும் பண்ணது நல்ல விஷயம் தானே , பிறகு ஏன்இந்த விஷயத்தை நானா கேட்கிற வரைக்கும் நீ சொல்வில்லை , மாமாஸும் ஏன் என்னிடம் மறைக்கனும் , வீட்டில் கூட ஏதோ பிஸ்னஸ் ஆரம்பிக்கனும்தான் தீடிர்னு ஆஸ்ட்ரேலியா கிளம்பிப் போனதா சொன்னாங்க , ஆனா இந்த விஷயம் எனக்குத் தெரியாது , அவரோட பிஸ்னஸ் அவரோட இஷ்டம்தான் , என்னிடம் சொல்லனும்னு அவசியம் இல்லை , இருந்தாலும் அதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு உரிமை இல்லையா ? " எனக் கூற ..

இல்ல செந்து நீ ஜீவிய மேரேஜ் செய்த பிறகும் ரஷ்மி பற்றின விஷயங்களை உன்னிடம் சொல்லி உனைக் கஷ்டப்படுத்த வேண்டாமேன்னுதான் இதெல்லாம் சொல்லாமல் இருந்திருப்பார் , அதோடு உங்க வீட்ல எல்லார்கும் , ரஷ்மி மேல் மன வருத்தமா இருந்தாலும் இருக்கலாம்னு தான் , சித்தப்பா சித்தியிடம் ( ஜெயந்தி , ஜெயராம் )கூட சொல்லாமல் இருந்திருக்கலாம் , எனக் கூற ...

அதை ஆமோதித்த செந்து , " நீங்க இரண்டு பேரும் இந்த ஷேர்ஸ வாங்கியதற்கு ரஷமி என்னடா சொன்னா ? எனக்கேட்க ..

நீவேற செந்து .. ராகுல் ஆக்சிடன்ட் ஆகி ஒரு வாரம் கழித்து நானும் ஆகாஷ் மாம்ஸும் ராகுலைப் பார்க்க வந்திருந்தோம் , எங்களை வைத்துக்கொண்டுதான் கிருஷ்ணன் அங்கிள் கம்பெனியோட ஷேர்ஸ் விற்க்கப் போற விஷயத்தை ரஷ்மியிடம் சொன்னார் , ஆனால் அதற்கு ரஷ்மியிடம் இருந்து சின்ன அதிர்ச்சியோ இல்லை ஒரு மறுப்போ கூட இல்லை , உங்க கம்பெனி உங்க இஷ்டம்னு சொல்லிட்டு அழுத்தமா இருந்தா , எங்களிடம் கூட இயல்பா பேசிட்டு இருந்தா ,  வருத்தத்தை துளி கூட முகத்துல காட்டல , போதாக்குறைக்கு அவளுடைய 20 % ஷேரையும் எங்களை எடுத்துக்கொள்ளச் சொன்னாள் , நான் அதெல்லாம் வேணாம்னு சொல்லிவிட்டேன் , எப்படி இந்த பொண்ணு இப்படி இருக்காண்ணு தெரியலடா , எனக்கூற ..

செந்து முகத்தில் மென் சிரிப்பு கோடிட , அவ கடப்பாறையை விழுங்கி , அது ஜீரனமாக சுக்குக் கசாயம் குடிக்கிற ஜாதி எனக்கூற

வினய் சற்றே கோபமாக " அவ என்னத்தையோ , விழுங்கி எதை வேண்டுமானாலும் குடிக்கட்டும் " அவ யாருடா ? உன்னைப் பற்றிப் பேச , இன்றைக்குக் காலையில் பார்த்தியா உன்னிடம் எப்படி பேசுறா பாரு , உன்னைப் பத்தி கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம எப்படிடா அவ உன்னை காதலிச்சா ... எனக் கூற ..

செந்து சிந்தனையாய் பார்வையை எங்கோ பதித்து , " என்னைப் பற்றி புரிஞ்சதால்தான் அவ அப்படி பேசிருக்கா , என்ன சொன்னால் எனக்குக் கோபம் வரும்னு தெரிஞ்சு என்னை அங்கிருந்து அனுப்புகிற முயற்ச்சி , என்னை அவளால் ஃபேஸ் பண்ண முடியலை , அதுதான் அவளோட பிரச்சனை , மற்றபடி அவள் மனதறிந்து என்னை நோகடிக்க விரும்ப மாட்டாள் , எனக்கூறும் போதே கண்கள் வேதனையைத் தேக்க குரல் இடரியது ...

நண்பனின் தோளில் ஆறுதலாகக் கைவைத்த வினய்கு , அப்பொழுதுதான் நினைவு வந்தது ரஷ்மியிடம் தான் அவ்வளவு கோபமாக பேசியபோதும் , அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு , எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாதது , ரஷ்மிக்கும் செந்துவிற்குமான புரிதல் வினய்கு வியப்பைத் தந்தது...

நண்பர்களின் பேச்சில் கிடைத்த நிசப்தத்தை உடைப்பதாய் அங்கே வினயின் அலைபேசி நிர்மலின் அழைப்பில் இசைத்தது ,

சொல்லு நிர்மா ,

செந்து எங்கடா இருக்கான் ?

ஏன்டா ஏன் கேட்குற ..

" சும்மாதான் அவனுக்கு கால் பண்ணேன் ரீச் ஆகல அதான் , அவன் மேரேஜ்கு முன்னாடியும் இப்படித்தான் சென்னைபோனா மூனு நாள்ல நம்ம நம்பர்லாம் ப்ளாக் பண்ணீட்டு கொல்கட்டாவுக்குப் போவான் இப்பவும் அதே மாதிரி ப்ளாக் பண்ணிருக்கான் , அதான் எனக்கு டவுட்டா இருக்கு .. அதான் உனக்கு ஃபோன் பண்ணினேன் , அது சரி .... கொல்கட்டாவுல உனக்கென்னடா வேலை ?

போச்சுடா என நினைத்தவாறு  " ..ம் நான் திருப்பூர் வந்துட்டு உனக்குச்சொல்றேன் நிர்மா... எனக்கூற ,

சரிடா எப்போ திருப்பூர் வர்ற ? எனக் கேட்க

(வினய் திரு திரு விழியில் )
டேய் நான் வரும்போது சொல்றேன்டா ..

சரி வந்ததும் வீட்டுக்கு வா ..

ஹிம் சரிடா .. ஒரு பெருமூச்சோடு வினய் ஃபோனை அணைக்க..

செந்து மென் சிரிப்பில் வினயிடம் , " இவன நினைச்சாத்தான் பயமா இருக்கு , நான் ரஷ்மிய பார்க்க வந்ததது தெரிஞ்சா அவ்வளவுதான் , இவன்ட என்ன சொல்லி சமாளிக்கிறதுன்னே தெரியல , நான் எங்க அப்பாவுக்குக் கூட இவ்வளவு பயந்ததில்லை " எனக்கூற ....

வினயோ .. அட நீ வேற ... எங்க அப்பாவே இவனப் பார்த்துப் பயப்படுறார் டா , போன வாரம் , சாட்டர்டே நைட் அப்பா , சித்தப்பால்லாம் , கம்பெனில
APEC சம்மந்தமா பேசிட்டே இருந்ததுல லேட் ஆகிடுச்சு போல , இவ்வளவு நேரம் வீட்டுக்குப் போகாம இங்க என்ன பண்றீங்க , நாளைக்கு சன்டே தான நாளைக்கு பேசிக்கலாம்னு , அப்பாவக் கொண்டுவந்து வீட்ல ட்ராப் பண்ணீட்டு போய்டான்டா , எனக்கூற ...

சிரித்த செந்து , " அவன் நீயும் நானும் ஒரே இடத்தில் தான் இருக்கிறோம்னு எப்படியோ மோப்பம் புடிச்சுட்டான்டா , சரி விடு இனி கொஞ்ச நாளுக்கு அவன் கண்ணுல படாம இருக்கலாம் , ஃபோன் பண்ணா கான்பரனஸ்ல போட்டு நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சமாளிப்போம் , சரி ... வினய் எனக்கு லேட் ஆகுது , இன்னும் ஒரு மணி நேரத்தில் ஃப்ளைட் என செந்து கிளம்ப ஆயத்தமாக ,

வினய் " செந்து நீ இங்க வந்தது ஜீவிக்குத் தெரியுமா தெரியாதா ? ..

....

சொல்லுடா தெரியுமா தெரியாதா ?..

தெரியாது ..

வினய் ஏன்டா இப்படி பண்ற என்பதைப் பார்வையால் கேட்க ...

ஜீவியிடம் மறைக்கனும்னு நான் நினைக்கல வினய் , நான் சென்னையில் ரஷ்மி கமபெனி விஷயம் கேள்விப்பட்டதும் அதை ஜீவியிடம் சொல்லி விட்டுக் கிளம்பத்தான் நினைத்தேன் , அவள் எனைத் தவறாக நினைக்க மாட்டாள் , ஆனால் நான் அவளிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தால் , வீட்டில் உள்ளவர்கள் அவளிடம் என்னைப் பற்றி விசாரித்தால் அவளுக்கு சமாளிக்கத் தெரியாது , அதற்கு நானே போய் சொல்லி விட்டால் யாரும் தவறாக நினைக்கமாட்டாங்க , அது வரை என்ன வேணாலும் நினைத்துக் கொள்ளட்டும் , ஆனா அப்பா இருக்கிற பிசில நான் வீட்டுக்கு வந்துட்டனா இல்லையான்னு கவனிக்கமாட்டார் , ஒரு வேளை அப்படி கவனிச்சு என்னை ஃபாலோ பண்ணிஇருந்தால் , என்னைத் தவறா புரிந்து கொள்வாரோன்னுதான் பயமா இருக்கு , ஆனா வேற வழிஇல்லை அவர் கேட்டா நடந்ததை சொல்லவேண்டியதுதான் , நான் அப்பாவிடம் என் மேரேஜ் அப்போ பேசியது , அதற்குப் பிறகு கோபத்தில் பேசவில்லை , என்ன சொலலப்போகிறார்னு தெரியலை" எனக்கூற ,

சரி செந்து பார்த்துக்க , ரஷ்மிய பார்க்கவந்தது தப்புன்னு நான் சொல்லவில்லை , ரஷ்மிக்காக எவ்வளவு கவலைப் படுறியோ ... அதேபோல் இன்னொரு பொண்ணோட வாழ்கையும் உன்கையில் இருக்கு , அந்த வாழ்கையில் நீ சந்தோஷமா வாழ்வது பற்றி யோசி , அப்படி இல்லாமல் பழய நினைவால் உன்னுடைய புதிய வாழ்கையை சிக்கலாக்கிறாத எனக்கூற ..

செந்து , வினயிடம் அமைதியும் அர்த்தமும் பொதிந்த பார்வை பதித்து , " வினய் நீ சொல்வது போல் ஆரம்பத்தில் ரஷ்மியின் நினைவுகள் என்னில் இருக்கவே செய்தது , அவளை நான் மறக்கவும் நினைக்கவில்லை , ஆனால் இப்பொழுது எனக்கு ஜீவியைத் தவிர வேறு நினைவே இல்லை ஜீவியில்லாத ஒரு வாழ்கைய என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது , அவள் என்னை ஏத்துக்கிற வரைக்கும் நான் காத்திருப்பேன் , அதேசமயம் ரஷ்மி நல்ல பொண்ணு அவள் வாழ்கை நல்லா இருக்கனும் அவளுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாதுன்னு நனைக்கிறேன் , அவ்வளவுதான் , ரஷ்மியோடான ஒரு நாள் பழக்கத்திற்கே நீயும் ஆகாஷ் மாமாவுமே ரஷ்மி நல்லா இருக்கனும்னு நினைக்கும் போது , என்னை நேசித்த அவள் வாழ்கை நல்லா இருக்கனும்னு நான் நினைப்பதில் என்ன தவறு ? .. எனக் கேள்வியால் பதிலுரைத்தான் ...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro