அனிச்சம் பூ 57

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கோவை இல்லத்தில் ஜீவியின் பிறந்தநாளில் அனைவரும் ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியின் அதிர்வலைகள் இருந்தாலும் , செந்தூரன் அங்கு இல்லாததால் , அவர்கள் சிரிப்பொலியில் , வார்த்தைகளில் மறைந்துகொள்ளும் மயங்கொலி போல் கவலையும் கலந்தே இருந்தது ...

ஜீவி அனைவரிடமும் சிரித்துப் பேசி இயல்பாய் இருப்பதாய்க் காட்டிக் கொண்டாலும் , செந்து இப்பொழுதாவது வந்து விடமாட்டானா ? என்ற தவிப்பில் நொடிக்கொரு முறை எதிர்பார்த்து ஏமாற்ந்த  தவிப்பை அப்பட்டமாய்க்  காட்டியது அவளின் விழிகள் , அவளைத் தன் கூரான பார்வையில் அமைதியாகப்  பார்த்துக் கொண்டிருந்த செந்திலுக்குள் , செந்துவின் மீதான சினத்தில் சிறுநெருப்பு கொழுந்து விட்டுக் கொண்டிருந்தது ...

செந்திலின் தோளில் கரம் வைத்து அவனை அமைதிபடுத்தி விட்டு , ஜீவியின் அருகே வந்த கணேஷ் " என்ன பர்த்டே கேர்ள் இப்படி அமைதியா உட்கார்நதிருக்கீங்க " எனக் கேட்க , பதிலுக்கு சிறிதாய்ச் சிரித்த ஜீவியிடம் கவலையின் சாயல் தெரிய , " விடு ஜீவிமா செந்துவுக்கு எதாவது அவசர வேலையா இருக்கும் அதுதான் வர லேட் ஆகுதுன்னு நினைக்கிறேன் ஈவ்னிங் வந்துடுவான் " எனக்கூற ,

ஏனோ தன்னை உற்றவர்களிடம் தன் உணர்வுகளை மறைக்க முடியாது போனதால் அவளையும் மீறி கண்கள் கலங்க ஆரம்பித்தது , அதைக் கண்ட கணேஷ் , " விடுடா  இதுக்குப்போய் ஃபீல் பண்ணலாமா ? நியாயமாகப் பார்த்தால் உனக்கு நாளைக்குத்தான் பர்த்டே " எனக்கூற ,
 
ஜீவி , அவனைக் கேள்வியாய் பார்க்க , "ஆமாடா , ஆங்கிலத் தேதிப் படி நாளைக்குத்தான் உனக்கு பர்த்டே வரும் ,  நாளைக்கு முழுதும் செந்து உன்னோடு இருப்பான் " எனக் கூற .. 

தன்னை சமாதானப்படுத்த இப்படிக் கூறுகிறான் என்பது புரிந்த ஜீவி , " இல்ல மாமா , செந்து மாமாவுக்கு , என்னோட பர்த்டேன்னு தெரியாது , நான் மாமாவிடம் இன்றைக்கு என்னோட பர்த்டேன்னு சொல்லவே இல்லை , அதுதான் செந்துமாமா வரலை " என சிறு மழலைபோல் கூறி தன் கண்களைத் துடைத்துவிட்டு கணேஷைப்பார்க்க ,

அவன் மென்சிரிப்பில் அவளின் தலைவருடி , " சரிடா இதைப் பிடி " என தான் வாங்கி வந்திருந்த கிஃப்டை கையில் கொடுத்துப் பிரிக்கச்சொல்ல , ஜீவி அதைப்பிரிக்க  அதனுள்  ஸ்மார்ட் மினியன் ப்ரொஜக்டர் இருக்க , மினியன் உருவத்தில் இருந்த அந்த ப்ரொஜக்டரை , " சோ.. க்யூட் " என்று ஜீவி கன்னத்தோடு கன்னம் சேர்க்க , அதைப்பார்த்த கணேஷ்  ஏதோ மிக முக்கிய விஷயம் சொல்வதைப் போல் ,  " ஜீவிமா செந்துவுக்கு  மினியன் கெட்டப் போட்டால் எப்படி இருக்கும் ? .. "என்று கேட்டு  யோசிப்பதுபோல் , பாவனை செய்து குறும்பாய் ஜீவியைப் பார்க்க ..

அதற்குள் செந்துவை மினியன் தோற்றத்தில் கற்பனை செய்துவிட்ட  ஜீவி சிரிப்பை கட்டுப்டுத்தமுடியாமல் சிரித்துக்கொண்டிருக்க , அதைப் பார்த்து கணேஷ் , " செந்துவுக்கு மினியன் கெட்டப் அவ்வளவு காமெடியாவா இருக்கு " என கேட்டு அவளோடு சேர்ந்து சிரிக்க ,

அங்கே வந்த அனனி , கணேஷிடம்
" என்ன அங்கிள் எங்கள்ட ஷேர் பண்ணா நாங்களும் சிரிப்போம்ல எனக்கேட்க , ஜீவி வேண்டாம் என சைகை காட்டியும் , கணேஷ் அனனியிடம் செந்துவின் மினியன் தோற்றத்தைக் கூறிவிட ..

அனன்யா இருங்க , இருங்க ... செந்து அண்ணா வந்தவுடன் சொல்றேன் எஙக அண்ணனை இரண்டு பேரும் கேலிபண்றீங்களா .. " எனக் கூறிவிட்டு நகர ..

ஜீவி " ஏய் அனனி சொல்லிடாத டா .. " என அவளைத் துரத்திக்கொண்டிருந்த ஜீவியின் புன்னகையில் வீட்டின் சூழலில் இனிமை இழையோடியது ..

பாலாவோ செந்து மீதான வருத்தத்தில் அருணாச்சலத்திடம்  " அப்பா செந்து ஜிவியோட பிறந்தநாளுக்கு வாராதது கூட பிரச்சனை இல்லப்பா , அவனுக்கு  இன்று ஜீவியோட பிறந்த நாள்னும் தெரியாது  , அவன் வேண்டும் என்றே வாராமலும் இல்லை , மேலும் பிஸ்னஸ் விசயமா வெளில போகும் போது சில சமயம் வர லேட் ஆகிறது இயல்பு , நான் கூட ஜீவியோட  பிறந்தநாள் , தேவியோட பிறந்தநாள்னு , நிறைய பிறந்தநாளுக்கு வீட்டில் இருந்ததில்லை , அதெல்லாம் ஒரு விசயமே இல்லை பா , ஆனா இன்றைக்கு வரமுடியதுன்னா அதை கால் பண்ணியாவது சொல்லனும் , இல்ல நம்ம கால் பண்ணா அட்டன் பண்ணனும் , அதுவும் இல்ல ,  அப்போ நான் என்ன நினைக்கட்டும் , ஆனா அவன் எங்க போயிருக்கான்னு ஜெயராம் மாமாவுக்குத் தெரியும் , அவர் கண்டிப்பா இன்நேரம் விசாரிச்சுருப்பார் ,  நியாயமான காரணமா இருந்தா இதுதான் காரணம் , விடுங்க அவன் கொஞ்சம் வேலையில் பிசியா இருக்கான்னு சொல்லிஇருக்கலாம் , ஆனால் அவர் அப்படிச் சொல்லாமல் மெளனம் சாதிப்பதுதான் என் கவலை பா ,   செந்து ரஷ்மிய மீட் பண்ண போயிருப்பானோன்னு தோனுது " , எனக்கூற ..

மகன் கூறுவதைக் கேட்ட அருணாச்சலம் , " ஜீவி பிறந்தநாளுக்கு செந்து வரலை என்பதால் அவனுக்கு ஜீவியைப் பிடிக்கலைன்னோ , ரஷ்மியைப் பார்க்ப் போனதால் ஜீவிக்கு உண்மையா இல்லைனோ அர்த்தம் இல்லை பாலா .. ரஷ்மியோட அக்கா ஹஸ்பன்ட் எப்படி இருக்கார்னு ஒரு மனிதாபிமானத்துல கூட பார்க்க போயிருக்கலாம் , ரஷ்மியை பார்க்க போகிறேன்னு சொன்னா வீட்ல மறுப்பாங்கன்னு சொல்லாமல் போயிருக்கலாம் , ஆனா செந்து ஜீவியை விடவும் வேறு பெண்ணை நேசிக்க மாட்டான் பாலா நீ கவலைப் படாத  .. " என கூற , 

அதைக்கேட்ட பாலாவுக்கு மனம் சற்றே ஆறுதலடைந்தாலும் ஏனோ சிறிய சஞ்சலமும் இல்லாமல் இல்லை

மாலைப் பொழுதில் பாலா ஜெயந்திடம் ,
" அக்கா நானும் தேவியும் ஜீவியை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு (அருணாச்சலம் இல்லம்) போறோம் , நாளைக்கு ஜீவியையும் கூட்டிட்டு ஊட்டி கிளம்பலாம்னு இருக்கோம் , மாமா எங்க கா அவர்ட சொல்லிவிட்டு கிளம்பனும் " எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே ,
சற்றே பதட்டமாக இடைமறித்த ஜெயந்தி , " ஏன் பாலா இப்பவே கிளம்புறீங்க , செந்து வந்திருவான் " என பதட்டம் குறையமால் கேட்க ,

பாலா " அக்கா இப்போ ஏன் நீ ஏன் பதற்ற.. நான் தான் போன மாதமே சொன்னேன்ல ஜீவியையும் , செந்துவையும் ஊட்டிக்கு அழைக்கனும்னு , இப்போ மாமா பிசியா இருக்கதால செந்து கம்பனிய கவனிக்க வேண்டியதா இருக்கு , அதனால்தான் ஜீவியை மட்டும் அழைச்சுட்டு போறேன் , செந்து வந்தவுடன் கம்பனில அவசர வேலை எதாவது இருந்தா முடிச்சுட்டு செந்துவை ஊட்டிக்கு வரச்சொல்லுக்கா "  எனக் கூற ..

ஜெயா சற்றே சமாதானம் அடைந்தாலும் ஏதோ உறுத்தலாய்த் தோன்ற பாலாவிடம் " செந்து மேல உள்ள கோபத்தில்தான ஜீவியை ஊட்டிக்கு கூட்டிப்போறியா பாலா ? எனக் கேட்க ,

பாலா , "அக்கா இன்றைக்கு செந்து வராதது எனக்கு வருத்தம் தான் , ஆனாலும் செந்து மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு , நீ மனச போட்டு குழப்பிக்காத ... சரி நீ நம்ம  வீட்டுக்கு வர்றியா கா .. " எனக்கேட்க , 

" இல்ல பாலா இஙக வேலை இருக்கு  கணேஷ் , செந்தில் , இரண்டு பேரும் கார்த்திக்கோடு ஒரு வேலையா வெளில போயிருக்கங்க , அவங்க நைட் டின்னருக்கு இங்க வருவாங்க நான் காலையில் வாரேன் , எனக்கூற .. சரிக்கா அவனுக இரண்டுபேரையும்  நாளைக்கு மார்னிங் அங்க வரச்சொல்லுக்கா , அப்போ நான் மாமாவிடம் ஃபோன் பண்ணி சொல்லிவிட்டு கிளம்புகிறேன் " எனக்கூறித் திரும்புவதற்கும் ஜெயராம் அங்கே வருவதற்கும் சரியாக இருக்க , பாலா விஷயத்தைக் கூற ...

துணுக்குற்ற ஜெயராம் , பாலா ஜீவியை அழைத்துச் செல்வதை தடுக்க நினைத்தாலும் , செந்து செய்திருக்கும் செயல் அவரை வாய்பேசவிடாமல் மெளனமாக்கிவிட , ஜெயராம் ஜீவியைப் பார்க்க , அவளோ செந்து வராமல் இருக்கும் நிலையில் எப்படி ஊட்டிக்குக் கிளம்புவது என்ற தவிப்பில் கலங்கி இருக்க , ஜீவியை அருகில் அழைத்த ஜெயராம் " ஜீவிமா நீ அப்பா கூட  போடா  செந்து வந்ததும் நான் செந்துவை ஊட்டிக்கு அனுப்பிவைக்கிறேன் " என்று ஆறுதலாய் கூறினாலும் , ஜீவிக்கு அங்கிருந்து அசைய சற்றும் மனமில்லாமல் , ஏனோ உயிர் கொண்ட  உறவை இங்கேயே உதறிவிட்டு , வெற்றுயிர்  மட்டுமே செல்வது போல் இருந்தது அவளுக்கு ... இதோ இந்த நொடியிலாவது செந்து வந்துவிடக் கூடாதா என இப்பொழுதும் எதிர்பார்த்து ஏமாற்ந்து கொண்டிருந்தது ஜிவியின் மனது .

ருள் படரும் இரவில் ஒளிவீச வந்த நிலவு , உலவும் மேகத்தோடு குலவிக் கொண்டிக்க ,  ஜீவியின் பார்வை நிலவின் மீது இருந்தாலும் , நினைவு செந்துவின் மீது இருந்தது , ' செந்து மாமாவுக்கு ஏன் கால் ரீச் ஆகல , மாமவுக்கு என்ன ஆச்சு , ஆனா மாமாமேல் ஏன் எல்லாரும் கோபமா இருக்காங்க , ஒரு வேளை ரஷ்மி அக்காவுக்கு ஏதும் பிரச்சனையா அதனால் ரஷ்மி அக்காவைப் பார்க்கப் போய்டாங்களா? அப்படியே இருந்தாலும் அதை என்னிடம் சொல்லி இருக்கலாமே ? என்னிடம் கூட ஏன் மறைக்க வேண்டும் , நான் அவரைத் தவறாக நினைத்துக் கொள்வேன் என நினைத்துச் சொல்லாமல் சென்றுவிட்டாரா ? நான் ஏன் அவரைத் தவறாக நினைக்கப்போகிறேன் , அவர் மனதில் ரஷ்மி இருந்திருந்தால் , நாம் இருவரும் சேர்ந்து வாழலம் என அவர் என்னிடம் கேட்டிருக்கவே மாட்டரே , அவரை ஏன் நான் தவறாக நினைக்கப்போகிறேன் , இத்தனை நாட்களில் என்னை அவர் புரிந்து கொண்டது இதுதானா ?  என் மனது என்றுதான் அவருக்குப்புரியும் ? இன்றாவது  என் காதலை மாமாவிடம் சொல்லிவிடலாம் என நினைத்தேனே அதற்கும் இயலாமல் போய்விட்டது , மாமா இப்பொழுது வந்துவிட்டால் கூட நாளைக்கு அப்பாவோடு ஊட்டி செல்லத் தேவை இல்லை , நாளை செந்து மாமாவிடம் என் காதலைச் சொல்லலாம் ' , என செந்துவை எதிர்பார்த்து தவித்துக் கொண்டிருந்தது ஜீவியின் காதல் மனது ..

https://www.youtube.com/watch?v=L3AKeBCZ3dc

இதே நேரம் , ஏர்போர்டிலிருந்து கோவை ஹெட் ஆஃபீசின் கெஸ்ட்அவுஸிற்கு  வந்து ஃப்ரஷ் ஆன செந்துவுக்கு , இருப்புக் கொள்ளவில்லை , அவனுள் இருந்த ஜீவியின் நினைவு அவனைப் ஜீவியைப் பார்க்கச் சொல்லி அடம்பிடித்தது ,  அவன் கடிகாரத்தைப் பார்க்க மணி இரவு 10.45 ஐ தொட , இன் நேரத்திற்கு மேல் சென்று வீடு செல்ல எப்படியும் மணி 11 .30 ஆகிவிடும் , அதற்குள் ஜீவி தூங்கி இருப்பாள் , சரி காலையில் செல்லலாம் என மனதை சமாதனப்படுத்தினாலும் , அவன் காதல் அவனை ஜீவியின் நினைவுகளில் தவிக்கச் செய்தது , ஒரு வேளை ஜீவி , கணவன் மனைவியாக சேர்நது வாழ சம்மதித்து விட்டால் , எப்படி இருக்கும் என்ற அவனது கற்பனையில் அவனது பிள்ளைகள் பள்ளி சென்றுகொண்டிருந்தனர் , ஜீவியின் நினைவில் இருந்தவன் , விடியலில் விழிப்பது மறந்து , விடியலுக்காகவே விழித்திருந்தான் , மென்னிரவு   மெல்ல மெல்ல தன்நிறைவு அடைய ஆரம்பிக்க ,

இரவின் நிறம் கரைந்து வைகறை வந்துவிட்டிருந்தது  , காலைக் குளியல் முடித்துக்  கிளம்பி அறையின் வெளியே வந்து விழியை விரித்தவனுக்கு அதிகாலை அழகு மனம் நிறைக்க , தோட்டத்தில் இன்று மலர்ந்த மலர்களோடு தானும் புதிதாய் பிறந்ததாகவே உணர்ந்தான் , ஜீவியை எப்பொழுது காண்பதென முப்பொழுதும் காத்திருந்து இதோ இப்பொழுது கண்டுவிடலாம் , என செந்துவின் மனதில் தவிப்பும் மகிழ்ச்சியுமாய் , காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் ..

காரில் ஒலித்த பாடலில்  தாஜ்மீலின் இசையிலும் குரலிலும் ,  மனம் கரைந்திருந்தான் , அந்தப் பாடல் வரிகள் தனக்காகவே பாடப்பட்டதாய் உணர்ந்தான் .

ஆயர் காதல் ஆசையாகும் போதிலே
தேகம் யாவும் தீக்குளிக்கும் நீரிலே
தேடி தேடி ஓடி வந்தேன் நேரிலே
என் தேவையெல்லாம்
ஓரவிழிப் பார்வையே ..

வர வர நீ போகிறாய்
வரைமுறை நீ பார்க்கிறாய்
அடடா சூடாத பூவாகிறாய் ...

ஒருமுறை நீ பார்க்கிறாய்
உதிரத்தை சூடேற்றினாய்
அடடா தீண்டாத தீவாகினாய் ...

https://www.youtube.com/watch?v=NjabhSX5OM8

கோவை இல்லத்தில் செந்துவின் கார் வாயிலில் நுழைய , அதைப் பார்த்த ஜெயந்தியோ ' நேத்து வர்றேன்னு சொல்லீட்டு வர்ற நேரத்தைப்பாரு ' என மனதுள் வசைபாடியபடி வீட்டுக்குள் செல்ல எத்தனிக்க ,

காரை நிறுத்திவிட்டு   ஜெயந்தியின் பின்தொடர்து வந்து தோளில் கைபோட்டு அம்மா அழைக்க , ஜெயந்தியோ கைகளை எடுத்துவிட்டு செந்துவை முறைக்க , செந்துவோ ' ஆஹா அப்போ நான் ரஷ்மியை பார்க்க போனது வீட்டுக்கு தெரிஞ்சிருச்சு போலயே ' என நினைத்தாவறே வீட்டின் ஹால் பகுதிக்குச் செல்ல அங்கே ஜீவியின் பிறந்தநாளின் அடையளமாக  சுவர் அலங்காரத்தில் மினியன்கள் பலூன்கள் ஏந்தியபடி தோரணமாகத் தொங்கிக் கொண்டிக்க "  மாமா எனக்கு மினயன்ஸ்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா ,  மினியன் டிசைன்ல வர்ற ப்ராடக்ட்லாம் வாஙகிச் நிறைய மினியன் கலைக்சன் வச்சிருக்கேன் தெரியுமா ? " என ஜீவி சிறுமிபோல் பெருமயாகச் சொன்னது நினைவில் வர , உதடுகள் அனிச்சையாகவே புன்னகைத்தது செந்துவிற்கு  , 'ச்ச ஜீவிக்கு பிறந்தநாள் போல இதைக்கூட தெரிந்துவைக்காமல் விட்டோமே ! ' என தன்னை நொந்தவன் ,

ஜெயந்தியிடம் " அம்மா இன்றைக்கு ஜீவிக்கு பிறந்தநாளா மா ? " எனக்கேட்க , 

கோபம் குறையாத ஜெயந்தி " இன்றைக்கு இல்ல நேற்று " எனக் கூற .. ,

'ச்ச .. இப்படி ஜீவியோட பர்தடேய மிஸ்பண்ணிவிட்டேனே ! 'என ஏமாற்றமும் வெறுமையுமாய் நெற்றிப்பொட்டில் கைவைத்து தேய்த்து , சில நொடி சிந்தனைக்குப்பின் ,  ஜீவியின் அறையை நோக்கி விரைய , தடுத்த ஜெயந்தி " ஜீவி வீட்ல இல்ல " எனக் கூற ,

" அப்போ ஜீவி எங்க மா ? " எனக் கேட்க ,  அங்கு வந்த ஜெயராம் , " பாலா ஜீவியை ஊட்டிக்குக் கூட்டிட்டு போய்டான் " எனக் கூற .

செந்து துணுககுற , அதைப் பார்த்த ஜெயராம்  " என்ன செந்து பார்குற , உன்னிடம் சொல்லாமல் ஜீவி கிளம்பிட்டாளேன்னு யோசிக்கிறியா , ஆமா அவ ஏன் உன்னிடம் சொல்லனும் , நீ அவளிடம் சொன்னியா , நீ இப்போ எங்க போய்டு வர்றன்னு ? " ஜெயராம் பேசிக்கொண்டிருக்க ,  செந்துவின் மனமோ இப்பொழுதே ஊட்டி கிளம்பிவிடலாம் என எண்ணிக் கொண்டிருந்தது ,

ஜெயராம் , " சொல்லு செந்து நீ எங்க போன ? " எனக் கேட்க , அமைதி காத்த செந்துவிடம் ஜெயராமே தொடர்நதார் ,

" நான் ஏற்கனவை சொல்லிருக்கேன் , ரஷ்மியும் நீயும் இனி பார்க்கக்கூடாது பேசக்கூடாதுன்னு , ஆனா அதையும் மீறி நீ போய்டு வந்திருக்க , ஜீவிக்குத் தெரிஞ்சா அவ மனசு கஷ்டப்படாதா ? அவ உன்னை தவறா புரிஞ்சுக்க மாட்டாளா ? " என்றவரை

இடைமறத்த செந்து " இல்லப்பா ஜீவி என்னை எப்பவும் தப்பா நினைக்க மாட்டாள் " எனக் கூற  ,

" ம் .. சரி ஜீவி உன்னை தவறா நினைக்க மாட்டாள் , ஆனா இதே மாதிரி உன் நிலைமயில்  ஜீவி இருந்து  உன்னை மாதிரி அவள் உன்னிடம் சொல்லாமல் வெளியில போய்விட்டு வந்தா  நீ அதை சரியான பர்வையில் எடுத்துக் கொள்வியா செந்து ? "

......

சொல்லு எடுத்துக் கொள்வியா செந்து .. ?

செந்து , இதற்குப் பதில் கூற தாமதித்த இடை நொடியில் ..

ஜெயராம் , " செந்து  நீ என்ன பண்றன்னு தெரிஞ்சுதான் பண்றியா ? நீ மேரேஜ்கு முன்னாடி ரஷ்மிய ஒபராய் ஹோட்டல்ல மீட் பண்றது , விக்டோரியா ஹால்ல ரஷ்மியோட சுற்றினதுன்னு , படத்தோட பத்திரிக்கை காரன் பப்லிஷ் பண்ண இருந்ததை தடுத்து நிறுத்தினோம் ,  உனக்கும் ரஷ்மிக்கும் அவசர அவசரமா ஒரே மாதத்தில் மேரேஜ் அரேன்ச் பண்ணியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் , இப்போ நீ ரஷ்மிய பார்த்துட்டு வந்திருக்க , இதோட விளைவுகளை  பாவம் அந்த பொண்ணு ரஷ்மிதான் ஃபேஸ் பண்ணனும் , அந்தப் பொண்ணு ரஷ்மி ஏற்கனவே பிரச்சனையில் இருக்கு , அவளுக்கு நல்ல திருமண வாழக்கை அமையனும்னுதான் , கிருஷ்ணன் சார் இந்த ஷேர்ச கை மாத்திருக்கார் , இந்த நேரத்தில் நீ போயி மீட் பண்ணா அது அவளோட இமேஜ பாதிக்காதா ?   இங்க நமக்கு முன் நின்று எதிர்க முடியாத கோழைகள் முதுகுல குத்த எடுக்குற ஆயுதம் நம்ம பர்சனல் ,
நமக்கு மத்தவங்க பர்சனல் தேவியில்லாம இருககலாம் செந்து .. ஆன நம்ம பர்ஸ்னல் மத்தவங்களுக்கு ரொம்ப முக்கியம் , முதல்ல உன்னைச் சுற்றி நடக்குதுன்னு பாரு  , சரி ... அப்படித்தான் ரஷ்மியின் கம்பனி கைமாறுனா என்ன ?  ரஷ்மி மேரேஜ் லைஃப்ல செட்டிலான பிறகு பிஸ்னஸ பார்க்கட்டும் , கிருஷ்ணன் சார் முடிவு செய்த பிறகு அதில் நாம் என்ன செய்யமுடியும் ?  செந்து .. திரும்பவும் சொல்றேன் .. நான் இருக்குற பிசில எப்பவும் , எல்லாநேரமும் உன்னயே ஃபாலோ பண்ணிட்டு இருக்க முடியாது .. இனியாவது கவனமா இரு செந்து ... " எனக் கூறிமுடிப்பதற்குள்  ,

 "அப்பா நான் ஊட்டிக்குப் போறேன் " என்றான் செந்து , அவர் பேசியது அனைத்தும் அவன் காதில் ஏறியதோ , இல்லையோ .... அப்படியே காதில் ஏறினாலும் அது மூளையை அடைந்ததோ ? இல்லையோ .. அது அவனுக்கே வெளிச்சம் ...  ஜெயராம் பேசப் பேச அவன் சிந்தனை முழுவதும் ஜீவியின் மீதே இருந்தது , ஊட்டி போகிறேன் என திரும்பிய செந்துவைப் பார்த்த  ஜெயராம் , " ஜீவி தாத்தா வீட்டில்தான் இருக்கிறாள் " எனக்கூற ..

செந்து சிற்றதிர்ச்சியும் சிறுமகிழ்ச்சியுமாய் வாசல் நோக்கிச் செல்ல , வாசலில் நின்று ஃபோன் பேசிமுடித்துத் திரும்பிய செந்திலைப் பார்த்த செந்து , அங்கிள் என்று தயங்கி  நிற்க , செந்தில்   , " செந்து  உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் " எனக் கூற

செந்துவோ ' போச்சு டா , நேற்று ஜீவியின் பிறந்தநாளுக்கு வரதாதற்கு  இவர் என்ன சொல்லப் போறோர்னு தெரியலையே ' என நினைத்தவாறு செந்திலைப்பார்க்க ,

செந்திலோ சென்றுவிடவா என்ற பொறுமையை இழுத்துப் பிடித்து செந்து விடம் பேசஆரம்பித்தான் " நான் உன் பர்சனல்ல தலையிடுறன்னு நினைக்காத செந்து , நீ  எதிர்பாரத நேரத்தில் ஜீவி உன் வாழ்கையில் வந்திருப்பதால் , இயல்பா இருவரும் புரிந்துகொண்டு சேர்ந்து வாழ நேரம் தேவைப்படும்தான் ஆனால் அதற்காக ...  என்றுக் கூறிக்கொண்டிருந்த செந்திலுக்கு அதற்கு மேலும் பேச்சில் பொறுமையை தக்க வைக்க முடியாமல் அவனது பேச்சு கோபம் கொண்டு வேகத்தோடு ஆரம்பித்தது..  ஆனால்  அதற்காக ..  எங்கே போறோம்னு சொல்லாமல் போவது , போன் கால் அவாய்ட் பண்றது , ஒரு பிறந்த நாளைக் கூட தெரிஞ்சிக்காம இருக்கது , இதெல்லாம் ரொம்ப தவறான விசயம்  செந்து , நேற்றுக் காலையில் இருந்து ஜீவி உன்னை எதிர்பார்த்து ஏமாற்ந்து தவிச்சுப்போய்டா , உனக்காக காத்துக்கொணடிருக்கும் , ஜீவியின் அன்பை ஏமாற்றிவிட்டு , உன்னை ஏமாற்றிய பெண்னை நினைத்துக் கொண்டிருப்பது முட்டால்தனம் செந்து " என்றவனை இடைமறித்த செந்து

"அங்கிள் என்னோட சூழ்நிலை என்னைக் குற்றவாளியா காட்டுது ஜீவியோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் " , எனக் கூற ..

செந்திலோ வார்தைகளில் மேலும் அழுத்தம் கூட்டி ... ஆட்காட்டி விரலை அவன் முன்பு உயர்த்தி ..
" ஜீவியின் அன்பிற்கு முன்பு உன்னுடைய எந்தக் காரணமும் தோற்றவிடும் செந்து , என்றவன், மேலும் தொடர்ந்தான் ..

" நீயாவது ஜீவியை உன் மாமா மகள்னு தெரிந்த பிறகுதான் அவளிடம் பாசம் காட்டின , ஆனா அவள் நீ  யாரெனத் தெரியாத போதே உன்னைப் பார்த்துவிட்டு  உன்னை நேசித்தவள் , அது அட்ரேக்சனா, க்ரஷ்சா , எதுவோ இருந்துவிட்டு போகட்டும் ஆனாலும் அதற்குள் ரொம்ப ப்யூரான லவ் இருக்கு  , நீ ரஷ்மிய மேரேஜ் செய்துக்க போறேன்னு ஜீவியிடம் சொன்னபோது அவள் உடைஞ்சு அழுதது இன்னும்  என் கண்ணுல இருக்கு  " , என உணர்ச்சி மேலிடக் கூறிக்கொண்டிருக்க ...

செந்துவிற்கு .. செந்திலின் வார்த்தைகள் மின்னலென மூளையில் மோதி .. கடுங்குளிர்கொண்ட மழையருவியென  இதையத்தை நனைத்து நடுங்கச் செய்தது .. கணநேரத்தில் அவன் ஸ்தம்பித்து பின் இயல்புக்கு வந்தவனுக்கு  , அவனோடு சேர்ந்து இந்த உலகமே ஸதம்பித்ததுபோல் இருந்தது ...  இதயம் ஏனோ இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை ...
செந்திலின் வார்த்தைகளை மேலும் உறுதிசெய்துகொள்ள ... செந்திலைப் பார்க்க ,

அவன் " ஆமா செந்து நீ பாலாவைப் பார்பதற்கு முன்பே அவள் உன்னை எங்கோ பார்த்திருக்காள் " எனக்கூற ..

செந்து , கண்கலங்க , உணர்வில் அமிழ்ந்த குரலால் , " அங்கிள் ஜீவி உங்களிடம் என்னை லவ்பண்றேன்னு சொன்னாளா ? " என இதயத்தைக் கட்டுப்படுத்தி மூளை அதன் வேலையை ஆரம்பித்தது ...

செந்திலோ அவனை முறைப்பாய் பார்த்து , " என்ன செந்து நான் ஏன் உன்னிடம் பொய் சொல்லனும் ? உன்னை அவ லவ் பண்ணா ,  உன்னை  மேரேஜ் பண்ண ஆசைப்பட்டா , நீ அந்த நேரத்தில்தான் ரஷ்மிய மேரேஜ் பண்ணப்போறேன்னு சொல்லிருக்க , அதை கேட்டு மனதளவுல அவ நொறுங்கிட்டா "

இப்பொழுது செந்துவிற்கு இதயத்தின் அருவியில் கண்களும் நினைந்து கொண்டிருந்தது ..

மீண்டும் மூளை அதன் வேளையை ஆரம்பித்தது ... " இல்ல அங்கிள் அவ எல்லார் மீதும் அன்பாதான் இருப்பா , அதே போல் தான் என்னிடமும் பாசம் வைத்தாள் என்று நினத்தேன் , ஒரு வேளை நீங்களும் அதுமாதிரி தவறா ஏதும் புரிஞ்சுக்கிட்டீங்களோன்னு , ஒரு சின்ன சந்தேகம் அவ்ளோதான் சாரி அங்கிள் " என்ற செந்துவின் மூளைக்குள் இப்பொழுது ஜீவி என்ற மேகம்  அடைமழையாக மாறி அது ஆனந்த அருவி என்றாகி இதையத்தை நனைத்துக்கொண்டிருந்து ,

" நீ யாரெனத் தெரியாத போதே உன்னை நேசித்தவள், அது அட்ரேக்சனொ க்ரஷ்சோ எதுவோ இருந்துட்டு போகட்டும் , ஆனாலும் அதற்க்குள் ரொம்ப ப்யூரான லவ் இருக்கு செந்து .... " என செந்தில் கூறிய  இந்த வார்த்தைகள் , செந்துவின் காதில் காதல் வரமாகியது , 

இடைவிடாமல் துடித்த இதயம் இன்பதில் திக்கு முக்காடிட

சிலிர்ப்பில் தூளிர்த்த கண்ணீர்
சிரிப்பில் ஒளிர்நது மின்னிட

தன் கற்கண்டு தேவதையின் காதலை
தன்னிடம் சொற்க்கொண்டு உரைத்தவன்  பொற்கொண்ட புதையல் அள்ளி தந்த கண்கண்ட
அதிர்ஷ்ட ரட்சகன் என்றானான் .

செந்துவின் கண்களில் குவளைமலரில் நிறைந்த பளிங்கென்ற பனித்துளி போல் மென்நீர் நிறைந்திருக்க , 
அதைப் பார்த்த  செந்தில் , செந்துவின்  கண்களின் ஈரத்தை மட்டுமல்ல , மனதின் ஈரத்தையும்  உணர்ந்தான் ,  செந்துவுடைய கடந்த கால காதல் பற்றிய குழப்பத்தையும் கவலையையும் அந்த கண்ணீர் கரைத்துவிட்டு , ஜீவியின் மீதான உயிர்காதலை உரைத்துக் கொண்டிருந்தது ,

செந்திலின் கரங்களைப் பிடித்த செந்து , ரொம்ப தேங்ஸ் , என்றாலும் உணர்வுகளுக்குள் சிக்குண்ட அவன் வார்த்தைகள் ஏனோ  ஒலியில்லாமலே வெளிவந்தது என்றாலும் அவன் உதடுகளைவிடவும் கண்கள் ஆழமாய் பேசியது , செந்திலின் இதயத்திற்கு கேட்கவே செய்தது .

அருணாச்சலம் தாத்தாவின் வீட்டிற்குச்  செல்லும் , இருபது நிமிடத்திற்குள் , ஜீவி எங்கே எனைப்பார்த்தாள் என்ற கேள்விக்கு விடை கண்டு , வீட்டிற்கு வந்த முதன் முறை அவள் அவனை வியப்பாய் பார்த்ததில் ஆரம்பித்து , ரஷ்மியோடு கொண்ட அவன் காதலை ஜீவியிடம் கூறிய பொழுது , அவள் விழிகளில் விரிந்த அதிர்ச்சி அதன் பின் செந்துவை அங்கேயே விட்டு விட்டு செத்திலோடு வீடு சென்று தலைவலி என அறையில் அடைந்தது , வினயை திருமணம் செய்துகொள்கிறாயா என்றதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தது என , மின்னலென எண்ணங்கள் பின்னோக்கி பாய்ந்து கொண்டிருக்க , ஜீவி தன்னைக் காதலித்தாள் என்ற செய்தி , அவனுள் அழகான தவிப்பையும் பரவசத்தையும் தந்திருந்தது ..

பதுக்கி வைத்த உன் காதல்
புதயலென கிடைத்த கணம்
இன்பமாய் ஒரு பூகம்பம்
இதயத்தில் ஆரம்பம் ..

சில நேரங்களில் இன்பம் கூட
இன்னல்  தான் போல ,
இதயம் ஆர்பரித்துக் கொண்டே இருக்கிறது ,
இயல்பாய் இருக்க விடாமல் இம்சிக்கிறது ,
மகிழ்ச்சியை ஈர்த்துக்கொண்ட மூளை ,
வேலை செய்யாமல் ஸதம்பித்து நிற்க்கிறது ,
உதடுகளில் ஒட்டிக் கொண்ட புன்னகை விட்டுப் போவேனா என்கிறது ,

இப்பொழுதே தன் செல்ல காதல் தேவதையை அள்ளி அணைத்துக் கொஞ்சி முத்தமிடத் தோன்றும் எண்ணத்தை மட்டுப்படுத்துவதே மாபெரும் சாதனையாகிறது ..

தாத்தாவின் வீட்டிற்கு வந்த செந்து அருணாச்சாலம் தாத்தாவை எதிர்கொள்ள , அவரோ " செந்து எல்லாரும் அதிகாலையே கிளம்பி ஊட்டி போய்டாங்க .. பாலாவுக்கு நேத்து நைட் ஒரு கால் வந்தது இன்றைக்கு 8 மணிக்கு யாரையோ மீட் பண்ணனும்னு  அதிகாலையிலேயே கிளம்பிடாங்க " எனக்கூற செந்துவின் முகத்தில் ஏமாற்றம் மின்னி மறைந்த அடுத்த நொடி , " சரி தாத்தா நான் ஊட்டிக்குப் போகிறேன் " எனக்கூறினான்

தாத்தா " நீ சாப்பிட்டியா செந்து , முதல்ல நீ  சாப்பிடு பிறகு போகலாம் எனக் கூற , " இல்ல தாத்தா நான் இப்பவே போகனும் " என்றவன் , முகத்தைப் பார்த்த தாத்தா " ஏன்  செந்து  கொஞ்சம் ரிலேக்ஸ்டா " இரு எனக் கூற , அதைக் கேட்ட செந்து , " இல்ல தாத்தா நேற்று ஜீவியோட பிறந்த நாள் அதற்கு நான் வரலை , அதோடு நான் கொல்கட்டா போனது பாலா மாமாவும் தேவியும் எப்படி எடுத்துக்கிட்டாஙகன்னு தெரியல , அதான் மாமா கோபத்துல ஜீவிய கூட்டிட்டுப் போய்டாங்க .. " எனக் கூற ,

அவன் கூறுவதல்லாம் இரண்டாம் நிலைக் காரணங்கதான் , அவனுக்கு முதலில் ஜீவியைப் பார்க்க வேண்டும் அவ்வளவே  ! அது அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிய , அதை அறிந்த அருணாச்சலம் மென்சிரிப்பில் செந்துவைப் பார்த்து " சரி , சரி என் பேத்தி அங்க உனக்காக வெயிட் பண்ணீட்டு இருப்பா , நீயும்  உன் ஒய்ஃபை  பார்க்கனும்னு முடிவு பண்ணீட்ட ,  அதை நான் ஏன் தாமதப்படுத்தனும் சரி கிளம்பு " என்று கூறிச் சிரிக்க ,

அவர் பேசியது சாதரன வார்த்தைகள் தான் என்றாலும் , தனக்காக ஜீவிகாத்திருக்கிறாள் என அவர் வாய்வழி கேட்ட செந்து , தன் கன்னங்கள்  பஞ்சுமிட்டாய் வண்ணத்திற்க்கு மாறுவதை கூட அறியாமல் , தன் மென் வெட்கப்புன்னகையால் விடை பெற்றான் , 

மேகமாய் மாறி அவள் மீது
அன்பைப் பொழிவதற்கு , மெளனத்தைக் காதலாய் மொழிபெயர்பதற்கு
தன் கனவுக் காதலை மெய்பிப்பதற்கு ....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro