கற்பனை 31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


ராஜீவின் தங்கையின் திருமண ரிசப்சனுக்கு வந்திருந்த சுமன் வீணா தம்பதிக்கு ஒரு வயதில் மகள் இருந்தாள்.தன் குட்டி தேவதையுடன் வந்தவர்களை வரவேற்றான்.. பங்சன் முடிந்ததும் சுமன்,வீணா,நந்தினி, சந்தியா மற்றும் ராஜீவ் ஐவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது சுமன் கவலையாக நந்தினியை பார்க்க அவள் முகமோ எந்த கவலையும் இல்லாமல் தெளிவாக இருப்பதை கண்டவன் 

"கதிரும் நீங்களும்...."என்று பேசத்தொடங்க உடனே சந்தியா

"ஹேய் சுமன் எங்களுக்கு எல்லாமே தெரியும்.அப்புறம் அவங்க எடுத்த முடிவுனால அவங்க லைப்ல நல்லதுதான் நடக்க போகுது" என்று கூற இதுவரை நடந்த எதுவும் தெரியாமல் மெதுவாக வீணாவிற்கு மட்டும் கேட்கும் விதமாக

"ஹேய் கதிர் என்னமோ இவ நந்தினியோட பெஸ்ட் ப்ரெண்ட் அப்படின்னு சொல்லுவான். ஆனா இவ என்னடான்னா அவங்க ரெண்டு பேரும் டைவோர்ஸ் வாங்க போறது அவங்க வாழ்க்கைக்கு நல்லதுன்னு சொல்றா. ஆக்சிடண்ட் ஆனதுல அவ மூஞ்சி மாதிரி அவ மூளையும் சுருங்கிடிச்சோ" என்று கூற அது சந்தியாவுக்கு சரியாக அவள் காதுகளில் விழ சுமனை நோக்கி

"ஹலோ சார், பி கூல். உங்களுக்கு இவங்க ரெண்டு பேருக்குள்ளயும் நடந்தது கதிர் மூலமா மட்டும்தான் தெரியும். ஆனா கதிருக்கே தெரியாமா லாஸ்ட் ஒன் வீக்கா என்ன நடக்குதுன்னு எங்க 3 பேருக்கு மட்டும்தான் தெரியும்"என்று கூற சுமன் அவளை நக்கலாக பார்த்து 

"அப்படி என்ன நடந்திச்சி., எப்படி குயிக்கா டைவோர்ஸ் வாங்குறதுன்னு ரிசர்ச் பண்ணீங்களா" என்று கேட்க சந்தியா கூலாக

"நாங்க ஆகாஷனா யாருன்னு கண்டுபிடிச்சிட்டோம் "என்று கூற சுமனும் வீணாவும் உச்சபட்ச ஆச்சரியத்துக்கு உள்ளானார்கள்.

"என்ன சார் இப்படி ஷாக் ஆகிட்டீங்க" என்று சந்தியா கேட்க

"நோ வே அது முடியவே முடியாது" என்று கூற 

"அது ஏன் முடியாதுன்னு இவ்வளவு உறுதியா சொல்றீங்க" என்று கேட்ட சந்தியாவிடம்

"நான் கதிர் அந்த கதைய எழுதும் போதே ஆகாஷனா யாருன்னு தேடினேன். வாட்பெட்ல ஆக்டிவ்வா இருக்குற எல்லா பொண்ணுங்க கிட்டயும் ரிக்குவஸ்ட் பண்ணுவேன், இப்படி ஆகாஷனான்னு யாரையும் தெரியுமான்னு. ஆனா எல்லார்கிட்டயும் இருந்து எனக்கு கிடைச்ச பதில் என்னமோ நோ தான்.அந்த ஆகாஷனா என்ற ஐடி ஆக்டிவ்வா இருந்தப்போவே என்னால கண்டுபிட்க்க முடியல.நீங்க இது நடந்து 4 வருசத்துக்கு அப்புறம் கண்டுபிடிச்சிருக்கோம்னு சொல்றப்போ எப்படி நம்புறது" என்று கூற சந்தியா அவள் கையில் இருந்த மொபைலை சுமனிடம் கொடுத்து அதில் வாட்பெட்டை ஆன் செய்து கொடுக்க அதில் இருந்த சாட்களை வாசித்த சுமனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இருந்தாலும் இந்த மொபைல் யாருக்கு சொந்தமானது என்பது அவனுக்கு தெரியாததால் அவன் கொஞ்சம் அமைதியாக

" இந்த மொபைல்....."என்று கேட்க சந்தியா 

"ரொம்ப டென்சன் ஆக வேணாம் சுமன்  அது நந்தினியோட மொபைல்தான்"என்று கூறி நடந்த எல்லாவற்றையும் அவர்களிடம் கூறினால். இதைக்கேட்ட சுமனுக்கும் வீணாவுக்கும் வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவுக்கு சந்தோசமாக இருந்தது. ஏனென்றல் அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும் கதிர் அந்த ஆகாஷனா என்ற தனது வாசகி மீது எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டான் என்பது. உடனே வீணா

"ஹேய் இது கதிருக்கு தெரியுமா?" என்று கேட்க சந்தியா

"இல்லை இன்னைக்கு ரிசப்சனுக்கு அவரையும் இன்வைட் பண்ணியிருந்தோம். ஆனா லாஸ்ட்மினிட் வொர்க்னால கதிரால இன்னைக்கு வரமுடியல. இன்னும் 3 நாள் கழிச்சிதான் வரமுடியும்னு சொல்லிட்டாரு.சோ அவரு வர்ற  அன்னைக்குத்தான் எனக்கும் யூஎஸ் கு ப்ளைட்.அவரு லேண்ட் ஆகி 5 மணித்தியாளம் கழிச்சிதான் எனக்கு ப்ளைட் டேக் ஆப் ஆகும்.சோ நம்ம எல்லோரும் ஏர்போர்ட்லயே இவங்க சந்தோசமா சேர்றதா  பார்த்துடலாம்" என்று கூறியவள் சுமனை பார்த்து

"சுமன் எக்காரணம் கொண்டும் இத கதிர்கிட்ட சொல்லிடாதீங்க, அவருக்கு இது ஒரு ஸ்பெசல் சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்" என்றவளை அவனும் சரி என சம்மதித்தான்.

மூன்று நாட்களும் வேகமாக கடக்க சந்தியா யூஎஸ் செல்லும் நாளும் வந்தது. சந்தியா மிகவும் சந்தோசமாக இருந்தாள். தன் தோழியின் வாழ்க்கை மறுபடியும் தன்னால் சேர போகின்றது என்பதை எண்ணி. ஆனால் ராஜீவிற்கோ மிகவும் வேதனையாக இருந்தது. காலேஜில் படிக்கும் போதுதான் தன் குடும்ப கஷ்டத்தாள்  நந்தினியை இழந்தான் ஆனால் இப்பொழுது அவனுக்கு நந்தினியுடன் சேர்ந்து வாழக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தும்  அதுவும் கடவுளின் சித்தத்தால் முழுவதுமாக மாறிப்போக போகின்றது என நினைத்து அவனால்  அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் அவன் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பதும் அவனுக்கு புரிந்தது.

காலேஜில் இருந்து இன்றுவரை தன் ஒரு தலை காதல் கீதத்தை மீட்டிப்பார்த்தவனுக்கு ஒன்றும் மட்டும் தெளிவாக புரிந்தது தனக்கும் காதலுக்கும் வெகுதூரம் என்பது. பேசாமல் இனி வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் முடித்து அவளையே காதலிக்கலாம் என்று எண்ணிய போது மனதுக்குள் சந்தியா இருக்கும் நிலைமையில் அவளை யாரும் திருமணம் செய்ய முன் வரமாட்டார்கள் என்பது புரிந்தது. இந்த கதிர், நந்தினியின் கலேபரம் நடந்து முடிந்ததும் சந்தியாவிடம் இது பற்றி ஒரு வார்த்தை பேசலாம் என்று முடிவெடுத்தான். அதில் சந்தியாவின் வாழ்க்கைக்கு ஒளி கொடுப்பதும் மட்டுமல்ல அவனின் ஒரு சுயநலமும் இருந்தது. தெரியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து நாளை அவளுக்கு தான் நந்தினியை காதலித்தது தெரிய வரும் போது அவள் எப்படி ரியாக்ட் செய்வாள் என்றும் அதனால் வரும் பிரச்சினைகளை சமாளிப்பதைவிட தன்னை பற்றியும் தன் காதலை பற்றியும் தெரிந்த ஒருத்தியை திருமணம் செய்தால் அவனின் வாழ்க்கை சுமூகமாக அமையும் என்று கருதினான்(என்ன மக்காள் நேத்ரா,கிஷோர் கல்யாணம் நடந்த மாதிரி போகுதா).

தனது உடமைகள் எல்லாம் எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் செல்ல சந்தியா தயாராக ராஜீவ் தனது தோழனின் காரை எடுத்துக்கொண்டு தோழிகள் இருவரையும் பிக் அப் செய்ய வந்தான். அவன் தான் எடுத்திருந்த முடிவு பற்றி சந்தியாவிடம் பேசலாம் என்று நினைத்தாலும் அவள் இன்னும் சிலநாட்களில் இந்தியா வருவதாக இருப்பதால் அதுவரை இந்த விசயத்தை ஆறப்போடலாம் என்று நினைத்தான். காரணம் அதற்கிடையில் சந்தியாவின் மனதுக்கு பிடித்தது போல் யாரும் அவளுக்கு வரனாக அமைந்தால் அவளின் வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும் என்பது அவனின் எண்ணம்.

ஏர்போர்ட் வந்ததும்தான் தெரிந்தது கதிரின் ப்ளைட் 30 நிமிடம் தாமதமாக வரும் என்பது.சுமனும் வீணாவும் சரியாக அங்கு வந்து சேர்ந்து அவர்கள் அரட்டை அடித்துக்கொண்டு இருக்க நேரம் போனது தெரியவில்லை.கதிரின் ப்ளைட் அரைவ் ஆனதும் சுமனும் வீணாவும் தாங்கள் கதிரை இங்கு அழைத்து வருவதாக கூறி அரைவல் லாஞ்ச்கு சென்றனர். சந்தியாவின் ப்ளைட்டுக்கான செக் இன் இன்னும் அழைக்கப்படாததினால் இவர்கள் மூவரும் சுமன் வீணா இடையில் விட்டுச்சென்ற அரட்டையை தொடர நந்தினி

"ஹேய் ராஜீவ் உங்க பேமிலில நெக்ஸ்ட் உங்க கல்யாணம் தானே அது எப்போ" என்று கேட்க ஏதோ யோசனையில் இருந்தவன்

"நீ இல்லாம எப்படி நந்தினி" என்று கூற நந்தினி அதை தனக்கு அழைப்புக் கொடுக்காமல் அவன் திருமணம் செய்ய மாட்டான் என்று கூற வருகின்றான் என்று சரியாக புரிந்து கொண்டாலும் சந்தியாவுக்கு ராஜீவ் ஏதும் சொதப்பிவிடுவானோ என்று பயமாகவே இருந்தது.உடனே அவள் 

"நந்தினி லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு, அதோ அங்க புட் கோர்ட்ல எனக்கு பிரியானி வாங்கிட்டு வரியா?"என்று கேட்க ராஜீவ் உடனே

"3 பேரும் போய் சாப்பிடலாமே" என்று கேட்க ராஜீவை நந்தினி கதிருடன் மீண்டும் சேரும் வரை தூரமாக்கியே வைக்க எண்ணியவள்

"இல்ல ராஜீவ் அவ போய் வாங்கி வரட்டும். நம்ம இங்க இருக்குற புக் ஸ்டால்ல போய் புக்ஸ் கொஞ்சம் வாங்களாம். யாழ்வெண்பா, தர்ஷினி,தீபா பாபு அக்காஸ்லாம் புக் பப்ளிஷ் பண்ணிட்டாங்களாம். அது கொஞ்சம் வாங்க வேண்டியிருக்கு" என்று அவனை அழைத்து பக்கத்தில் இருந்த புக் ஸ்டாலுக்கு நுழைந்தாள். ராஜீவிற்கும் பேசாமல் இன்றே தனது திருமணம் பற்றிய எண்ணத்தை சந்தியாவிடம் கூறுவோமா என்ற எண்ணமும் உதித்தது. ஆனால் சந்தியாவிடம் அவனுக்கு இதுவரை காதல் இல்லை என்பதை தெளிவாக புரியவைத்தே அவளின் சம்மதத்தை பெற வேண்டும் என நினைத்தவன் எப்படி அவளிடம் பேச ஆரம்பிக்கலாம் என்று யோசனையில் இருந்தான். தன் கையில் இருந்த நந்தினியின் பழைய ஐபோனை கடையில் இருந்த பெண்ணிடம் கொடுத்து அதை அழகாக பொதியிட சொன்னால். கடைப்பெண்ணும் அழகாக கிப்ட் பாக்சில் வைத்து பேக்கிங்க் செய்ய அதை பார்த்துக்கொண்டிருந்தவனை

சந்தியா,

"டேய் ராஜீவ் என்னடா கிப்ட் பேக் பண்றதையே பார்த்துக்கிட்டு இருக்க. உனக்கு ஒன்னு தெரியுமா அவ கல்யாணத்துக்கு நான் எந்த கிப்டுமே கொடுக்கல. இப்போ அவளுக்கு நான் அவ லைப்பயே திருப்பிக்கொடுக்க போறேன். அதுக்குத்தான் அவ லைப்ப மறுபடி வசந்தமாக்க வந்த மொபைலயே கொடுக்கலாம்னு இருக்கேன்.." என்றவள் மேலும் தொடர்ந்து 

"இனி உன் வாழ்க்கைல நந்தினி இல்லடா. நீ உன் லைப்ப இனிமே பார்த்துக்க.நல்ல ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க சரியா" என்று அவள் கூறியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளாதது போல் அவன் மொபைலில் எதையோ நோண்டிக்கொண்டு இருந்தவன் அடுத்து பேசியது அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro