உறவு 41

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்று சனிக்கிழமை.. கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான் எழில்.. பொழுது போகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.. அவனருகே தனது ஆறு மாத மேடிட்ட வயிறோடு கீழே அமர முடியாமல் சற்று சிரமப்பட்டு கைகளை அவன் தோளில் ஊன்றிப் பிடித்து அமர்ந்தாள் ஐசு..

அவள் அருகே அமர்ந்ததும் அவளுக்குத் தெரியாத வண்ணம் சற்று தள்ளி அமர்ந்தவன் " அண்ணி கூப்பிட்டா நானே வந்திருப்பேன்ல.. நீங்க ஏன் சிரமப்பட்டு்க்கிட்டு " என கூற,

" அதெல்லாம் ஒரு பிரச்சனையும் எனக்கில்ல.. நான் உன்கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்லாம்னு வந்தேன்.. " என்றவள் அவனிடம் நெருங்கு அமர, அவன் இப்போதும் சற்று தள்ளி அமர்ந்தான்.

" தெரியும் எழில்.. நான் பக்கத்துல வந்தா தள்ளி தான் போவன்னு.. ஒரு தரம் நடந்த சண்டை மறுபடியும் நடக்கக் கூடாதுன்னு பார்க்கிற அப்படிதான " என விட்டேத்தியாக அவள் கேட்கவும், அண்ணி தன் செயலை கண்டு கொண்டார்கள் என்பதை அறிந்தவன் பார்வையால் மன்னிப்பைக் கேட்க, அவன் கன்னம் பற்றியவள் "எனக்குத் தெரியுது எழில்.. நீ என்னதான் எங்க கூட நல்லா பழகினாலும் கொஞ்சம் கொஞ்சமா உன்னை தனிமைப் படுத்திக்கிறனு.. அது தப்புனு நீயே எங்களை புரிஞ்சிப்பனு எதிர்பார்த்தேன்.. ஆனா அது நடக்கல.. அதான் நானே உங்கூட பேசலாம்னு வந்துட்டேன்..

நீ உங்கண்ணாவ புரிஞ்சிக்கிட்டயானு எனக்குத் தெரியல..ஆனா அவரோட வாழ்கிற எனக்குத் தெரியும்..அவர் மாறிட்டார்னு.. நீ இப்படி தள்ளிப் போறது என்னை விட அவரைத் தான் ரொம்ப பாதிக்கும்.. அவர முழுசா மன்னிச்சிடு எழில்.. என்னால உன்னை இப்படி பார்க்க முடியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. நான் வேணா உங்கிட்ட மறுபடியும் மன்னிப்புக் கேட்டுக்கறேன் " என்று அவள் கை கூப்பி மன்னிப்புக் கேட்க,..

அதில் பதறியவன் அவள் கைகளைப் பிரித்து அதில் முகம் பதித்தவன்
" ஐயோ அண்ணி..என்ன பெரிய வார்த்தைலாம் சொல்லிக்கிட்டு.. அண்ணா மாறிட்டார்னு எனக்கும் தெரியும் அண்ணி.. ஆனா என்னால உங்க கல்யாண வாழ்க்கைல எந்த பிரச்சினையும் வர வேண்டாம்னு தான் கொஞ்சமா தள்ளி இருக்கிறேன் .. ஆனா அது உங்கள காயப்படுத்தும்னு நான் நினைக்கவே இல்ல.. சாரி அண்ணி " என்று அவன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு  கூற, அவன் முகத்தை நிமிர்த்தியவள் " சரி நடந்தது போகட்டும்.. இனி நீ எப்பவும் என்னோட
பழைய எழிலா உரிமையா நடந்துக்கனும்.. என்ன புரியுதா " என மிரட்ட, சரி என அவனும் புன்னகையுடன் தலையாட்டினான்..

அதுவரை காலை மடக்கி அமர்ந்திருந்ததால் கால் வலி எடுக்க, அதை நீட்டி அமர்ந்தவள் காலைப் பார்க்க மசக்கையினால் அது புசுபுசுவென்று வீங்கியிருந்தது..
அவள் முகம் வலியில் சுருங்குவதைப் பார்த்தவன் அதன் காரணம் அறிந்து அவள் காலருகே அமர்ந்தவன் அதனை மென்மையாக பிடித்துவிட ஆரம்பித்தான்.. அதில் பதறியவள்
" எழில் என்ன பண்ற..என் காலை நீ போய் புடிக்கலாமா.. " என தடுக்க, அதை காதில் ஏற்காதவன் தன்
வேலையைத் தொடரந்தவாறே " நீங்க தான சொன்னிங்க.. அண்ணியும் அம்மாவும் ஒன்னுன்னு.. எங்க அம்மான்னா நான் புடிக்க மாட்டேனா " என்க, அதில் புன்னகைத்தவள் அவனையே பார்த்தவண்ணம் இருந்தாள்..

" அண்ணி நான் சொல்றேன் பாருங்க.. உங்களுக்கு பாப்பாதான் பொறக்கும் " என்க,

" எப்படி சொல்ற "

" நான் சொல்றேன்ல பாருங்க.. பாப்பாதான் பொறக்கும்.. அப்படி பாப்பா வந்துட்டா நீங்க எங்கிட்ட பாப்பாவ கொடுத்தறனும்.. சரியா..
என்னோட குட்டி இளவரசிய நான் எப்படிலா வளர்த்தறேனு மட்டும் பாருங்க.. " என கால்களை பிடித்தவாறே அவன் தன் பாட்டிற்கு கூறி கொண்டிருந்தான்..

" ஹான் பாப்பாவ உங்கிட்ட கொடுத்துட்டு உங்க நொண்ணேன் என்ன பூப்பறிச்சிட்டு இருப்பாரா.. உங்க அண்ண பண்ற அலப்பறைய பார்த்தா பாப்பாவ எங்கி்ட்டயே தருவாரான்னு தெரில.. இதுல உங்கிட்ட தரப்போறாரா " என தன் கணவன் புகழ் பாட, அசோக் அப்படித்தான் செய்வான் என்பதை நினைத்துப் பார்த்தவன் முகம் சிறுத்துவிட, " எழிலு..நான் பேச்சுக்குத் தான் சொன்னேன்டா.. அதுக்குப் போய்  முகம் இப்படி மாறுது.. லூசு .. கொஞ்சம் பொறுத்துக்கோ.. அப்ரோ என்னோட குண்டு பாப்பு வந்துருவா.. அவளே குழந்தை மாதிரிதான்.. அவள நீ மகாராணியா பார்த்துக்கோ " என்று அவன் சிரிக்கட்டும் என கூறி அவனைப் பார்க்க அவன் முகமோ இன்னும் சிறுத்தது..

குழப்பத்துடன் "  அவ கூட சண்டையா எழில் " என கேட்க, அவள் கேள்வியில் தன்னை சமன்படுத்திக் கொண்டவன் அதனை மறுக்க, " ப்ளீஸ் ...அப்படினா உனக்கு என்ன பிரச்சனை .. என்னை நம்புனா சொல்லு " என சோகமாக கேட்க, அவள் முகம் பார்த்தவன் சொல்ல ஆரம்பித்தான்.

" எனக்குமே என்ன பிரச்சனைனு சுத்தமா தெரில அண்ணி.. நான் திம்ச காதலிக்க ஆரம்பிச்ச உடனே அவளே காதல சொல்லி ஒத்துக்கிட்டா.. கொஞ்சம் சண்டை நடந்தாலும் வீட்லயும் எங்க காதல ஏத்துக்கிட்டீங்க.. கதிரண்ணா வெளிநாடு போனதால என்னை தான் அவர் அவள பார்த்துக்க சொன்னாங்க..நானும்
அவ படிக்க ஆரம்பிச்சதால அவள எட்டி நின்னுதான் பார்த்துப்பேனே தவிர அவள டிஸ்டர்ப் பண்ணது இல்ல.. எனக்கும் மத்த லவ்வர்ஸ் மாறி வெளிய சுத்தனும்.. அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு ஆசையா இருக்கு.. ஆனா என்னால அவளோட சூழ்நிலையையும் புரிஞ்சிக்க முடியுதுங்க அண்ணி..படிப்ப வெறுக்கறவ அவளே கஷ்டப்பட்டு படிக்கும் போது அவளுக்காக நான் தூரம் தள்ளி இருக்கறதும் தப்பு இல்லதான்.. ஆனா பக்கத்துல இருந்தும் அவ பார்த்துட்டும் பார்க்காதமாறி போறதுதான் என்னால தாங்கிக்க முடியல.. " என்று தன் தங்கைக்காக அவன் ஒதுங்கிப் போய் அவள் ஒற்றைப் பார்வைக்காக ஏங்குபவனை என்ன சொல்லி ஆறுதல் படுத்த என யோசிக்க அவனோ பேச்சைத் தொடர்ந்தான்.

" துளசி மட்டும் கதிரண்ணா இல்லாததால கஷ்டப்படும்போது நாங்க மட்டும் சந்தோசமா இருந்தா நல்லா இருக்காதுன்னு அவ நினைக்கறதும் " என சொல்லத் துவங்கும் போதுதான் ஐசுவிடம் கதிரின் காதலை உலறிவிட்டோம் என 
நாக்கைக் கடிக்க, ' அட கதிர் மாமாவோட காதலி துளசி தானா ' என நினைத்துக் கொண்டவள் இனி தனக்கு நிறைய வேலைகள் இருப்பதை அறிந்து கொண்டாள்..

அவள் யோசனையில் இருக்க " அண்ணியும் கொளுந்தனும் தோட்டத்துல என்ன பண்றீங்க " என்றவண்ணம் அசோக் வந்து நின்றான்..  அவன் வந்ததும் எழில் ஐசுவின் கால்களைப் பிடிப்பதை நிறுத்திவிட்டு சற்று தள்ளி அமரப் போக அவனை கண்களால் தடுத்தாள் ஐசு.. அசோக் எதையும் கண்டு கொள்ளாமல் ஐசுவின் மடியில் தலை வைத்துக் கொண்டவன் எழிலின் கைகளைப் பிடித்து மீண்டும் ஐசுவின் பாதத்தில் வைத்து விட்டு
ஐசுவின் வயிற்றில் காதை வைத்தவன்
" என்னோட செல்லத்த தூங்க விடாம நீங்க ரெண்டு பேரும் நொய்நொய்ன்னு பேசியே தொல்லைப் பண்றீங்கனு என் செல்லம் சொல்றாங்க.. அப்படியா " என்க, அவன் தலையில் கொட்டியவள் " ஆமா..ஆமா.. சார் அவுங்க புள்ளையோட மட்டும் பேசிட்டு இருந்தா எனக்கும் என் புள்ளையோட பேசத் தோனாதா.. அதான் நாங்க பேசிட்டு இருந்தோம்" என எழிலை தன் பிள்ளை என கூறி அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள்..

அவர்கள் மூவரது முகமும் சந்தோசத்தால் மின்னியது.. சரியாக இத்தருணத்தை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்த கனி " அடடே.. ராமாயணம் ராம இலட்சுமணன் தோத்தாங்க போங்க... " என்று அவர்களை கேலி செய்தவாறே அவர்கள் அருகில் அமர்ந்தவள் தான் கொண்டு வந்த இனிப்பை அனைவருக்கும் ஊட்டிவிட்டாள்..

" பாப்புக்குட்டி..உன்னை இவ்ளோ சந்தோசமா பார்த்து எத்தனை நாளாச்சு " என அசோக்கும் இனிப்பை அவளுக்கு ஊட்டிவிட்டு " ஆமா எதுக்கு இந்த ஸ்வீட் " எனக் கேட்க, இனிப்பு டப்பாவை எழிலின் மடியில் போட்டுவிட்டு அசோக்கின் கைப்பிடித்து இரண்டு சுற்று சுற்றியவள் " நான் ஆல் கிளியர் பண்ணிட்டேன் " என பக்கத்து வீட்டுக்கும் கேட்குமளவிற்கு கத்தினாள்..  சந்தோசத்தில் ஐசுவும் அவளை எழுந்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்து
" ரொம்ப சந்தோசம்டி" என்க, அவளை முறைத்தவள் " இதோ பாரு.. நானும் இப்போ டாப்பர்தான்.. கிளாஸ்லயே அஞ்சாவது ரேங்க்.. அதுனால இனி என்னை அடிக்கற வேலைலாம் கூடாது.. " என பழிப்புக் காட்டியவள்
அவளையும் சந்தோசத்தில் கட்டிக் கொண்டாள்..

" பார்த்தியா இப்போ மாதிரி முன்னவே படிச்சிருந்தா அரியர் வைக்காமலே பாஸ் பண்ணிருக்கலாம் " என ஐசு கூற, " ஹலோ மேடம்.. இங்கப் பாருங்க " என தனது பேக்கிலிருந்து கடந்த தேர்வின் மாதிரி விடைத்தாளை நீட்டியவள் " இது லாஸ்ட் செமஸ்டர் ஆன்சர் ஸீட்.. அதில நான் மேத்ஸ்ல மட்டுந்தான் பதினஞ்சு மார்க்.. மத்தது மூன்லயும் பிரண்ட் சீட்ல எழுதுன கொஸ்டின சரியா டிக் பண்ணாம விட்டுட்டேன்.. அதான் நாலு அரியர்..இல்லைனா என்னோட ரேன்ஞ்சே வேற " என கூறியவள்
" நேத்துதான் இந்தப் பேப்பர்லாம் ஸ்டாப் ரூம்ல இருந்து எடுத்தேன்..
எனக்குத் தெரியாம ரீவேல்வியூசன் அப்ளை பண்ணியே எங்கிட்ட கொடுக்க தோணுச்சா " என கோபமாக கேட்க, அது தன் வேலை இல்லை என்பதை அறிந்தும் இப்போதைக்கு பிரச்சினை வேண்டாம் என நினைத்தவள் செய்யாத தவறுக்கு மன்னிப்பும் கேட்டாள்..

சிறிதி நேரம் பேசிய ஐசு அசோக்கை கண்களால் உள்ளே போகும்படிச் சொல்ல அவனும் அவள் கைப்பற்றி அழைத்துக் கொண்டு போனான்..
அவர்கள் சென்றதும் இன்னும் தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த எழிலின் அருகே சென்றாள்..  அவள் அருகே வந்ததும் எழப் போனவனை தடுத்து அருகில் அமர்ந்தவள் " என்மேல கோபமா " என்க, அவனும் ஆமென்று தலையாட்டினான்..

" என்ன மன்னிக்க மாட்டிங்களா? "

" இதுல மன்னிக்க என்ன இருக்கு.. உங்க மாமாவ பார்க்கறதுக்காக கஷ்டப்பட்டு வெறியோட படிச்ச.. இதுல நீ எந்த தப்பும் பண்ணல.. "

" நீங்க சொல்றதப் பார்த்தா எனக்கு மாமா மட்டுந்தான் முக்கியம்..உங்களப் பத்தி எதும் நினைக்கலின்னு சொல்ற மாறி இருக்கு"

" நான் அந்த அர்தத்துல சொல்லல திம்ஷு.. அவர் உனக்கு எவ்வளவு  முக்கியம்னு தெரியும்"

" ஓஓஒ.. அப்போ நீங்க எனக்கு எவ்ளோ முக்கியம்னு தெரியுமா "

" தெரியும்.. உன்னோட முயற்சிக்கு ஒரு தடையா " என்றதும் அதிர்ந்து விட்டாள்.

" எனக்கும் ரொம்ப வருத்தமா இருந்துச்சு திம்ஸு..நீ எங்கிட்ட எப்பவும் போல பேசிருந்தாலும் நான் தள்ளி நின்னுதான் பேசிருப்பேன்.. ஆனா நீ
என்னை ஒரு தடைக்கல்லா நினைச்சு ஒதுக்கி வெச்சுட்ட பார்த்தியா..அதான் தாங்கிக்க முடியல.. சரி பரவால.. நீ தான் உன் இலட்சியத்த அடைஞ்சிட்டல..அதுவே எனக்கு போதும்.. " எனும்போதே குரல் கம்மியது..

" ஐயோ.. சாரிங்க " என ஆரம்பிக்கும் போதே அவள் உதட்டில் விரல் வைத்து அவளை பேசாதவண்ணம் செய்தவன்
" உன்னைப் பத்தி தெரியாதவங்க கிட்டதான் நீ விளக்கம்லா சொல்னும்..எங்கிட்ட இல்ல..புரியுதா " என்றான்

" ம்ம் " எனத் தலையாட்ட அவன் விரலை எடுத்தவன் " கதிரண்ணா எப்போ வராங்கனு சொன்னாரா " எனக் கேட்க,

" மாமா ரெண்டு நாள் கழிச்சு வரண்ணு சொன்னாரு..  அக்காவுக்கு ஏழாம் மாசம் தொடங்கப் போறதால அப்படியே எங்க சொந்த ஊர்ல வளைகாப்பு வெச்சிக்கலாம்னு அம்மா சொன்னாங்க.. அதுனால ஒரு ரெண்டு வாரமாச்சும் தங்கும்னு நினைக்கிறேன் "

" முன்னவே உன்னை கைல பிடிக்க முடியாது..இப்போ சொல்லவா வேணும்.. நீயும் உங்க மாமா வந்த உடனே என்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்ட"

"நான் தான் தப்பு பண்ணிட்டேன்..
மன்னிச்சுக்கோங்குனு சொல்லியும் அதையே சொல்றீங்களே
.
நீங்க மட்டுந்தான் மிஸ் பண்ணிங்களா
..ஏன் நான் மிஸ் பண்ண மாட்டன்னா? " எனும்போதே அவள் கண்களில் கண்ணீர் வழிய, அதைத் துடைத்தவன் " சாரிடா திம்ஷு " எனக் கெஞ்ச அதில் கனிந்தவள் புன்னகைத்தாள்..

" ஏன் திம்ஷு.. உங்க ஊர்லயா வளைகாப்பு "

" ஆமா.. அதுல என்ன உங்களுக்கு கஷ்டம் "

" அது.. அண்ணிய எல்லோரும் எதும் சொல்வாங்களே "

" ம்ம்.. சொல்லாம இருப்பாங்களா..உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதாங்க ஆகனும்..அந்தன்னிக்கு எங்க அம்மா அப்பா மாமா முகத்த நீங்க பார்த்திருந்தீங்கன்னா உங்களுக்கேத் தெரிஞ்சிருக்கும்.. பர்ஸ்ட் திட்டதான் செய்வாங்க.. கொஞ்ச நாள் போனப்பிறகு தான் அமைதியாவாங்க.. ஆனா அதுக்குனு அங்க போகாம இருக்க முடியுமா.. அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறக்கப் போறத. அதுவும் நல்ல குடும்பத்துலதான் வாக்கப்பட்ருக்கானு தெரிஞ்சா தான நாங்களும் ஊருக்குள்ள தலை நிமிர்ந்து போக முடியும்.. உங்களுக்குத் தெரியுமா.. எங்க ஊர்ல எல்லோருக்கும் எங்கப்பாவ ரொம்ப ஒசத்தியாதான் பார்ப்பாங்க.. ஆனா அக்கா கல்யாணத்துக்கு பிறகு ஏதும் ஒருவகைல எல்லோரும் குத்தி காமிச்சு ஜாடை மாடையா பேசறத கேட்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. அதான் அவுங்கள நான் அங்கப் போக விடவே இல்ல..
உங்க குடும்பத்த பார்த்தாங்கன்னா
இனிமே அவங்கள பேச முடியாதுல்ல.. " என்றாள்..

எப்போதும் சிறுபிள்ளை சாயலில் இருந்து கொண்டு பெரிய பெரிய விசயங்களை சத்தமில்லாமல் செய்து முடிக்கும் தன் திம்ஷுவை பெருமை பொங்க பார்த்தவன் அவளுடனான நேரங்களை நெஞ்சில் நிரப்பிக் கொண்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro