பகுதி 19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


அன்றைய சுப முகூர்த்தத்தில் அனைவரும் ஆசிர்வதிக்க இனிதே நடந்தது அவர்கள் திருமணம்.

சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அன்றிரவு அலங்காரம் செய்யப்பட்டு அருணின் அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டாள் அனு.

அனு அறைக்குள் நுழைய, இருவரும் ஒருவரையொருவர் பாவமாய் பார்த்துக்கொண்டார்கள்.கதவை தாளிட்டு உள்ளே நுழைந்தவள் அறையின் அலங்காரத்தை ஆச்சரியமாய் பார்த்தாள்.

Decoration Super ஆ இருக்கே.

ம்ம், எல்லாம் இந்த. லூசு விக்கியோட வேல.

அவன திட்டாத இதுவும் நல்லா தான் இருக்கு. பாவம் விக்கி சிந்து ரெண்டு பேருமே நேத்து Fullஆஹ் எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சாங்க. பாரு எனக்கு சிந்து தான் மருதாணி போட்டு விட்டா ரொம்ப அழகா இருக்கு இல்ல.

அழகாய் தன் கைகளை விரித்துக் காட்டினாள் அனு.

"அவ கல்யாணத்துக்கு நான் ..." எனத் தொடங்கும் போதே,

"மருதாணி போடப் போறியா??!! " அதிர்ச்சியாய் கேட்டான் அருண்.

"ஏன் நா மருதாணி போட்டா என்ன? " இவள் முறைத்துக் கொண்டே கேட்க,

மருதாணி போடறேன்னு நீ பண்ண அட்டகாசம் எல்லாம் நா இன்னும் மறக்கல . தேவி Aunty கைய நாசம் பண்ணிட்டு எங்கம்மாவையும் தேடி வருவியே. ஒரு தடவ தாத்தாவுக்கும் மருதாணி போட்டு விட்ட இல்ல?

கேட்டு விட்டு சிரிக்கத் தொடங்கினான் அருண்.

"சிரிக்காதடா " கோபமாய் சொன்னவள், அருண் சிரிப்பை நிறுத்தாது போகவே கையில் கிடைத்த தலையணையை எடுத்து அவனை நோக்கி வீசினாள்.

அதை அருண் எடுத்து மீண்டும் அனுவுக்கு வீச, அது போய் அவள் முகத்தில் பட்டது.முறைத்துக்கொண்டே அவள் தலையணையை எடுத்துக்கொண்டு அடிக்க வர, அருண் ஓட பெரிய பெரிய ரகளையே நடந்தது.

கடைசியில் இருவரும் களைத்துப்போனார்கள்.

ராட்சசி, வந்தன்னைக்கே தொடங்கிட்டியே.

"நானா, நீ தான் Start பண்ண!! " அவள் மீண்டும் முறைத்தாள்.

"சரிம்மா, திரும்ப தொடங்காத, இப்ப போய் தூங்கு" சொல்லி விட்டு தானும் Bedsheet, pillow எடுத்துக்கொண்டு சோபாவில் போய் படுத்தான்.

காலை நீட்ட முடியாமல் அவன் சிரமப் படுவதை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

"டேய், உன் Height க்கு சோபா பத்தாதுடா, நீ Bedல படு, நா சோபால தூங்குறேன்."

சோபாவில் தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டு படுத்தாள்.

அனு School daysல தான், short தான் Cuteன்னு சொல்லிட்டு திரிஞ்ச. இப்பவாச்சும் கொஞ்சம் வளரலாம்ல.

டேய், Height பத்தி பேசினா, நா கடுப்பாகிடுவேன். வாய மூடிட்டு படுடா.

இல்ல அனு, பாக்க Comedy ஆஹ் இருக்குல்ல.

ஒனக்கு தூக்கம் வரலைனா, அந்த சொம்புல பால் இருக்கு குடிச்சிட்டு படு. ஆஹ், பால் குடிச்சிட்டு Light Off பண்ணு.

சிறிது நேரத்தில் இருவரும் உறங்கிப் போனார்கள்.



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro