அனுபவங்கள் மூலம் வாழ்க்கை உணர்த்தும்
ஒரு பாடம்
புத்தகம் அதே வாழ்க்கையில் உணர்த்தும்
ஆயிரம் பாடங்கள்
பேசிய வரிகள் என்றும் மாறாது
காலத்தின் இயலாமையால்
எழுதிய வரிகள் என்றும் மாற்றும்
மனதின் எண்ணங்களை
சித்திரம் உணர்த்தும் அழகிய
காவியத்தை
புத்தகத்தின் வரிகள் உணர்த்தும்
மனதின் ஓசையை
நன்னீர் ஊற்றெடுக்கும் பூமிதனில்
சிறு துளையிலே
காவியம் படைக்கும் வரிகள் ஊற்றெடுக்கும்
எழுத்தாணியின் முனையிலே
உலகின் திசைகளோ நான்காம்
காணுகையில்
நான் எழுதும் வரிகளோ
எட்டு திசையிலே
புன்னகைக்கு உண்டு பலவித
அர்த்தங்கள்
நான் எழுதும் வரிகளுக்கு உண்டு
பலவித காரணங்கள்
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro