📕 புத்தகம் 📖

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அனுபவங்கள் மூலம் வாழ்க்கை உணர்த்தும்
ஒரு பாடம்
புத்தகம் அதே வாழ்க்கையில் உணர்த்தும்
ஆயிரம் பாடங்கள்

பேசிய வரிகள் என்றும் மாறாது
காலத்தின் இயலாமையால்
எழுதிய வரிகள் என்றும் மாற்றும்
மனதின் எண்ணங்களை

சித்திரம் உணர்த்தும் அழகிய
காவியத்தை
புத்தகத்தின் வரிகள் உணர்த்தும்
மனதின் ஓசையை

நன்னீர் ஊற்றெடுக்கும் பூமிதனில்
சிறு துளையிலே
காவியம் படைக்கும் வரிகள் ஊற்றெடுக்கும்
எழுத்தாணியின் முனையிலே

உலகின் திசைகளோ நான்காம்
காணுகையில்
நான் எழுதும் வரிகளோ
எட்டு திசையிலே

புன்னகைக்கு உண்டு பலவித
அர்த்தங்கள்
நான் எழுதும் வரிகளுக்கு உண்டு
பலவித காரணங்கள்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro