வாழ்க்கை பயணம்
வழிகள் எங்கும் வலிகளை விட்டு செல்ல எண்ணினேன்
ஆனால் வலிகள் முழுவதும் வழிகளில் நிறைந்து இருந்தது
எனது வலிகளை எங்காவது விட்டு செல்ல துடித்தேன்
ஆனால் விட்டு செல்ல இயலாமல் போனது......
தூரத்தில் ஓர் வழி தெரிந்தது
அவ்வழியின் மேல் விழி வைத்தேன்
விழிகளில் வலிகள் நிறைந்து
விழிகளை விழிக்காமல் செய்து விட்டது......
விழிகளை மூடி வழியை நோக்கி பயணித்தேன்
ஆனால் நான் அடைந்தது என்னவோ இருளை தான்
விழிகளை விழிக்காமலே இருளை காண்கிறேனோ
என்று விழிகளை இரு கரங்களால் விழித்து பார்த்தேன்.....
நான் கண்டது தூரத்தில் கண்ட வழியை தான்
வழியின் நுழைவாயிலில் வலிகளை வைத்தேன்
எனது முதல் அடியை வலிகள் இல்லாமல் வைத்தேன்
மேலும் மேலும் வைத்துக்கொண்டே இருக்கிறேன்.....
என்றாவது ஒரு நாள் எனது வழிகள் எங்கும்
மகிழ்ச்சியால் நிறைத்து கொள்வேன் என்று
அடிமேல் அடி வைத்து பயணிக்கிறேன்
வாழ்க்கை எனும் வெளிச்சத்தை தேடியே......
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro