💔 பிரிவு 🎌

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பிரிவு என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல, அதற்குள் ஆயிரம் சொல்ல முடியா வலிகள் உண்டு சிலர் அறியாரே....


காயங்கள் ஆரலாம் துண்டாக்கப்பட்ட உறுப்புகள் கூட சேர்ந்து விடலாம், ஆனால் புண்படுத்தப்பட்ட மனம் என்றும் அந்த வலிகளை மறந்து விடாது....


பிரிவை பலர் ஒரு ஒரு நாளும் சிலரின் மனதினில் ஏற்படுத்தி மட்டுமே செல்கின்றனர், பலர் அதை உணர்வதில்லை உணர்ந்த சிலரோ அதை அணுவும் மறப்பதில்லை....


பெரிய அளவில் ஏற்படும் நிகழ்வுகள் நம்மை நிலைகுலை செய்யாமல் போகலாம், ஆனால் மனதை விரும்புவோர் சிறிய அளவில் ஏற்படும் நிகழ்வுகளால் மரணித்தே போகின்றனர் மனத்தால்....


பிரிவை உணர்ந்தவர் மனம் ஏனோ நாளடைவில் கல்லாகவே மாறிப்போகிறது.... அதை ஏற்படுத்தி சென்றவர் மனமோ இன்பத்தில் துளிவிட்டுக்கொண்டு இருக்கின்றது....


என்றாவது ஒரு நாள் அவர்களும் அந்த பிரிவை உணர்ந்துகொள்வார்கள் அவர்கள் கொண்டவர்களால், அன்றே அவர்கள் மற்றவரின் நிலையை உணர்ந்து நடந்துகொள்வார்கள்....


அன்பானவரின் பிரிவு நரகத்திற்கு இணையானதே, எனவே எதையும் வெளிப்படையாக பேசிக்கொள்ளுங்கள் பேசினால் தீராத சிக்கல்கள் இல்லையே....


பொறுமையும் விட்டுக்கொடுக்கும் மனமும் இருந்தால் வாழ்வில் பிரிவு என்பதை உணரவே உணராது மனம்.....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro