மௌனம் பேசியதே
உனது பார்வையில் நீ பேசிட
எந்தன் மனதோ அதை அறிந்திட
உனது உதடுகளோ சொல்ல தவித்திட
மௌனம் ஏனோ பேசியதே இருவருள்...!
எவருடைய பார்வையும்
நான் நேருக்கு நேர்
சந்திக்க இயலாமல் செய்தாயே
உனது விழி பார்வையில்...!
ஆயிரம் கண்கள் சுற்றி இருந்தாலும்
எந்தன் விழிகளோ உந்தன்
விழிகள் சேர்ந்திடவே எனது
விழிகள் ஆசை கொள்ளுதடி...!
நமது சந்திப்பினில் நாம்
சொற்களை பகிந்ததை விட
மௌன விழி பார்வையில்
ஆயிரம் உணர்வுகளை பகிர்ந்தேனடி...!
உனது ஆசை மலர்களாய்
நான் பூத்திருக்க உந்தன்
கூந்தலோ சூடிக்கொள்ள காத்திருக்க
இணைந்தோமே மலர்விழி கண்களால்...!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro