👨👩என் அருகினில் நீ இருந்தால்💑

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இமைப்பொழுதேனும் நீ என் அருகினில்
இருப்பதையே எந்தன் நெஞ்சம்
எதிர்கொண்டு காத்திருக்கின்றது...!

சூறாவளியின் தாக்கத்தையும்
பூமித்தாயின் தாக்கத்தையும்
என்னால் தாங்கிக்கொள்ள இயலும்...!

ஆனால் உந்தன் பிரிவை மட்டும்
எந்தன் மனத்தால் ஏற்றுக்கொள்ள
இயலவில்லையடி கண்ணம்மா...!

உந்தன் விழிகள் காணவே
எந்தன் காலம் நகர்கிறது
உனது விழிகளால் நிற்கச்செய்வாயா...!

உனது கரம் கொண்டு
எனது கைகள் கோர்த்திட
எந்தன் மனதோ திளைக்கின்றது...!

உந்தன் இமைகளின் துடிப்பினில்
எந்தன் குருதியோ சீரற்று
செல்கின்றது எந்தன் தேகத்தில்...!

என் அருகினில் நீ இருந்தால்
எனது வாழ்க்கை முழுதும்
ப்ரகாசமே கண்ணம்மா...!

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro