வரலாறுகள் என்றும் அழிவதில்லை
அவைகள் காலம் கடந்து வாழ்கின்றன
நினைவுகள் என்றும் அழிவதில்லை
அவை பூக்களாய் மனதினில் பூக்கின்றன...!
சிலரின் வாழ்க்கை என்னவோ வரலாற்றை போன்றது
சிலரின் வாழ்க்கையே நினைவுகளை போன்றது
அவை காலம் கடந்து வாழ்வதும், பூக்களாய் மலர்வதும்
அவர்களின் உணர்ச்சி வரிகளின் வெளிப்பாட்டிலே...!
காலம் கடந்தும் நீ வாழ்கிறாய்
என்னுள் புதைக்கப்பட்ட உந்தன் வரிகளால்
நானும் முளைத்தெழுந்தேனே என்றும்
அழியா வரிகளாய் கவிதா எனும் வடிவினிலே...!
நான் அழிவேன் என்று நினைத்து புதைத்தாயே
உந்தன் காதல் எனும் வரிகளை கொண்டு
ஆனால் விளைந்தது என்னவோ உந்தன்
நினைவுகளால் வளர்ந்த கவிதை வரிகளே...!
உனது வார்த்தைகள் காதலை சொல்லவில்லை
ஆனால் எனது கவிதைகள் என்றும் உந்தன்
காதலை காலம் கடந்தும் சொல்லுமடி
நான் வரிகளிலேயே வாழ்கின்றேன் என்று...!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro