யாரென்றே தெரியாது, ஆனால் நட்பு எனும் பெயரில் நண்பர்களாகினோம்... பற்பல கவிதைகளிலும் கதைகளிலும் கலந்துரையாடினோம்...
நட்பினை உணர்ந்த பின்பு மகிழ்வுடன் காலத்தில் பயணித்தது... யாரென்றே அறியாத அதே நட்பு புதியதாய் ஊடுருவி, புதியதோர் நட்பு வளர்ந்து மரமானது...
காற்று எனும் உயிரை பருகி வாழும் இந்த உயிருக்கு, நட்பு பெரிதாக தெரியவில்லையோ என்னவோ... காற்றை தரும் மரமே பெரியதாய் தென்பட்டது போலவே....
பழகிய நட்போ சில சில நேரங்களில் கண்களுக்கு அத்தி பூத்தார் போலவே விழிகளில் தோன்றி உதிர்ந்தது...
காலம் ஒரு மாயையை சில உள்ளங்களுக்கு இவ்வுலகில் விட்டுச் செல்லும் அனுபவம் என்ற வதனத்தை இட்டுச் சென்று...
அதை உடுத்தி செல்வதும் செல்லாமல் செல்வதும் அவரவர் பாதையினை மாற்றி அமைக்கும்...
அன்பு எனும் மாய வலையில் விழாமல் பயணிப்பது கடினமே... விழுந்தும் மீண்டும் பயணிப்பதை என்னவென்று கூறுவது...
சிந்தையில் சிக்கி கொண்ட மனம் மந்தையில் இருந்து விடுபட்டு வெளி வருவது கடினமே...
வாழ்க்கை என்றும் ஒரு மாயையே... அதில் விழுந்து எழுந்திட வேண்டும், நீந்தி பயணிக்க கூடாது...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro